Aayiram Pookkal Malarattum
()
About this ebook
ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டின் மகாலட்சுமியாக கருதப்படுகிறாள். அப்படி வரும் மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தக்கூடாது
வரதட்சணை பெறுவதால் புகுந்த வீட்டு உறவுகள் மீது அப்பெண்ணுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
பிள்ளைகளை காயப்படுத்தாத தந்தை...
மாமியாருக்கு பணத்தின் அருமையை புரிய வைத்த மருமகள் கைபிடித்தவளை விட்டுக்கொடுக்காத கணவன் என பல கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக இக்கதையில் வாழ்ந்துள்ளார்கள்.
குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற எனது நாவல் உங்கள் மனதில் மலர்ந்து மணம் வீசட்டும்.
- பரிமளா ராஜேந்திரன்
Read more from Parimala Rajendran
Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsVerena Nee Irunthai! Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Varame Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsEn Pon Vaanam Nee Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsThaimai Marappathillai! Rating: 0 out of 5 stars0 ratingsThendralaga Nee Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavu Nee Thaanadi..! Rating: 3 out of 5 stars3/5Kaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsRaagam Thedum Pallavi Rating: 0 out of 5 stars0 ratingsUnarvugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsKaayam Patta Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsAnbaal Vellalaam! Rating: 0 out of 5 stars0 ratingsKaalathai Vendravan Nee Rating: 0 out of 5 stars0 ratingsKadanthu Pogum Megangal Rating: 0 out of 5 stars0 ratingsTyagathin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsManame Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhkai Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Paadam Rating: 0 out of 5 stars0 ratingsAzhagaai Poothathey... Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsEngiruthalum Vazhga Rating: 0 out of 5 stars0 ratingsThodarum Iniya Uravu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aayiram Pookkal Malarattum
Related ebooks
Engey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsTyagathin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsManame Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhikal Velicham Tharum Rating: 4 out of 5 stars4/5Kangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Saayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Anbaal Vellalaam! Rating: 0 out of 5 stars0 ratingsThendralaga Nee Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Pogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Uravu Solli Vilayadu... Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsPenmai Thorpathillai Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Vanakkathirkuriya Kaathaliye Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Azhagu Deivam Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Vizhiyoram Oru Vanavil...! Rating: 2 out of 5 stars2/5Annaparavai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5Anbirkkup Panjamillai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Aayiram Pookkal Malarattum
0 ratings0 reviews
Book preview
Aayiram Pookkal Malarattum - Parimala Rajendran
http://www.pustaka.co.in
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
Aayiruam Pookkal Malarattum
Author:
பரிமளா ராஜேந்திரன்
Parimala Rajendran
For more books
http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
முன்னுரை
வரன்+தட்சணை என்பதே வரதட்சணை. பண்டைய காலத்தில் போரின் காரணமாக நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்த போது நல்ல மணமகன் தங்கள் பெண்ணுக்கு அமைய வேண்டும் என்றெண்ணிய பெற்றோர் மணமகன் வீட்டாருக்கு தட்சணை கொடுத்து சம்பந்தம் ஏற்படுத்திக்கொண்டனர். ஓர் உயரிய நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட வழக்கம், பேராசை பிடித்த சிலரால் அதன் முழு அர்த்தமும் மடிந்து போய்விட்டது. ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டில் மகாலட்சுமியாக கருதப்படுகிறார். எனவே மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு சிரமப்படுத்தி இல்லத்திற்கு அழைத்து வருதல் கூடாது, வரதட்சணை பெறுவதால் புகுந்த வீட்டு உறவுகள் மீது மணமகளுக்கு வெறுப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. அத்துடன் பெண்ணை பெற்றவர்களும் அவரவர் தகுதிக்கு மீறி கடன் வாங்கி தம் மகள் வசதியான வீட்டிற்கு சென்றால் நன்றாக வாழ்வாள் என வரதட்சணை கொடுப்பதும் வரதட்சனையின் எல்லையை விரிவடையச் செய்கிறது.
நாவல் இளவரசி பரிமளா இராஜேந்திரன் எழுதியுள்ள ஆயிரம் பூக்கள் மலரட்டும்
என்ற நாவல் இவ்விதழை அலங்கரிக்கிறது. பிள்ளைகளை காயப்படுத்தாத தந்தை, மாமியாருக்கு பணத்தின் அருமையை புரியவைத்த மருமகள், கைபிடித்தவளை விட்டு கொடுக்காத கணவன் என பல கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக வாழ்ந்துள்ள அருமையான படைப்பை நமக்கு வழங்கியுள்ளார் நாவலாசிரியர்.
*****
1
அந்த வீடு சிறியதாக இருந்தாலும், படு சுத்தமாக அழகாக காட்சியளித்தது. எந்த வேலை செய்தாலும் அதை நேர்த்தியுடன் செய்வார் ராஜன்.
இப்பத்தானே வேலைக்காரி வந்து வாசல் கூட்டி சுத்தம் பண்ணிட்டு போனா... இப்ப நீங்க என்ன செய்யறீங்க?
ஓரமெல்லாம் கொஞ்சம் தூசு இருந்துச்சு, அதான் துணியில் துடைச்சேன், ரிடையர்ட் ஆகியாச்சு, எனக்கும் பொழுது போகணும் இல்லையா... நீ போய் உன் வேலையை பாரு பத்மா...
ஆமாம், இதை ஒண்ணு சொல்லிடுங்க. ரிடையர்டு ஆச்சுன்னுதான் பேரு. வீட்டில் தங்கறதில்லை. யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் முதல் ஆளாக போய் நிக்கிறீங்க. உங்க குணம் எந்த காலத்திலும் மாறப் போறதில்லை.
அவள் குரலில் சலிப்பை விட பெருமையே அதிகம் தெரியும்.
அரசு அதிகாரியாக இருந்து ரிடையர்டு ஆனவர் ராஜன். நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் இந்த காலத்தில், லஞ்சம் வாங்காமல் முடிந்த அளவு அதிகாரத்தை பயன்படுத்தி மற்றவர்களுக்கு நல்லதே செய்தார்.
பிழைக்கத் தெரியாத மனுஷனாக இருக்காரு. இரண்டு பையன், ஒரு பெண் இருக்கு. நாளைக்கு படிப்பு. கல்யாண செலவுன்னு காத்து கிடக்கு. இப்படி சம்பளத்தை மட்டும் தம்பியிருந்தால் எப்படி பிழைப்பை ஓட்ட முடியும்... அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது.
காசு பணம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கணும்னு அவசியமில்லை பத்மா. அவங்க நல்லபடியாக வாழ வழிகாட்டினாலே போதும். பசங்க என்ன விருப்பப்படறாங்களோ அதை படிக்கட்டும். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு அவங்க வரணும். அதுதான் என் விருப்பம். பெரியவன் சூர்யா சி.ஏ. படித்து ஆடிட்டரானான். சின்னவன் சத்யா கம்ப்யூட்டர் எஞ்சினியரானான். இருவருக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்து மணம் முடித்தார். சிறிது கால இடைவெளி விட்டு பிறந்தவள் கடைகுட்டி நித்யா மகள் மேல் அதிக பாசம் காட்டினார். ராஜன் ரிடையர்டு ஆகிவிட்டார். நித்யா இப்போதுதான் படிப்பை முடித்திருந்தாள். ரிடையர்டு ஆன பிறகு வந்த பணத்தை மகள் கல்யாண செலவுக்காக பத்திரப்படுத்தியிருந்தார்.
எதுக்கு இப்படி பிள்ளைங்ககிட்டே எதையும் எதிர்பார்க்ககூடாதுன்னு சொல்றீங்க. இன்னைக்கு சூர்யாவும், சத்யாவும் நல்லா சம்பாதிக்கிறாங்கன்னா அதுக்கு நாமதானே காரணம். பெத்தவங்களுக்கு செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமைதானே. அதை ஏன் மறுக்கிறீங்க. இப்படி வர்ற பென்ஷனில்தான் காலத்தை ஓட்டணுமா...
சொல்லும் பத்மாவை புன்முறுவல் மாறாமல் பார்ப்பார் ராஜன்.
பத்மா இப்படி வந்து பக்கத்துல உட்காரு. நம்ப பிள்ளைங்க நல்லாயிருக்கணும்னு தானே நாம் பாடுபட்டோம். இப்ப நாம் பார்க்க குடும்பம், குழந்தைங்கன்னு சந்தோஷமாக இருக்காங்க. அதுதான் நமக்கு வேணும் பத்மா. எதிர்பார்ப்புகள் வேண்டாம் பத்மா. இப்ப நமக்கு என்ன குறை. பென்ஷன் பணம் போதுமானதாக இருக்கு. நித்யா கல்யாணத்துக்கும் தேவையான பணம் வச்சிருக்கோம். நமக்கு இப்ப எதுவும் தேவைபடாது எதுக்கு அவங்ககிட்டே எதிர்பார்க்கணும். சொல்லப் போனா என் ஆசை என்ன தெரியுமா, கடைசிவரை என் உழைப்பிலேயே வாழ்ந்துட்டு போகணும்...
கணவனை நிமிர்ந்து பார்க்கிறாள்.
கடைசி வரை கொடுப்பவர்களாகவே இருப்போம்னு சொல்றீங்க...
ம்... அப்படித்தான் வச்சுக்கோயேன்...
மாறாத புன்சிரிப்புடன் பார்க்கும் கணவரை பெருமிதம் பொங்க அன்போடு பார்க்கிறாள் பத்மா. கேட்டை திறந்து உள்ளே வரும் நண்பனை பார்த்த ராஜன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபடி...
உள்ளே வா தயா... நான் இங்கேதான் இருக்கேன்...
என்ன தோட்ட வேலையா?
ஆமாம்பா... கீரை விதை வாங்கி தூவினேன். இப்பத்தான் அழகா தலையெடுத்திருக்கு. வெண்டையெல்லாம் பிஞ்சு வெச்சிருக்கு, நாம் சாப்பிடற மாதிரி அதுங்களுக்கும் சாப்பாடு தேவைப்படுது இல்லையா... அதான் தண்ணீர் ஊத்தறேன். அப்புறம் சொல்லு... இன்னைக்கு வேலைக்கு போகலையா?
மனசு சரியில்லை ராஜன். அதான் உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்...
அப்பவே கவனிச்சேன். உன் முகமே சரியில்லை. சரிப்பா, வா உள்ளே போகலாம். உன் தங்கச்சி கையால சூடாக காபி குடி. அப்புறம் பேசலாம்.
நண்பனை அழைத்துக் கொண்டு நடக்கிறார் ராஜன்.
ராஜனுக்கும், தயாளனுக்கும் நட்பு ஏற்பட்டதே தனிக்கதை. நான்காவது படிக்கும் காலத்திலேயே நண்பர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்தான். இருந்தாலும் தயாளனின் அப்பா அந்த ஊரில் பெரிய மனிதர். வீடு, வாசல் என்று வசதியோடு வாழ்பவர்கள்... ராஜனின் அப்பா விவசாயி.
ராஜன் சிறு வயதிலிருந்தே யார் வம்புக்கும்