Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avalukkendru Oru Manam
Avalukkendru Oru Manam
Avalukkendru Oru Manam
Ebook96 pages1 hour

Avalukkendru Oru Manam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465971
Avalukkendru Oru Manam

Read more from Parimala Rajendran

Related to Avalukkendru Oru Manam

Related ebooks

Reviews for Avalukkendru Oru Manam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avalukkendru Oru Manam - Parimala Rajendran

    23

    1

    "ஸ்ரீ சாய் ராம் மருத்துவமனை" பெரிய அளவில் அந்த கட்டிடத்தின் முகப்பில் எழுதப்பட்டிருக்க, கார்கள், காம்பவுண்டிற்குள் அணிவகுத்து நிற்க, புறநோயாளிகளும், உள்ளே சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளின் உறவுகளுமாக கூட்டம் அலை மோதியது.

    அந்த மருத்துவமனை வளாகத்தில் வெண்ணிற ஆடையில் தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தாள் கவிதா.

    ரூம் நம்பர் பனிரெண்டில் சிஸ்டர் கவிதாவை கூப்பிடறாங்க

    கவிதா எங்கப்பா... இந்த அம்மா அவங்ககிட்டேதான் ஊசி போட்டுப்பாளாம்... அழிச்சாட்டியமா அரைமணி நேரமா உட்கார்ந்திருக்காங்க.

    வரிசையாக வந்த நோயாளிகளுக்கு டாக்டரின் பரிந்துரையின்படி, இன்ஜக்க்ஷன் பண்ணிக் கொண்டிருந்த நர்ஸ் அலுத்துக் கொண்டாள்.

    மாடி அறையில் இருந்த உள்நோயாளிகளை கவனித்து விட்டு, வேகமாக படிகளில் இறங்கிய கவிதாவை எதிர் கொண்டாள், நர்ஸ் சங்கீதா.

    கவிதா சீக்கிரமா போ... உன் ஆளு வந்தாச்சு... நீயில்லாட்டி கத்துவாரு

    என்னடி சொல்ற

    ஆமாம் தாயே, உனக்கு எல்லாம் விளக்கமாக சொன்னாதான் புரியும்... டாக்டர் மனோஜ் ஓ.பி. பார்க்க வந்துட்டாரு. அவரு பேஷண்ட்டை நீதானே அட்டெண்ட் பண்ணனும்... அதான் சொன்னேன்.

    உனக்கு ரொம்பதான் கொழுப்பு, அப்புறம் கவனிச்சுக்கிறேன்.

    ஓட்டமும் நடையுமாக டாக்டர் மனோஜின் அறைக்குள் நுழைந்தாள்.

    ஹலோ, கவிதா குட்மார்னிங்

    குட்மார்னிங் டாக்டர்

    அழகு மிளிற, ஆஜானுபாகுவாக, கம்பீரமாக, முகம் மலர ‘ புன்னகைத்தபடி தன்னை பார்க்கும் மனோஜை பார்க்கிறாள்.

    இன்னைக்கு எனக்கு அவுட்பேஷண்ட் எத்தனை இருக்கு கவிதா

    பதினைந்து

    ஓ.கே. சீக்கிரம் முடிச்சுடலாம்... ஒவ்வொருத்தரா அனுப்பறியா

    யெஸ் டாக்டர்

    கவிதா திரும்ப...

    ஒரு நிமிஷம், அப்பா என்ன செய்யறாரு

    டாக்டர், அட்மிஷன் கேஸ்களை பார்க்க ரவுண்ட்ஸ் போயிருக்காரு.

    சிரித்தபடி கவிதாவை பார்க்கிறான்..

    அப்பா மாதிரி முடியாது... எட்டு மணிக்கெல்லாம் ஹாஸ்பிடல் வந்துடறாரு... நான்தான் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கேன்.

    சொன்னவன், இந்தா கவிதா இந்த பைலை அப்படியே அப்பா ரூமில் வச்சுடு. அருகில் வந்து டேபிள் மீது இருந்த பைலை எடுக்க...

    குரலை தாழ்த்தி கிசுகிசுப்பாக...

    இன்னைக்கு சாயந்திரம், நம்ப ப்ரோக்ராம் ஞாபகம் இருக்கில்லையா... பெசன்ட் நகர் பீச்சில் மீட் பண்றோம். இன்னைக்கு தேதி பத்து

    தெரியும்

    ஓ.அப்படியா, மகாராணி இங்கெல்லாம் வாய் திறக்க மாட்டாங்க... ட்யூட்டியில் சின்சியராக இருப்பாங்க அப்படிதானே

    "வேண்டாம் மனோஜ்... இது ஹாஸ்பிடல். நீங்க டாக்டர். நான் நர்ஸ் அந்த ரிலேஷன்ஷிப்பை கீப் அப் பண்ணினால் நல்லது...

    உங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும்... இப்படி ஏதாவது கடலை போட்டீங்கன்னா... உங்க ரூமுக்கு நான் வர மாட்டேன்... பிருந்தாவை அனுப்பி வச்சுடுவேன்."

    வேண்டாம் தாயே... அவ டாக்டர், டாக்டர்னு பக்கத்திலேயே நிப்பா... நான் வாயே திறக்கலை... நீ போய் பேஷண்ட்டை வரச்சொல்லு.

    சிரித்தபடி தன்னை கடந்து செல்லும் கவிதாவை காதலுடன் பார்க்கிறான் மனோஜ்.

    டாக்டர் செல்வராகவன் ஸ்ரீ சாய்ராம் மருத்துவமனையை கட்டி, நல்ல பெயரும் சம்பாதித்து. திறம்பட நடத்தி வந்தார். அவரின் ஒரே வாரிசு மனோஜ். அவனையும் டாக்டருக்கு படிக்க வைத்து, தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.

    எவ்வளவுக்கெவ்வளவு திறமை உள்ளவராக இருந்தாரோ, அதே அளவு கண்டிப்பும் அவரிடம் இருந்தது. ,

    ஹாஸ்பிடல் வந்துவிட்டால் அப்பா, மகன் உறவெல்லாம் அவருக்கு மறந்துவிடும்.

    டேபிளிலிருந்த போன் அடிக்க, இண்டர்காமில் அப்பா அழைப்பது

    ஒளிர,

    "சொல்லுங்க டாடி’

    இப்பதான் வந்தியா மனோஜ்

    யெஸ் டாடி

    உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்... ஒன்பது மணிக்கு பேஷண்ட் பார்க்க ஆரம்பிச்சுடணும்... வந்தவங்களை அதிகநேரம் காக்க வைக்க கூடாது... இப்ப மணி ஒன்பதரை... தெரியுமா.

    ஸாரி டாடி, அம்மா எழுப்பலை. அதான்

    ஓ.கே. பேஷண்ட் முடிச்சுட்டு, என் ரூமுக்கு வா

    ஓ.கே. டாடி

    அதற்குள் பேஷண்ட் வர, வேலையில் கவனமானான்.

    என்ன கவிதா ஓ.பி. முடிஞ்சாச்சா

    ஆமாம்... இப்ப தான் முடிந்துஞ்சுது டாக்டர் அவங்க அப்பா ரூமுக்கு போயிருக்காரு...

    உங்க காதல் எவ்வளவு தூரத்தில் இருக்கு

    மனசுக்குள் பயம் வருது சங்கீதா... அவங்க பணக்கார குடும்பம்... அப்பா, மகன் இரண்டு பேருமே டாக்டர்ஸ்... இவ்வளவு பெரிய மருத்துவமனை. ரிடையர்ட் ஸ்கூல் வாத்தியார் மகளான எனக்கும் அவருக்கும் ஒத்துவருமா... இந்த கல்யாணம் நடக்குமா

    ஏன் இப்படி சந்தேகப்படறே. டாக்டர் உன் மேல உயிரா இருக்காரு... நிச்சயம் உன்னை யாருக்காகவும், எதுக்காகவும் இழக்க மாட்டாரு நம்பு கவிதா.

    அந்த நம்பிக்கையில் தான் அவர்கிட்டே பழகிட்டிருக்கேன்.

    "உங்க காதல் எவ்வளவு கண்ணியமானதுன்னுதான் எனக்கு தெரியுமே... ஹாஸ்பிடலில் ஒருத்தருக்கொருத்தர் பழகிட்டிருப்பதை வெளிபடுத்தாமல்... டாக்டர், நர்ஸ்ங்கிற நட்போடு நடந்துக்கிறீங்க. மாசத்தில் இரண்டு நாள் மட்டும் நேரில் தனியா மீட் பண்றீங்க.

    மத்தபடி எல்லாமே போனில் தான்... உன் நெருங்கிய தோழிங்கிறதாலே

    Enjoying the preview?
    Page 1 of 1