Puyal Veesiya Iravil
By Tamilvanan
()
About this ebook
காவேரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறாள்.
அவளுக்கு பிறந்தநாள் வருகிறது. எனவே தங்கம் வாங்க நகைக்கடைக்கு செல்கிறாள்.
அங்கு ஒரு நகை திருட்டு நடக்கிறது. அந்த திருட்டு நகையில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
Read more from Tamilvanan
Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMaraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Naplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Cairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsAandhai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Thupparikirar Rating: 0 out of 5 stars0 ratingsGenevavil Sankarlal Rating: 5 out of 5 stars5/5Berlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsUnna Koduthittan Uyirgalai! Rating: 0 out of 5 stars0 ratingsSimla Beauty Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMaruthamalai Saaralile Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsYogasanam Kattru Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsIrul Rating: 0 out of 5 stars0 ratings
Related to Puyal Veesiya Iravil
Related ebooks
Kalai, Malai, Kolai..! Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Konjum Vanjanai! Rating: 4 out of 5 stars4/5Narpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Raathiri Varum Rating: 5 out of 5 stars5/5Idhu Valarum Paruvam Rating: 5 out of 5 stars5/5Sei! Seiyaathe! Rating: 2 out of 5 stars2/5Mutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Kadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Kalavu Sei Rating: 0 out of 5 stars0 ratingsIppadai Vellum Rating: 0 out of 5 stars0 ratingsKulirkaala Kutravaligal Rating: 0 out of 5 stars0 ratingsAntharangamana Abathu Rating: 5 out of 5 stars5/5Indru Mudhal Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNeeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsMannikka! Manamillai, Mannikka...! Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Ethuvarai Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5No… Sudathea Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Ellorum Nallavare Rating: 0 out of 5 stars0 ratingsMiss India Missing Rating: 5 out of 5 stars5/5Sollathey Sei! Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsNandhini 440 Voltz Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Puyal Veesiya Iravil
0 ratings0 reviews
Book preview
Puyal Veesiya Iravil - Tamilvanan
http://www.pustaka.co.in
புயல் வீசிய இரவில்
Puyal Veesiya Iravil
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
அத்தியாயம் 55
அத்தியாயம் 56
அத்தியாயம் 57
அத்தியாயம் 58
அத்தியாயம் 59
அத்தியாயம் 60
அத்தியாயம் 61
அத்தியாயம் 62
1
காவிரி.
இது அவள் பெயர்.
மைசூரில் பிறந்தவள். வளர்ந்தவள். பெங்களூரில் படித்தவள். பட்டம் பெற்றவள். சிவப்பாக இருந்தாள். செக்கச் செவேலென்று இருந்தாள். அழகாக இருந்தாள்.
அவளைப் பார்த்தால் ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவே முடியாது. கல்வியும் அழகும் இருந்ததால் அவளுக்கு எளிதாக வேலை கிடைத்தது. சென்னை நகரில் ஒரு பெரிய கம்பெனியில் உதவியாளராகச் சேர்ந்தாள்.
நல்ல சம்பளம்.
வகை வகையான ஆடை அணியவேண்டும் என்று அவளுக்கு ஆசை. ஆகையால் அவளுக்குக் கிடைத்த சம்பளம் முழுவதும் ஆடைகளுக்கும் அவள் விரும்பி வாங்கிவந்த போலி நகைகளுக்குமே சரியாகப் போய்விட்டது!
பெண்கள் ஹாஸ்டல் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள். காவிரியைக் கண்ட மற்றப் பெண்கள் அவளை அடிக்கடி பாராட்டினார்கள்.
‘உன்னைப் பார்த்தால், பெரும் பணக்காரப் பெண்ணைப் போல் இருக்கிறது’ என்றாள் ஒருத்தி. ‘உனக்கு இருக்கும் அழகுக்கும் அறிவுக்கும் உன்னை எவனாவது ஒரு பெரும் பணக்காரன் வந்து கொத்திக்கொண்டு போய்விடுவான்’ என்றாள் இன்னொருத்தி!
‘உன்னைப் போன்ற பெண் தெருவில் நடந்து போகக்கூடாது. எங்களைப்போல் பஸ்ஸில் போகக்கூடாது’ என்றாள் இன்னொருத்தி!
‘இதற்காகத்தான் கம்பெனியிலிருந்து தினமும் கார் வருகிறது இவளை அழைத்துப் போக’ என்றாள் மற்றொருத்தி!
அவளைக் கண்டு பொறாமைப்படும் மற்றப் பெண்கள் இப்படி அவளைப் பாராட்டியும் கேலிசெய்தும் பேசுவது அவளுக்குப் பிடித்திருந்தது. இதனால் அவள் மேலும் மேலும் வகைவகையான ஆடைகளையும் நகைகளையும் வாங்கி அணியத் தொடங்கினாள்.
காவிரிக்குப் பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பிறந்த நாளுக்கு என்று நகைக்கடைக்குப் போய் ஏதாவது ஒரு சிறிய நகை வாங்கவேண்டும் என்று அவள் எண்ணினாள். அதற்காக அவள் ஒருநாள் மாலை புறப்பட்டபோது அவள் பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது.
காவிரி, திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு மிக வியப்பாக இருந்தது.
காரில் உட்கார்ந்திருந்தவன் நிலவேந்தன். அவன் ஒரு பெரும் பணக்காரப் பையன். அடிக்கடி அவன் காவிரி போகும் இடங்களிலெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தான்! பெங்களூரில் காவிரி படித்துக்கொண்டிருந்த அதே கல்லூரியில் படித்தவன். ஆகையால் அவனை அவளுக்குத் தெரியும்.
ஹலோ காவிரி, எங்கே புறப்பட்டு விட்டாய்? காரில் ஏறிக்கொள்
என்றான் அவன்.
அவர்களை ஹாஸ்டலிலிருந்து மற்றப் பெண்கள் சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது காவிரிக்குத் தெரியும். நிலவேந்தன் காவிரியைக் காதலிப்பதாகவும், பணக்காரன் என்பதால் அவனைக் காவிரி மணந்துகொள்ளப் போகிறாள் என்றும்கூட மற்றப் பெண்கள் பேசிக்கொண்டது அவளுக்குத் தெரியும்!
அவள் காரில் ஏறி உட்கார்ந்தாள்.
கார் பறந்தது.
காவிரி பேசவில்லை. தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஏன் பேசமாட்டேன் என்கிறாய் காவிரி?
என்றான் நிலவேந்தன்.
ஒன்றுமில்லை.
எங்கே போகவேண்டும்?
நகைக்கடைக்கு. என்னைப் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிடுங்கள்.
வேண்டாம், நகைக்கடைக்கே உன்னை அழைத்துப் போகிறேன். எனக்கு ஒன்றும் வேலை இல்லை.
நன்றி
என்றாள் அவள்.
அடிக்கடி நிலவேந்தன் தன்னை வந்து சுற்றுவதையும் மற்றவர்கள் அவர்களைப் பற்றிப் பேசுவதையும் அவள் விரும்பவில்லை. இன்றுடன் அதற்கு ஒரு முடிவுகட்ட அவள் எண்ணினாள். அதனால் நிலவேந்தன் மனம் புண்படாமல் அவனைத் தன் வழிக்குக் கொண்டுவர அவள் எண்ணினாள். அதற்கான வாய்ப்பு அவளுக்கு நகைக்கடையில் எதிர்பாராத விதமாகக் கிடைத்தது!
2
மவுண்ட்ரோடில் இருந்த அந்தப் பெரிய நகைக்கடைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.
வகைவகையான நகைகள் கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டிருந்தன. நகைக்கடையில் கொஞ்சம் கூட்டம் மிகுதியாகவே இருந்தது. ஆண்களும் பெண்களும் வகை வகையான நகைகளைக் கண்ணாடிப் பேழைகளில் இருந்து எடுக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
காவிரி, மோதிரம் ஒன்றைச் சுட்டிக்காட்டி அதை எடுக்கும்படி கடையிலிருந்த விற்பனையாளர் ஒருவரிடம் சொன்னாள்.
அவளுக்குப் பக்கத்தில் நிலவேந்தன், இப்படியும் அப்படியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை சட்டென்று ஒரு பக்கம் திரும்பி அப்படியே நின்றது. அவன் பார்த்த திக்கில் தற்செயலாகக் காவிரியும் பார்த்தாள்!
நடுத்தர வயதுள்ள பெண் ஒருத்தி நாகரிகமாக ஆடை அணிந்திருந்தாள். வடநாட்டுக்காரி போல் அவள் இருந்தாள். வயதானாலும் மேக்கப்பினால் அழகாக இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தாள் அவள். அந்தப் பெண் ஒரு பெரிய வளையலை எடுத்துத் தன் கைப்பைக்குள் திருட்டுத்தனமாகப் போட்டாள்!
கைப்பையுடன் வரும் சில பெண்கள், நகைக்கடைகளிலும் துணிக்கடைகளிலும் திருட்டுத்தனமாக இப்படி எதையாவது தங்கள் கைப்பைக்குள் போட்டுக்கொண்டு போய்விடுவதைப் பற்றி அடிக்கடி காவிரியும் நிலவேந்தனும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இன்று நேரிலேயே அவர்கள் அதைப் பார்த்து விட்டார்கள்!
காவிரி! நான் பார்த்ததை நீயும்.
ஆமாம். பார்த்தேன்
என்றாள் காவிரி!
பிறகு, ‘பேசாமல் இருங்கள், நமக்கு என்ன வந்தது? அந்தப் பெண் பார்ப்பதற்குக் கண்ணியமாக இருக்கிறாள்’ என்று சொல்ல எண்ணினாள்.
அதற்குள் நிலவேந்தன் கூச்சல் போட்டுவிட்டான்!
அதோ அந்த அம்மாளைப் பிடியுங்கள்! பிடியுங்கள்!
என்று கத்தினான் நிலவேந்தன்!
மறுகணம் எல்லாருடைய பார்வையும் அந்த அம்மாவின் பக்கம் திரும்பியது!
அச்சம் கொண்டவளைப்போல் அந்தப் பெண் எல்லாரையும் பார்த்தாள்!
கடைக்காரர்கள் அந்த அம்மாளைப் பார்த்து ஓடினார்கள்!
இல்லை! இல்லை!
என்று சொல்லிக்கொண்டே வெளியில் ஓடினாள் அவள்!
பிடியுங்கள்! நகையைத் திருடிக்கொண்டு ஓடுகிறாள்!
என்றான் நிலவேந்தன்!
மற்றவர்கள் அந்த அம்மாளைப் பிடிக்கப் பாய்ந்தபோது அவள் பிடிபடாமல் நடுத்தெருவில் ஓடினாள். விரைவாகக் கார்களும் பஸ்களும் வந்துகொண்டிருந்த நேரம். அவள் மீது பஸ் ஒன்று மோதிவிட்டு நின்றது!
பஸ்ஸில் அடிபட்டுத் தூக்கி எறியப்பட்ட அந்த அம்மாள் உயிர் பிரிந்துகொண்டிருந்தது!
காவிரி விரைந்து ஓடினாள். அடிபட்டுக்கிடந்த அந்த அம்மாவிள் பக்கம் சென்று பார்த்தாள்!
நான் திருடவில்லை! திருடவில்லை!
என்று முணுமுணுத்தாள் அவள்!
ஆனால் அவள் கையிலிருந்த கைப்பை திறந்து கொண்டிருந்தது. அதிலிருந்த வளையல், ‘திருடப்பட்ட நான் இதோ இருக்கிறேன்’ என்று சொல்லுவதைப்போல் தலையைக் காட்டியது.
அநியாயமாக அடிபட்டு உயிரை இழந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் காவிரிக்கு இரக்கம் ஏற்பட்டது. உடனே அவள் அந்த வளையலை மின்னல் விரைவில் எடுத்துத் தன் கைப்பைக்குள் போட்டுக் கொண்டாள்.
இதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட்டது!
ஆம்புலன்ஸுக்கு போன் செய்யுங்கள்
என்றது ஒரு குரல்.
போலீசுக்குத் தெரிவியுங்கள்
என்றது மற்றொரு குரல்.
பஸ்ஸிலிருந்து இறங்கிய டிரைவர், ஒரு பெண்ணை இப்படியா மற்றவர்கள் துரத்துவது? இவள் அப்படி என்ன தவறு செய்துவிட்டாள்?
என்றார்.
காவிரி விரைந்து ஓடினாள் எங்கேயோ!
3
காவிரி இரைக்க இரைக்க ஓடிக்கொண்டே இருந்தாள். மூச்சு வாங்கியது அவளுக்கு. இப்போது மெல்ல ஓடினாள். அவள் கால்கள் வலித்தன. உடம்பு வேர்த்தது. முகத்தில் அச்சமும் துன்பமும் படர்ந்திருந்தன.
‘நாம் எதற்காக இந்த நிலவேந்தனைக் கண்டோம்? நிலவேந்தனைக் காணவில்லை என்றால் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டிருக்காது. அந்த வடநாட்டுப் பெண், பஸ்ஸில் அடிபட்டு இறந்திருக்க மாட்டாள். எல்லாம் விதி’ என்று எண்ணியது அவள் மனம்.
அவள் போய்க்கொண்டேயிருந்தபோது யாரோ அவளைத் தொடர்ந்து வருவதைப்போல் இருந்தது.
திரும்பிப் பார்த்தாள்.
நிலவேந்தன் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான்.
காவிரி, நில்
என்றான்.
அவள் நிற்கவில்லை.
நிலவேந்தன் அவள் பக்கத்தில் வந்துவிட்டான்.
நிற்கமாட்டாயா?
அவள் பேசவில்லை.
நீ ஏன் ஓடுகிறாய்?
அப்போதும் அவள் பேசவில்லை.
நீ ஏன் ஓடுகிறாய் என்பது எனக்குத் தெரியும்
என்றான் நிலவேந்தன்.
காவிரி, அவன் முகத்தைப் பார்த்தாள்.
ஏன் சொல்லுங்கள்?
என்றாள் அவள்.
அந்த வளையலை நீ எடுத்துக்கொண்டு ஓடிவந்து விட்டாய்! இல்லையா?
என்றான் அவன்.
ஆமாம். நான் எதற்காக அதை எடுத்துவந்து விட்டேன் தெரியுமா?
சொல்.
இறந்துகொண்டிருக்கும் அந்தப் பெண், ‘நான் திருடவில்லை, திருடவில்லை’ என்று சொன்னாள். அவளுக்குத் திருட்டுப் பட்டம் கிடைக்காமல் இருக்கட்டும் என்றுதான் நான் வளையலைக் கொண்டு வந்துவிட்டேன்!
அது தவறு அல்லவா?
என்றான் நிலவேந்தன்.
இறந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்குத் திருட்டுப் பட்டம் கிடைக்காமல் செய்யவே நான் அப்படிச் செய்தேன். அப்போதாவது அவள் ஆன்மா அமைதி பெறும் இல்லையா?
என்றாள் காவிரி.
அப்படியானால் நான் செய்தது தவறு என்கிறாயா?
உங்களால்தான் அவள் இறந்தாள்! நீங்கள் பேசாமல் இருந்திருந்தால் அவளை எவரும் துரத்தப்போவதில்லை. அவளும் பஸ்ஸில் மோதி இறக்கப்போவதில்லை!
என்றாள் காவிரி!
அவள் வளையலைத் திருடுவதைப் பார்த்தேன். எப்படி என்னால் பேசாமல் இருக்க முடியும்?
அவள் வளையலைக் கைப்பைக்குள் இரகசியமாகப் போடுவதைப் பார்த்தீர்கள். அவள் உண்மையில் வளையலைத் திருடினாளா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது!
அவளைச் சேர்ந்த வளையலாக இருந்தால் அவள் அதை ஏன் இரகசியமாகத் தன் பைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும்?
அந்தப் பெண் உயிருடன் இருந்தால் கேட்கலாம்
என்றாள் காவிரி. பிறகு அவள்தான் இறந்துபோயிருப்பாளே!
என்று சொல்லிவிட்டு வாடகைக்கார் ஒன்றில் தாவினாள் அவள்!
நிலவேந்தன் செயலற்று நின்றான்!
வாடகைக்கார் விரைந்து சென்று அவன் பார்வையிலிருந்து மறைந்தது!
4
வாடகைக் கார் நுங்கம்பாக்கத்திலிருந்த பெண்கள் ஹாஸ்டலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. உள்ளே உட்கார்ந்திருந்த காவிரி, மெல்ல தன் கைப்பையைத் திறந்து பார்த்தாள்.
மிகப்பெரிய வளையல். தங்க வளையல். உருண்டையாக இருந்தது. வளையலின் மீது அழகிய சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கைப்பையை மூடினாள்.
ஹாஸ்டலுக்கு அவள் வந்ததும் அவள் எவரிடமும் பேசவில்லை. தன்னுடைய அறைக்குப் போய் உட்கார்ந்துவிட்டாள். வளையலைத் தன் அறையில் தலையணைக்குள் ஒளித்து வைத்தாள்.
நிலவேந்தனுடைய காரில் சென்ற காவிரி, திரும்பி வந்ததும் ஏன் இப்படி உம்மென்று இருக்கிறாள் என்று மற்றப் பெண்கள் வியப்புடன் பார்த்தார்கள். கேலியுடன் பின்னால் ஏதோ பேசிக் கொண்டார்கள்.
காவிரியின் மனத்தில் துன்பம் படர்ந்தது. அந்தப் பெண் உண்மையிலேயே இறந்துபோய்விட்டாளா இல்லையா என்பதை அறிந்துகொள்ள அவள் ஆசைப்பட்டாள்.
மாலையில் இந்த நிகழ்ச்சி நடந்ததால் மறுநாள்தான் பத்திரிகையில் இந்தச் செய்தி வரும். ஆகையால் மருத்துவ விடுதிக்குப்போய்ப் பார்க்க எண்ணினாள்.
மருத்துவ விடுதிக்குப் போனால் அவள் மீது எவராவது ஐயப்படுவார்களே என்று அவள் எண்ணினாள். நகைக்கடைக்குப் போனால் அவள் கண்டதைப் போலீஸாரிடம் சொல்லும்படி கடைக்காரர்கள் சொல்லுவார்கள். ஆகையால் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு மறுநாள் காலை வரையில் காத்திருந்தாள்.
மறுநாள். காலையில் பத்திரிகை வந்தது. விழுந்தடித்து ஓடிப்போய் அதை எடுத்து செய்திகளைப் பார்த்துக்கொண்டே வந்தாள்.
அது ஓர் ஆங்கிலப் பத்திரிகை. இப்படிப்பட்ட செய்திகளெல்லாம் எங்கேயாவது ஒரு மூலையில்தான் இருக்கும்.
அவள் விரைந்து தேடினாள்.
செய்தி வந்திருந்தது.
நடுத்தர வயதுள்ள வடநாட்டுப் பெண் ஒருத்தி நகைக்கடையில் திருடியதாக ஓர் இளைஞன் குற்றம் சாட்ட, கடைக்காரர்கள் அவளைப் பிடிக்கப் போனபோது விரைந்து வந்துகொண்டிருந்த பஸ்ஸில் அடிபட்டு இறந்துவிட்டதாகச் செய்தி இருந்தது. போலீசார் அந்தப் பெண்ணின் கைப்பையைச் சோதனை போட்டதில் அதில் நகை எதுவும் இல்லை என்றும் திருட்டுப் போகவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அப்படியானால்,
அந்த வளையல், திருடப்பட்ட வளையல் அல்ல!
நிலவேந்தன் செய்த தவறால் ஒரு பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விட்டது! இதைப் படித்ததும் நிலவேந்தன் என்ன நினைப்பான்?
இப்படி அவள் சிந்தனை செய்தபடி சன்னல்