Kalai, Malai, Kolai..!
()
About this ebook
Read more from Rajendrakumar
37vathu Elumbu Koodu Rating: 0 out of 5 stars0 ratingsVilai Pesi Oru Kolai Rating: 4 out of 5 stars4/5Oru Chinna Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Valarum Paruvam Rating: 5 out of 5 stars5/5Anjuvatharkku Manju Rating: 5 out of 5 stars5/5Odi Vaa Iniyaa Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsTheerkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsEthuvarai Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsSigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Virpanaikkalla Rating: 5 out of 5 stars5/5Uravu Kolla Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsNiththam Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsSoozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsKenjum Salangai Rating: 0 out of 5 stars0 ratingsNee Neeyaa Rating: 0 out of 5 stars0 ratingsVaramaattiyaa Mummy Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 5 out of 5 stars5/5Theerkka Naalai Theerkkapaduvaal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsKadhal XYZ Rating: 0 out of 5 stars0 ratingsNambuvatharkkalla Rating: 4 out of 5 stars4/5Konal Nizhalai Thurathi Rating: 0 out of 5 stars0 ratingsIraval Vasantham Rating: 3 out of 5 stars3/5Oru Devi Ennai Thedukiraal Rating: 5 out of 5 stars5/5Thanimarath Thoppu Rating: 3 out of 5 stars3/5Bairavan Azhaikkiren Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Bothai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kalai, Malai, Kolai..!
Related ebooks
Sigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Naan Oru A Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Mudichu Rating: 5 out of 5 stars5/5Neethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsMadhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5Kutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5En Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Iranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Azhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsEthuvarai Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mudhal Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Thodarum Rating: 5 out of 5 stars5/5Kannamoochi Re... Re... Rating: 5 out of 5 stars5/5Operation Venus Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsKadhal XYZ Rating: 0 out of 5 stars0 ratingsSathi Seivai Sahothara Rating: 0 out of 5 stars0 ratingsPlease... Please... Bharath! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Avalin Kathai! Rating: 0 out of 5 stars0 ratingsOru Nijam Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Kulirkaala Kutravaligal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMillion Dollar Unmai Rating: 5 out of 5 stars5/5Innamum Brammachari Rating: 5 out of 5 stars5/5Puyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsIniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Mugam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kalai, Malai, Kolai..!
0 ratings0 reviews
Book preview
Kalai, Malai, Kolai..! - Rajendrakumar
9
1
பளீரென்று ஓசையின்றி புகும் சூரிய கதிர்களைப் போல ஆவேசமாக நகரத்துக்குள்ளே புகுந்து அந்த அமானுடம்-ஆவி.
பூந்தமல்லி சாலையில் அமைந்தகரையை கடந்து புது ஆவடி சாலையில் உற்சாகமாக சீட்டியடித்தபடி போய்க் கொண்டிருந்தது இரண்டு மில் தொழிலாளர்களின் சைக்கிள் ஒலி!
அந்த இருட்டு நேரத்தில் பளீர் விளக்கொளியில் தனிமையில் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் –
சீட்டியடித்தான் ஒருவன். கிராக்கிப்பா
என்றான்.
அதை அதிகம் ரசிக்காத இன்னொருவன் சைக்கிளை மிதித்து கொஞ்ச தூரம் போனதும் திரும்பிப் பார்த்தான்.
ஏய், வாயேண்டா.
சிரமத்துடன் மிதித்த முதலாமவன் சைக்கிள் நகர மறுக்கும் காரணம் புரியாமல் விழித்தான். முழு பலத்தையும், பிரயோகித்து மிதித்தான்.
சைக்கிளைப் பிடித்திருந்த யாரோ சட்டென்று விட்டு விட்டார்ப்போல சைக்கிள் சரேலென்று பாய்ந்ததும், திணறிப் போனான்.
திரும்பிப் பார்த்தவாறு, அந்த முன் ஆளை நெருங்கும் போது -
அந்தப் பெண் காற்றில் கலைவது போல - கரைவது போன்ற பிரமை ஏற்பட நடுங்கிப் போனான்.
அவசரமாக மிதித்து தண்ணீர் டாங்க் அருகில் திரும்பி அவசரமாக மறைந்தான்,
விடிய நேரம் இருந்ததினால் நடமாட்டமின்றி துடைத்து விட்டார் போல் இருந்தது அண்ணா சாலை. பயமின்றி காற்றாக பல்லவனை பறக்கவிட்ட டிரைவர், ஸ்பென்சரை, கடந்த போது- பக்கவாட்டு பின்னி சாலையில் இருந்து ஓடிவந்த அந்தப் பெண்ணைக் கண்டதும் பதறி முழு பலத்தையும் பிரயோகித்து பிரேக்கை அழுத்தினார். ஆனால் பயன் இன்றி, அவளை முட்டி மோதி சக்கரங்கள் ஏறி இறங்கிய பின்னர்தான், பஸ் நின்றது.
அவசரமாக இறங்கிய டிரைவரும் பயணிகளும் பீதியுடன் ஆராய--
விபத்து நடந்த தடயமே இல்லாமல் இருந்தது.
விபத்தே நடக்கவில்லை என்பதை நம்பமுடியாமல் திணறி போனார்கள்.
திடீர் என்று ஒரு பெண் ஓடி வந்ததை டிரைவர் நம்பினார்- சத்தியமாக நம்பினார்.
அந்த அலறல்- இன்னமும் அவரிடம் படபடப்பை மீதம் வைத்து இருந்தது.
மீண்டும் பஸ் கீழே ஆராய்ந்தார்.
அட வண்டியை எடப்பா. ரெயில் போயிடும்
என்ற பயணியின் குரலுக்கு மதிப்பளித்து மீண்டும் பஸ்சில் ஏறி வண்டியை நகர்த்தினார். குழப்பமாக,
காலை வந்துகொண்டிருந்தது மெதுவாக. அவசரமில்லாமல் -
சைதை மர்மலாங் பாலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிய அந்த அம்பாசிடர்கார். முட்டுவதைப் போல ராஜ்பவனை நோக்கி பாய்ந்து சென்று, இடது பக்கம் கோபமாக திரும்பியதும் -
தென்பட்டாள் அந்தப் பெண். விளக்கு ஒளியில் நின்று கட்டை விரலால் தோள் வழியாக பின்னோக்கிக் காட்டி லிப்ட் கேட்டாள்.
காரோட்டி வந்தவர் வயதை மறந்து ஒரு வினாடி சபலத்துக்கு ஆளானார். அவளை கடந்து போனவர், காரை நிறுத்தி பின்னோக்கி வந்து -
அவள் அருகே நிறுத்தினார். இமைக்காமல் பார்க்கும் அவள் பார்வையை அலட்சியப்படுத்தினார்.
என்னம்மா தனியா நிக்கரே?
கண்ணடித்தார் வர்றியா?
அவள் காரை நெருங்க நெருங்க. அவருடைய முயற்சி இன்றியே கார் கதவு திறந்து கொள்ள -
சுலபமாக ஏறி அமர்ந்தாள் அவள்.
கதவு அவள் தொடமல் தானாக மூடிக் கொண்டதும்தான் அவருக்கு உரைத்தது.
யார் நீ?
,
இமைக்காத விழிகளுடன் திரும்பிப் பார்த்தவள் திரும்பிக்கொண்டாள். நேரே போ
நீ எங்கே போகணும்?
பெசண்ட் நகர்.
அடையாற்றில் விட்டு... றேன். வண்டி சத்யா ஸ்டியோ பக்கமாபோகுது.
பெசண்ட் நகர்
என்றாள் அழுத்தமாக.
நீ போகிற இடத்துக்கெல்லாம் கொண்டுபோக முடியாது. அடையாறு வரைதான் லிப்ட்
என்றவருக்கு அப்போதுதான் உரைத்தது.
ஒரு பெண்ணின் குரலா அது?
அடையாறு பஸ் ஸ்டாண்ட் அருகே காரை நிறுத்த முயன்ற அவர் முயற்சி தோற்றது. பிரேக் பிடிக்க மறுத்தது.
அவர் கட்டுப்பாட்டையும் மீறி கார் பறந்தது.
சரலென்று திரும்பி சாஸ்திரி நகர் செல்லும் சாலையில் பறந்து அவ்வை இல்லத்தை கடந்து திருப்பத்தில் -
கோபமாக அரைவட்டம் போட்டு திரும்பி நின்றது.
அவள் இறங்கிக்கொண்டாள். நீ போகலாம். நன்றி
என்றாள் கரகரப்பு குரலில்.
நன்றி... நன்றி... நன்றி...
என்று எங்கோ எதிரொலிப்பது கேட்க, காரோட்டிக் கொண்டிருந்த அந்த வயோதிக வாலிபர் பயத்துடன் ஆக்சிலேட்டரை முடிந்த மட்டும் மிதிக்க, கார் காற்றாக பறந்து மறைந்தது.
அந்த திருப்பத்தில் அவள் காத்திருந்தாள்.
இல்லை
அது" காத்திருந்தது.
தட்... தட்... தட்... கான் வாஸ் பூட்ஸ் சீரான ஓசை எழுப்ப கைகளை முன்னோக்கி நீட்டியவாறு ஓடி வந்து கொண்டிருந்தாள் பிரியா.
வயது?
அந்த ஆராய்ச்சி அப்புறம். பெசண்ட் நகர் சாலையில் ஓடினாள்.
சாலையின் இருபுறமும் எரிந்த விளக்கு ஒளியில் அவள் நிழல் பின்னே நீண்டு பிறகு குறைந்து வந்து விளக்கு கம்பத்துக்கு நேரே வந்ததும் காலடியில் தேங்கி, பின் முன்பக்கமாக நீண்டு கொண்டே போயிற்று.
காலை உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.
எதிரே இருட்டில் தெரிந்த வேளாங்கண்ணி மாதா கோயிலைக் கண்டதும் சிலுவை போட்டுக் கொண்டாள். பிரியா- ஓட்டத்தை நிறுத்தாமலே.
பிறகு சாஸ்திரி நகர் பக்கமாக திரும்பி ஓடத் தொடங்கினாள்.
அவளுக்கு பதினெட்டு வயது என்றாலே அடிக்க வருவீர்கள். ஆனால் உண்மையில் வயது இருப்பதை தொட்டு சில நாட்கள் தான் ஆகிறது. போன சனிக்கிழமைதான் ஒற்றை மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டி பிறந்த நாளை அட்டகாசமாகக் கொண்டாடினாள்.
அப்போது நாசுக்கு புரியாத ஒரு மாமி வயதைக்