Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koodu Thedum Paravaikal
Koodu Thedum Paravaikal
Koodu Thedum Paravaikal
Ebook81 pages36 minutes

Koodu Thedum Paravaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466053
Koodu Thedum Paravaikal

Read more from Parimala Rajendran

Related to Koodu Thedum Paravaikal

Related ebooks

Reviews for Koodu Thedum Paravaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koodu Thedum Paravaikal - Parimala Rajendran

    18

    1

    பனிரெண்டாவது மாடியின் சிட்அவுட்டில் கையை முன்புறமாக கட்டியபடி நின்றிருந்தான் மாதவன்.

    அந்த நடு இரவிலும் வண்ண விளக்குகளின் ஒளிச்சுடர்கள் வானின் விண்மீன்களை போல மின்ன, அந்த இடமே சுவர்க்க பூமியாக காட்சியளித்தது.

    ஈரப்பதத்துடன் பனிக்காற்று வீச, இரவு உடையில் மேல்கோட்டு அணியாமல், நின்றிருந்தான்.

    எழில்மிகு நியூயார்க் நகரம். இந்தியாவை விட்டு வந்து அமெரிக்காவில் செட்டிலாகி பத்து வருடங்கள் முடிந்து விட்டது. மனைவி திவ்யாவும், அவனுமாக சம்பாதித்த டாலர்... பாங்க் பாலன்ஸ் எக்கச்சக்கமாக ஏறிவிட்டது.

    சொந்தமாக அபார்ட்மெண்ட்... இரண்டு கார்கள்... வசதியான வாழ்க்கை.

    இருந்தாலும் மனதிற்குள் சில நாட்களாக ஏற்பட்டுள்ள உறுத்தல், பயம்... நான் எடுத்திருக்கும் முடிவு சரிதானா? இதுதான் சரி. அவன் மனம் தீர்மானமாய் சொல்லியது.

    மகள் மிருதுளாவுக்காக எடுத்திருக்கும் முடிவு. மீரு தான் என் உயிர். என் உலகம். என் மகள் அன்பானவளாக பண்பானவளாக வளர வேண்டும். உறவுகளின் அரவணைப்பில் வாழ்க்கையின் சுவர்க்கங்களை அவள் அனுபவிக்க வேண்டும். அவள் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் எந்த சலனமுமில்லாமல் செல்ல வேண்டும்.

    பின்புறமாக தோள்களைதொடும் கைகள், ஸ்பரிசத்திலிருந்தே திவ்யா எழுந்து வந்திருக்கிறாள் என்பதை அறிந்துக்கொள்கிறான்.

    பேண்ட், டீ ஷர்ட் அணிந்து, மேலே ஸ்வெட்டர் போட்டு, கழுத்துவரை வெட்டப்பட்ட கூந்தல் - காற்றில் பறக்க - முன் நெற்றியில் விழும் முடிக்கற்றையை ஒதுக்கி விடாமல், அமெரிக்க நாகரிகத்துக்கு ஈடு கொடுக்கும் – படியான அழகுடன் நிற்கும் திவ்யாவை பார்க்கிறான். தூங்கலையா மாது

    ம்...

    மைண்ட் டிஸ்டர்ப்ட்டா இருக்கா

    ஆமாம்

    அதான் நான் ஓகே சொல்லிட்டேனே... அப்புறம் என்ன? இந்தியாவில் செட்டில் ஆகலாம்ணு நீங்க முடிவு பண்ணினா, போகலாம்

    உனக்கொன்னும் வருத்தம் இல்லையே

    வருத்தம்னு சொல்ல முடியாது. இரண்டு பேருக்கும் நல்ல வேலை... நல்ல சம்பாத்தியம். இன்னும் அஞ்சு வருஷம்... இந்திய ரூபாயில் கணக்கு பண்ணினா கோடி கணக்கில் இருக்கும். நம்ப மிரூவுக்கு நல்ல எதிர்காலத்தை காட்ட முடியும். அப்புறம்... இந்தியா போனா... நிம்மதியா இருக்கலாம். இங்கே என்ன குறை. லைப்பை... அதற்குரிய வசதிகளோடு சந்தோஷமா அனுபவிச்சுட்டு இருக்கோம். இவ்வளவு பாஸிட்டிவ் இருக்கும்போது... இந்தியாவில் செட்டில் ஆகிறது. அதுவும் இந்த சமயத்தில் சரிதானான்னு என் மனசு யோசிக்குது

    நமக்கு பணம் சம்பாதிப்பதை விட நம்ப மகளோட வாழ்க்கை தான் முக்கியம். இன்னும் எவ்வளவு நாள் உறவுகளை விட்டு விலகி ஒரு தீவு மாதிரி வாழறது. போலாம் திவ்யா. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கைன்னு நாமும் அவங்களோடு சங்கமம் ஆகலாம். இந்த கலாசாரம், வாழ்க்கை முறை என் மகளை வளர வளர தவறான பாதையில் தள்ளிடுமோன்னு பயமா இருக்கு

    அது தேவையில்லாத பயம்னு உங்களுக்கு புரியலை. நம்மை மீறி எதுவும் நடக்காது. அதுவுமில்லாம இப்ப ஏழு வயசுதான்ஆகுது.

    இருக்கட்டும் இதுதான் நல்லது கெட்டது புரியும் வயசு. இனியும் அவளை தனிமைபடுத்தாம உறவுகளோடு வாழறது தான் நல்லதுன்னு எனக்கு படுது

    சரி, அப்ப உங்க இஷ்டம். என்ன முடிவு பண்ணியிருக்கீங்க.

    மூணுமாசம் லாங் லீவில் இந்தியா, போவோம். நம்ம மிருதுளாவுக்கு ஒரு சேஞ்ஜ் கிடைக்கும். நமக்கும் எல்லோருடனும் பழகும்போது எங்கே தங்கலாம்னு ஒரு முடிவு கிடைக்கும். சென்னையில் இருப்போம்னு முடிவு பண்ணினா அங்கே வேலை தேடிப்போம். இல்லைன்னா... ஹைதராபாத்... பெங்களூர் ஓரளவு வேலையை தேடிக்கிட்டு... இங்கே வந்து எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கிளம்பலாம்...

    2

    காலை நேரம் அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள் காந்திமதி. சமையல் ரெடியாகிவிட்டது. இன்னும் இட்லி, தக்காளி சட்னி செய்ய வேண்டும். வேலைக்கு போகும் கணவர், மகனுக்கு ஒன்பது மணிக்குள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

    இன்னும் ரிடையர்ட் ஆக ஆறு மாதமே இருக்கும் சாரங்கனுக்கு அரசு உத்தியோகம்.

    தயாளன் சாப்ட்வேர் இஞ்சினியராக, பெரிய நிறுவனம் ஒன்றில், கைநிறைய சம்பளத்துடன்

    Enjoying the preview?
    Page 1 of 1