Amutha Geetham
()
About this ebook
Read more from Mekala Chitravel
Chinnajchiru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsPoove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsMathamennum Vaanaththil Manamennum Pura Rating: 5 out of 5 stars5/5Pon Malar Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vil Rating: 0 out of 5 stars0 ratingsSevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsSanthanamalar Sirithathu Rating: 0 out of 5 stars0 ratingsAattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSithra Salabam Rating: 0 out of 5 stars0 ratingsNenjaththil Nee Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthaiyaagi Rating: 0 out of 5 stars0 ratingsKaathaladi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Pattaampoochigal Rating: 0 out of 5 stars0 ratingsNathiye Pen Nathiye Rating: 0 out of 5 stars0 ratingsOru Poo Malarnthapothu Rating: 5 out of 5 stars5/5Vaalaik Kumariyadi Rating: 0 out of 5 stars0 ratingsSanthana Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Oruvanai Kaipidithey Rating: 0 out of 5 stars0 ratingsVikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsManjal Maththaappu Rating: 0 out of 5 stars0 ratingsAnantha Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsMuththazhagi Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsMadhura Nilave Madhuraa Rating: 0 out of 5 stars0 ratingsVaa Pon Mayile Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanden Thozhi Rating: 0 out of 5 stars0 ratingsAmmumma Sollum Amuthakathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Amutha Geetham
Related ebooks
Paarvai Ondre Podhume Rating: 4 out of 5 stars4/5Inaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Thoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Pookalin Oorvalam Rating: 4 out of 5 stars4/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Mannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Anbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vaasam Purappadum Penney Rating: 4 out of 5 stars4/5Naan Nappinnai Pesukiren Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsSollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsEn Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Aattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsThedum Uravugal Rating: 5 out of 5 stars5/5Ennuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsMangala Isai Rating: 3 out of 5 stars3/5Kattru Marakkumo Kaadhal? Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Amutha Geetham
0 ratings0 reviews
Book preview
Amutha Geetham - Mekala Chitravel
1
மேகக்குடம் தலையில் சுமந்து வானக்காட்டு வழியே நட்சத்திர விளக்குகள் துணையுடன் நிலவுப் பெண் ஏகாந்தமாக நடக்கும் முன்னிரவுப் பொழுது. அலுவலகம் முடிந்து அலுப்புடன் வீடு திரும்பும் நேரங்களில் பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நிற்பது ஒரு மாபெரும் கலை. அதிலும் அக்கம், பக்கம் உள்ளவர்கள் மீது அதிகம் உராயாமல் இடித்துக்கொள்ளாமல் பயணம் செய்வது அதைவிடப் பெரியது.
கூட்டத்தின் மத்தியில் நின்றிருந்த அமுதாவின் கண்களில் கடலலைகள் மண்ணில் புரண்டு புரண்டு விழுந்து விளையாடுவது பட்டது. மூன்றாண்டுகளாக மதனோடு உட்கார்ந்து கதைகள் பேசி மகிழ்ந்த படகு தெரிந்தது. புத்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் போல, அவர்கள் இருவருக்கும் காதலின் வேகத்தைக் கொடுத்தது, அந்தப் படகுதான்.
திருமணம் நிச்சயமான மறுநாள் மதன் அந்தப் படகை மூன்று முறை சுற்றி வந்து தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டான். அன்று அவள் சிரித்த சிரிப்பு...
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தொற்றிக்கொள்ள புன்னகைகளாக மலர்ந்து சிரிப்புகளாக வெடித்தது. இந்த வாழ்வில் அதுதான் கடைசி சிரிப்பாக இருந்திருக்க வேண்டும் எத்தனை கனவுகள்! கற்பனைகள்!
கடலளவு கற்பனைகளும், வானளவு கனவுகளும் நடைமுறை வாழ்க்கை என்று வரும்போது அடிபட்டுதான் போகின்றன. அறிவு எத்தனை உண்மைகளை விளக்குப் பிடித்து வெளிச்சம் காட்டுகிறது. ஆனால் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த மனம், சாதித்துக்கொள்ள வேண்டும் என்கிற இருட்டைத்தானே விரும்புகிறது?
ஓடிப்போய் அந்தப் படகின் அருகில் உட்கார்ந்து சத்தமாக வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது.
யோசித்துக் கொண்டிருக்கும் போதே வழித்தட நிறுத்தம் குறுக்கிட்டது. இறங்குபவர்கள், புதிதாக ஏறுபவர்கள் என்று கூச்சலும் தள்ளலும் பேருந்தைக் கலக்கிவிட்டன. திக்கித் திணறி, பேருந்து தன் பயணத்தைத் தொடர்ந்தது, படகும், கடலும் கண்ணைவிட்டு மறைந்துவிட்டிருந்தன. இன்னும் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் போக வேண்டும்.
நல்லவேளையாக காலி இடம் கிடைத்தது. இருக்கையில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டாள், அலுப்பும், ஆயாசமும் அமுதாவுக்குள் கிளை விட்டன. எதற்காக இந்த ஓட்டம்? எதைச் சாதிக்க இந்த வேகம்? யாருக்காக இந்த உழைப்பு?
வீட்டிற்குச் செல்லுவதற்கா? அங்கே அவள் வருவாள் என்று ஆவலாகக் காத்துக்கொண்டு யார் இருக்கிறார்கள்?
அலுத்துக் களைத்து வந்தவளுக்கு ஒரு வாய் காபி கலந்து தர யாருக்குத் தோன்றும்?
‘வேலை செய்ய வேண்டாம்... ஓய்வெடு’ என்று உரிமையாகக் கை வேலையைப் பறித்துச் செய்ய மனிதர்கள் இருக்கிறார்களா?
‘ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறது?’ என்று அன்புடன் கேட்டு, தலைமுடியை ஒதுக்கி வகிட்டில் முத்தமிட யாருக்காவது தெரியுமா, அங்கே?
செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தால் தீர்ந்தது. முகம் கழுவும் நேரம் கூட மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும்.
ஒரு வாய் காபிக்காக எவ்வளவு நேரமாக மொட்டு, மொட்டுன்னு உட்கார்ந்திருக்கிறது? வந்தமா காபியைக் கலந்து கொடுத்தமான்னு தோணாதா, ஒரு பொம்பளைக்கு?
மகாபாரதம் போல, இராமாயணம் போல நீண்டு செல்லும் அந்தப் புலம்பலுக்கு முடிவேயில்லை. என்பது மட்டுமன்று, பைபிள் போல பல பாகங்களும் கூட உண்டு.
சுடச்சுடக் காபி குடித்ததும், வெற்றிலையை வாய் நிறையக் குதப்பிக் கொண்டு,
இராத்திரிக்குத் தேங்காய், பூண்டு சேர்த்து அரைச்சு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வை, தொட்டுக்க கீரை கடைந்து, புடலங்காயைப் பொரிச்சுடு. கூடவே தக்காளி ரசம் வைத்து, துவையல் அரைச்சிடு. மசமசன்னு நிக்காமல் சீக்கிரமா சமையலை முடி. என்னவோ தெரியலை. இடுப்பைப் பிடித்துக்கிட்டு வலிக்குது. மத்தியானம் தூங்காதது வேற கண்ணை இருட்டிக்கிட்டு வருது...’
இந்தப் பக்குவத்தில் ஒரு கடுகுகூடக் குறையக்கூடாது. குறைந்தால் அவ்வளவுதான் பெரிய போரே நடந்துவிடும்.
‘நான் என்ன விருந்தா கேட்டேன்? என்னவோ வாயைத் திறந்து செய்யுன்னு சொல்லிட்டேன். முடியும் முடியாதுன்னு சொல்லிட வேண்டியதுதானே? எல்லாம் என் தலையெழுத்து...’
இரவு சுண்டக் காய்ச்சின பால் குடித்துவிட்டுப் படுக்கும் வரை நீண்டு கொண்டே போகும். இதெல்லாம் தினமும் நடப்பதுதான். என்றைக்காவது அமுதா நிமிர்ந்து பார்த்துவிட்டால் அவ்வளவுதான்...
‘உன் மனசில் என்ன டாட்டா, பிர்லா மகள்னு நினைப்பா? கொடுக்க வேண்டியதை, சொன்ன நேரத்தில் கொடுக்க வக்கில்லாதவன்தானே உங்கப்பன்? உனக்கு எதுக்கு இந்த முறைப்புங்கறேன்? சொன்ன வேலையைச் செய்துட்டுக் கிடக்கிறதானா கிட... இல்லை, இப்பவே வெளியே நட...’
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கலாம். இந்தப் புலம்பல் ஓயாது. எதற்குமே அமுதா வாயைத் திறக்கவேமாட்டாள்.
அம்சாவுக்கு அது பெரிய குறை. ‘மெய்யாவே ஊமைன்னா பரவாயில்லை. என்ன அழுத்தமா இருக்கா! ஏதாவது பதில் சொன்னாத்தானே நாம திருப்பிப் பேசவும் ஒரு பிடிப்புவரும்? தட்டிவிட்ட டேப்ரெக்கார்டு மாதிரி நாமதான் தனியாப் பேசிகிட்டிருக்கணும். இப்படி ஒரு வேதனையை விலைகொடுத்து வாங்கிக்கிட்டிருக்கோமே...’
மேடம்... மேடம்...
நடத்துனர் கையிலிருந்த விசிலால் பக்கத்து இருக்கையில் தட்டினார். நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திட்டுது... வேலை அதிகமா? வீட்டுக்குப் போய் ஓய்வு எடுங்க.
அன்பும், பண்பும் நிறைந்த வார்த்தைகள். சட்டெனக் கண்ணைக் கலக்கிவிட்டன. நன்றி... வரேன்
என்றபடி பேருந்தை விட்டு இறங்கினாள்.
தினமும் அதே பேருந்தில் காலையும் இப்படி முன்னிரவுப் பொழுதும் வருவதால் அறிமுகமான ஓர் அந்நிய மனிதன். அவனுக்காக எந்தவிதத்திலும் உழைக்கப் போவதில்லை. காசு பணம் கொடுக்கப் போவதில்லை. தன்னைப்போல உழைக்கும் ஒரு மனித உயிர் என்கிற மனிதாபிமானம். இப்படி அன்பான வார்த்தைகளைக் கேட்டு எத்தனை நாளாகிவிட்டது! மனப்புண்ணில் மருந்திட்டது போல அது மாயம் செய்திருக்க வேண்டும். வேகமாக நடைபோட்டாள். திடீரென ஸ்கூட்டர் இடிப்பது போல குறுக்கே நிறுத்தப்பட்டது.
புன்னகையுடன் மதன் கூப்பிட்டான். வா, அமுதா! வீட்டிற்குப் போகலாம்.
ஒரு விநாடி யோசித்தவள் கேட்டாள். ஏன்... உங்கம்மா வீட்டில் இல்லையா?
இல்லை... அம்மா பக்கத்து வீட்டுக்காரங்களோடு சினிமாவுக்குப் போயிருக்காங்க.
அதுதானே பார்த்தேன். உங்கம்மா இருந்தால் இத்தனை துணிச்சலும், அக்கறையும் வராதே... நீங்கள் உங்கள் நண்பர்கள் வீட்டுக்குப் போயிட்டு, உங்கம்மா வந்தப்புறம் வந்து சேருங்கள்.
அது வந்து... நான்... நீ... வா... அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாள்...
தன் குரலிலே தெம்பில்லை என்பது மதனுக்கே புரிந்தது.
உங்கம்மா இராத்திரி சமையலைப் பத்தி எழுதி வைச்சிட்டுப் போயிருப்பாங்க. எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கும். தயவு செய்து என்னை விட்டுடுங்க.
விறு விறுவென தன்னைத் தாண்டி நடக்கும் தன் மனைவியைப் பார்த்துச் சிலையாகி நின்றான் மதன்.
2
வேலை முடித்து சமையலறையில் பாயை விரித்தாள். படுத்ததுமே தூங்கிவிடும் வழக்கமெல்லாம் போய்விட்டது. சன்னல் வழியாக தோட்டம் தெரிந்தது. மல்லிகைக் கொடியில் வெள்ளை முத்துக்களாய் அரும்புகள் இலைகளை மறைத்துக் கொண்டிருந்தன.
வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அம்சா புலம்பிக்கொண்டே கதவைத் திறப்பது கேட்டது.
"கணவன் வருவானே..., சாப்பாடு போடணுமேன்னு ஒரு பதைப்பு இருந்தாத்தானே? நீ போய் துணி