Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kangal Sollum Kavithai
Kangal Sollum Kavithai
Kangal Sollum Kavithai
Ebook106 pages57 minutes

Kangal Sollum Kavithai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அக்கா தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் நாவல் தான் கண்கள் சொல்லும் கவிதை.

கண்கள் இல்லாத அந்த பெண்ணின் மனதில் தோன்றும் காதல் ஒரு கவிதை.

அன்பு, பாசம், பரிவு பின் தொடர காதல் கதை சொல்லும் இந்த நாவல் நிச்சயம் படிப்பவர் மனதையும் கவரும் என்று நம்புகிறேன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137806317
Kangal Sollum Kavithai

Read more from Parimala Rajendran

Related to Kangal Sollum Kavithai

Related ebooks

Reviews for Kangal Sollum Kavithai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kangal Sollum Kavithai - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    கண்கள் சொல்லும் கவிதை

    Kangal Sollum Kavithai

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author//parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    வாசலில் போர்டிகோவில் நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் ரேணுகா.

    மழைக்காற்று சில்லென்று உடலில் பட மனம் சிலிர்த்தது. இன்னும் சிறிது நேரத்தில் மழை பெய்ய போகிறது. தபால்காரனின் சைக்கிள் மணிசப்தம் எதிர்வீட்டில் போஸ்ட் என்று சொன்னபடி, பாக்ஸை திறக்கும் சப்தம் கேட்டது.

    நமக்கு நிச்சயம் லெட்டர் வராது. முதலில் லெட்டர் போடுவதற்கு யார் இருக்கிறார்கள். அப்படியே வந்தாலும், டெலிபோன் பில் தான் வரும். கவிதாவுக்கு வந்தாலும், எல்லாம் ஆபீசிற்கு தான் வரும்.

    மல்லிகை வாசம்...? மூச்சை இழுத்துவிட்டு நறுமணத்தை சுவாசித்தாள்.

    ‘கவிதா... வாசலில் குண்டு மல்லிகை பூத்திருக்கா பாரு, போகும் போது வச்சுட்டு போ’

    ‘சரிக்கா' சொல்வதோடு சரி, வேலை அவசரத்தில் மறந்து விட்டு தான் போகிறாள்.

    இன்றும் பூத்திருக்கிறது. ரோஜா பூவைபோல் அடுக்கடுக்காக, நெருக்கமான இதழ்களுடன் அழகாக இருக்கும்.

    வெளி கேட் திறக்கும் சப்தம் கேட்டது. யார் இந்த நேரத்தில், யாராக இருக்கும். காலடி சப்தம் தன்னை நெருங்க, காலை தேய்த்து நடப்பது... நிச்சயம் மோகன்ராஜ் மாமா தான்.

    மாமா... வாங்க... பேங்குக்கு வந்திருப்பீங்க... அப்படியே இந்த ரேணுகா ஞாபகம் வந்திருக்கும் என்னை பார்க்க வந்துட்டிங்க சரிதானே

    புன்னகைத்தாள் ரேணுகா

    ‘எப்படி ரேணு, சரியா சொல்றே. சரி மழைகாத்து வீசுது. ஏன்ம்மா இங்கே உட்கார்ந்திருக்கே. எழுந்துரு உள்ளே போகலாம். கஸ்தூரிம்மா என்ன செய்யறாங்க"

    சொன்னபடி ரேணுகாவின் அருகில் சென்று கையை பிடிக்கிறார்.

    விடுங்க மாமா... நான் தனியா நடப்பேன். இத்தனை வருஷமா இந்த வீட்டுக்குள் புழங்கறேன் தடுமாற மாட்டேன் வாங்க

    எழுந்தாள், நிதானமாக வாசல்படிகளில் ஏறி, முன்னறையை கடந்து ஹாலுக்கு வந்து சரியாக அவள் எப்போதும் உட்காரும் நாற்காலியில் அமர்ந்துக் கொள்கிறாள்.

    ‘கஸ்தூரிம்மா. மாமா வந்திருக்காரு, சூடா பில்டர் காபி கொண்டு வாங்க.’

    உள் நோக்கி குரல் கொடுக்க, வெளியில் வந்த கஸ்தூரி அவரை பார்த்து புன்னகைக்கிறாள்.

    'வாங்க ஐயா, இரண்டு நாளைக்கு ஒருதரம் நீங்க வந்து பார்த்துட்டு போனா தான் ரேணுவுக்கு திருப்தி, பேசிட்டு இருங்க. காபி போட்டு எடுத்துட்டு வரேன்.'

    ‘அவசரமில்லை மெதுவா வாங்க' எதிரில் அமர்ந்திருக்கும் ரேணுகாவை பார்க்கிறார். பாவம் இந்த பெண், என்ன பாவம் செய்தாள், கடவுள் இப்படி பார்வையை பறித்துவிட்டாரே.

    பெற்றவர்களை பறி கொடுத்து, அக்காவும் தங்கையுமாக தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் வாழும் வாழ்க்கை, அழகு என்று பார்க்கும்போது, எந்த குறையும் சொல்ல முடியாமல், ஒருவரையொருவர் மிஞ்சும்படி தான் இருக்கிறார்கள். ஆனால் இத்தனை அழகை கொட்டி கொடுத்த கடவுள்... முக்கியமான அவசியத்தை ஊமையாக்கி, இந்த பெண்ணை இருட்டில் தவிக்க விட்டுவிட்டாரே. இனி இவள் எப்போது இந்த உலகத்தை பார்க்க போகிறாள்.

    ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த சேதுராம், சாவதற்கு முதல் நாள் தன் கைபிடித்து சொன்னது மனதில் வந்து போனது.

    மோகன், நான் சாகறதை பத்தி கூட கவலைப்படலை, கடவுள் எனக்கு நல்ல குணமுள்ள அருமையான இரண்டு பெண்களை கொடுத்திருக்காரு. வாழ்க்கை பாதையில் என்னோடு வந்த மனைவி இறந்தப்ப கூட நான் அதிகம் துக்கப்படலை.

    என் பெண்களை பார்த்து ஆறுதலடைஞ்சேன். ஆனா ரேணுவுக்கு கொஞ்ச கொஞ்சமான பார்வை குறைஞ்சு, இப்ப சுத்தமாக பார்க்கும் திறனே இல்லாமல் போச்சு, கண்பார்வை இல்லாத அவளை எப்படி கரை சேர்க்க போறேன்கிற கவலை.

    கவிதாவுக்கும், ரேணுவுக்கும் ஒரு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்காம உலகத்தை விட்டு போயிடுவோமோன்னு மனசு துடிக்குது.

    என் பெண்களுக்காகவாவது நான் உயிர் வாழணும் மோகன்

    ‘கவலைப்படாதே சேது, உனக்கு ஒண்ணுமில்லை ஹார்ட் அட்டாக் மைல்ட்டா தான் வந்திருக்கு. இப்ப நார்மல் ஆயிடுச்சுன்னு டாக்டர் சொன்னாரே.'

    டாக்டர் என்ன கடவுள் என் மனசில் பட்டதை சொல்லிடறேன் மோகன். அப்பறம் இதை மாதிரி சந்தர்ப்பம் கிடைக்காது.

    மோகன்... தாயில்லாத அந்த குழந்தைகள் கரைசேர நீ தான் உதவியாக இருக்கணும். வேணுங்கிற அன்பு பணம், காசு வச்சுட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1