Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnil Vaazhkiren
Unnil Vaazhkiren
Unnil Vaazhkiren
Ebook119 pages1 hour

Unnil Vaazhkiren

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465896
Unnil Vaazhkiren

Read more from Parimala Rajendran

Related to Unnil Vaazhkiren

Related ebooks

Reviews for Unnil Vaazhkiren

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnil Vaazhkiren - Parimala Rajendran

    20

    1

    சூரியன் தன் பொன் கதிர்களால் உலகையே பிரகாசமாக்கிக் கொண்டிருந்தான். ஐம்பது வயதை நெருங்கும் மைதிலி, தான் கடந்து வந்த பாதையின் சுமையால், வயது முதிர்ந்தவளாக தெரிந்தாள் வெள்ளிக் கீற்றாய் நரையோடிய தலைமுடி, உழைத்து உழைத்து தேய்ந்த கைகள், கண்களில் படிந்துவிட்ட சோகம்... இதுதான் அவரின் தோற்றம்.

    நெற்றியில் வழிந்த வியர்வையை, அங்கிருந்த துண்டால் துடைத்தவள், வசந்தி... வசந்தி... என்றாள்.

    அவள் அழைப்புக்கு அடுத்த நிமிடமே ஓடோடி வந்தாள் இளையவள்.

    சொல்லுங்க மேடம்.

    நேத்தைக்கு காளான் பூரி ‘ஆர்டர்’ எடுத்தவங்க வந்து வாங்கிட்டு போயிட்டாங்களா?

    ஆமா மேடம். அஞ்சு ‘பாக்ஸ்’ எடுத்துட்டு, கையோடு பணமும் கொடுத்துட்டாங்க. நம்ம ‘மேனேஜர்’ வரவு வச்சிட்டார்.

    இன்னைக்கு எல்லோரும் வேலைக்கு வந்துட்டாங்களா?

    ‘ஸ்டோரில் வேலை செய்யற அமுதா மட்டும் உடம்புக்கு முடியலைன்னு ரெண்டு நாள் ‘லீவு’ போட்டிருக்கா.

    சரி... இன்னைக்கு கொடுக்க வேண்டிய ‘ஆர்டர்’ நிறைய இருக்கு. மதியத்துக்குள் முடிஞ்சிடுமா?

    ஒண்ணும் பிரச்சினை இல்ல. ‘பேக்கிங்’ நடந்துட்டு இருக்கு மேடம்.

    சரி... நீ போய் வேலையைக் கவனி.

    ‘செல்போன்’ அழைக்க...

    சொல்லு ரவி.

    ‘பிசி’யா இருக்கியாம்மா?

    இல்ல! என்ன விஷயம்?

    பெண் பார்க்க வெள்ளிக்கிழமைதானே போறோம்...?

    ஏன் இப்படி கேட்கிற?

    ராதா ‘போன்’ பண்ணினா. ‘அம்மாவுக்கு இந்தக் கல்யாணத்துல பூரண சம்மதமான்னு கேட்டியா...? நீ பாட்டுக்கு காதல் அது இதுன்னு சொல்லி, பெண் பார்க்கிற வரை கொண்டு வந்துட்டே! கடைசி நேரத்தில் அவங்க ஏதாவது சொல்லிட்டா... என்ன பண்ணுறது? எதுக்கும் கேட்டுக்க..’ன்னு சொன்னா.

    உன் தங்கச்சி எப்பவுமே இப்படித்தான்! அடுத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு புரியாம பேசுவா.

    "இப்ப சொல்றேன். உன் மனசுக்குப் பிடிச்சவள கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. கடைசி வரை அவளுடன் வாழப் போறவன் நீ. ராதாவோட கல்யாணத்தை நல்லபடியா முடிச்சாச்சு. உன்னோட கல்யாணமும் நல்லபடியா நடந்துச்சுன்னா என் கடமை முடிஞ்சிடும்.

    உங்க அப்பா விபத்துல என்னை தனி மரமா தவிக்க விட்டுட்டு போனப்ப, உங்களை எப்படி கரையேத்தப் போறேன்னு திகைச்சு நின்னேன். கஷ்டத்தைக் கொடுத்த கடவுள், அதுல இருந்து மீளும் வழியையும் காட்டினாரு. எப்படியோ... நீயும், ராதாவும் நல்லபடியா வாழ்ந்தால் எனக்கு அதுவே போதும்."

    உன்னைப் பத்தி எனக்கு தெரியும்மா! இந்த ராதாதான் குழப்பிட்டா. அப்புறம் நீ ஏன்ம்மா இன்னும் அப்பள ‘கம்பெனி’யை வச்சி போராடிட்டு இருக்கே? நானும் ஒரு ‘சாப்ட்வேர் கம்பெனியில் நல்லாவே சம்பாதிக்கிறேன். வரப் போகிற உன் மருமகளும் என்னோடுதான் வேலை பார்க்கறா. சொந்த வீடு இருக்கு. போதும்ல... நீ ஏன் இன்னும் கஷ்டப்படணும்?

    நீ சொல்றது கேட்க நல்லா இருந்தாலும், நடைமுறையில சாத்தியம் இல்ல. படிக்காத எனக்கு, தெரிஞ்ச தொழிலாக ஆரம்பிச்ச இந்த அப்பள ‘கம்பெனி’ தான் நமக்கு சோறு போட்டுது. அப்பா விட்டுப் போன ஒரே சொத்து... வீடு. அதை இன்னைக்கு வரைக்கும் காப்பாத்தி வச்சிருக்கேன். உழைக்கக் கூடிய தெம்பு, என் உடம்பில் இருக்குப்பா. ஓய்வைத் தேடும்போது இதைப் பத்தி யோசிப்போம்.

    சரிம்மா.. உன் இஷ்டம்– ‘போனை’ வைத்தான்.

    எதிரில் தெரிந்த கணவன் படத்தைப் பார்த்ததும் மைதிலி கண்களில் கண்ணீர் நிறைகிறது.

    வசந்தி கதவைத் திறந்து உள்ளே வர… துடைத்தவளாய் வேலையில் கவனம் ஆனாள்.

    ராதா. உள்ளே என்ன செய்யறே? இங்கே வா – உள் அறையில் உட்கார்ந்திருந்த மதன், தன் மனைவியை அழைத்தான்.

    "வரேன்... வரேன். உங்களுக்காகத்தான் சூடா பக்கோடா போட்டு எடுத்து வந்தேன். சாப்பிடுங்க...’’ ` தட்டை நீட்டுகிறாள்.

    பக்கோடாவை வாயில் போட்டுக்கொண்டே, ம்... அப்பளம் செய்றதுல உங்க அம்மா திறமைசாலின்னா, பக்கோடா போடுறதுல நீ திறமைசாலி.

    என்ன கிண்டலா... எங்க அம்மா அப்பள கம்பெனி வச்சித்தான் எங்களை ஆளாக்கி இருக்காங்க தெரியுமா?

    அதை நான் மறுக்கலையே! உங்க அம்மா தைரியசாலிதான்... ஏத்துக்கிறேன். இல்லாட்டி அப்பா இறந்த பிறகு உங்கள் வளர்த்து, படிக்க வச்சு... சொந்த வீட்டில் இருக்காங்களே! பிழைக்கத் தெரியாத ஆளா இருந்தா இத்தனை நாள்ல... இருக்கிறதை எல்லாம் வித்துத் தீர்த்திருப்பாங்க. அந்த வகையில எனக்கு நல்ல மாமியார்தான்.

    புகழாரம் இருக்கட்டும். இந்த வெள்ளிக்கிழமை எங்க அண்ணனுக்கு பெண் பார்க்க போறோம். வரச் சொல்லி இருக்காங்க. மறந்துடாதீங்க.

    என்னமோ நீயும், உன் அம்மாவும் போய் பேசித்தான் முடிவு பண் ணுற மாதிரி சொல்றே! எல்லாம் ஒரு ‘பார்மலிடி’க்குத்தானே? உங்க அண்ணன்தான் எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டாரே?

    அவர் மனசுக்குப் பிடிச்ச பெண்ணையே மணம் முடிச்சு வைக்க அம்மா முன் வந்திருக்காங்களே... அதுவே பெரிய விஷயம்தானே?

    சரிடா... இந்த விஷயத்துல நான் ‘வாபஸ்’ வாங்கிக்கிறேன். போதுமா? போய் சூடா காப்பி எடுத்துட்டு வா.

    அப்படி சொல்லுங்க– சிரித்தபடி உள்ளே செல்கிறாள் ராதா.

    அவளுக்கு அப்பா இல்லை!

    கணவன் மதன், வங்கியில் அதிகாரியாக இருக்கிறான். சிறு வயதிலேயே பெற்றோர் இறக்க... பெரியப்பாவின் தயவில் வளர்ந்தவன்.

    சொக்கநாதன், மனதில் கொஞ்சம் ஈரமுள்ளவர். தம்பி மகனை அநாதையாகவிட விரும்பவில்லை. பெரியம்மா பர்வதம்தான் மனசு இல்லாமல் அவனை வீட்டில் சேர்த்துக்கொண்டாள்.

    இதென்ன பிள்ளை இல்லாத வீடா... எல்லாரையும் தூக்கி வளர்க்கிறதுக்கு? ஏன் அவன் அம்மா வழி சொந்தத்துக்கிட்ட விட வேண்டியதுதானே! நமக்கே மூணு பிள்ளைங்க இருக்கு. இதில் இவன் பளு வேறு வேணுமா...?– அலுத்துக்கொண்டாள்.

    நமக்கு இவனையும் சேர்த்து நாலு பிள்ளைன்னு முடிவு பண்ணிக்க. என் தம்பி மகன்தானே...? என்னால அநாதையா தெருவில் விட முடியாது. நீயும் தாய்(மை) உணர்வோடு நடந்துக்க. தேவையில்லாம பிரச்சினை பண்ணிடாதே.

    கணவன் குணம் தெரிந்து அடங்கிப் போனாள். இருந்தாலும் மதன் என்றால், ஓர் இளக்காரத்துடன் நடந்துகொள்வாள்.

    வளர வளர தனது நிலை உணர்ந்து, நன்றாக படித்து தன்னை உயர்த்திக்கொண்டான் அவன்.

    வங்கித் தேர்வு எழுதி வேலை கிடைத்தபோது, பெரியம்மா–பெரியப்பா காலில் விழுந்து வாழ்த்து வாங்கியபோது, ‘தன் பிள்ளைகள் வாத்தியார் – கம்பெனி மேலாளர் என வேலைகளில் இருக்கும்போது... இவனுக்கு வங்கி அதிகாரி வேலை கிடைத்துவிட்டதே?’ என புழுங்கினாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1