Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjin Neruppu
Nenjin Neruppu
Nenjin Neruppu
Ebook94 pages1 hour

Nenjin Neruppu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466398
Nenjin Neruppu

Read more from Indhumathi

Related to Nenjin Neruppu

Related ebooks

Reviews for Nenjin Neruppu

Rating: 4.833333333333333 out of 5 stars
5/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjin Neruppu - Indhumathi

    10

    1

    வீட்டுப் படியேறி நடையில் செருப்பை உதறி முற்றத்தில் இறங்கி செம்பு நீரால் கால் அலம்பிக்கொண்டே கேட்டாள் கஸ்தூரி

    அம்மா... பாலா இல்லை...?

    முற்றத்தில் வெளிச்சத்தில் உட்கார்ந்து தோட்டத்தில் பூத்த ஜாதிப் பூக்களைக் கட்டிக்கொண்டிருந்த பவானியம்மாள் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

    வந்ததும் வராததுமாக ஏண்டி பாலாவைத் தேடற...?

    ப்ச்சூ... சொல்லும்மா... பாலா எங்கே...?

    முதல்ல நீ என் கேள்விக்கு பதில் சொல்லு. அப்புறமா நான் உனக்கு பதில் சொல்றேன். காலேஜ்லேருந்து வந்த கையோட பாலாவைத் தேடறியே என்ன விஷயம்...?

    ஒண்ணுமில்லேம்மா. கெமிஸ்ட்ரியில் நிறைய நோட்ஸ் எழுதணும். டயகிராம்ஸ் வரையணும். பாலா இருந்தால் நிமிஷமா வரைஞ்சுத் தந்துடுவானேன்னு கேட்டேன்.

    டக்கென்று அந்த அம்மாளின் விரல்கள் பூ தொடுப்பதை நிறுத்தின. பார்வை சுறுசுறுவென்று உயர்ந்து அவள் முகத்தில் பதிந்தது.

    என்னம்மா அப்படிப் பார்க்கற...?

    இல்ல... என்ன நினைச்சுண்டிருக்கீங்க நீயும் உங்கப்பாவும்...? ஏதாவது வேலை இருந்தால் பாலாவைத் தேடறீங்க... தெரியாமல்தான் கேட்கறேன். உனக்கும், உங்கப்பாவுக்கும் சேவகம் செய்யவா என் அண்ணா பையன் இங்கே வந்திருக்கான்...?

    அம்மாவின் கோபம் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் வேண்டுமென்றே சீண்டினாள்.

    அதில்லேம்மா... பாலா வீட்ல சும்மதாதானே இருக்கான்னு...

    சொல்லமாட்டாயா பின்ன... சும்மாவா இருக்கான்...? ஒரு வருஷமா அவனும் ஒவ்வொரு இடமா ஏறி இறங்கிட்டுத்தான் இருக்கான். அவனுக்கு ஏற்ற நல்ல வேலையா கிடைக்கலை. அதுக்காக அப்பாவும், பொண்ணும் மாறி மாறி அவனை வேலை வாங்கறதா...? அவனை என்ன எதிர் நீச்சல் மாதுன்னா நினைச்சுண்டிருக்கீங்க...?

    அம்மாவின் கோபமும், ரோஷமும் அவளுக்குப் புரிந்தது. பிடித்திருந்தது. உள்ளுக்குள் ரகசியமாக சந்தோஷம் வந்தது. பாலாவை அப்பா வேலை வாங்குகிற போதெல்லாம் அவளுக்கு மனசு வலிக்கும் நெஞ்சு நோகும்.

    பாலா... கொஞ்சம் பாங்க்குக்குப் போயிட்டு வரியாப்பா...

    பாலா... ராமனாதன் வீடு வரை போய் இந்தப் பேப்பர்ல கையெழுத்து வாங்கிண்டு வந்துடு. ரொம்ப முக்கியமான பேப்பர் ஜாக்கிரதை.

    என்ன இன்னிக்கு இன்னும் ஹிண்டு வரலை...? கடைக்காரன் போடலை போலிருக்கு போய் வாங்கிண்டு வாயேன் பாலா...

    அப்பா வீட்டில் இருக்கிறவரை பாலாவை ஓட ஓட விரட்டிக் கொண்டிருப்பார்.

    பாலா... செய்யாதே ப்ளீஸ்... என்று சொல்லவேண்டும் போலிருக்கும் இவளுக்கு. ஆனால் பேசாமல் இருப்பாள். மாறி மாறி அப்பா அவனுக்கு வேலை இடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

    இன்று ‘தன் அண்ணா பையன் என்று பரிந்துகொண்டு வரும் அம்மா மட்டும் வேலை சொல்லாமல் இருக்கிறாளா என்ன...? வேலைக்காரியிடம் சொல்ல மறந்ததையெல்லாம் பாலா செய்யவேண்டும்.

    பாலா... இன்னிக்கு ரேஷன்ல அதிசயமா பாமாயில் தராளாம். கொஞ்சம் வாங்கிண்டு வரியா...? வேலைக்காரி வர்றதுக்குள் தீர்ந்து போயிடும்ப்பா...

    ஐயயோ... காப்பிப் பொடி தீர்ந்து போயிடுத்தே... நான் கவனிக்கலே இல்லை. கொட்டை தரேன். அஜந்தா எதிர்ல சத்யாகாபின்னு இருக்கு. அங்க வறுத்து அரைச்சுண்டு வந்து தந்துடு. சற்று அதிகமா வறுக்கச் சொல்லு. அப்போதான் காப்பி கலரா இருக்கும். பில்டர் பொடின்னு சொல்ல மறக்காதே...

    ஒருநாள் போல் காலை ஐந்து மணிக்கெல்லாம் தூங்கிறவனைத் தட்டி எழுப்புவாள். அவனும் தூக்கம் கலைந்த வெறுப்பு, கோபம், அசதி எதுவுமின்றி சாதாரணமாக இருப்பான். ஜமுக்காளத்தில் கால் மடித்து உட்கார்ந்து முகம் சுருக்கமாக கேட்பான்.

    என்ன அத்தை வேணும்...? சொல்லுங்க?

    வேலைக்காரிகிட்ட பால்கார்டு கொடுக்க மறந்துட்டேன். கொஞ்சம் போய் வாங்கிண்டு வந்துடறியா...?

    கார்டு கொடுங்க அத்தை...

    சிறிது கூடச் சலிப்பின்றி எழுந்துபோவான். பால் வாங்கி வந்ததும் மறுபடியும் படுத்துக் கொள்ளமாட்டான். ஜமுக்காளத்தையும், போர்வையையும் மடித்து தலைகாணி மீது போட்டு அடுக்கி வைப்பான். கொல்லைப்பக்கம் போவான். பல் துலக்கின கையோடு கிணற்றில் நீர் மொண்டு குளித்துவிட்டு வருவான். ஒருநாள் கூட அவன் குளியலறையில் குளித்து அவள் பார்த்ததில்லை. காலையில் குளியல் அறை ஒழியாது. அம்மா, அப்பா, அவள், பள்ளிக்கூடம் போகிற அவளது தம்பி திவாகர் என எட்டு மணிவரை குளியறை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

    ஊரிலிருந்து வந்த முதல் நாலைந்து நாட்கள்தான் பாலா குளியலறையில் குளித்தான். அதற்கே அப்பா அமர்க்களப்படுத்திவிட்டார்.

    நீ வீட்ல சும்மாத்தானே இருக்க... உனக்கென்ன அவசரம். இத்தனைக் காலைல குளிச்சு என்ன செய்யப் போற...? என்று காய்ந்தார்.

    அதிலிருந்து பாலா குளியலறையில் குளிப்பதை விட்டுவிட்டான். இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கடகடவென்று ஜகடை உருள கிணற்றடியிலேயே குளிப்பான். மார்கழி மாதக் குளிருக்குக் கூட அவன் குளியலறையோ வெந்நீரோ தேடியதில்லை.

    ஏன் பாலா வெளில் குளிக்கிற...? ரொம்பக் குளிராக இருக்கே... பாத்ரூம்ல குளிக்கலாமில்லே...?

    இவள் கேட்டதற்குக்கூட சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்.

    இந்தக் குளிரெல்லாம் எனக்கு ரொம்ப சகஜம் கஸ்தூரி... ஊர்ல ஐந்து மணிக்கு எழுந்து காவிரியில் குளிச்சுப் பழக்கம்... பழகினால் எல்லாம் சரியாகப் போயிடும்...

    பளீரென்று வெள்ளையாய் சிரிப்பான். அந்தச் சிரிப்பில்லாமல் அவனைப் பார்க்கவே முடியாது.

    குளித்து முடித்து அழகாய் தழையத் தழைய

    Enjoying the preview?
    Page 1 of 1