Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathal Malarum Kaaththiru
Kaathal Malarum Kaaththiru
Kaathal Malarum Kaaththiru
Ebook135 pages41 minutes

Kaathal Malarum Kaaththiru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 9, 2019
ISBN9781043466510
Kaathal Malarum Kaaththiru

Read more from R.Sumathi

Related to Kaathal Malarum Kaaththiru

Related ebooks

Reviews for Kaathal Malarum Kaaththiru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathal Malarum Kaaththiru - R.Sumathi

    18

    1

    பொழுது புலர்ந்தது.

    அழுத குழந்தை சிரித்ததைப் போல் இருந்தது. இந்த உவமை சரிதான் என்பதைப் போல் தலையாட்டின இரவு மழையில் குளித்து விட்டு இன்னும் சூரியத்தாய் வந்து துவட்டி விடாததால் ஈரத்தோடு சிரித்தது தோட்டத்துச் செடிகளும் மலர்களும்.

    கீழ்வான சிவப்பு காரைக்காலம்மையாரின் இலக்கிய வரிகளை, நினைக்க வைத்தது.

    ‘காலையே போன்றிலங்கும் மேனி’ என சிவனின் திருமேனியைப் பாடுவாரே...

    தினமும் அதிகாலையில் எழுந்திருக்கும் ஆதிரைக்குக் கீழ்திசையைப் பார்க்கும்போது இப்படியெல்லாம் இலக்கிய வரிகள் நினைவிற்கு வரும். இயற்கையை இயற்கையாகப் பார்ப்பதை விட இலக்கியத்திலிருந்து பார்க்கும் போது இன்பம் அதிகம்தானே!

    ஆனால் இன்றோ... வழக்கத்திற்கு மாறாக இன்னும் சற்று உறங்கலாம் போன்றிருந்தது.

    காரணம் ஞாயிற்றுக்கிழமை!

    ஆதிரையின் விடுமுறைதானே என்ற சோம்பல்... அவளுடைய ஆம்பல் விழிகளைத் திறக்க விடாமல் செய்தது.

    அம்மா மகேஸ்வரி வந்து எழுப்பிய போது, ஏதேதோ சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

    அம்மா திட்டிக் கொண்டே கூடத்திற்கு வந்தாள்.

    தயாளன் நடைப்பயிற்சி முடிந்து வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

    என்ன... காலை நேரமும் அதுவுமா யாரைத் திட்டறே?

    இந்த வீட்டுல யாரைத் திட்ட முடியும்? உங்க பொண்ணை விட்டா! இல்லை... உங்களைத் திட்ட முடியுமா?

    திட்டினாலும் திட்டுவியே! நான் இருக்கும் போது திட்ட முடியாததையெல்லாம் நான் வெளியில போன சமயமாப் பார்த்து திட்டறியோன்னு நினைச்சேன். அது சரி... அவளை எதுக்குத் திட்டறே?

    தினமும்தான் வேலைக்குப் போறேன் பேர்வழின்னு ஒரு வேலையும் தொடாமப் போயிடறா. இன்னைக்கு ஒரு நாள் வீட்டுல இருக்காளே... அம்மாதான் தினமும் கஷ்டப்படுறாளேன்னு சீக்கிரமா எழுந்து வேலை செய்தா என்ன? இழுத்துப் போர்த்திக்கிட்டுத் தூங்கறா...

    தூங்கிட்டுப் போறா. இன்னைக்கு ஒரு நாள்தானே லீவு. நிதானமா எழுந்துக்கட்டுமே...

    போதும். மெதுவாப் பேசுங்க. காதுல விழுந்தா இன்னும் ரெண்டு மணி நேரம் கூடுதலாத் தூங்குவா...

    அம்மா அதட்டினாலும் இவையாவும் ஆதிரையின் காதில் விழவே செய்தது. தூக்கத்தினூடே சிரித்துக் கொண்டாள்.

    "சரி... சரி... சூடா காபி கொண்டா. ரொம்பக் களைப்பாயிருக்கு. மனுஷன் வாக்கிங் போயிட்டுக் களைச்சுப் போய் வந்திருக்கானே... அவனுக்கு ஒரு காபி டீன்னு கொடுப்போம்னு இல்லாம எப்பப்பாரு அவ மேல ஏதாவது குறை சொல்லிக்கிட்டு...

    இங்க இருக்கிற வரைக்கும் தானே இப்படியெல்லாம் இருக்க முடியும். நாளைக்கே கல்யாணமாகிப் போயிட்டா... போற இடத்துல இப்படியெல்லாம் இருக்க முடியுமா?"

    கல்யாணம்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. நேத்துத் தரகர் ஒரு ஜாதகம் கொடுத்து விட்டிருந்தாரே... நம்ம ஜோசியரை வரச் சொல்லுங்களேன். ஆதிரை ஜாதகத்துக்குப் பொருந்துதான்னு பார்த்துடுவோம்.

    அது ஒரு பெரிய கதை.

    ஏன்? ரொம்ப வசதியான இடமா? ரொம்ப அதிகமாக் கேட்பாங்களா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ போய் முதல்ல காபி கொண்டா. சொல்றேன்.

    மகேஸ்வரி அதற்கு மேல் எதுவும் கேட்காமல் உள்ளே சென்றாள்.

    ஆதிரைக்கு இப்பொழுது தூக்கம் சுத்தமாகக் கலைந்து விட்டது. விழிகள் மூடியிருந்தாலும் காதுகள் விழித்துக் கொண்டன.

    மகேஸ்வரி காபியுடன் வந்தாள். தயாளனிடம் கொடுத்து விட்டு அவருக்கு எதிரே அமர்ந்தாள்.

    சொல்லுங்க... என்றாள்.

    ஒரு வாய் காபியை உறிஞ்சிய தயாளன் சிரித்தார்.

    "அந்தத் தரகர் அவசரத்துல கொடுத்திருக்கார் அந்த ஜாதகத்தை. அந்த ஜாதகத்துக்குச் சொந்தக்காரன் நம்ம ஜாதி கிடையாது. சரியாப் பார்க்காம கொடுத்துட்டார். காலையில் போன் பண்ணிச் சொன்னார். பையன் வீட்டுல ஜாதி ஒரு பிரச்சினை இல்லையாம். உங்களுக்கும் ஆட்சேபனை இல்லைன்னா முடிச்சுடலாம்னு சொன்னார்.

    ஆனா... நான் இதெல்லாம் நமக்குச் சரிப்படாதுன்னு... அந்த ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துட்டேன். நம்ம ஜாதியிலேயே ஜாதகம் இருந்தா கொடுங்கன்னு சொல்லிட்டேன்.

    என்னங்க நீங்க? இந்தக் காலத்துல போய் இப்படி இருக்கீங்க. அந்த ஜாதகத்தைப் பற்றி நீங்க சொன்னப்ப எவ்வளவு சந்தோஷமாயிருந்தேன். பையனுக்குப் பெரிய கம்பெனியில கை நிறையச் சம்பளம். ஜாதகத்தோடு கொடுத்திருந்த அந்தப் பையனோட போட்டோவைக் கூடப் பார்த்தேன். பையன் ரொம்ப அழகாயிருக்கான். என்ன பெரிய ஜாதி. நல்ல இடமாயிருந்தா முடிச்சிட வேண்டியதுதான்...

    மகேஸ்வரி ஆதங்கமாகச் சொல்ல...

    தயாளனின் முகம் மாறியது.

    சட்டென்று இருக்கையை விட்டு எழுந்தார்.

    என்ன... ஜாதி மாறிக் கல்யாணம் பண்றதா? உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? போய் வாயைக் கழுவு.

    நல்ல இடமா இருக்கேன்னு...

    மகேஸ்வரியின் குரல் பிசிறடித்தது. கணவருடைய கோபாவேசமான முகத்தைப் பார்த்ததுமே அவளுடைய புரட்சிகரமான பேச்சு புறமுதுகிட்டு ஓடி விட்டது.

    தயாளனின் கோபம் மட்டும் தணியவில்லை. யாரோ மானபங்கம் செய்ததைப் போல் குதித்தார்.

    நல்ல இடமாயிருந்தா... நம்ம ஜாதியை விட்டுக் கொடுத்திட முடியுமா? நல்ல இடமாம் நல்ல இடம். கலெக்டராவே இருக்கட்டுமே... அதுக்காக ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணிட முடியுமா?

    அரிவாள் மட்டும்தான் அவர் தூக்கவில்லை. மற்றபடி அவர் பேசியது... முகத்தில் காட்டிய கோபம் அனைத்தும் ஒரு ஜாதிக் கலவரத்தையே உண்டாக்கிவிடும்.

    சரி... சரி... காபியை முதல்ல குடிங்க. சும்மா ஒரு பேச்சுக்கு இப்படிச் சொன்னதுக்கே இவ்வளவு கோபப்படுறிங்க. பி.பி., ஷுகர் இருக்கு. இவ்வளவு டென்ஷன் எதுக்கு? அமைதியா இருங்க... என்றபடி தன் வேலைகளைக் கவனிக்க உள்ளே போய் விட்டாள் மகேஸ்வரி.

    இப்பொழுது ஆதிரைக்குச் சுத்தமாகத் தூக்கம் போய் விட்டது. எழுந்து உட்கார்ந்திருந்தாள்.

    சற்று முன் உதட்டில் இழையோடிய சிரிப்பெல்லாம் பிழை செய்து விட்ட குழந்தையைப் போல் ஓடிப் போய் விட்டிருந்தது. உள்ளமோ கழைக்கூத்தாடி கயிற்றில் நிற்கும் நிலையில்!

    தூக்கம் விலகிய கண்களில் ஒருவித ஏக்கம் படரத் தொடங்கியிருந்தது. எழுந்து ஜன்னலோரம் வந்து நின்றாள்.

    காற்றில் தலையசைத்த பூக்கள் காத்திருந்து காலை வணக்கம் சொல்வதைப் போலிருந்தது.

    அவள்தான் கண்டு கொள்ளவில்லை.

    சிட்டுக்குருவிகள் மெட்டமைத்துப் பாடிக்கொண்டிருந்தன. குயில்கள் குலவையிட்டுக் கொண்டிருந்தன. சோர்ந்திருந்த ஆதிரையின் மனம் கூடச் சற்றே தெளிந்தது.

    எத்தனை ஒற்றுமை? எந்தப் பறவையும் ஜாதி பார்க்கவில்லை. மதப் பிரசங்கம் பண்ணவில்லை. அந்நியம் பார்க்கவில்லை. அடித்து விரட்டவில்லை.

    இங்கு காதல் எளிது. கல்யாணம் எளிது. அரிவாள் தூக்கும் குருவி இல்லை. அசிங்கமாகப் பேசும் கொக்கு இல்லை. மனதைக் கொத்திக் கூறு போடும் மரங்கொத்தி இல்லை.

    பறவைகள் உலகத்தில் மட்டுமே காதல் இனிமை

    இந்த உலகத்தில் நானும் ஸ்டீபனும் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

    இந்தக் கொய்யா மரத்தில் கூடு கட்டிப் பொய்யா வாழ்வு வாழ்ந்திருக்கலாம். ஜாதியையே பெரிதாகப் பேசும் தந்தை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஸ்டீபனை ஏற்றுக் கொள்வாரா?

    நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

    நினைக்கையிலேயே நெஞ்சம் கலங்கியது.

    நெஞ்சில் உண்டான கலக்கத்தை மீறி ஸ்டீபன் சிரித்தான்.

    2

    மனதை மயக்கும் மாலை நேரம்.

    அந்த அழகை மேலும் அழகூட்டுவதைப் போல் ஆதிரை அலையடிக்கும் கரையோரம் கால் பதித்து நடந்து கொண்டிருந்தாள்.

    அவளுடைய தோளை

    Enjoying the preview?
    Page 1 of 1