Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Solla Vandhean…
Kaadhal Solla Vandhean…
Kaadhal Solla Vandhean…
Ebook118 pages57 minutes

Kaadhal Solla Vandhean…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580105704532
Kaadhal Solla Vandhean…

Read more from Vidya Subramaniam

Related to Kaadhal Solla Vandhean…

Related ebooks

Reviews for Kaadhal Solla Vandhean…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Solla Vandhean… - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    காதல் சொல்ல வந்தேன்...

    Kaadhal Solla Vandhean…

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    விதானில் சில சாமான்கள் வாங்குவதற்காக வந்த இடத்தில், ரெடிமேட் பிரிவில் நிருபமாவைப் பார்த்த கார்த்திக் முகம் மலர்ந்தான். அவளுக்காகத்தான் அவன் ஒரு நல்ல சல்வார் வாங்க வந்திருந்தான்.

    ஹாய் நிரூ என்றழைத்தபடி அவளருகில் சென்றான்

    ஹல்லோ ... நீங்க எங்க இங்க? நிருபமா வியந்தாள்.

    உனக்குதான் ஒரு சல்வார் வாங்கலாம்னு வந்தேன். வாயேன் நீயே வந்து செலக்ட் பண்ணேன்.

    எனக்கெதுக்கு இப்போ?

    நல்ல கேள்வி. நீ என் வருங்கால மனைவி. உனக்கு நா டிரெஸ் வாங்கிக் குடுக்கணும்னு ஆசைப்பட்டா, எதுக்குங்கற நீ!

    அதுக்கில்ல... ஏற்கெனவே ஏகப்பட்ட டிரெஸ் இருக்கு அதையெல்லாமே போட்டுக்க முடியல. வேளைக்கொரு டிரெஸ்ஸுனு போட்டா கூட அதுல பாதியதாப் போட முடியும். அதான் சொல்றேன்.

    உங்கிட்ட ஆயிரம் டிரெஸ் இருக்கலாம் நிரூ. நா வாங்கித்தர டிரெஸ் சம்திங் ஸ்பெஷல்தானே.

    சம்திங் ஸ்பெஷல்னா கடசீ வரை வெச்சுக்கும்படியா இல்ல இருக்கணும்? டிரெஸ்னா மிஞ்சிப்போனா நாலஞ்சு வருஷம்தான். அப்பறம் கிழிஞ்சிடுமே."

    அப்பொ வேறென்ன வேணும்?

    வேறென்ன வேணாலும் ஓ. கே. பத்து ரூபாய்க்கு ஒரு ஹேர் கிளிப் வாங்கிக் கொடுத்தாலும் சந்தோஷம் அல்லது பத்தாயிரம் கொடுத்து டயமண்ட் ரிங் வாங்கித் தந்தாலும் சரி நிருபமா குறும்போடு சிரிக்க கார்த்திக் எச்சில் விழுங்கினான். பத்து ரூபாய் கிளிப் ரொம்ப சீப்பான விஷயம், பத்தாயிரத்திற்கு டயமண்ட் ரிங் என்பது சக்திக்கு மீறிய விஷயம்"

    என்ன யோசனை?

    ம்...? ஒண்ணுல்ல.

    நா சொல்லவா? பத்து ரொம்ப கம்மி, பத்தாயிரம் ரொம்ப அதிகம் அப்டித்தானே?

    கார்த்திக் அசடு வழிய அவளைப் பார்த்தான். சரி வாங்க உங்க பிரச்சனையை நானே தீர்த்து வெக்கறேன்.

    நிருபமா அவனை அழைத்துக் கொண்டு ஒரு கடைக்குள் நுழைந்தாள். பஞ்சலோகத்தால் ஆன ஒரு அழகான நடராஜர் விக்ரகத்தை வாங்கினாள். எழுநூறு ரூபாய் விலை போட்டிருந்தது.

    இது பரவால்லயா? அவனிடம் காட்டி கேட்டாள்.

    இன்னும் ஏதாவது கூட வாங்கிக்கலாமே கைல மூவாயிரம் இருக்கு.

    பரவால்ல இது போதும் வாங்க போகலாம்.

    நிருபமா வெளியில் வந்தாள்.

    நீ என்ன வாங்க வந்தே?

    என் வருங்கால கணவருக்கு ஒரு சின்ன பிராண்ட் வாங்கலாம்னுதான் வந்தேன்.

    அட... என்ன வாங்கின?

    சாப்ரைஸ்...

    எப்பொ தருவே?

    கல்யாணத்தன்னிக்கு ராத்திரி.

    கார்த்திக் சிரித்தபடி அவளைப் பார்த்தான்.

    நா வரட்டுமா? நிருபமா அவனிடம் சொல்லியபடி நடந்தாள்.

    ஏதாவது சாப்ட்டுட்டு போலமே.

    வேண்டாம் அப்பா எனக்காக சாப்டாம காத்துட்டுப் பார்.

    நிருபமா படி இறங்கிச் சென்று தன் காரில் ஏறிக் கொள்ள காத்தின் அவளையே பார்த்தபடி நின்றான்.

    பெண் பார்க்கப் போன இடத்தில் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தையும், நிரூபமாவின் அழகையும் நாகரீகத்தையும் பார்த்தவனுக்கு அவள் தன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிப்பாள் என்றே தோன்றவில்லை. அம்மா தங்கள் அந்தஸ்துக்கு மீறின இடமாகப் பார்த்து விட்டாளோ என்று தோன்றியது. ஒரு வேளை அவள் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டால் அந்த அவமானத்தை தன்னால் தாங்க முடியுமா? என்று பயமாக இருந்தது. அம்மா அழைத்தபோது தங்களைப் போன்ற சராசரி குடும்பமாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்து விட்டான் அவன். ஆட்டோவில் வந்து இறங்கும் போது தான் வீட்டின் வனப்பைப் பார்த்து வியந்தவன் அம்மாவை கவலையோடு பார்த்தான்.

    ஏம்மா... சாங்க கூட்டிட்டு வந்திருக்க நீ? வீட்டைப் பார்த்தா கோடீஸ்வரங்க மாதிரி இருப்பாங்க போலருக்கு நமக்கு சரிப்படுமா?"

    நாம ஒண்ணும் கெஞ்சலடா அவங்களாதான் வீடு தேடி வந்து சம்பந்தம் பேசினாங்க. பெண் பார்க்கவும் வரச்சொன்னாங்க. அப்பறம் என்ன? அம்மா அவனை அடக்கினாள்.

    உள்ளே வந்து நிருபமாவைப் பார்த்ததும் இன்னும் பயந்து போனான். சூரியனை உருக்கி செய்தாற்போல் அப்படி ஒரு தகதகப்பும் அழகும் நல்ல உயரமுமாய் இருந்தாள். கார்த்திக் நல்ல உயரம்தான். ஆனால் நிருபமா அப்பனுக்கு சமஉயரமாய் இருப்பாள் போலிருந்தது. உயரம் மட்டும் சரியாய் இருந்தால் போதுமா? அழகு, நிறம் என்று பார்த்தால் கார்த்திக் சுமார்தான். அப்படியிருக்க இந்த இடம் முடியும் என்று அவனுக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை.

    பணத்துல வேணா நாம கொஞ்சம் எப்படி இருக்கது! ஈட்டா ஆனா உன் படிப்பு உசத்திதானே அதுவு நாம குறைஞ்சுடலையே அந்த படிப்புக்காகத்தான் அவங்க நம்பளைத் தேடி வந்துருக்காங்க. அதனால் நீ ஒண்ணும் கவலைப்படாதே. கம்பீரமா இரு" அம்மா அவனை சமாதானப்படுத்தினாள்.

    "பொண்ணு உங்களோட கொஞ்சம் பேசணும்னு அசைப்படறா அந்த ரூம்ல இருக்கா பெண்ணின் அப்பா சொல்ல கார்த்திக் அந்த அறைக்குச் சென்றான்.

    உக்காருங்க நிருபமா அவனை உட்கார வைத்து விட்டு எதிரில் அமர்ந்தாள்.

    எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு நா படிப்புல சுமார் கஷ்டப்பட்டு ஒரு டிகிரி வாங்கிட்டேன். படிப்பு மேல இன்ட்ரஸ்ட் இல்ல. அதே நேரம் என்னை மக்குன்னும் நினைச்சுர வேண்டாம். என் கவனம் பூரா மாடலிங், டிஸைனிங் இது மேலயே இருக்கு நா மாடலிங் பண்ற விஷயம் உங்களுக்குத் தெரியும் இல்லையா?

    அம்மா ஏதோ சொன்னாங்க.

    கல்யாணத்துக்கப்பறம் நா தொடர்ந்து மாடலிங் செய்யறதுல உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதே!

    எதுக்கெல்லாம் நீங்க மாடலிங் பண்றீங்க?

    "பயப்பட வேண்டாம். என்னோட மாடலிங் எல்லாம் ரொம்ப டீஸன்ட்டா இருக்கும். ஆண்கள் உபயோகிக்கற சாமான்களுக்கெல்லாம் அனாவசியமா பெண்களை ஆபாசமா போஸ் கொடுக்க வெக்கற எந்த விளம்பரத்துலயும் எனக்குச் சம்மதமில்ல. ஜ்வல்ஸ், காஸ்ட்யூம்ஸ், அப்பறம் நியூட்ரிஷியஸ் டிரிங்க்ஸ்ன்னு நல்ல விளம்பரப்படமா டீஸன்ட்டா இருந்தா மட்டும் தான் செய்வேன். அதுவும் தவிர நா நல்லா பாடுவேன். இப்பொ தனிப்பட்ட ஆல்பமும் பண்ணிட்ருக்கேன். என்னுடைய கிரியேடிவிடிக்கு கல்யாணத்துக்குப் பிறகு எந்த இடைஞ்சலும் வரக்கூடாதுன்னு தான் எல்லாத்தையும் சொல்றேன். என்னதான் மாடலா இருந்தாலும் பாப் சிங்கரா இருந்தாலும்கூட நா வீட்டுக்கு அடங்கின பொண்ணுதான்.

    Enjoying the preview?
    Page 1 of 1