Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayamaan
Mayamaan
Mayamaan
Ebook85 pages57 minutes

Mayamaan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466398
Mayamaan

Read more from Indhumathi

Related to Mayamaan

Related ebooks

Reviews for Mayamaan

Rating: 5 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayamaan - Indhumathi

    6

    1

    கடைசிக் கடிதத்தை டைப் பண்ணி முடித்துக் கவரில் போட்டு ஒட்டி மேலே ‘கான்பிடென்ஷியல்’ என்று எழுதி, அதன் கீழ் சிவப்புப் பேனாவால் கோடிழுத்து அனுப்ப வேண்டிய மற்றக் கடிதங்களுக்கிடையில் செருகி ரங்கசாமியைக் கூப்பிட்டுத் தபாலில் சேர்க்கச் சொல்லிக் கொடுத்தபோது சுவர்க் கடிகாரம் ஜப்பானிய இனிமையில் மணி இரண்டு என்றது. இன்னமும் அவள் சாப்பிடப் போகவில்லை. வழக்கமாய் அவளுடன் சாப்பிடுகிற சுபாஷினி இரண்டு தரம் அறைக்குள் தலையை நீட்டிக் கேட்டாள்.

    என்ன மைத்ரேயி, லஞ்சுக்கு வரலை?

    முதல் முறை இதோ அஞ்சு நிமிஷத்துல வரேன் சுபா. கொஞ்சம் வெயிட் பண்ணு.

    இரண்டாம் தடவை, ப்ளீஸ், இன்னும் ஒரே நிமிஷம். வந்துடறேனே!

    ஆனால் அதற்குள் இன்டர்காம் கூப்பிட்டது.

    மைத்ரேயி, உடனடியாக என் அறைக்கு வா.

    எஸ் சார்.

    நீ போ சுபா. இன்னிக்கு நான் சாப்பிடக் கொடுத்து வைக்கலே. வர்றபோது கான்டீன்லேருந்து ஒரு தோசையோ, பூரியோ வாங்கிண்டு வந்துடு. எம்.டி. கூப்பிடறார். நான் போறேன்.

    சொல்லிக்கொண்டே குறுக்கெழுத்து நோட்டுப் புத்தகத்தோடு லிஃப்டை நோக்கி ஓடினாள். ஆறாவது மாடியின் குளிர்சாதன அறையை மென்மையாய்த் தட்டிக் ‘கமின்’னுக்குப் பிறகு உள்ளே நுழைந்தாள். இவள் போனபோது மிஸ்டர் வாசுதேவன் சாப்பிட்டு முடித்து நாப்கினில் கையை மென்மையாகத் துடைத்துக் கொண்டிருந்தார். ப்யூன் ரங்கசாமி சாப்பிட்ட மேஜையைச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தான். வாசுதேவன் தம் சுழல் நாற்காலியில் வந்து உட்கார்ந்து மைத்ரேயியைப் பார்த்துச் சொன்னார்.

    உக்காந்துக்க. இப்போ லெட்டர் டிக்டேட் பண்ணக் கூப்பிடலே. உன்கிட்டே கொஞ்சம் டீடெயிலாப் பேசணும்.

    மைத்ரேயி எதிரில் வரிசையாகப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றின் விளிம்பில் உட்கார்ந்தாள்.

    சாப்பிட்டியா?

    ஆச்சு, ஸார்.

    கொஞ்சம் காபி சாப்பிடறியா, இது சர்க்கரை இல்லாத காபி. ரங்கசாமி, ஒரு கப் காபி கொண்டுவாப்பா.

    ரங்கசாமி காபி கொண்டு வருகிறவரை அவரும் தம்முடைய காபியைக் குடிக்காமல் இருந்து, அவளுடனே சேர்ந்து குடித்தார். குடித்து முடித்ததும் மேஜை மீது தமக்காகக் கண்ணாடி டம்ளரில் மூடி வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவள் முன் வைத்தார்.

    காபி சாப்பிட்டதும் உடனே நீ ஜலம் சாப்பிடுவே இல்லே? என்று கூறிச் சிரித்ததும், மைத்ரேயி நெகிழ்ந்து போனாள்.

    தாங்க்ஸ் சார்!

    சொன்னதும் அவர், எதுக்கு இப்போ அநாவசியமா ஒரு தாங்க்ஸை வேஸ்ட் பண்றே? காசு மாதிரி வார்த்தைகளையும் அளந்து உபயோகப்படுத்த தெரிஞ்சிருக்கணும், மைத்ரேயி. இப்படி அனாவசியமா அப்பா மாதிரி பழகறவருக்கெல்லாம் சொல்லை வாரி இறைக்கக்கூடாது.

    அவளை மேலும் நெகிழ வைத்த வாசுதேவன் சட்டென்று விஷயத்துக்கு வந்தார்.

    கான்ஃபிரன்ஸ் வேலையெல்லாம் எந்த அளவில் இருக்கு?

    கவனிச்சுண்டிருக்கேன் சார்.

    நன்னாக் கவனிக்கணும்மா. இந்த கான்பிரன்ஸ் நடந்து முடிகிற வரைக்கும் எனக்குத் தூக்கம் பிடிக்காது. இது எவ்வளவு முக்கியமான கான்பிரஸ்ஸுன்னு உனக்குத் தெரியும். நான் சொல்லத் தேவையில்லை. தாஜ்லே அஞ்சு ரூமூம், கன்னிமாராவில் அஞ்சு ரூமும் புக் பண்ணச் சொன்னேனே, பண்ணிட்டியா?

    பண்ணியாச்சு சார்.

    கம்பெனி கார் தவிர நாலைஞ்சு டூரிஸ்ட் கார் ரெடியா வச்சுக்க. வர்றவங்க சௌகரியத்துக்கு எந்தக் குறையும் ஏற்படக்கூடாது. முக்கியமாப் பாம்பேலேருந்து வர்ற ராம்சந்தையும், டெல்லி ஜிஷ்ணு வர்மாவையும் ஸ்பெஷலாக் கவனிக்கணும். ஜிஷ்ணு வர்மாவைக் கவனிக்கிற பொறுப்பு முழுசையும் உன்கிட்ட விடறேன். அவர் வந்து டெல்லிக்குத் திரும்பிப் போகிறவரை நீ கூடவே இரு. ஒருவேளை கான்பிரன்ஸ் முடிச்ச கையோட அவர் சௌத் டிரிப் அடிச்சாலும் அடிப்பார். நீ கூடப் போகத் தயாராக இரு. அவருக்கு மட்டும் ஏ.ஸி. கார் ஏற்பாடு பண்ணிடு. ஏர்போர்ட்டிலிருந்து அவரைப் பிக் அப் பண்ணித் திரும்ப ப்ளேனில் ஏத்தறவரைக்கும் உன் பொறுப்பு. அவர் மூலமா எனக்குச் சென்ட்ரல் மினிஸ்ட்ரியில் எத்தனை காரியம் ஆகணும்னு உனக்குத் தெரியும். ஸோ, அவரை நிறைய சந்தோஷப்படுத்தி, நம்மைப் பற்றின நல்ல அபிப்பிராயத்தோடு அனுப்பி வைக்கணும். என்ன?

    சரி, சார்.

    இன்னிக்கி ஈவினிங் ப்ளைட்ல வராராம் அவர். டெல்லி ப்ளைட் எத்தனை மணிக்கு?

    ராத்திரி ஒன்பது பத்துக்கு, சார்.

    ப்ளேன் சரியான நேரத்துக்கு வருதான்னு போன் பண்ணிக் கேட்டுண்டு நீ நேராய்ப் போய்டு.

    ஓ. கே. சார்.

    மீதிப் பேரைக் கவனிக்க நான் விசுவநாதனையும், ஜயராமனையும் அனுப்பறேன்.

    மறக்காதே. ஜிஷ்ணு வர்மா நமக்கு ரொம்ப முக்கியமான ஆள்.

    இல்லை சார்.

    என்ன இல்லை?

    மறக்க மாட்டேன் சார்.

    சரி. யு கேன் கோ நௌ.

    அவள் எழுந்து தன் அறைக்குத் திரும்பினபோது மேஜை மீது மந்தாரை இலைப் பொட்டலங்கள் இரண்டு வைக்கப்பட்டிருந்தன. சுபாஷினி எதையோ வாங்கிக்கொண்டு வந்து வைத்திருக்கிறாள். தொட்டுப் பார்த்தாள். ஆறிக் கிடந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1