Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theerkaa Sumangali
Theerkaa Sumangali
Theerkaa Sumangali
Ebook99 pages35 minutes

Theerkaa Sumangali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466688
Theerkaa Sumangali

Read more from Rajendrakumar

Related to Theerkaa Sumangali

Related ebooks

Related categories

Reviews for Theerkaa Sumangali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theerkaa Sumangali - Rajendrakumar

    12

    1

    மஞ்சளும் சிவப்புமாக அட்டகாசம் காட்டி இறங்கிக் கொண்டிருந்தது சூரியன். வந்து கொண்டிருக்கும் இருட்க்குப் பயந்த பறவைக் கூட்டம் கூடு திரும்பும் உற்சாகத்தில் கூவிப் பறந்து காணாமல் போயின.

    வயலில் வேலை செய்த அலுப்பும், நிறைய அழுக்குமாகத் திரும்பிக் கொண்டிருந்தது அந்த நடுத்தர வயதுப் பெண்கள் கும்பல். நடுவிலே ஒரு மின்னல் போலப் பிரகாசமாக இருந்தாள் அந்தச் சின்னப் பெண். நிறையப் பேசுவாள் போலிருந்தது.

    பின்னால் லொட லொடவென்ற ஓசையுடன் வந்த டிராக்டருக்கு விலகி வழி விட்டவர்கள்- டிராக்டர் கடந்ததும் -

    டாக்டர் கார். எங்களையும் ஏத்திகிட்டுப் போறது என்றார்கள் கூவலாக.

    போங்கடி போங்க. ஏதாச்சும் திட்டி வைக்கப் போறேன்.

    அட ஏன்க்கா நீ வேற, இந்த லொட லொடா வண்டியில போனா ஊருக்குள்ளாற போறதுக்குள்ளே கழுத்து சுளுக்கிக்கும் என்ற அந்தச் சின்னப் பெண்- அதோ அவ்வளவு தூரம் போய்விட்ட டிராக்டரைப் பார்த்து ஆள் காட்டி விரலையும் சுட்டு விரலையும் சேர்த்து நாக்குக்குக் கீழே வைத்து, ‘விய்ய்ய்ய்ய்ய்ங்...’ கோபமாகத் திரும்பிய அந்த டிராக்டர் ஓட்டுநர் முறைக்கவே -

    சுற்றிச் சுற்றி வந்து கும்மியடித்தார்கள். சிரித்தார்கள்.

    திட்டிக்கொண்டே அந்த ஓட்டுநர் டிராக்டரை ஓட்டிப் போக -

    சின்னப் பெண் முன்னால் ஓடி, இரண்டு கைகளாலும் உதட்டைக் குவித்து, பாவி, நீ நல்லாயிருப்பியா? மாட்டே? பாம்புதான் பிடுங்கப் போகுது உன்னை.

    ஏய் ராசாத்தி, ஆளான பொண்ணா லட்சணமாயில்லாம என்னடியிது ஆம்பிளயோட மல்லுக்கு நிக்கிறே? ஏ லட்சுமி யாத்தா. உன்றன் மவளைக் கொஞ்சம் கண்டிச்சு வை. அப்புறமா அவிசாரி பட்டம் கொடுத்துப்பிடுவாங்க, தெரியுமில்லே.

    புகையிலை அடக்கிய வாயால் இளித்த அந்த லட்சுமியாத்தா-- மகளின் குறும்பை ரசித்தவள்- சொன்னாள். போவையில மீனு வாங்கிட்டுப் போவணும். ராத்திரி குழம்புக்கு எதுவுமில்லே.

    உதைங்கடி அவளை. அதான் ஊர்ல காப்புக்கட்டி கொடி ஏத்தியாச்சு. கறி மீனு கடையெல்லாம் திறக்கக்கூடாதுன்னு பஞ்சாயத்து உத்தரவாச்சுதில்லே. மீனு வாங்கப் போறாளாமில்லே மீனு?

    கண்களில் சலிப்புக் காட்டி நிமிர்ந்த அந்த லட்சுமியாத்தா பக்கத்துப் பெண்ணை தோளால் இடித்தாள். ஏய், அங்க பாரேன்.

    பார்த்தவள் சொன்னாள். என்ன? சம்பூர்ணதம்மா அவங்க வீட்டு வாசல்ல நிக்கிறாங்க. அதுக்கென்ன?

    விசயம் தெரியாம நிக்கிறாங்க. பாரேன். அள்ளாத சிரிப்பும் கொள்ளாத சந்தோஷமுமா. வாரியா? கொஞ்சம் பயமுறுத்திப் போவோம்.

    அடி ஏண்டி வம்புக்கு அலையுற? நட.

    அதுக்கில்லேக்கா. திமிரைப் பாரேன். ஒரு நாளைப் போல இந்தப் பக்கமா வாரோம். போறோம். ஒரு நாளாச்சும் கூப்புட்டு ரெண்டு வார்த்தை பேசுதா? ஆனாலும் திமிர் ஜாஸ்தி தேங் அந்தப் பொம்பளைக்கு...

    அதுக்கேண்டி நீ காயறே? பேசறதும் பேசாததும் அவங்க இஷ்டம்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லே. ஊருக்குள்ளே கல்லூடு கட்டின ஒரே பொம்பளயில்லே. அந்தத் திமிரு. பொண்ணைப் படிக்கப் பட்டிணம் அனுப்பியிருக்குதில்லே அந்த திமிரு. இவ யாரு எப்படிப்பட்டவன்னு எங்களுக்குத் தெரியாதா?

    ஸ்ஸு. பேச்சை இதோட விடு. நட சடுதியில.

    ஏனாம்?

    அவங்க காதில விழுந்தா பாவம் வருத்தப்படுவாங்க.

    ஆமா... அவ மட்டும் பெரிய இதுவாக்கும். சின்ன ஜாதிக்காரிங்கிற அலட்சியம்... அவளை விட நாமதாண்டி பெரிய ஜாதி, கழுத்தில் தொங்குதே மஞ்சக் கயிறு. அது போறும்டி நம்ம பெருமையைச் சொல்ல. அங்க பாரேன். தங்கமும் வைரமுமாக தொங்குதே தவிர தாலிக்கயிறு இருக்குதா பாரேன்.

    ராசாத்தி- ஏன் ஆத்தா அறுத்துக்கிட்டவங்களா?

    இவ ஒருத்தி, புரியாத மவ... அடியே, கட்டினாதானேடி அறுக்க? ஊர் பெரிய மனுசன் பெரிய பண்ணைக்கு வைப்பாட்டிடி என்று வேண்டுமென்றே உரக்கக் கத்திய அவள் பேச்சு காதில் விழவே -

    கண்ணீரை மறைத்த அந்தச் சம்பூர்ணத்தம்மாள் சட்டென்று திரும்பி உள்ளே போனாள்.

    ஆபத்து வந்து ஊர் எல்லையில் நிக்குது... அது தெரியாம இது வாசல்ல நின்னு புன்னகை பூத்துட்டிருக்கு.

    என்ன ஆத்தா அது ஆபத்து? ராசாத்தி கேட்டாள். அது ஏன் ஊர் எல்லையிலேயே நிக்குது?

    இந்தம்மாவோட தம்பி சிவசு. ஜெயில்லர்ந்து வந்திருக்கான். ஊருக்குள்ளே காப்பு கட்டியிருக்கு. கொடியிறக்கற மட்டும் உள்ளாற வராதேன்னு எல்லையிலேயே நிப்பாட்டிட்டாங்க...

    அய்யோடி! கையைப் பட்டென்று தட்டிப் பின் வாங்கினாள் ராசாத்தி. செயிலுக்கா? ஏன்?

    அரிசலூர் சந்தையில ஓர் ஆளை வெட்டிட்டானாம். அதான் ஆறு வருசமா உள்ளேயிருந்து இப்பத்தான் வெளியே வந்திருக்காப்பல என்றவள் மற்றவர்கள் போய் விட, "சிறுக்கி மவளுகளா இருங்கடி... நானும் வாரேன் என்று மகளை இழுத்துக்கொண்டு நடந்தாள்.

    "திருவிழாவுக்கு நீ வந்தேயிருக்க வேணாம்டி மகளே" என்ற அம்மாவின் குரலுக்கு -

    தரையில் சாய்த்து வைத்த கண்ணாடியைப் பார்த்தவாறு நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டிருந்த அந்த தீர்க்கா திரும்பிப் பார்த்து பளிச் என்று சிரித்தாள்.

    ஏம்மா?

    அந்தப் பாவி சிவசு ஊர் எல்லையில வத்து நிக்கிறானாமேடி.

    யாரை? மாமாவைச் சொல்றியா?

    ஆமாம்

    வரட்டுமே என்ன இப்ப?

    பதில் சொல்லத் தயக்கம் - காட்டி அமைதியுடன் தின்றாள் அம்மாள்.

    சாமி ஊர்வலம் வர்ற நேரமாச்சு. சீக்கிரமா சாப்பாடு போடும்மா. அது வரைக்கும் நான் நோட்ஸ் படிக்கிறேன் சொன்னாள். ஊர் போன உடனே பரீட்சையிருக்கு.

    தூணில்

    Enjoying the preview?
    Page 1 of 1