Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanantham Vilaiyaadum Veedu
Aanantham Vilaiyaadum Veedu
Aanantham Vilaiyaadum Veedu
Ebook96 pages51 minutes

Aanantham Vilaiyaadum Veedu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465964
Aanantham Vilaiyaadum Veedu

Read more from Parimala Rajendran

Related to Aanantham Vilaiyaadum Veedu

Related ebooks

Reviews for Aanantham Vilaiyaadum Veedu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanantham Vilaiyaadum Veedu - Parimala Rajendran

    12

    1

    அந்த வீட்டின் நிசப்தம், அமைதி அந்த பெரிய ஹாலின் அவர் மட்டுமே உட்கார்ந்திருந்தார். அவர் எதிரே காகித மாலை சூடப் பட்டு சந்திராவின் போட்டோ பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தது. எந்த கடனிலும் மிக பெரிது மனைவியின் சேவை, அதை அடைக்க பல பிறவிகள் தேவை என்பது எத்தனை உண்மை. இருந்தவரை அவருக்காகவே வாழ்ந்தவள். உற்றார் உறவினர்களுடன் கிராமத்தில் வாழ்ந்த அந்த வாழ்க்கையில் தான் எத்தனை இனிமை.

    எப்போதும் வியர்வை வழிய முந்தானையால் துடைத்தபடி அடுப்படியில் இருப்பாள்.

    என்னங்க உங்க பெரியப்பா வந்திருக்காரு. அவருக்கு இடியாப்பம், தேங்காய் பால் பிடிக்கும். இட்லி சாம்பாரோடு அதையும் செய்துடறேன்.

    அவர் பதிலை எதிர்பார்க்காமல் ஓடுவாள்.

    ஊர்லே உங்க பாட்டி ரொம்ப முடியாம இருக்காங்களாம். ஒரு மாசம் நாம் இங்கே கொண்டு வந்து வச்சுக்கலங்க... நாமும் அவங்களுக்கு பணிவிடை செய்தோங்கிற நிம்மதி கிடைக்கும்.

    வழிய உறவுகளை அழைப்பாள்.

    "சந்திரா.... நமக்கு நாலு பிள்ளைகள். ஒரு பெண், நீ அஞ்சு போரையும் சமாளிச்சுக்கிட்டு, இப்படி அத்தை, மாமா, சித்தி, சித்தப்பான்னு உறவுகளையும் பக்கத்தில் வச்சு உன்னால் எப்படி முகம் சுளிக்காமல் பார்க்க முடியும்.’

    காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை பம்பரமாக சுழன்று, கையில் பால் டம்ளருடன், சிறிதும் முகவாட்டம் இல்லாமல் சிரித்த முகத்துடன் நிற்பவளை பார்த்து கேட்டார்.

    பெண்ணாக பிறந்தால் பல அவதாரம் எடுக்கணுங்க... மகளாக, தாயாக, மருமகளாக, மாமியாராக, பாட்டியாக... இப்படி எல்லாமுமாக மாறி ஒரு பெண், வாழ்க்கையின் பல நிலைகளை கடந்து வரணுங்க... இதுக்கெல்லாம் ஆணிவேர் எது தெரியுமோ... அவ மனதில் சுரக்கும் வற்றாத அன்பு. ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம்ணு... போறதை விட, வாழற வாழ்க்கையை அர்த்த படுத்தனுங்க... பெரிசாக எதையும் சாதிக்க முடியாட்டியும், உறவுகளோடு கூடி வாழ்கிற இனிமையான வாழ்க்கையாவது வாழ்ந்துட்டு போகலாம் இல்லையா...

    மனைவியை அன்பு கனிய பார்த்தவர்...

    "உன்னை நினைக்கும் போதும் மனசு பெருமிதப்படுத்து சந்திரா.... நல்ல மனைவி, நல்ல குடும்பம், தெய்வீகம்னு சொல்வாங்க... இது தெய்வம் வாழற வீடாக தான் எனக்கு தெரியுது. ஏதோ பூர்வ ஜென்மபுண்ணியம். இந்த கிராமத்தில் நிலபுலன்களோடு பேர் சொல்ற மாதிரி வாழறோம். மணி மணியாக பிள்ளைகள். ஆசைக்கு ஒரு பெண் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை நமக்கு கிடைச்சிருக்கு.’

    சிரிப்புடன் அவளை பார்த்தவர்,

    ஐந்து பிள்ளைகளுக்கு தாய்ங்கிற பெருமை உனக்கு கிடைச்சிருக்கு அப்படி தானே..

    இல்லைங்க... ஐந்து பேரை பெற்றதில் பெருமை இல்லைங்க... இவங்களை நல்லபடியாக வளர்த்து, கடைசிவரை மாறாத அன்போடு ஒற்றுமையாக வாழ வைக்கனுங்க... சந்திரா பெத்த பிள்ளைகள், அன்பும், பாசத்துக்கும் கட்டுப்பட்டவங்க... இன்னைக்கு வரைக்கும் ஒற்றுமை மாறாமல், ஒருவரையொருவர் அனுசரித்து வாழறாங்கன்னு எல்லாரையும் சொல்ல வைக்கணும். அது தாங்க எனக்கு பெருமை.

    "இல்லை சந்திரா, நமக்கு அந்த பெருமை கிடைக்கலை... நாலு பிள்ளைகளையும் அருமையாக வளர்த்து, கல்யாணம் பண்ணி வச்சே.... பெண்ணுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணினோம். உன் கடமை அதோடு முடிஞ்சதாக நினைச்சு போய் சேர்ந்தே... ஆனா உன் ஆசை நிறைவேறலை சந்திரா... உன் பிள்ளைகள் இப்ப ஆளுக்கொரு திசையில்... பெற்ற தகப்பனை பார்க்க கூட யாருமில்லம்மா... நீயில்லாமல் இப்ப நான்தான் தனிமையில் தவிக்கிறேன்.

    ஜெயகாந்தனின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிகிறது.

    ஐயா... ஐயா...

    அவரை தொட்டு எழுப்ப,

    கண் திறந்தவர்.

    வந்துட்டியா கோபு...ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு. நீங்க எழுந்து முகம் கழுவிட்டு வாங்க.... அக்காகிட்ட போயி காபி வாங்கிட்டு வரேன்."

    அவன் போக, மேல படுக்கையிலிருந்து எழுகிறார்.

    அந்த அபார்ட்மென்டின் கீழ் தளத்தில் ஒரு வீட்டில் ஜெயகாந்தன் இருக்க, அவர் மகள் நந்தினி முதல் மாடியின் குடும்பத்துடன் இருந்தாள். அவர் மகள் நந்தினி முதல் மாடியில் குடும்பத்துடன் இருந்தாள். அவள் தான் இப்போது வயசான அப்பாவை பராமரித்து வருகிறாள். அவருக்கு வேலை பார்க்க கோபு. மூன்று வேளையும் சாப்பாடு, மாடியில் மகளிடமிருந்து வந்துவிடும்.

    தனிமை சிறை என்பது இது தானோ...

    ஹாலில் வந்து உட்கார, காபியுடன் வருகிறான் கோபு.

    சூடாக இருக்கு ஆத்தி தரட்டுமா ஐயா....

    வேண்டாம் கொடுப்பா.... சூடாக குடித்தால் தான் சுறுப்பாக இருக்கும்.

    வாங்கி மெல்ல வாயால் ஊதி குடிக்கிறார்.

    கோபு.... அக்கா என்ன செய்யறா?

    சமயலறையில் இருந்தாங்க.... நிகி பாப்பா காலேஜுக்கு கிளம்பி இருக்காங்க... வழக்கம் போல உங்க மாப்பிள்ளை பேப்பரும், கையுமாக ஹாலில் உட்கார்ந்திருந்தாரு...

    கண்களை உயர்த்தி பார்க்கிறார்.

    ஏதும் சொன்னாரா?

    அட விடுங்க ஐயா.... அவர் என்னைக்கு எதுவும் சொல்லாமல் இருந்திருக்காரு.

    சும்மா சொல்லு.... மாப்பிள்ளை என்ன சொன்னாரு?

    "இந்த கிழத்துக்கு தனி வீடு, மூணு வேளையும் சாப்பாடு, பார்த்துக்க ஒரு கைத்தடி... இதெல்லாம் தேவையா.... பேசாமல் எங்காவது முதியோர் இல்லம் எங்காவது முதியோர் இல்லம் போக வேண்டியது தானே.... வயசு என்பதை தொடப் போகுது... இன்னும் அடுத்தவங்களை தொந்தரவு பண்ணிக்கிட்டு... அந்த காலத்தில் மிராசுதாரர்

    Enjoying the preview?
    Page 1 of 1