Enge Antha Sorkkam
By Indhumathi
5/5
()
About this ebook
Read more from Indhumathi
Tholaithoorath Thandavalangal Rating: 3 out of 5 stars3/5Enakkendru Nee Rating: 5 out of 5 stars5/5Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Maaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Kaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Odum Megangale Rating: 5 out of 5 stars5/5Irandu Per Rating: 5 out of 5 stars5/5Yaar Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Manithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsIvale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Thotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Antha Sila Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Geethamadi Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Avalukku Amuthendru Per Rating: 4 out of 5 stars4/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Vasanthakaala Nathigal Rating: 0 out of 5 stars0 ratingsParappatharkku Mun Konjam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Enge Antha Sorkkam
Related ebooks
Yen Eppadi Rating: 5 out of 5 stars5/5Kannan Varum Neramithu Rating: 0 out of 5 stars0 ratingsPoi Vaa Nathiyalaiye Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Enkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsAnbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Alli Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Thaai Paravai Rating: 5 out of 5 stars5/5Thavari Podum Thalam Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Thoondirp Puzhukkal Rating: 5 out of 5 stars5/5Veesa Marantha Thendral Rating: 4 out of 5 stars4/5Puthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsMaaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Thotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Marupadi Yen Vanthaai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Kannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Kadhal Sirakukal Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Malarum Kaaththiru Rating: 0 out of 5 stars0 ratingsAntha Nenjam Ennidam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Enge Antha Sorkkam
4 ratings0 reviews
Book preview
Enge Antha Sorkkam - Indhumathi
18
1. துள்ளித் திரியும் மேனகா
விஸ்வாமித்திர மேனகையை நினைவுபடுத்தினாள் மேனகா. மிகமிக அழகாக இருந்தாள்.
வெள்ளை வெளேர் என்று சொட்டு நீள விளம்பரம் மாதிரி டென்னிஸ் விளையாடுகிற வசதிக்காக கவுன் போட்டுக் கொண்டிருந்தாள்.
கத்தரித்து விடப்பட்டிருந்த தலைமுடியை குதிரை வாலாக்கினாள்.
அன்று கஸ்தூரி இல்லாத காரணத்தால் பகலில் தூங்கினதில் இன்னமும் பளபளத்தாள். கன்னங்களில் பணத்தின் செழுமை தெரிந்தது.
கண்கள் துறுதுறுவென்று விஷமக்காரக் குழந்தையாக அலைந்தன. முகம் நிகுதிகுவென்றிருந்தது.
உயரமாய், வாளிப்பாய், முற்றி தலை சாய்ந்த நெல் வயலின் செழுமையாய்... மேனகா மேனகாதான்.
எத்தனையோ... இளைஞர்கள் விஸ்வாமித்திரனாக மாட்டோமா என்று அவளைப் பார்க்கிற போதெல்லாம் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் அவளை நெருங்கப் பயப்படுகிறார்கள்.
காரணம், அவளது அப்பாவின் பணம். அந்தஸ்து, பதவி.
அப்படிப்பட்ட மேனகாவான பத்தொன்பது வயது பளிங்குச் சிலை மாடிப் படிகளில் துள்ளிக்கொண்டு வந்தது. பாதிப்படி இறங்கியதும் ‘ஐயோ ராக்கெட் எடுத்துக்கலையே...’ என்று மீண்டும் தன் அறைக்கு ஓடிற்று.
ஸ்லாஸெஞ்சர் டென்னிஸ் மட்டையுடன் மறுபடியும் கீழே வந்தது. நடு ஹாலில் நின்று குரல் கொடுத்தது.
அம்மா, போயிட்டு வரேன்.
எங்கேம்மா?
அசரீரி மாதிரி அம்மாவின் குரல் மட்டும் கேட்டது.
டென்னிஸ் விளையாட ஜிம்கானா கிளப் போறேன்
ஏழு மணிக்கெல்லாம் வந்துடு
என்னம்மா விசேஷம்?
வா சொல்றேன்
சமையற்கட்டிற்கு ஓடினாள். பின்னாலிருந்து அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
ஐயையோ... நமக்குத் தாங்காது. நீ சொல்லலைன்னால் டென்னிஸ்ல மனசு போகாது. இப்பவே சொல்லிடும்மா...?
அப்பாவோட பிரெண்ட் சிவசுப்பிரமணியம் இருக்காரில்ல அவருடைய பையன் அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடிச்சிட்டு திரும்பி வந்திருக்கானில்ல...? அவனுக்கு உன்னைப் பெண் கேட்டு இன்னிக்கு சாயந்திரம் ஏழு மணிக்கு வரேன்னிருக்காங்க.
போம்மா போ. வேற வேலை இல்லை. பெண் கேக்கிறதாம். வீட்டுக்கு வர்றதாம். சுத்த போர். எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லி நீங்களே அனுப்பிடுங்க.
ஏய்... ஏய்... சிவசுப்பிரமணியம் வந்ததும் முதல்ல உன்னைத்தாண்டி கேப்பாரு.
அங்கிள்கிட்ட நான் தனியா பேசிக்கிறேன். வரேம்மா. நேரமாயிடுச்சு" சொல்லிவிட்டு நிற்காமல் ஓடிவந்த வேகத்தில் போர்டிகோவில் படி ஏறி உள்ளே வந்து கொண்டிருந்த அந்த இளைஞன் மீது மோதிக் கொண்டாள்.
அரசியல் தலைவர்களுக்கு அணிவிக்கிற ஆளுயர ரோஜாப் பூமாலை ஒன்று ஓடி வந்து தன் மீது மோதிய மாதிரி உணர்ந்தான் அவன். இனம்புரியாத சந்தோஷத்தில் மிதந்தான். சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டு அவளை ஏறிட்டவன், பிரமிப்போடு நின்றான்.
நீங்க என்ன ஆகாசத்தைப் பார்த்துண்டே நடப்பீங்களோ...?
லேசான கோபத்தோடு கேட்டாள் அவள்.
அதையே நானும் திரும்பிக் கேட்கலாமில்ல?
தாராளமா. ஆனால் பதில்தான் வராது. ஆமாம் நீங்க யாரு...? இதுவரை நான் பார்த்ததே இல்லை. புதுசா இருக்கு.
என் பேர் விமலநாதன். விமல்னு கூப்பிடுவாங்க
ஓஹோ. நானும் அப்படிக் கூப்பிடனும்னு எதிர்பார்க்கிறீங்களா?
‘நீங்களும் அப்படிக் கூப்பிடறதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை."
ஆட்சேபனை இல்லையா? சந்தோஷமா?
சந்தோஷம்னும் வச்சிக்கலாம்
எனக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்ற பதில்தான் பிடிக்கும்
ஒரு பொண்ணு, அதுவும் அழகான பொண்ணு பேர் சொல்லிக் கூப்பிட்டால் எந்த இளைஞன் சந்தோஷப்படாமல் இருப்பான்?
ஓஹோ... உங்க மனசுல நீங்க இளைஞன்னு எண்ணமா?
இருபத்தஞ்சு வயசு இளமை இல்லேன்னா உங்களுக்குப் பார்வை கோளாறுன்னு அர்த்தம்
பார்வைக் கோளாறு இருக்கிறவங்க டென்னிஸ் விளையாடமாட்டாங்க
ஏன், மார்ட்டினா கண்ணாடி போட்டுக்கிட்டு விளையாடலை?
அவங்களுக்கு வயசாயிடுச்சி
உங்களுக்கும் ஆகியிருக்கலாம்
நான் கண்ணாடி போடலையே...?
போட வேண்டிய வயசாகத்தான் இருக்கணும். ஏன்னா, இத்தனை கிட்ட நிற்கறேன் கிழவனா, இளைஞனான்னா தெரியலையே...?
அதுக்குக் காரணம் மூஞ்சி அப்படி இருக்கு
அதையேதான் நானும் நினைச்சேன். தடி பிடிச்சிட்டுப் போக வேண்டியவங்க டென்னிஸ் மட்டை பிடிச்சிட்டு போறாங்களேன்னு...
இருபத்தஞ்சையே நீங்க இளமைன்னு சொல்லிக்கிறபோது பத்தொன்பதை நான் என்ன சொல்லிக்கிறது?
குழந்தைன்னு சொல்லிக்கலாம்
தூக்கி மடியில் வச்சுக்குங்க...
கரும்பு தின்னக் கூலியா...? எனக்கு ஆட்சேபனை இல்லை
பதிலுக்குப் பதில் விடாமல் பேசினான் அவன். இதுவரை அவளிடம் யாரும் அப்படிப் பேசியதில்லை.
தான் யார் என்பதைத் தெரிந்து கொண்டுதான் பேசுகிறானோ...? அவளுக்கு சந்தேகமாக இருந்தது. அவனது முகம் திடீரென்று தீவிர பாவத்திற்கு மாறவே, அவனது முகமும், குரலும்கூட மாறிற்று. தழைந்து மென்மையாய் வந்தது.
ஐயம் ஸாரி. நீங்களும் விளையாட்டுக்குப் பேசினீங்க நானும் பேசினேன்.
சரி. முடிஞ்சு போச்சு இல்ல. இப்போ ஏன் திடீர்னு ஸீரியஸாகி ஸாரியெல்லாம் கேட்கறீங்க?
நீங்க ஸீரியஸானீங்க, நானும் ஆனேன்
நான் பைத்தியமானால்...?
இப்பவே ஆகலேன்னு யார் சொன்னது?
பளீரென்று சிரித்து விட்டாள் அவள். ஓய ஒரு வினாடி பிடித்தது.
பின்பு கிண்டல், கேலி, விளையாட்டு எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.
நீங்க யாருன்னே சொல்லலையே...?
அதான் சொன்னேனே... விமலநாதன்னு
விமலநாதன் என்ன கமலஹாசனா, ரஜினிகாந்தா...? பெயரைச் சொன்ன உடனே புரிஞ்சுக்க...
ஸாரி. எனக்கு அந்த மாதிரி பிரபலமான முகமெல்லாம் கிடையாது.
பின்ன... என்ன முகம்தான் இருக்கு?
தனியான ஒரு முகமில்லை. கூட்டத்தோடு கூட்டமா ஒரு முகம். அவ்வளவுதான்
ஆயிரம் பேருக்கு நடுவில் நிற்க வச்சால் தனியா தெரியும் போல இருக்கே...
நன்றி
எதுக்கு?
உங்க பாராட்டுக்கு
நான் இதைப் பாராட்டாக சொல்லலை
நான் பாராட்டாகவே எடுத்துக்கறேன்
சரி... என்ன படிச்சிருக்கீங்க?
எம்.ஏ.,
என்ன பண்ணினீங்க?
இங்கிலீஷ் லிட்ரேச்சர்
இப்போ என்ன பண்றீங்க?
உங்ககிட்டே பேசிக்கிட்டிருக்கேன்
ஐயோ... மகா மகா அறதல் ஜோக். திப்புசுல்தான் ஐதர் அலி காலத்துது
பழசுதான் இப்போ பாஷன். நீங்க பஃப் கை வச்ச பிளவுஸ் போட்டுக்கற மாதிரி
நீங்க கூடத்தான். ப்ளீட்ஸ் வச்ச பாண்ட் போட்டுக்கறீங்க. பராசக்தி சிவாஜி, பதிபக்தி ஜெமினி, தாய் சொல்லத் தட்டாதே எம்.ஜி. ஆரெல்லாம் போட்டுக்கிட்ட மாதிரி.
அக்ரீட்... அக்ரீட்... சண்டை வேணாம் தாயே. சமாதானமாகப் போயிடலாம். நானே வெள்ளைக் கொடி காட்டிடறேன்.
குட். இப்படி தோல்வியை ஒத்துக்கிறவங்களை எனக்குப் பிடிக்கும்
இன்னும் நீங்க என்ன செய்யறீங்கன்னு சொல்லலை?
ஒண்ணுமில்லை. அதான் இங்கே வந்தேன்
புரியலை
எம்.பி. இருக்காரில்ல. மிஸ்டர் ராஜசேகரன். அவருக்கு உடனடியாக ஒரு பி.ஏ. தேவைப்படறதுன்னு சொன்னாங்க. அதுக்குத்தான் வந்திருக்கேன்
விண்ணப்பிச்சிருக்கீங்களா?
இல்லை. இதுக்கெல்லாம் விண்ணப்பிக்க முடியுமா...? சிபாரிசு இருந்தால் நடக்கும்னு சொன்னாங்க
யார் சிபாரிசு...?
மிஸ்டர் ராஜசேகரனுக்கு ரொம்ப நெருங்கின யாராவது சொன்னால் உடனே எடுத்துப்பாருன்னாங்க...?
அப்படியா?
ஆமாம். எம். ஏ. முடிச்சு ஒரு வருஷமாச்சு. இந்த ஒரு வருஷமா நான் ஏறி இறங்காத இடமில்லை. போகாத கம்பெனி இல்லை.
"இப்போ அவசியம் வேலை வேணும்ன்ற நிலையில் இருக்கேன். நாளைக்கு வீட்டு வாடகை கொடுக்கலேன்னா, சாமானையெல்லாம் தூக்கி வெளில வச்சிடுவார் வீட்டுச் சொந்தக்காரர். இதுக்கு மேல மளிகைக் கடைல கடன்