Poojaikettra Poovithu
5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Kaalamellam Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsPerazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Kangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5Thaalaattum Poongattru Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 4 out of 5 stars4/5Manathodu Paadum Raagam Rating: 3 out of 5 stars3/5Poojaikku Vantha Malare Rating: 4 out of 5 stars4/5Thunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5
Related to Poojaikettra Poovithu
Related ebooks
Ennennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsVendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Venpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsAnbirkkup Panjamillai Rating: 5 out of 5 stars5/5Thendral Vanthu Ennai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Azhagu Deivam Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPenmai Thorpathillai Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Mannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Ennodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaatha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsUthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Ithanai Naala Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsThoduvanai Thottuvidu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Poongatru Puthithanathu Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Poojaikettra Poovithu
1 rating0 reviews
Book preview
Poojaikettra Poovithu - Parimala Rajendran
19
1
அடர்த்தியான கூந்தலை தளர பின்னி, கிளிப் செய்தவள், மல்லிகை பூவை, சரமாக தொங்கவிட்டாள்.
டிசைனர் சில்க், பார்டர் பொறிக்கப்பட்டிருந்த கற்கள் வைரங்களாக டாலடித்தது... அவள் அழகை கூட்டி காண்பித்தது.
கண்ணாடியில் ஒருமுறை தன்னை பார்த்துக் கொண்டவளின் முகத்தில் தான் ஒரு அழகி என்ற கர்வம் பளிச்சிட்டது.
கைதட்டல் சப்தம்.
பிரமாதம் என் சகோதரியே. அசத்தும் அழகில் அப்படியே தேவலோக மங்கை போல இருக்கிறாய்
ஏய் உனக்கு கிண்டலா?
சுகந்தி அடிப்பதற்கு கை ஓங்க.
கோபிச்சுக்காதே... உண்மையில் உன் அழகை பார்த்துதான் மயங்கிட்டேன். மாப்பிள்ளை அவ்வளவுதான் சரண்டர் ஆகிடுவாரு
போடி... எனக்கு எவ்வளவு கவலையா இருக்கு தெரியுமா?
அப்படியென்ன கவலை
கேட்டபடி நந்தினி, கட்டிலில் ஏறி உட்கார்ந்து, தலையணையை மடியில் வைத்து கொண்டு, கதை கேட்க சுவராசியமானாள்.
உனக்கு என்னை பார்த்தா கேலியும், கிண்டலுமா இருக்கு. இது என் வாழ்க்கை வந்தவன் அழகானவானாக, என் மனசுக்கு பிடிச்சவனாக இருக்கணும்னு எவ்வளவு கவலைப்படறேன் தெரியுமா...?
இதுவரை நாலு பேர் வந்து பார்த்தாச்சு. நேரில் ஒருத்தன் போட்டோவில் அழகா இருந்தான். வளைஞ்ச மூக்கு... பார்க்கவே சகிக்கலை...
ஒருத்தன் சோடாபுட்டி கண்ணாடி. இன்னொருத்தன் செம குண்டு அடுத்தவன்... ஓமகுச்சி மாதிரி...
சுகந்தி பேச, பொங்கி வரும் சிரிப்பை அடக்கியவளாக அவளையே பார்த்தாள்.
என்னடி பாக்கிறே
சரி... மேலே சொல்லு...
அப்பா, அம்மாகிட்டே கண்டிஷனா சொல்லிட்டேன். மாப்பிள்ளை அழகா... என் மனசுக்கு பிடிச்சவனாக இருக்கணும். அப்பதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்னு சொல்லிட்டேன்.
அப்புறம் என்ன அக்கா. அப்படியொருத்தன் வரும் வரை வெயிட் பண்ணு
அதான் பயமா இருக்குது... யாரையுமே பிடிக்கலையே... இப்படியே போனா...
கடையில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியதுதான். வேண்டாம் சொன்னால் கோபப்படுவாள்.
அக்கா நீ கற்பனை செஞ்சு வச்சுருக்கிற மாதிரி, அரும்பு மீசை, அடர்த்தியான புருவம், காந்த விழிகள், கூரான மூக்கு, கோதுமை நிறம். ஆறடி உயரத்தில் ஆணழகனாக உடலமைப்பு... கொஞ்சம் கஷ்டம்தான்... பார்ப்போம்... இன்னைக்கு வர்றவன். உன்கிட்டே பாஸ்மார்க் வாங்குகிறானான்னு...
உன்னை ஒண்ணு கேட்டா கோபப்பட மாட்டியே...
என்ன கேளு
நீ அழகா இருக்கே பி.எஸ்.ஸி. படிச்சிருக்கே... உன்னை பார்த்ததும் பிடிச்சுரும் இருந்தாலும், நான் வேலைக்கு போகமாட்டேன். வீட்டில்தான் இருப்பேன்னு கண்டிஷன் போடறே. அதுக்கு வர்றவங்க ஒத்துக்கலைன்னா என்ன செய்வே...
ம்... என் கண்டிஷனுக்கு ஒத்துபோறவன் வர்றவரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்...
அப்ப, உனக்கு கல்யாணம் ஆன மாதிரிதான்
கழுதை... ஏண்டி என் வயித்தில் புளியை கரைக்கிறே... அம்மா... இங்கே வாயேன்... இந்த நந்தினி என்ன பேச்சு பேசறா பாரும்மா
கிச்சனில், கேசரியை செய்து எடுத்து ஹாட் பேக்கில் வைத்தவள்,
நந்தினி இங்கே வந்து எனக்கு ஹெல்ப் பண்ணகூடாதா அவக்கிட்டே என்ன அரட்டை
ஒண்ணுமில்லம்மா... நீ வேலையை பாரு
அக்கா, கவலைப்படாதே... இந்த இடம் உனக்கு அமைஞ்சுரும் பாரேன். பையன் சாப்ட்வேர் இஞ்சினியர் அப்பா கிடையாது. ஒரே ஒரு தங்கை ப்ளஸ் டூ படிக்கிறா நீ வேலைக்கு போகலைன்னா என்ன, அதான் பையனோட அம்மா, காலேஜில் லெக்சராக வேலை பார்க்கிறாங்க. அப்புறம் என்ன தாரளமாக கல்யாணம் பண்ணிக்க... மாமியாருக்கும் உதவியா இருக்கும்
உண்மையில் கோபம் வந்த சுகந்தி அடிக்க வர,
வேகமாக கட்டிலை விட்டு இறங்கி வெளியே ஓடினாள் நந்தினி.
சாரங்கன் துண்டால் முகத்தில் வழியும் வியர்வையை துடைத்தபடி அபிராமியை பார்த்தார்.
ஹாலில் எல்லாம் ஒழுங்கா எடுத்து வச்சுட்டேன் சிவகாமி வேறு ஏதும் வேலையிருக்கா...
ஒண்ணும் இல்லை... நீங்க கொஞ்ச நேரம் பேனில் உட்காருங்க. எப்படி வியர்க்குது பாருங்க...
உனக்கு அடுப்படி வேலை முடிஞ்சாச்சா
ஆச்சுங்க. பால் மட்டும்தான் காய்ச்சணும். இந்த நந்தினியை பாருங்க... இவ்வளவு நேரம் அவங்க அக்காவை வம்புக்கு இழுத்துட்டு... இப்பதான் குளிக்க போயிருக்கா...
வரட்டும் மெதுவா வரட்டும். இப்ப அவளையா பெண் பார்க்க வர்றாங்க. சுகந்தி ரெடியா இருக்காளா...
ம்... அவ அலங்காரம் முடிஞ்சுது. இந்த இடமாவது முடியணும்னு... மனசு பரபரக்குதுங்க
எல்லாம் முடியும். பையன்தான் போட்டோவில் அவ்வளவு லட்சணமா இருக்கானே... சுகந்திக்கு நிச்சயம் பிடிச்சு போகும். செய்யறது கொஞ்சம், முன்னே பின்னே இருந்தாலும், அவங்க கேட்கிறதை செஞ்சு முடிக்க பார்ப்போம். இரண்டு பெண்களை பெத்து வச்சுருக்கோம். நல்லபடியா கரையேத்தினாதானே நிம்மதி
அவரிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.
அப்பா... நான் ரெடி...
சிகப்பு நிற சூடிதாரில், துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி பளிச்சென்று... நெற்றியில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டுடன், தன்னை பார்த்து சிரித்தபடி நிற்கும் நந்தினியை பார்த்தார்.
‘இவளும் இந்த வருடத்துடன் காலேஜ் படிப்பை முடிக்க போகிறாள். அடுத்த வருடம் இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்.
இரண்டு பேரின் கல்யாணத்தையும் நல்லபடியாக முடித்து விட்டு, கிராமத்து பக்கம் போக வேண்டியதுதான். ரிடையர் ஆகியாச்சு. இனி இங்கே என்ன வேலை’
என்னப்பா யோசனை
அவரருகில் வந்து உட்கார்ந்து கொள்கிறாள்.
அக்காவுக்கு சாப்பிட ஏதும் வேணுமா என்று கேளும்மா?
இல்லப்பா அவ பச்சை தண்ணி கூட குடிக்கமாட்டா. கஷ்டப்பட்டு ஒரு மணி நேரமா போட்ட மேக்கப் கலைஞ்சுடும் இல்லையா. அப்புறம் திரும்ப பவுன்டேஷன், ரூஜீ, லிப்ஸிடிக்குனு முதலிலிருந்து ஆரம்பிக்கணும்
சிரிக்கிறாள் நந்தினி.
அவளுக்கு அலங்காரம் பண்ணிக்க பிடிக்கும் உனக்கு என்னடி வந்தது. எதுக்கு அவளையே கிண்டல் பண்ணிட்டு இருக்கே...
அபிராமி மகளை செல்லமாக கடிந்து கொள்ள,
"இன்னும் கொஞ்ச நாள் தான். சுகந்திக்கு கல்யாணம் ஆயிட்டா. அப்புறம் யாரை வம்புக்கு