Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinnajchiru Kiliye
Chinnajchiru Kiliye
Chinnajchiru Kiliye
Ebook98 pages30 minutes

Chinnajchiru Kiliye

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466862
Chinnajchiru Kiliye

Read more from Mekala Chitravel

Related authors

Related to Chinnajchiru Kiliye

Related ebooks

Related categories

Reviews for Chinnajchiru Kiliye

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinnajchiru Kiliye - Mekala Chitravel

    1

    வானக் கடலில் வெண் மேகப் பறவைகள் காற்றுக் கரங்களை அசைத்துப் பறந்து கொண்டிருந்தன. அவற்றைப் பிடிக்க நட்சத்திரத் தோழிகளுடன் நிலவு இளவரசி ஓடிக் கொண்டிருந்த முன் மாலைப் பொழுது. எதிரில் பிரித்து வைத்திருந்த புத்தகத்தின் தாள்கள் படபடத்தன. நந்தினியின் மனமும் அதைப்போலவே நிலை கொள்ளாமல் தவித்தது. தெருப்பக்கத்தில் ஏதாவது பைக் சத்தம் கேட்டாலே வெடவெடத்தது. பால்கனி பக்கம் ஓடிக்கொண்டே இருந்ததில் கால்கள் கடுமையாக வலித்தன.

    சாப்பாடே பிடிக்கவில்லை. இரவு உடையுடன் படுக்கையில் விழுந்தபோது தப்பி விட்டது போல நிம்மதிப் பெருமூச்சு வந்தது. கண்களை மூடிக் கொண்டாள்.

    ஹலோ... மேடம் பக்கத்தில் குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. சட்டெனப் பாய்ந்து எழுந்து விளக்கைப் போட்டாள். படுக்கைக்கு அருகில் மனோ நின்று கொண்டிருந்தான். பயத்தில் குரலே எழும்பவில்லை.

    என்ன... பேச்சு வரலையா? இதைத்தான் காதல்ங்கறது... பேச்சு வரவேண்டிய நேரத்தில் பேச வராது. பேச்சு வரக்கூடாத இடத்தில் புலம்பித் தள்ளிடும்.

    மனோ... இங்கே... எப்படி... வந்தே?

    உங்க வீடு என்ன ராஜா தேசிங்கு கோட்டையா? அல்லது... உன் அறை என்ன பாரிஸ் ஈபிள் கோபுர உச்சியில் இருக்கா? உன்கிட்டே சவால் விட்ட மாதிரியே உன் வீட்டுக்கு வந்துட்டேன். பார்த்தியா? மனோவா கொக்கா?

    சொன்னால் உனக்குப் புரியறதே இல்லை. சிந்திக்கவும் உனக்குத் தெரியாது. இப்படி இராத்திரி நேரத்தில் சுவர் ஏறிக் குதிச்சு என் அறைக்குள் வர்றது தவறுன்னு உனக்குத் தோணலையா? உடனே போயிடு.

    அட... உனக்கு இவ்வளவு பேச வருமா? வாயே திறக்கலையேன்னு நான் கிடந்து தவமிருக்கேன். கோபத்தில் பொரிஞ்சு தள்ளறியே... இப்ப நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?

    மனோ! நந்தினியின் குரல் படபடத்தது.

    உனக்கு என்ன வேணும்? நான் இந்த இடத்தை விட்டுப் போகணும். அதுதானே? சரி... நான் போகிறேன். அதுக்கு முன்னாடி நான் உன்னிடம் சொல்லியிருந்தது போல சத்தியம் பண்ணு.

    நந்தினியின் தலையில் அடித்துக் கொண்டாள்.

    மனோ! நீ என்ன இப்படி என்னை இம்சிக்கிறே? நீ பேசறதெல்லாம் நடக்கக்கூடியதா? எங்கப்பா பார்த்தால் உன்னை யாருமே காப்பாற்ற முடியாது. மனோ... தயவு செய்து தப்பிப் போய்விடு. ஐய்யய்யோ... யாரோ வர்ற மாதிரி சத்தம் கேட்குதே.

    மனோ கித்தாய்ப்பாகச் சிரித்தான்.

    அ... இதுதானே வேணாங்கிறது... இதோ பாரு நந்தினி! உன் வாய் எத்தனைதான் என்னைக் காதலிக்கலைன்னு சொன்னாலும் நான் நம்பமாட்டேன். என் உயிரைப் பற்றி இத்தனை அக்கறை வைச்சிருக்கறதைப் பார்த்தாலே புரியுதே... நீ என்னை உயிருக்கு உயிராக நேசிப்பது... ஆகா... நான் எத்தனை பேறு பெற்றிருக்கிறேன்! நந்தினி என்னைக் காதலிக்கிறாள்னு கத்திக்கிட்டு ஓடணும் போல இருக்கு. ஆனால் மனித நடமாட்டமே இல்லாத இந்தப் பாலைவனத் தெருவில் ஓடமாட்டேன். கடற்கரைக்குப் போய்க் கத்திக்கிட்டு ஓடப்போறேன், வரட்டுமா?

    மனோ... ஏய்... நான் சொல்றது எதுவும் காதில் ஏறாதா உனக்கு? இப்படியெல்லாம் செய்யாதே... நில்லு.

    மென்மையான அவள் குரல் காதை எட்டுமுன் அவன் குழாய் வழியாகச் சரசரவெனக் கீழே இறங்கி பைக்கில் பறந்து விட்டான்.

    நந்தினி தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே மனோ அவளைக் காதலிக்கிறான். சுற்றிச் சுற்றி வருகிறான். மாவட்டத்திலேயே மிகப் பெரிய பணக்காரர் சேனாபதியின் ஒரே மகள் என்பதையெல்லாம் அவன் அறியாதவனல்லன். இருந்தாலும் நாளுக்கு நாள் அவன் காதல் அதிகம்தான் ஆயிற்றே தவிர குறையவில்லை.

    நந்தினிக்கு எதற்கும் பயம். அப்பாவிற்கு அதிக பயம் என்றால் மனோவின் கண்மூடித்தனமான காதலைக் கண்டு அதைவிட பயம்.

    எந்த வகையிலும் சேரமுடியாத இந்தக் காதல் எப்படியும் நிறைவேறாது என்பது மட்டும் நிச்சயம். மனோவுக்கு அதை எப்படி விளக்குவது என்பது புரியாமல் இரவும், பகலும் அவள் அலைமோதித் தவித்துக் கொண்டிருந்தாள்.

    இதோ... இன்று இரவு சிவராத்திரிதான். இனிமேல் எங்கே தூக்கம் வரப் போகிறது? மனோ பாட்டுக்கு எங்காவது கத்திக்கொண்டு ஓடப் போகிறான். நாளைக் காலையில் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகப் போகிறது. கல்லூரி மாணவர்கள் உல்லாசப் பயணம் சென்றபோது எடுத்த புகைப்படத்தில் அவள் தலையை வட்டம் போட்டுக் காட்டப் போகிறார்கள்.

    இந்த அம்புக் குறியிட்ட பெண்தான் மனோவின் காதலி என்று அடைமொழி குறிக்கப் போகிறார்கள். தீர்ந்தது எல்லாமே தீர்ந்தது... இப்போது என்ன செய்வேன்?" நந்தினிக்கு தலையைச் சுற்றியது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் போலிருக்கிறது.

    அறைக்கதவை மெதுவாகத் திறந்து மாடி வராந்தாவை எட்டிப் பார்த்தாள். யாரையும் காணவில்லை. கீழே இறங்கினாள். நடுக்கூடத்தில் வேலைக்காரி வள்ளி, சமையல்காரர் சாம்பு, தோட்டக்காரர் கந்தன் மூவரும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அங்கேயே நின்று கொண்டாள்.

    ஐயா கிளப்பிலிருந்து வர்றதுக்கு நடுச்சாமம் ஆகிவிடும். சின்னம்மாவும் தூங்கிட்டாங்க. வீடியோவில் படம் பார்க்கட்டுமா மாமா? மெதுவாகக் கேட்டான் கந்தன்.

    வயசுப் பொண்ணு வீட்டில் இருக்கிற நினைப்பு ஐயாவுக்கு என்னிக்குத்தான் வருமோ? அம்மா தவறிப் போனதிலிருந்து வீடு வீடாகவே இல்லை. ஐயாவுக்கு வேற சினேகிதமெல்லாம் கூட இருக்குன்னு அரசல் புரசலா பேசிக்கறாங்க வள்ளி உண்மையான வருத்தத்துடன் சொன்னாள்.

    சாம்பு மிகவும் பெரியவர். நந்தினியைத் தோளில் தூக்கி வளர்த்தவர். குடும்பத்தில் ஒருவராய் இணைந்தவர். "உஸ்... மெதுவாப் பேசு... குழந்தை காதில்

    Enjoying the preview?
    Page 1 of 1