Anbil Vantha Kaaviyam
By R.Sumathi
4.5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsUravukal Sirukathai Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsEnnam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsPaarththaal Kathal Varum Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Sinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Anbil Vantha Kaaviyam
Related ebooks
Kankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Kaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5Poomazhai Thoovi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Poove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Irubathu Kodi Nilavukal Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5Neela Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsSarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Parappatharkku Mun Konjam Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Idhayam Idam Maarumaa...? Rating: 0 out of 5 stars0 ratingsKandharva Veenaigal Rating: 5 out of 5 stars5/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Aval Varuvaalaa Rating: 5 out of 5 stars5/5Pala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Inikkum Inba Irave Nee Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anbil Vantha Kaaviyam
3 ratings0 reviews
Book preview
Anbil Vantha Kaaviyam - R.Sumathi
18
1
‘அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ;
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந் தோறும் அணி பெற விளங்கும்.
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே!’
பூஜையறையிலிருந்து கணீரென்ற இனிமையான குரல் பரவசமாக மிதந்து வந்து எல்லா அறையையும் நிரப்பியது. புரண்டு படுத்தான் ரவி.
அம்மாவின் குரல் அவள் ஹார்லிக்ஸ் கலந்து கொடுப்பதற்கு முன்பாகவே புத்துணர்வையும் தெம்பையும் தந்தது. இரு கரங்களையும் கோர்த்து தலைக்கு கீழே வைத்துக் கொண்டு இமைகளை மூடி அம்மாவின் குரலினிமையை அனுபவித்தான். அம்மா வித்தியாசமானவள். பூஜையறையில் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட மாட்டாள்.
அம்மா பாரதியின் பாடல்களில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவள். அத்தனை பாடல்களும் அத்துப்படி. பாரதியின் மொழிபெயர்ப்புப் பாடல்களைக் கூட விடுவதில்லை. வங்காளத்தில் பங்கிம் சந்திரர் எழுதி பாரதி மொழி பெயர்த்த பாடலைத்தான் தற்சமயம் இதயம் உருகி இசைத்துக் கொண்டிருக்கிறாள்.
மேலே மேலே உயர்ந்து மேகக் கூட்டத்தினுள் நுழைந்து அங்கு சுழலும் ஏதோ ஒரு ஜீவ ஒளியில் நுழைந்து கொண்டிருப்பதைப் போல் மயங்கி கிறங்கிக் கொண்டேயிருக்க...
பெரு விரலுக்கும் அடுத்த விரலை பிடித்து இழுத்து சொடுக்கு போட்டதில் துடித்துப் பிடித்து எழுந்தபோது எதிரே அம்மா.
புன்னகையை பொன்னகையாக மாற்றிக் காட்டினாள்.
சோம்பேறி, எழுந்திருடா, சிவாஸை பாரு, காலையில எழுந்து ஜாகிங் போறான். நீயும் தான் இருக்கியே!
அவன் மீதிருந்த போர்வையை உருவினாள். உதறினாள். மடித்தாள். அதனாலேயே ரெண்டு அடியும் கொடுத்தாள்.
என்னம்மா நீ...? சிவாஸ் ஜாகிங் எதுக்கு போறான்னு நினைக்கிறே? காலையில் காட்டியும் கூட ஜாகிங் போற பொண்ணுங்களை சைட்டடிக்கத்தான்.
போதுண்டா! உன் சோம்பேறித்தனத்துக்கு நீ சொல்ற காரணம்
செல்லமாக காதை திருக வந்தாள்.
ரவி எழுந்து உட்கார்ந்தான். கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்தான்.
வயசுப் புள்ளை காலையில எழுந்து உடற்பயிற்சி செய்யணும்பா. அப்பத்தான் உடம்பும் மனசும் புத்துணர்வாயிருக்கும்
அம்மா! காலையில நீ பூஜையறையில் பாடற பாட்டை விடவா உடற்பயிற்சி புத்துணர்வைத் தரப்போகுது. நோ... ம்மா. உன்னோட அமுதகானம் ஆரோக்யமான அருமையான குரல் என் காதுல படும்போது உடம்புக்குள்ள அத்தனை செல்லும் சுவிட்ச் போட்ட மாதிரி சுறுசுறுப்பு அடையுது தெரியுமா உனக்கு? எப்படிம்மா இப்படிப் பாட முடியுது உன்னால?
டேய்... போதுண்டா ஐஸ் வச்சது
என்றபடியே உள்ளே அரைக்கால் சட்டை பனியனுடன் நுழைந்தான் சிவாஸ்.
அச்சு அசலாக ரவியின் இன்னொரு உருவம்.
ரவியும், சிவாஸும் இரட்டையர்கள். முதலில் ரவியும் பின்பு சிவாஸும் பிறந்தார்கள். தோற்றம் மட்டுமே இருவருக்கும் ஒற்றுமை. இரு துருவங்கள் போல் குணங்கள். ரவிக்கு அம்மாவின் குரலினிமை மேல் அலாதி ஈடுபாடு. அவ்வப்போது அவன் கூட அம்மாவைப் போல் பாடிப் பார்ப்பான். அம்மா படிக்கும் இலக்கியப் பக்கங்களை எப்பொழுதாவது திருப்புவான். அமைதியானவன்.
சிவாஸ் தடாலடி பேர்வழி. டீன் ஏஜ் வயதில் இவன் கொண்டு வந்த வம்புகளை எண்ணி பார்த்தால் இன்றைக்கும் அம்மா சங்கரிக்கு கழுத்து சங்கு நெரிபடுவதைப் போலிருக்கும். டிகிரி முடித்த கையோடு வேலை வாய்ப்பிற்காக சில கம்ப்யூட்டர் கோர்ஸ்களை செய்து விட்டு திருப்திகரமான சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலையில் அமர்ந்து விட்டான் ரவி.
சிவாஸின் கனவுகள் அனுமார் வாலாக நீண்டு கொண்டே போக அவன் படிப்பும் நீண்டு கொண்டே போனது. நிறைய படிக்க வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டும். காரும் பங்களாவுமாக வாழ வேண்டும் என்ற ஆசைகளோடு எம்.சி.ஏ. படிப்பின் இறுதியாண்டில் இருப்பவன்.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சிவாஸிடம் வந்தான் ரவி.
என்ன... என்ன ஐஸ்...?
அம்மாவை ஒரேடியா புகழ்ந்துக் கிட்டிருக்கியே. என்ன... இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா டிபன் செய்யச் சொல்லப் போறியா? இல்லே... உன் ஃபிரண்ட்ஸுங்கள்ல யாராவது வீட்டுக்கு அழைச்சுட்டு வரப்போறியா?
இப்ப நீ என்கிட்ட வாங்கப் போறே! நீதான் ரசனைக் கெட்ட ஜென்மம். அம்மா பாடறதை ஒரு நாளாவது உட்கார்ந்து கேட்டிருக்கியா?
கேட்கற மாதிரியிருந்தா உட்காரலாம். அதான் காலையில பொழுது விடியக் காட்டியும் விழுந்தடிச்சு ஓட வைக்கிறாங்களே!
அம்மா... பாரும்மா. உன் பாட்டை கேட்க முடியாமத்தான் இவன் காலையில ஓடறானாம். மற்றபடி எக்ஸசைன்னு எதுவுமில்லையாம்.
உண்மை தான்டா. நான் பாடற பாட்டு யாரோட பாட்டு. பாரதியோட பாட்டு. அது ஓடத்தான்டா வைக்கும். காங்கிரஸ் மீட்டிங் நடக்கும் போதெல்லாம் எங்க தாத்தா பாரதியோட பாட்டையெல்லாம் மேடையில உணர்ச்சி பொங்க பாடுவார். வெள்ளைக்காரனை ஓட வச்சுட்டுல்ல...
அம்மா பெருமையாக சிரித்தாள்.
அட... டா... உங்க தொல்லை பத்தாதுன்னு உங்க தாத்தாவை வேற இழுக்கறீங்களா?
சிவாஸ் அலுத்துக் கொள்ள, அவன் கிடக்குறான். நீ வாடா கண்ணா. உனக்கு இன்னைக்கு என்ன டிபன் பண்ணணும்னு சொல்லு பண்ணித்தர்றேன்
அம்மா ரவியை செல்லம் கொஞ்ச, சிவாஸ் எழுந்தான்.
ஓ.கே. என் பங்குக்கு நானும் ஐஸ் வச்சுடறேன். அம்மா உன் பாட்டு இருக்கே...
வேண்டாம்ப்பா... முதல்ல ரெண்டு பேரும் பல்லைத் தேய்ச்சுட்டு வாங்க. ஹார்லிக்ஸ் தர்றேன்
என்று கூறிவிட்டு அவசரமாக அம்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.
ரவியும், சிவாஸும் குளித்து முடித்து மடிப்பு கலையாத உடையில் ஜம்மென்று சாப்பாட்டு மேஜைக்கு வந்த போது பூரியும் குருமாவையும் பரிமாறிக் கொண்டிருந்த சங்கரியின் விழிகளில் திடீர் ஒளிவெள்ளம்.
‘ஒரே சமயத்தில் எடையே இல்லாமல் இரு அணில் குஞ்சுகளைப் போல் பிறந்த குழந்தைகளா இவர்கள்?’ நெஞ்சில் ஆச்சரியம் மிஞ்சியது.
வாட்டசாட்டமாக வாலிபம் தோள் கொட்டும் கம்பீரத்துடன் இரு காளைகளைப் போல் நின்றிருந்தனர்.
பூரியையும் குருமாவையும் பார்த்ததும் சிறு குழந்தைகளைப் போல் குதூகலித்த அவர்களிடம்,
உங்க ரெண்டு பேருக்கும் குட் நியூஸ் ஒண்ணு சொல்லப் போறேன்
என்றாள்.
என்னம்மா... சீக்கிரம் சொல்லு
இருவரும் சாப்பிடுவதை நிறுத்தி, பரபரத்தனர்.
உங்க அக்காமார்கள் சந்தியாவும் செளந்தர்யாவும் கோடை லீவுக்கு நாளைக்கு வரப்போறாங்க.
இருவரும் தலையில் கை வைத்துக் கொண்டனர்.
கடவுளே! இது குட் நியூஸா. வெரி பேட் நியூஸ்...
"இப்ப இப்படித்தான்டா சொல்லுவீங்க. அவங்க ரெண்டு