Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aandhai Vizhigal
Aandhai Vizhigal
Aandhai Vizhigal
Ebook268 pages1 hour

Aandhai Vizhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலைப் பிரதேசமான டார்ஜிலிங் நகரத்தில் இசைக் கச்சேரிக்குச் செல்லும் பிரபல பின்னணி இசைப்பாடகர் தமிழ்ச்செல்வம் அங்கே மர்மமான முறையில் மரணம் அடைகிறார்.

மரணமடைந்த தமிழ்ச்செல்வத்தை உயிருடன் கண்டதாகக் கூறுகிறார். அப்பகுதியைச் சேர்ந்த எஸ்டேட் முதலாளி திரு. நல்லநாயம்.

டார்ஜிலிங் நகரத்தில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் செல்லும் சங்கர்லால் இவ்வழக்கினை எவ்வாறு கையாள்கிறார். இறந்து போனதாகக் கருதப்படும் தமிழ்ச்செல்வத்திற்கு என்ன நேர்ந்தது என்பவைகளை திகில் திருப்பங்களுடன் நகர்த்துகிறார் திரு தமிழ்வாணன்.

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136605878
Aandhai Vizhigal

Read more from Tamilvanan

Related to Aandhai Vizhigal

Related ebooks

Reviews for Aandhai Vizhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aandhai Vizhigal - Tamilvanan

    http://www.pustaka.co.in

    ஆந்தை விழிகள்

    Aandhai Vizhigal

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    1

    தேயிலைத் தோட்டங்களைச் சுற்றி அமைத்துக் கொண்டு, குளுகுளுவென்ற சுற்றுப்புறத்தில் மலைச்சரிவில் அழகுடன் அமைந்திருந்த டார்ஜிலிங் நகரத்தில், மிக விலை உயர்ந்த மிகப்பெரிய பங்களாவின்முன், டார்ஜிலிங்கைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவன் கையில் துப்பாக்கியைத் தூக்க முடியாமல் தூக்கிப் பிடித்தபடி காவல் காத்து நின்றான்.

    பங்களாவின் உள்ளே இருந்த காற்றோட்டமான ஓர் அறையில் சங்கர்லால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் மேசையின்மேல் போட்டுக் கொண்டு பருத்த புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார்.

    அடுத்த அறையில் இருந்து இந்திராவின் குரல் சற்றும் எதிர்பாராத விதமாக உரக்கக் கேட்டது.

    அத்தான்! ஓடி வாருங்கள்! விரைந்து வாருங்கள்!

    என்னவோ ஏதோ என்று சங்கர்லால் ஓடவில்லை. அவர் மெல்லப் புத்தகத்தைப் போட்டுவிட்டுப் பக்கத்துக்கு அறைக்குச் செல்லுவதற்குள் மீண்டும் இந்திரா, ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள் அத்தான்! என்று கத்தினாள்.

    பக்கத்து அறையில் ஒரு தொட்டிலில் சங்கர்லாலின் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. இந்திரா குனிந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது. மூன்று மாதம் நிரம்பிய அந்த ஆண் குழந்தை உலகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து உறங்கிக் கொண்டிருந்தது.

    எதற்காக இப்படிக் கத்தினாய், இந்திரா? என்றார் சங்கர்லால்.

    சற்றுமுன் வரக்கூடாதா? எத்தனை தடவை கூப்பிட்டேன். உங்கள் காதில் விழவில்லையா?

    விழுந்தது. இப்போது என்ன நடந்து விட்டது?

    கண்ணன் தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் தூக்கத்தில் சிரித்தபோது நீங்கள் பார்க்கவில்லையே! உங்களைப் போலவே அவன் சிரிக்கிறான்!

    என்னைப் போல் சிரிக்காமல், பின்னே உன்னைப் போலவா அவன் சிரிப்பான்? என்றார் சங்கர்லால்.

    இந்திரா, சங்கர்லாலைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தாள்.

    அதற்குள் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்த வயதான வேலைக்காரன் மாது, என்ன தம்பி இங்கே ஓசை? என்று கேட்டான்.

    ஒன்றுமில்லை, மாது இந்தக் கண்ணன் தூக்கத்தில் சிரித்தபோது நான் பார்க்கவில்லையாம்! இவன் பிறந்ததிலிருந்து ஓசை மிகுதியாக இருக்கிறது! என்றார் சங்கர்லால். பிறகு, தேநீர் கொண்டுவா என்றார்.

    மாது தேநீர் கொண்டு வந்தான்.

    சங்கர்லால், காலிக் கோப்பையை மாதுவிடம் கொடுத்துவிட்டு, பக்கத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் இன்று மாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் தமிழ்ச்செல்வம் மேடையில் தோன்றித் திரைப்படப் பாட்டுகள் பாடப் போகிறாராம். அதற்கு எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. மாலையில் போக வேண்டும். காரோட்டியிடம் சொல்லி வை என்றார்.

    ஆகட்டும், தம்பி! என்று சொன்னான் மாது.

    சங்கர்லால் இந்திராவைப் பார்த்து, நீயும் வருகிறாயா? என்றார்.

    இல்லை. கண்ணனைத் தூக்கிச் சென்றால், மாலையில் குளிர்ந்த காற்று அவனுக்கு ஆகாது. இங்கே விட்டு விட்டுச் சென்றால், விழித்துக் கொண்டதும் விடாமல் அழத் தொடங்கிவிடுவான். அதுவும் மாதுவைக் கண்டால் மிகுதியாக அழுவான்!

    ஆமாம் தம்பி, கண்ணனுக்கு ஏனோ என்னைக் கண்டால் பிடிக்கவில்லை! என்றான் மாது.

    சங்கர்லால் மெல்லச் சிரித்தார். மாதுவைப் பிடிக்காதவனும் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறானே என்ற எண்ணத்தினால் அது எழுந்தது!

    பிள்ளைகளுக்குத் தோற்றந்தான் தெரியுமே தவிர, மனம் தெரியாது. வளர்ந்தால் தான் அவர்களுக்குத் தோற்றம் வேறு, மனம் வேறு என்பது புரியும். கண்ணனுக்கு மாதுவின் மனம் எப்படிப்பட்டது என்று தெரிந்து விட்டால், பிறகு அவனை அவன் விடவே மாட்டான்!

    *****

    2

    மாலையில் ஒளி குறைந்து கொண்டிருந்தது. கதிரவன் மலைகளுக்கு அப்பால் எங்கேயோ மறைந்து கொண்டிருக்கும் காட்சி, கண்களுக்கு இனிமையாக இருந்தது.

    சங்கர்லால், காரில் புறப்பட்டபோது, இந்திரா வெளியே வந்து வழியனுப்பினாள். மாது தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தான். கான்ஸ்டபிள் சல்யூட் அடித்து மரியாதையுடன் நின்றான்.

    அஸ்ஸாம் அரசாங்கத்தார் சங்கர்லாலின் காரை ஓட்ட அனுப்பிய காரோட்டி காரைச் செலுத்தினான். மலைப் பாதைகளிலும், காட்டு வழிகளிலும் கார் ஓட்டத் தெரிந்தவன் அவன். சங்கர்லால் எங்கே போகிறார் என்பதை மாது அவனிடம் ஏற்கெனவே விளக்கமாகச் சொல்லியிருந்ததால் அவன் எதுவும் பேசாமல் காரை ஓட்டினான்.

    மலைகளைக் கடந்து, காட்டு வழியில் சென்றது கார். இறுதியில் கார் தமிழ்ச்செல்வம் வந்து தங்கியிருந்த எஸ்டேட்டை அடைந்தது. அங்கே

    மக்கள், கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்தார்கள். ஆனால், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

    அஸ்ஸாம் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்து வந்து அங்கேயே குடியேறி எஸ்டேட்டில் வேலை பார்த்துப் பிழைத்து வந்த தொழிலாளர்களும் முகங்களைத் துன்பத்துடன் வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

    சங்கர்லால், காரை ஒரு பக்கமாக நிறுத்தும்படி சொல்லிவிட்டு, மெல்லக் கீழே இறங்கிப் பக்கத்திலே இருந்த ஒருவனிடம், என்ன நடந்தது? என்று கேட்டார்.

    தமிழ்ச்செல்வம் சற்றும் எதிர்பாராத வகையில் இறந்துவிட்டார்! என்றான் அந்த மனிதன்!

    பதில் கூறியவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன்.

    என்ன! உண்மையாகவா?

    ஆமாம், நீங்கள் அன்புமிகக் கொண்டு அந்த வீட்டிற்குள் போய்ப் பாருங்கள். இனி அவருடைய இனிய குரலை ரேடியோவிலும் கிராமபோனிலும் கேட்கலாமே தவிர நேரில் கேட்க முடியாது!

    எப்படி இறந்தார்?

    ஏதோ இருதயக் கோளாறு. உடலுக்கு ஒன்றுமே இல்லை. ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை நன்றாகவே இருந்தார்.

    இருதயக் கோளாறால் மனிதன் இறப்பது என்பது புதிதல்ல. திரை உலகமும் இசை உலகமும் ஒரு சிறந்த பின்னணிப் பாடகரை இழந்து விட்டதே என எண்ணி சங்கர்லால் காரோட்டியை அழைத்து, ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து ஒரு மலர் மாலை வாங்கி வரும்படி சொன்னார். அவன் ஓடிப் போய்ச் சிறிது நேரத்தில் ஒரு மலர் மாலை வாங்கி வந்தான்.

    சங்கர்லால், மலர் மாலையுடன் தமிழ்ச்செல்வம் கிடந்த வீட்டிற்குச் சென்று, அவருடைய உடலின்மீது மாலையைப் போட்டு விட்டு வெளியே வந்தார். அவர் திரும்பி வெளியே வரும்போது தமிழ்ச்செல்வத்தின் முகத்தைப் பார்த்தார். அவர் தூங்குவதைப் போலிருந்தது. மீண்டும் எழுந்திருக்க முடியாத இறுதித் தூக்கம்!

    சங்கர்லால் வெளியே வரும்போது, காட்டிலேயே வாழும் மந்திரவாதி ஒருவன் உள்ளே நுழைந்தான். எல்லாரும் அவனுக்கு ஒதுங்கி வழிவிட்டார்கள்.

    சங்கர்லால் திரும்பிச் சென்று எட்டிப் பார்த்தார். மந்திரவாதியின் கையில் கைப்பிடி கொண்ட உருண்டையான மரக்கட்டை ஒன்று இருந்தது. அந்த மரக்கட்டையில் மணிகள் பல கோக்கப்பட்டிருந்தன. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அது ஒரு மகுடியைப் போல் இருந்தது!

    அந்த மந்திரவாதி, தமிழ்ச்செல்வத்தின் உடலின்மீது அந்தக் கட்டையால் வருடி, ஏதோ மந்திரத்தைச் சொன்னான். பிறகு, கண்களை மூடிக் கொண்டு வானத்தைப் பார்ப்பதைப் போல் சிறிது நேரம் நின்றுவிட்டுப் பிறகு போய்விட்டான்.

    பக்கத்தில் நின்ற ஒரு மனிதனிடம் சங்கர்லால் கேட்டார்: அவன் என்ன செய்தான்?

    'இறந்த மனிதர்களைக் கண்டால் இந்த காட்டில் உள்ளவர்களுக்கு மிகுந்த அச்சம். பிணம் இருக்குமிடத்தில் அதன் ஆவி இருக்கும் என்றும், அதுதான் பேய் என்றும் நம்புகிறார்கள். தமிழ்ச்செல்வத்தின் ஆவி வராமல் இருப்பதற்கு அந்த மந்திரவாதி மந்திரம் போட்டார்."

    அப்படியா? அடுத்தபடியாக என்ன?

    இந்த ஊரின் வழக்கப்படி தமிழ்ச்செல்வத்தின் பிணத்தை ஒரு மரப்பெட்டியில் வைத்துச் சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லுவார்கள். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் பிணம் புறப்பட்டுவிடும்.

    சங்கர்லால் வெளியே நின்றபடி பார்த்தார். தமிழ்ச் செல்வத்தின் பிணப்பெட்டியைச் சிலர் சுமந்து கொண்டு புறப்பட்டார்கள். பிணப்பெட்டியின் முன்னால், தீவட்டிகளுடன் பல எஸ்டேட் தொழிலாளர்கள் புறப்பட்டார்கள்.

    சங்கர்லால், மலைச்சரிவு ஒன்றில் நின்றபடி பார்த்தார். காட்டில் சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருந்த ஊர்வலம் ஒரே நேராகப் போகாமல், இப்படியும் அப்படியும் வளைந்து நெளிந்து வளைந்து நெளிந்து போய்க்கொண்டிருந்தது.

    சங்கர்லால், காரோட்டியைப் பார்த்து, நேரான பாதை இருக்கும் போது, அவர்கள் ஏன் இப்படியும் அப்படியும் வளைந்து போகிறார்கள்? என்றார்.

    சங்கர்லாலுக்கு ஏன் என்று தெரியும். எங்கேயோ ஒரு புத்தகத்தில் இதைப் பற்றி அவர் படித்திருக்கிறார். ஆனாலும் கேட்டார்.

    காரோட்டி சொன்னான்: இந்தப் பக்கங்களில் இப்படித்தான் வழக்கம். பிணத்துடன் அதன் ஆவியும் செல்லுகிறது. அந்த ஆவி மீண்டும் இதே இடத்திற்கு வழி தெரிந்து வந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் இப்படி அதற்கு வழி தெரியாதபடி செய்துகொண்டு போகிறார்கள்!

    *****

    3

    சங்கர்லால் பங்களாவை அடைந்ததும், தமிழ்ச்செல்வம் இறந்துவிட்டார் என்று அவர் சொன்ன செய்தி இந்திராவுக்கும் மாதுவுக்கும், அடிக்கடி இரவு சினிமாக் காட்சிக்குப் போய்க்கொண்டிருந்த மலையாளச் சமையல்காரனுக்கும் அச்சத்தைத் தந்து கொண்டிருந்தது!

    சங்கர்லாலும் இந்திராவும் உட்கார்ந்து நீண்ட நேரம் தமிழ்ச்செல்வத்தைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சங்கர்லால், தமிழ்ச்செல்வத்தை அடக்கம் செய்ய அந்த ஊர்க்காரர்கள் பிணத்தை எப்படி எடுத்துச் சென்றார்கள் என்பதைச் சொன்னபோது, இந்திரா சிரிக்கவில்லை.

    ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு வழக்கம். இதைப் பற்றி நமக்கு என்ன! என்றாள்.

    மாது சங்கர்லாலுக்கும் இந்திராவுக்கும் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, தம்பி, தமிழ்ச்செல்வம் பாடிய சில தத்துவப் பாடல்களை ரேடியோ கிராமில் வைக்கட்டுமா? என்றார்.

    வை. மாது என்றார் சங்கர்லால்.

    மாது, ரேடியோகிராமில் தமிழ்ச்செல்வம் பாடியிருந்த சில துன்பமான இசைத்தட்டுகளைப் பொறுக்கி எடுத்துப் போட்டான்.

    தமிழ்ச்செல்வத்தின் குரல் மிக இனிமையாகவும் உள்ளத்தை உருக்கும் வகையிலும் இருந்தது. எல்லாரும் சாப்பாட்டையும் மறந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த போது

    வெளியே எவரோ வந்து மணியடிக்கும் ஓசை கேட்டது.

    கான்ஸ்டபிள் ஏதோ கத்திக் கொண்டிருந்தான்!

    யாரது? என்று ஐயத்துடன் கேட்டாள் இந்திரா.

    தமிழ்ச்செல்வத்தின் ஆவிதான் வந்து விட்டதோ என்னவோ! என்றார் சங்கர்லால்.

    அதற்குள் மாது வெளியே ஓடினான்.

    சிறிது நேரத்திற்கெல்லாம் மாது திரும்பி வந்தான்.தம்பி, நீ இப்போது போய்விட்டு வந்தாயே, அந்த எஸ்டேட்டின் முதலாளி வந்திருக்கிறார்.

    இதோ வந்துவிட்டேன் என்றார் சங்கர்லால்.

    பிறகு, அவர் தேநீரைப் பருகிவிட்டு, மெல்ல எழுந்து கீழே இறங்கிச் சென்றார்.

    கூடத்தில் உட்கார்ந்திருந்த எஸ்டேட் முதலாளி நல்ல நாயகம் எழுந்து நின்றார். அவர் முகத்தில் முத்து முத்தாக வேர்வை அரும்பியிருந்தது.

    நீங்கள் வந்துவிட்டுத் திரும்பி விட்டீர்களாம். பிறகு தான் தெரிந்தது. நான் தமிழ்ச்செல்வத்தின் பிணம் அடக்கத்துக்கு ஏற்பாடு செய்ய முன்பே போய்விட்டேன்!

    சங்கர்லால் ஒன்றும் பேசவில்லை.

    தமிழ்ச்செல்வம் எப்படி இறந்திருப்பார்? நம்பவே முடியவில்லை! என்னுடைய விருந்தினராக அவர் வந்திருந்தார். பங்களாவைவிட, அந்த ஓலை வீடு குளுகுளுவென்று இருப்பதாகச் சொல்லி, அவரே அங்கு தங்கியிருந்தார்.

    எதிர்பாராத முடிவு!

    ஆனால், தமிழ்ச்செல்வம் இருதயக் கோளாறினால் இறக்கவில்லை என்பது என் எண்ணம்.

    ஏன் நீங்கள் அப்படிச் சொல்லுகிறீர்கள்?சென்ற மாதந்தான் தமிழ்ச்செல்வம் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தார். அப்போது அவரைச் சோதித்த டாக்டர் இருதயம் மிக நன்றாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். உண்மையில் அவர் எப்படி இறந்தார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்! என்றார் நல்லநாயகம்.

    சங்கர்லால் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

    ஏன்? எவராவது தமிழ்ச்செல்வத்தைக் கொன்று விட்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.

    எனக்கு அப்படி ஓர் ஐயம் வந்துவிட்டது. அதனால்தான் உங்களிடம் நான் வந்தேன். தமிழ்ச்செல்வம் எப்படி இறந்திருப்பார் என்று நீங்கள் தவறாது கண்டுபிடிக்க வேண்டும் என்றார் எஸ்டேட் முதலாளி நல்லநாயகம்.

    சங்கர்லால் உடனே கேட்டார்: உங்கள் எஸ்டேட்டில் டாக்டர் எவரும் இல்லையா?

    இருக்கிறார்.

    அந்த டாக்டர் தமிழ்ச்செல்வத்தைப் பார்க்கவில்லையா?

    இறந்த பிறகுதான் பார்த்தார். இருதயக் கோளாறால் இறந்துவிட்டார் என்று அவர் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். இதனால்தான் தமிழ்ச்செல்வத்தின் உடலைப் பிணச் சோதனைக்கு அனுப்பவில்லை. அப்படியே கொண்டு போய்ப் புதைத்து விட்டோம்.

    டாக்டர், எம்.பி.பி.எஸ். படித்தவர்தானே?

    ஆமாம், ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து நான் எஸ்டேட்டில் வேலைக்கு வைத்திருக்கிறேன்.

    அப்படியானால் அவர் சொல்லுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?

    அதனால்தான் அவர் சொல்லுவதை நான் ஏற்றுக் கொண்டேன். என்றாலும், என் மனத்திற்குள் ஏதோ தமிழ்ச்செல்வம் இயற்கையாக இறக்கவில்லை என்று உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் உங்களிடம் வந்தேன். நீங்கள் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு துப்பறிந்து என்ன முடிவு சொல்லுகிறீர்களோ, அதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆகையால், நீங்கள் இதை வழக்காக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

    சங்கர்லால் எஸ்டேட் முதலாளியைப் பார்த்தார். அவரைப் பார்க்கச் சங்கர்லாலுக்கு இரக்கமாக இருந்தது. அவர் கெஞ்சிக் கேட்டதைப் பார்த்ததும், ‘இந்த ஓர் உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னால் என்ன?' என்று சங்கர்லாலுக்குத் தோன்றியது. ஆகையால், அவர் தமிழ்ச்செல்வத்தின் வழக்கை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்.

    நல்லநாயகம் புறப்படுமுன் சொன்னார்: செலவைப் பற்றித் துன்பம் கொள்ளாதீர்கள். எவ்வளவு பணம் ஆனாலும் குற்றமில்லை. உங்களுக்கு எது, எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்.

    "எனக்கு எல்லா வசதிகளையும் அரசினர் செய்து கொடுத்திருக்கிறார்கள். எனவே, உங்களிடம் எனக்கு ஒன்றும் இப்போது தேவைப்படாது. நீங்கள் அமைதியுடன் வீடு செல்லுங்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1