Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thunai Thedum Vergal - 2
Thunai Thedum Vergal - 2
Thunai Thedum Vergal - 2
Ebook96 pages36 minutes

Thunai Thedum Vergal - 2

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466077
Thunai Thedum Vergal - 2

Read more from Parimala Rajendran

Related to Thunai Thedum Vergal - 2

Related ebooks

Reviews for Thunai Thedum Vergal - 2

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thunai Thedum Vergal - 2 - Parimala Rajendran

    21

    1

    தோட்டத்தில் வெள்ளையும், சிகப்புமாக ரோஜா பூக்கள் பூத்து குலுங்கியது. எல்லாம் சுதாவின் கைவண்ணம். பூச்செடிகள் வளர்ப்பதென்றால் அவளுக்கு கொள்ளை ஆசை.

    இந்த ரோஜாக்களை தலையில் வச்சு அழகு பார்க்கிறதைவிட செடியில் இருந்தால்தான்மா. அழகு.

    ஆசை, ஆசையா தண்ணி ஊத்தி வளர்க்கிறே, ஒரு நாளாவது ஒரு பூவை பறிச்சு தலையில் வச்சுக்க மாட்டேன்கிறே என்ற யமுனாவின் கேள்விக்கு இப்படித்தான் பதில் சொல்வாள் சுதா.

    இந்த பூக்களும் உன்னை போலவே கொள்ளை அழகு...

    ஏன்ம்மா பொய் சொல்றே. என் காலை பார்த்த பிறகும் உனக்கு அப்படி நினைக்க தோணுதா?

    சுதாவின் பதிலில் யமுனாவின் முகம் வாடிவிடும்.

    கோதுமை நிறத்தையும், சிற்பத்தை செதுக்கியது போன்ற அழகான உடலமைப்பையும் கொடுத்த கடவுள், அவள் கால்களில் ஒன்றை சிறிதாக படைத்து தாங்கி, தாங்கி நடக்கும்படி செய்துவிட்டாரே...

    ஸாரிம்மா. வருத்தப்படறியா. நான் விளையாட்டுக்கு சொன்னேன். உன் மகள் நான் என்னைக்குமே உன் கண்களுக்கு அழகியாகத்தான் தெரிவேன் போதுமா.

    யமுனா... யமுனா... இங்கேயா இருக்கே... உன்னை வீடு முழுக்க தேடிட்டு வரேன்...

    கணவனின் குரல் கேட்டு துளசி மாடத்தின் அருகில் அமர்ந்திருந்த யமுனா திரும்பினாள்.

    இரண்டு நாளாக விடாத இருமல்... உங்களை யாரு எழுந்து வரச் சொன்னா... ஆஸ்துமா தொந்தரவு வேறு இருக்கு.

    படுத்தே இருந்தாலும் போரடிக்குது யமுனா.

    சுதா இன்னும் காலேஜிலிருந்து வரலையா?

    காலேஜ் முடிஞ்சதும் ஸ்பெஷல் க்ளாஸ் ஒன் - அவர் இருக்கு. இன்னைக்கு அவ சப்ஜெக்டாம். க்ளாஸ் எடுத்துட்டு தான் வருவா.

    கொல்லை வாசல்படியில் அமர்ந்தவர்.

    ம்... எக்கசக்க சொத்து இருந்தும், பிள்ளைகள் இரண்டு இருந்தும், பொம்பளை புள்ளை கையால் நாம் சாப்பிட்டு உயிர் வாழணும்னு இருக்கு பாத்தியாயமுனா...

    அவர் குரலில் வருத்தம் இழையோடியது.

    "என்ன செய்யறது, இதைதான் விதின்னு சொல்லணும். வில்வபுரத்தில் பங்களா மாதிரி பெரிய வீடு, தோட்டம், துறவு, பண்ணைன்னு கொடிகட்டி வாழ்ந்தவர் உங்க தாத்தா... நமக்குத்தான் எல்லாம் வந்து சேரும்னு நினைச்ச நேரத்தில், உங்க பங்காளி மகன், தான்தான் சொத்துக்கு வாரிசுன்னு கேஸ் போட்டு யாரையும் அனுபவிக்கவிடாம பண்ணிட்டான். சின்னப் பிள்ளைகளாக இருந்தப்ப ஆரம்பிச்ச கேஸ் இன்னும் முடியலை. பிள்ளைங்களும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க.

    எப்படியும் நம்ப பக்கம் தீர்ப்பு வரும்னுதான் நானும் காத்துட்டு இருக்கேன். நமக்கு விடிவுகாலம் இருந்தா நிச்சயம் நடக்கும். நம்ப சுதாவுக்கு அவ குறை தெரியாம, வைரமும், தங்கமுமாக இழைச்சு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்..."

    எனக்கு நம்பிக்கை இல்லைங்க... சுதா கல்யாண பேச்சை இப்ப பேசாதீங்கன்னு கண்டிஷன் போட்டுட்டா...

    அவ பேசறது சரியில்லை யமுனா. கல்யாண வயசு வந்தாச்சு. நம்ப தகுதிக்கு ஏத்த இடமாக இருந்தால்கூட போதும்னு நினைச்சேன். ஆனா, அவ கடைசிவரை உங்க ரெண்டு பேரையும் என் பொறுப்பில் தான் வச்சுப்பேன். அதுக்கு சரின்னு சொல்ற மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்க நான் ரெடின்னு சொல்றாளே... இது நடக்கிற விஷயமா?

    பொம்பளை புள்ளை பெத்தவங்களை நினைச்சு பார்த்து உருகுது. பசங்க இரண்டும் படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி வச்சாச்சு. நம்ப குடும்பத்தை பார்ப்போம்னு போயிட்டாங்க. இதை எங்கே போய் சொல்றது?

    யமுனாவின் குரலிலும் வருத்தம் இழையோடியது.

    சரி, எழுந்திருச்சி உள்ளே வாங்க. காத்து சில்லுன்னு அடிக்குது. உங்க உடம்புக்கு ஆகாது. சூடா பால் கலந்து தரேன்.

    யமுனா உள்ளே செல்ல... மனதில் ராமுவும், ரகுவும் வர, பெருமூச்சை வெளிப்படுத்தி எழுந்து கொள்கிறார் வாசுதேவன்.

    மேம், ஒரு நிமிஷம்...

    புடவையின் நுனியை லேசாக தூக்கி பிடித்தபடி, தாங்கி, தாங்கி நடந்த சுதா திரும்பி பார்க்கிறாள்.

    என்ன ஷாலினி... என்ன விஷயம்?

    மேம், நான் வேணும்னா உங்க பேக்கை பஸ் ஸ்டாப் வரை எடுத்துட்டு வந்து தரட்டுமா?

    தாங்க்ஸ் ஷாலினி. எனக்கு எந்த சிரமமுமில்லை. நான் எடுத்துட்டு போயிடுவேன்.

    இல்லை மேம். பேப்பர்ஸ் திருத்தணும்னு நிறைய வீட்டுக்கு எடுத்துட்டு போறீங்க. பேக் வெயிட்டாக இருக்கு. அதனால்தான் கேட்டேன்.

    பரவாயில்லை. எனக்கு இதெல்லாம். பாரமாகவே தெரியலை. எனவே நீ அக்கறையோடு கேட்டதுக்கு தாங்க்ஸ். வரட்டுமா...

    நல்ல குணமும், அழகும் உள்ள மேடத்துக்கு கடவுள் இப்படிப்பட்ட குறையை வைத்து விட்டாரே நினைத்தவளாக நடக்க தொடங்கினாள் ஷாலினி.

    பச்சை நிறத்தில் வெள்ளை பூக்கள். அள்ளி தெறித்தாற்போல அங்கு மிங்கும் பளிச்சிட, அந்த ஷிபான் சேலையை, அழகாக கட்டி, கூந்தலை தரைபின்னி, நெற்றியில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு வைத்து அந்த எளிமையான அலங்காரத்திலும் அழகியாக காட்சித் தரும் மகளை கண்கொட்டாமல் பார்த்தாள்.

    என்னம்மா என்னையே பார்த்துட்டு இருக்கே?

    Enjoying the preview?
    Page 1 of 1