Uravugal Thodarkathai
5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Aayirathil Oruthi Rating: 5 out of 5 stars5/5Engiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Poojaikku Vantha Malare Rating: 4 out of 5 stars4/5Mayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5Vizhiye kathai Ezhuthu Rating: 0 out of 5 stars0 ratingsThaalaattum Poongattru Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uravugal Thodarkathai
Related ebooks
Yaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Un Vizhikal Velicham Tharum Rating: 4 out of 5 stars4/5Ennai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsIlamjolai Vennilaa Rating: 0 out of 5 stars0 ratingsMogathirai Rating: 0 out of 5 stars0 ratingsKannan Varum Neramithu Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsMangala Isai Rating: 3 out of 5 stars3/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Vellai Niraththil Oru Vannaththupoochi Rating: 4 out of 5 stars4/5Aayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhichsudare Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Kaathal Malarum Kaaththiru Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kalangamillai Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Penn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsKannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Man Kuthirai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Uravugal Thodarkathai
1 rating0 reviews
Book preview
Uravugal Thodarkathai - Parimala Rajendran
44
1
சுமை நிறைந்த அந்த இடமே கண்ணுக்குக் குளிர்ச்சி தந்தது. பனி போர்த்திய மலைத் தொடர்கள். சில்லென்ற குளிர்ந்த காற்று. காரிலிருந்து இறங்கினாள் பாரதி.
மூர்த்தி வீட்டினுள் நுழைய, வாட்ச்மேன் பவ்யமாக நிற்க, உள்ளே போகத் தோன்றாமல், வெளியில் அமைந்திருந்த தோட்டத்தை ரசித்தாள். சிகப்பு, மஞ்சள், ரோஸ், வெள்ளை எனப் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்கள்.
வரிசையாக, காம்பவுண்ட் சுவரை ஒட்டிப் பூத்திருந்த டேரா பூக்கள், அடுக்கு செம்பருத்தி... இன்னும் பெயர் தெரியாத ஊட்டி மலர்கள்.
அந்த இடமே ரம்யமாக, புல்வெளி அமைக்கப்பட்டு, வண்ணக் குடையின் கீழ், வட்டமேஜை போட்டு, அதன் அருகில் சேர்கள்.
ஜனசந்தடி இல்லாத அமைதியான அந்த இடம், அவள் மனதைப் பரவசப்படுத்தியது.
குளிர் உடலைச் சிலிர்க்க வைக்க, மேலே போர்த்தியிருந்த சால்வையால் நன்றாக மூடிக் கொண்டாள்.
என்னம்மா பாரதி... உள்ளே வராமல் இங்கேயே நிக்கற.
இந்தப் பூச்செடிகள், ரொம்ப அழகா... இந்த இடமே ரம்மியமாக இருக்குப்பா. ரொம்ப நேர்த்தியாக, ரசனையோடு பூந்தோட்டம் அமைச்சுருக்காங்க. யாரு இதை பார்த்துக்கிறாங்க.
வாட்ச்மேனைப் பார்க்க, முதலில் இந்த வீட்டில் இருந்தவங்க வச்சிருந்த தோட்டக்காரர் மருதுதான் வேலை செய்யறாரு. ரொம்ப வருஷமா இருக்காரு.
"ஆமாம் பாரதி... யாரையும் மாத்தலை. இந்த வீட்டை வாங்கும்போதே, வாட்ச்மேன், தோட்டக்காரர், சமையல் ஆள் அவங்களே இருக்கட்டும்னு சொல்லிட்டேன். சரிம்மா உள்ளே வந்து வீட்டைப் பாரு. பிடிச்சிருக்கா சொல்லு.’
வெளியில் இருக்கிற அழகு, உள்ளேயும் நிச்சயம் இருக்கும்பா.
உள்ளே வந்தாள். மர வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டு, ஷோகேஸ் அலமாரி, அடக்கமான சோபா... எதிரில் வெண்கலச் சிலை பிள்ளையார்.
நல்லாயிருக்குப்பா.
கீழே ஹால், கிச்சன், ஸ்டோர் ரூம், சுவாமி அறை. மாடியில் இரண்டு பெட்ரூம், பால்கனி. உனக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.
உங்களுக்குப் பிடிச்சது எல்லாமே எனக்கும் பிடிக்கும்பா.
மகளை அன்போடு பார்த்தவர்,
நீ பழசை நினைச்சு வேதனை பட்டுகிட்டு இருக்காம, நிம்மதியா இருக்கணும் பாரதி. அதுக்காகத்தான் இந்த வீட்டை விலைக்கு வாங்கி, உன்னை அழைச்சுக்கிட்டு ஊட்டிக்கு வந்திருக்கேன். நாம் இங்கே இருக்கப் போற இந்த நாலு மாசத்தில, உன் மனதில் நல்லதொரு மாற்றம் வரணும்மா. அதுதான் இந்த அப்பாவின் வேண்டுதல்.
பதில் ஏதும் சொல்லாமல், ஜன்னல் திரைசீலையை விலக்கி, வெளியே தெரியும் மலைத் தொடரைப் பார்க்கிறாள்.
‘முடியுமா. என் மனதில் இருக்கும் துக்கத்தை... என் வாழ்வில் ஏற்பட்ட இழப்பை... இந்தச் சூழ்நிலை மாற்றி விடுமா.’
வாசலில் நிழலாட, யாரும்மா.
நான்தான் ருக்கு... சமையல்காரம்மா.
வாம்மா, உள்ளே.
பவ்யமாக அவர் முன் நின்றாள்.
போன வாரம், ஊரிலிருந்து மானேஜர் வந்து சமையலுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி வச்சுட்டாரு. உப்பு, காரம் பார்த்து போட்டு நல்லவிதமா சமைக்கணும்.
சரிங்க... உங்களுக்கு எப்படிப் பிடிக்குமோ அதுபடி
நான் முக்கியமில்லை. இதோ நிற்கிறாளே என் மகள் பாரதி... அவளைக் கேட்டுகிட்டு... அவளுக்குப் பிடிச்சதை நல்ல விதமாக சமைச்சுப் போட்டால் போதும்.
"
நீங்க ரெண்டு பேர் மட்டும் தானுங்களா?
ஆமாம்.
பாரதியைப் பார்க்கிறாள். அழகும் இளமையும் பரிபூரண முகம். கருணை பொழியும் கண்கள். பாரதியைப் பார்த்த மாத்திரத்தில் ருக்குவுக்கு அவள் மேல் கரிசனம் பிறக்கிறது.
தங்கச்சிக்கு கல்யாணமாயிடுச்சா.
அவள் கேள்விக்கு பதில் வராமல் இருக்க, அதைப் பொருட்படுத்தாமல், சரிங்க. நான் போய் முதலில் உங்க ரெண்டு பேருக்கும் சூடாக காபி போட்டுட்டு வரேன். குடிங்க குளிருக்கு தொண்டைக்கு இதமாக இருக்கும்.
வாட்ச்மேன் சூட்கேஸை மாடி ரூமில் வைத்து விட்டு வர,
சரிம்மா, நீ போய் முகம் அலம்பிட்டு வாம்மா
மாடி ஏறுகிறாள்.
பாரதியின் கல்யாணம், தெருவடைத்துப் பந்தல் போட்டு, ஊரும், உறவும் மெச்ச எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இஞ்சினியர் சரத்குமார் சினிமா நடிகர்களைத் தோற்கடிக்கும் விதத்தில் அழகும் கம்பீரமுமாக. பாரதிக்கு ஏற்ற ஜோடி. இரண்டு பேருக்கும் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு. அனைவரும் பாராட்ட,
நடந்த கல்யாணம் ஆறு மாதத்தில் கனவாய் மறைந்து விட்டதே.
பாரதி... புன்னகையும், பொலிவுமாக, கணவனுடன் அமெரிக்கா பயணமானவள், தனி மனுஷியாய் திரும்பி வந்தபோது, அவர் இதயம் சுக்கு நூறாகச் சிதறிப் போனது.
2
கோயமுத்தூரில் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் மூர்த்தியும் ஒருவர்.
சிவ-மூர்த்தி டெக்ஸ்டைல் மில், ரெடிமேட் சென்டர் என்று பிஸினஸ் உலகில் கொடி கட்டி பறந்தார். அவருடைய பார்ட்னர் ஆன சிவராமன் மார்க்கெட்டிங் பார்த்துக் கொள்ள, மில்லின் நிர்வாகத்தை மூர்த்தி கவனித்துக் கொண்டார்.
சிவராமனின் மகன் ஆதித்யா... பொறுப்பில்லாமல், இருக்க, சிவராமன் அதை பொருட்படுத்தாமல் இருக்க, என்னப்பா இது... நானும் ஒரு மகளைப் பெத்து வச்சுருக்கேன். நமக்குப் பிறகு பிஸினஸை பார்த்துக்க ஆள் வேண்டாமா. மகனுக்கு பொறுப்பை சொல்லித் தரக்கூடாதா?
"என்னை என்ன பண்ணச் சொல்ற மூர்த்தி. படிக்கிற காலத்தில் காதலிச்சான். அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சான். இருபத்தி நாலு வயசில் கல்யாணம்.
இரண்டு வருஷம் கூட முழுசா வாழாமல், அந்த அபாக்கியவதி, மஞ்சள் காமாலை வந்து ஒரே வாரத்தில் போய் சேர்ந்தா.
அதிலிருந்து கவலையை மறக்கிறேன்னு ப்ரெண்ட்ஸ்களோடு சேர்ந்து சுத்தறது, குடிக்கிறதுன்னு இருக்கான். சொல்லிப் பார்த்துட்டு விட்டுட்டேன்."
"அப்படி விடமுடியாது. பெத்த பிள்ளை கண்முன்னே கெட்டுப் போறதை பார்த்துட்டு இருக்க முடியுமா. நல்லதை எடுத்துச் சொல்லி... திருத்த பாரு. நல்ல பெண்ணாகப் பார்த்து அவனுக்கு இன்னொரு கல்யாணத்தைப் பண்ணி பொறுப்பை ஒப்படை.
நான் என் மனசில் எவ்வளவு ஆசையை வளத்திருக்கேன் தெரியுமா. உன் மகள் பாரதிக்கு, ஆதித்யாவை கல்யாணம் பண்ணி வச்சு. பிஸினஸ் பார்ட்னரான நாம் வாழ்க்கையிலும் ஒண்ணாகலாம்னு நினைச்சேன். விதி வேறு விதமா முடிவு பண்ணிடுச்சி. பாரதி, கல்யாணம் பண்ணி அமெரிக்க மாப்பிள்ளையுடன் பறந்துட்டா.
"முடிஞ்சதை ஏன் பேசற. இனி நடக்கப் போறதைப் பாரு.
"ஆதி, நீ நடந்துக்கிறது கொஞ்சமும் சரியில்லை. இப்படிக் குடிச்சு, குடிச்சு உன்னையே அழிச்சுக்காதே. நீ பொறுப்பா இருந்தால் தானே பிஸினஸை உன்கிட்டே ஒப்படைக்க முடியும்."
இல்லப்பா... என் வாழ்க்கையில் நான் நினைச்சது எதுவுமே நடக்கலை. என் ரம்யாவும் போய் சேர்ந்துட்டா. நான் எப்படியோ கெட்டலைஞ்சு போறேன்.
குரல் குழற பேசும் மகனை வருத்தம் மேலிடப் பார்க்கிறார்.
"மனசுக்கு வருத்தமா இருக்குடா. உன் வாழ்க்கைதான் இப்படி ஆயிடுச்சு. மூர்த்தி... பாரதிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சான்.
அதுவாவது நிலைச்சுதா. ஆறு மாசத்திலே, ஆக்ஸிடெண்டில் புருஷன் உயிர்விட, அவளும் வந்து சேர்ந்துட்டா.
அவன் நிலைமை என்னைவிட மோசமாயிடுச்சு. உனக்கும், பாரதிக்கும் கல்யாணம் பண்ணி பிஸினஸை உங்ககிட்டே ஒப்படைக்கும்னு ஆசைப்பட்டேன். எதுவுமே நடக்காம, உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் வீணாகப் போச்சு."
பாரதி நல்லவப்பா... உங்க ஆசையை நான் நிறைவேத்தறேன்.
என்னடா சொல்றே.
எனக்கு பெண்டாட்டி போயிட்டா... அவளுக்கு புருஷன். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறோம். பாரதி எனக்கு மனைவியாக வந்தா... நான் மதுவை தூர எறிஞ்சுட்டு, அவளோடு நல்லபடியா வாழ்வேன். உங்க விருப்பப்படி பிஸினஸையும் பார்த்துக்கிறேன்.
நிஜமாகதான் சொல்றியா... குடிச்சுட்டு உளறாதே.
நம்புங்கப்பா. மூர்த்தி அங்கிளை நினைச்சாலும் பாவமாக இருக்கு. அவர் மகளுக்கு நான் திரும்ப வாழ்க்கை தரேன்பா. நீங்க சொன்ன மாதிரி, நான் ஏன் என் வாழ்க்கையைப் பாழாக்கணும். பாரதியை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கப்பா.
முகத்தில் சோகம் படர அமர்ந்திருக்கும் மூர்த்தியிடம் வருகிறார் சிவராமன்.
மூர்த்தி… கடவுள் கண் திறந்துட்டாரு. நம்ப ரெண்டு பேர் கஷ்டமும் தீரப் போகுது.
குரலில் மகிழ்ச்சி. சிவராமனைப் பார்க்கிறார்.
ஆமாம் மூர்த்தி. ஆதி.. பாரதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான்பா. இழந்த வாழ்க்கை இரண்டு பேருக்கும் கிடைக்கட்டும். குடிக்கிறதை நிறுத்திட்டு நல்ல மனுஷனா திருந்தி வாழ என் மகன் தயாராயிட்டான் மூர்த்தி.
மூர்த்தியிடம் எந்த சலனமுமில்லை.
என்னப்பா… இப்படியொரு நல்ல சேதியைச் சொல்றேன் பதில் பேசாமல் இருக்கே.
‘‘இது சரி வராது சிவா. என் மகள் பாரதி இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில் இல்லை. அப்படியே அவள் மனசில் மாற்றம் வந்தாலும், நிச்சயம் ஆதியைக் கல்யாணம் பண்ண நான் சம்மதிக்க மாட்டேன் என்னை மன்னிச்சிடு."
"ஏன்,