Irul
By Tamilvanan
()
About this ebook
டாக்டர் தூயமணியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாழ்வரசியின் தத்துப்பிள்ளைகளான நல்லொளி மற்றும் செல்லத்தம்பி இவர்களே நம் கதையின் கதாநாயகி மற்றும் வில்லன்.
செல்லத்தம்பி கெட்ட சகவாசத்தினால் சீரழிந்து போகிறான். அதை நம்ப மறுக்கிறாள் தாய். தாய்க்கு புரிய வைக்க முயற்சிக்கிறாள் மகள்.
இவர்களுக்கு இடையில் வரும் சின்னையா நல்லொளியின் குடும்பத்திற்கு எவ்வாறு அறிமுகம் ஆகிறான். அவன் யார்? அவன் அக்குடும்பத்திற்கு செய்வது நன்மையா? இல்லை தீமையா? என்பதை ஆசிரியர் சுவராசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கூறுகிறார்.
Read more from Tamilvanan
Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Maraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Irunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsKaidhi Number 811 Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsKaalgal Therinthana Rating: 5 out of 5 stars5/5Cabaret Girl Rating: 5 out of 5 stars5/5Marma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsBayangara Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsMaruthamalai Saaralile Rating: 0 out of 5 stars0 ratingsKarunaagam Rating: 0 out of 5 stars0 ratingsManimozhi Nee Ennai Maranthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratingsInbavalli Ithuva Un Mudivu? Rating: 0 out of 5 stars0 ratingsNarpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Irul
Related ebooks
Neeyum Oru Indian Rating: 5 out of 5 stars5/5Neruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Imaikatha Iravu Rating: 5 out of 5 stars5/5Sathuranga Rani Rating: 5 out of 5 stars5/5Puyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsEllorum Nallavare Rating: 0 out of 5 stars0 ratingsMutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Uyirth Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Varuven Rating: 5 out of 5 stars5/5Nandhini 440 Voltz Rating: 0 out of 5 stars0 ratingsVer Kooda Poo Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsEngayum Eppothum Rating: 0 out of 5 stars0 ratingsVaranum Maruththaal Maranam Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Sei! Seiyaathe! Rating: 2 out of 5 stars2/5Narpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 2 out of 5 stars2/5Thavira Uyirum Vendum Rating: 5 out of 5 stars5/5Nadamadum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Avan Aval Theevu Rating: 5 out of 5 stars5/5Aimbathu Latcham Dosai! Rating: 0 out of 5 stars0 ratingsIppadai Vellum Rating: 0 out of 5 stars0 ratingsAntharangamana Abathu Rating: 5 out of 5 stars5/5Penney Anitha Rating: 2 out of 5 stars2/5Dhivya Roja Thottam Rating: 0 out of 5 stars0 ratingsVinaiya Oru Vidukathai Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Miss India Missing Rating: 5 out of 5 stars5/5
Reviews for Irul
0 ratings0 reviews
Book preview
Irul - Tamilvanan
http://www.pustaka.co.in
இருள்
Irul
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பெற்றால்தான் பிள்ளையா?
2. வாழ்வரசியின் ஏக்கம்
3. இவ்வளவு பணம் எப்படி வந்தது?
4. புதிய முகம்
5. டாக்டரின் பணம்!
6. ஆசைக்கு அணை ஏது?
7. காவிரியைக் கண்டாள்!
8. இன்னொரு தாக்குதல்
9. குற்றவாளி திரும்பிவருவானா?
10. எப்படித் தப்புவது?
11. காவிரி வந்தாள்
12. செல்லத்தம்பி சீறினான்!
13. எதிர்பாராத ஏமாற்றம்?
14. காவிரி கண்டுகொண்டாள்
15. களவுபோன கரன்ஸி நோட்டுகள்!
16. சின்னையாவைக் காணக் கண்கள் துடித்தன!
17. புலியைக் கண்டாள்
18. காவிரி காத்திருந்தாள்
19. சின்னையா எங்கே?
20. அன்னையின் ஆணை!
21. வெளிச்சம் பரவியது
22. அமைதியை இழந்தாள்
23. எதிர்பாராத திருப்பம்
24. அஞ்சலில் அனுப்பினாள்
25. இன்ஸ்பெக்டர் நம்பவில்லை!
26. எங்கே? எப்பொழுது?
27. நட்சத்திரங்கள் மின்னின
28. வாழ்வரசி விழிப்படைந்தாள்!
29. வாடிய செடி வளர முடியுமா?
1. பெற்றால்தான் பிள்ளையா?
டாக்டர் தூயமணி தமது மருத்துவ விடுதியில் படுத்துக்கிடந்த நோயாளிகளைச் சுற்றிப்பார்த்து விட்டுத் தமது அறைக்குள் நுழைந்தபோது, நல்லொளி உள்ளே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். அவள் டாக்டரைக் கண்டதும் பணிவுடன் எழுந்து நின்று சற்று மெல்லச் சிரித்தாள்.
டாக்டர் தூயமணி அவளைக் கண்டதும் அப்படியே நின்றார். அவளையே சிறிது நேரம் உற்றுப்பார்த்தார் நல்லொளி இப்போது மிக அழகாக வளர்ந்து விட்டிருந்தாள். நல்லொளி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவள் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, அவள் இவ்வளவு அழகாக வளருவாள் என்று டாக்டர் எதிர்பார்க்கவே இல்லை!
நல்லொளி! உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்!
என்றார் டாக்டர் தூயமணி.
என்னை வரும்படி அழைத்திருந்தீர்களா, டாக்டர்?
ஆமாம், உன் அன்னை வாழ்வரசிக்கு உடல் குணமாகி விட்டது, அவளை நீ அழைத்துச் செல்லலாம்.
நன்றி, டாக்டர்!
உன்னுடைய அன்னையின் உடல் குணமாகிவிட்ட போதிலும், சற்று வயதாகிவிட்டதால், காற்றோட்டமுள்ள ஓர் இடத்தில், வெளியூரில் சில நாள்கள் இருப்பது நல்லது. உன்னுடைய அன்னையை வெளியூருக்கு அழைத்துச்செல்ல முடியுமா என்று கேட்கவே உன்னை நான் வரவழைத்தேன்.
நல்லொளி டாக்டரின் முகத்தைப் பார்த்தாள். ஐம்பது வயதாகிவிட்ட போதிலும், அவர் உற்சாகத்துடனும் தம்முடன் தொடர்பு கொள்ளுபவர்களிடம் பரிவுடனும் பேசுவது அவளுக்கு மிகப் பிடித்திருந்தது. வெளியூருக்கு அவள் அன்னையை அழைத்துச் செல்லுவதென்றால், போதிய பணம் வேண்டுமே? வாழ்வரசி தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் தன்னுடைய இரு கண்களைப்போன்ற நல்லொளியின் படிப்புக்கும், செல்லத்தம்பியின் வாழ்வுக்குமாகவே செலவழித்துவிட்டாள். இப்போது அவளுக்கு அந்த இருவரைத் தவிர, வேறு எவரும் துணையிலர். அதைப்பற்றிய சிந்தனையுடன் அவள் நின்றபோது, டாக்டர் தூயமணி கேட்டார்: என்ன நீ, சிந்தனையுள் ஆழ்ந்துவிட்டாய்?
ஒன்றுமில்லை டாக்டர்! பெற்ற அன்னைகூட எங்களிடம் இவ்வளவு அன்புடனும் பரிவுடனும் இருப்பாளா என்பது ஐயந்தான்! ஆகையால், நான் எதையும் செய்ய முன்னேற்பாட்டுடன் இருக்கிறேன்
என்றாள் நல்லொளி.
வாழ்வரசி உனக்காக் காத்திருக்கிறாள். அவள் அறைக்குச் சென்று அவளை அழைத்துச்செல்
என்றார் டாக்டர். பிறகு, ஒரு நிமிடம்
என்றார்.
நல்லொளி டாக்டரை உற்றுப்பார்த்தாள்.
நீ படித்துப் பட்டம் பெற்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன், மிக்க மகிழ்ச்சி. ஆனால் செல்லத்தம்பி எப்படி இருக்கிறான்? இந்தப் பக்கம் அவன் வருவதையே காணோமே
என்றார் டாக்டர்.
செல்லத்தம்பி படிப்பில் கவனம் செலுத்துவதே இல்லை. இந்த ஒரு குறையைத் தவிர, வேறு ஒன்றும் சொல்லுவதற்கில்லை, எப்போதும் சற்று விளையாட்டுப்போக்கிலேயே இருக்கிறான். பொறுப்பு ஏற்பட்டால் சரியாகிவிடுவான்
என்றாள் நல்லொளி.
இப்போது ஏற்படாத பொறுப்பு இனிமேலா ஏற்படப் போகிறது? எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை! நினைத்துப் பார்த்தாலே மிக வேடிக்கையாக இருக்கிறது
என்றார் டாக்டர் தூயமணி.
அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் நல்லொளி.
டாக்டர் சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டுச் சொன்னார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புகைவண்டி விபத்து நடந்தது. அந்தப் புகைவண்டி விபத்தில், வாழ்வரசியும் அவள் கணவரும் சென்று கொண்டிருந்தார்கள். புகைவண்டி விழுந்து நொறுங்கியதும், வாழ்வரசி பயணம் செய்துகொண்டிருந்த பெட்டியில், வாழ்வரசியும், இரண்டு குழந்தைகளையும் தவிர, மற்றவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள்! வாழ்வரசி தன் கணவனை இழந்துவிட்டாள்! அவளுக்குப் பிள்ளை குட்டியும் கிடையாது! ஆகையால், அந்த இரண்டு குழந்தைகளையும் தானே வளர்க்கத் தொடங்கினாள். அந்த இரண்டு பிள்ளைகள் தாம் நீயும் செல்லத்தம்பியும்!
என் அன்னை உண்மையில் யாரென்று எனக்குத் தெரியாது. செல்லத்தம்பிக்கும் தன் அன்னை யாரென்று தெரியாது. அநாதைகளாகக் கிடந்த எங்களை எடுத்து வளர்த்த வாழ்வரசிதான் எங்களுக்கு இப்போது அன்னை! எங்களுக்கு வாழ்வளித்த அன்னையை என்றும் நாங்கள் மறக்கமாட்டோம்
என்று சொல்லிவிட்டு நடந்தாள் நல்லொளி.
அவள் மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் டாக்டர் தூயமணி. அவர் மனம் எண்ணியது, நல்லொளி! நீ வடதுருவம் என்றால் செல்லத்தம்பி தென்துருவம். மருத்துவ விடுதியில் வாழ்வரசி சேர்ந்தபிறகு, ஒரு நாள்கூடச் செல்லத்தம்பி இங்கே வந்து அவளைப் பார்க்கவேயில்லை! ஆனால், நீதான் அவள் அருகிலேயே இருந்து ஆதரவுடனும் அன்புடனும் கவனித்துக்கொள்கிறாய்! இருந்தாலும் வாழ்வரசியின் மனம் செல்லத்தம்பியின் மீதே பதிந்திருக்கிறதே! ஏன், இந்தப் பெண்களுக்கு ஆண்பிள்ளையின் மீதே பற்று மிகுதி?
டாக்டர் தூயமணி நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். வாழ்வரசி குணமடைந்துவிட்டதில், மற்றவர்களைவிட அவர்தான் மிக மகிழ்ச்சி கொண்டிருந்தார்.
2. வாழ்வரசியின் ஏக்கம்
மருத்துவ விடுதியில், வாழ்வரசி இருந்த அறைக்குள் நுழைந்தாள் நல்லொளி. அவளைக் கண்டதும், வாழ்வரசி கட்டிலின்மீது நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவளுடைய பார்வை நல்லொளியைக் கடந்து சென்றது. அவள் கண்கள் எவரைத் தேடுகின்றன என்று நல்லொளி புரிந்துகொண்டாள். ஆனாலும் அவள் வாழ்வரசியின் கவனத்தைத் திருப்ப, அம்மா! இன்று டாக்டர் உங்களை வீட்டிற்கு அழைத்துப்போகும்படி சொல்லிவிட்டார்!
என்றாள்.
நான் வீட்டுக்குப் போகவேண்டுமென்று எத்தனையோ நாள்களாகத் துடிக்கிறேன். ஆனால், டாக்டர் இன்றுதான் அனுமதி கொடுத்தார். குடும்ப நண்பர்கள் என்றாலே இந்த டாக்டர்கள் எப்போதும் இரண்டு நாள்கள் மிகுதியாகவே சிகிச்சை கொடுப்பதுடன், மிகக் கசப்பான மருந்துகளையும் தருகிறார்கள்!
டாக்டர் மிக நல்லவர் அம்மா! உங்கள் உடல் நலத்தில் எங்களுக்கு இருக்கும் அக்கறையைவிட அவருக்குத்தான் மிகுந்த அக்கறை!
டாக்டரைப்பற்றி எனக்குத் தெரியாதா? இத்தனை நாள்களும் இங்கே இருந்து சிகிச்சை பெற்றதற்குப் பணம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது! என்னிடம் பணம் இல்லை என்பது அவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது!
உங்களிடம் பணமில்லை என்பது டாக்டருக்கு மட்டுமென்ன, ஊர் முழுவதுமே தெரியுமே! உங்களிடமிருந்த பணத்தையெல்லாம்தாம் நீங்கள் எனக்காகவும் செல்லத் தம்பிக்காகவும் செலவழித்துவிட்டீர்களே?
என்னுடைய கடமையை நான் செய்தேன்
என்று சொல்லிவிட்டு, செல்லத்தம்பி எங்கே?
என்று கேட்டாள் வாழ்வரசி.
நல்லொளி தயங்காமல் சொன்னாள். அவன் வீட்டில் இருக்கிறான். இப்போதுதான் நாம் வீட்டிற்குப் போகப் போகிறோமே!
நல்லொளி சொன்னது பொய். செல்லத்தம்பி பொதுவாக வீட்டிலேயே தங்குவதில்லை. ஆனாலும், வாழ்வரசியின் ஏமாற்றத்தைத் தவிர்க்க அவள் அப்படிப் பொய் சொன்னாள்.
செல்லத்தம்பியை அவன் என்று சொல்லாதே, நல்லொளி. அவர் என்று சொல்!
என்னுடைய வயதுதானே அவனுக்கு இருக்கும்? அவன் என்று அண்ணனையோ தம்பியையோ அழைப்பதால் தவறு என்ன?
அவன் உனக்கு அண்ணன் அல்லன், நீ அவனுக்குத் தங்கை அல்லள். நீங்கள் வெவ்வேறு வயிற்றில் பிறந்தவர்கள். உங்கள் இருவருக்கும் நான் மணம் செய்துவைக்கலாமென்று எண்ணி இருக்கிறேன்!
நான் சொல்லுவதைக் கேளுங்கள், அம்மா! நானும் செல்லத்தம்பியும் வெவ்வேறு வயிற்றில் பிறந்திருக்கலாம். எங்களை வளர்த்த நீங்கள் தாம் எங்களுக்கு அன்னை. நாங்கள் இருவரும் கூடப்பிறந்தவர்களைப்போல் வளர்ந்து விட்டோம்! ஆகையால், எங்கள் அன்பு கூடப்பிறந்தவர்களின் அன்பாகவே இருக்கட்டும். எங்களுக்கு மணம் செய்துவைக்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள்
என்றாள் நல்லொளி.
வாழ்வரசியின் மனக்கண் மிகத் திறந்தது.
அவள் தனது பருத்த உடலைத் தாங்கமுடியாமல் தாங்கிக்கொண்டு எழுந்து நின்றாள். பொறுத்துக்கொள் நல்லொளி! உனக்குப் பிடிக்காத எந்தச் செயலையும் நான் செய்யத் துணியமாட்டேன்
என்றாள் அவள். ஆனால் -
அவள் குரலிலும் பார்வையிலும் ஏமாற்றம் தெரிந்தது!
நல்லொளி வாழ்வரசியின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தாள். வாடகைக் கார் ஒன்றைப் பிடித்துக்கொண்டு இருவரும் புறப்பட்டார்கள். வாடகைக் கார் விரைந்து சென்றது. செல்லத்தம்பி தனது வரவை எதிர்பார்த்து வீட்டில் காத்திருக்கின்றான் என்று எண்ணிக்கொண்டு வாழ்வரசியின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது!
அவள் ஏக்கமெல்லாம் செல்லத்தம்பியின் மீதே பதிந்திருந்தது!
3. இவ்வளவு பணம் எப்படி வந்தது?
வாழ்வரசியின் வீட்டின் முன் வாடகைக்கார் நின்ற போது, வீட்டின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து செல்லத்தம்பி மடிப்புக் கலையாத உடையுடனும், அலைபாயும் கிராப்புத் தலையுடனும் சினிமா நட்சத்திரத்தைப்போல் நின்றான்.
நல்லொளிக்கு விழிப்பாக இருந்தது அவள் புறப்பட்ட போது, செல்லத்தம்பி வீட்டில் இல்லை. ஆனாலும் அவள் துணிந்து வாழ்வரசியிடம் பொய் சொல்லிவிட்டாள். இப்போது, செல்லத்தம்பி எப்படியோ வந்துவிட்டானே என்று மகிழ்ச்சி கொண்டது அவள் மனம்.
செல்லத்தம்பி! மருத்துவ விடுதிக்கு ஏன் நீ வரவே இல்லை?
என்றாள் வாழ்வரசி.
பொறுத்துக்கொள்ளுங்கள், அம்மா! என்னைக் கண்டதும் உங்களுக்கு உயிர்மீது ஆசை மிகுதியாகிவிடும். ஆசை மிகுதியானால், அச்சம் மிகுதியாகும். அச்சம் உள்ளவரையில் உடல் குணமாகாது! நான் உங்களை வந்து பார்க்காவிட்டாலும் எப்போதும் உங்களைப் பற்றியே தான் நல்லொளியிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்!
என்றான் செல்லத் தம்பி.
நீ பேச்சில் வல்லவன். எதற்கும் ஒரு விளக்கம் தருவாய். உள்ளே வா
என்று சொல்லி அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச்