Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Thodathey
Ennai Thodathey
Ennai Thodathey
Ebook118 pages46 minutes

Ennai Thodathey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் கதையின் நாயகி கிளிமொழியை அச்சாரமாகக்கொண்டு லாபகரமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு சர்க்கஸ் நிறுவனத்திற்கு போலீசிடமிருந்து தப்பி அடைக்கலம் தேடி ஓடிவருகிறான் தம்பி அன்பரசு. தன் தம்பியை காப்பாற்ற அன்பரசுவை தன் தோழி நீலாம்பிகையுடன் அனுப்பி வைக்கிறாள். எதிர்பாராத விபத்தினால் கால் முறிவு ஏற்பட்டு வாழ்க்கை சமநிலைக்காக தேனப்பனின் நிறுவனத்தில் டைப்ரைட்டிங் வேலை செய்கிறாள்.

தேனப்பனிற்கும் கிளிமொழிக்கும் காதல் மலர்ந்து திருமணத்தில் முடிகிறது. தேனப்பனின் நண்பன் நாகப்பன், அன்பரசுவை மேற்கோள்காட்டி தன் காம இச்சையை தீர்ப்பதற்காக கிளிமொழியை தனிமையில் வரவழைக்கிறான்.

அன்பரசு போலீசிற்கு பயந்து ஓடியதன் மர்மம் என்ன? நாகப்பனிற்கும் அன்பரசுவிற்கும் உள்ள தொடர்பு என்ன? தேனப்பனால் கிளிமொழியை காப்பாற்ற முடிந்ததா? மேலும் பல திருப்பங்களுடன் உங்கள் தமிழ்வாணனின் விறுவிறுப்பான எழுத்தில் என்னைத் தொடாதே…

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580136606415
Ennai Thodathey

Read more from Tamilvanan

Related to Ennai Thodathey

Related ebooks

Reviews for Ennai Thodathey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Thodathey - Tamilvanan

    http://www.pustaka.co.in

    என்னைத் தொடாதே

    Ennai Thodathey

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. என்னைத் தொடாதே

    2. வானமே விழுந்ததோ!

    3. உள்ளே போய் உடனே சொல்லு!

    4. இந்த வியப்பிலே ஒரு வியப்பு!

    5. நாகப்பாம்பே, நகர்ந்து நில்!

    6. கவலை கரைந்தது! கார் கிளம்பியது!

    7. என் அருமைத் தம்பி, எழுந்திரு!

    1. என்னைத் தொடாதே

    கதவை எவரோ படபடவென்று தட்டிய ஓசை கேட்டது. வழிந்து வந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே விழிகளைக் கதவுப் பக்கமாகத் திருப்பி, யார்? என்று எடுப்பான குரலில் கேட்டாள் கிளிமொழி.

    அவளுக்கு அப்பொழுதிருந்த அலுப்பில் ஆத்திரம் வந்தது. உடலை வளைத்து, உயிரை வெறுத்து, மூன்று மணி நேரம், தான் கற்றிருந்த வித்தைகளைச் செய்து காட்டிவிட்டுச் சர்க்கஸ் கூடாரத்திலிருந்து விடுதலை பெற்று வந்திருந்த நேரம் அது.

    அவள் தன் அறைக்குள் நுழைந்து சில விநாடிகள் கூட ஆகவில்லை கால்களைக் கௌவிக்கொண்டிருந்த வெள்ளைச் சப்பாத்துக்களை இன்னும் அவள் கழற்றவில்லை. செவிகளுக்குச் சற்று மேலே செருகப்பட்டிருந்த தலைமயிர் ஊசிகளை இன்னும் அவள் அகற்றவில்லை. வாயிற்கதவைத் தட்டுவது யார்? தொடர்ந்து படபடவென்று தட்டிக் கொண்டு இருப்பது -

    தட்டும் ஓசை தொடர்ந்து கேட்டது.

    எழுந்து சென்று கதவைத் திறந்த கிளிமொழிக்கு அங்கே -

    வெறுப்புக்கு வேலை இல்லாமற் போய்விட்டது! அங்கே நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்து, யார், தம்பியா? என்று அன்போடு கேட்டாள் அவள்.

    ஆமாம், நான்தான் அக்கா. நகர்ந்து வழிவிடு. நான் உள்ளே சென்று மறைவான இடத்தில் ஒளிந்து கொள்ளவேண்டும். இந்தக் கதவை இப்பொழுதே தாழ்ப்பாளிடு. என்னைப் போலீசார் விரட்டிக்கொண்டு வருகிறார்கள்! என்று படப்படப்போடும், பரபரப்போடும் வந்தவன் சொல்லிக்கொண்டே, கிளிமொழிக்கும் திறந்த கதவுக்கும் நடுவிலிருந்த சிறு இடைவெளியில் குனிந்து உள்ளே விரைந்தோடினான்.

    கிளிமொழி திகைத்து நின்றுவிட்டுப் பிறகு வாயிற்கதவைத் தாழ்ப்பாளிட்டாள். தன்னோடு திகைப்பையும் அழைத்துக்கொண்டு அவள் உள்ளே வருவதற்குள் -

    அவள் தம்பி அன்பரசு அங்கே கிடந்த பழைய கோணிப்பைக்குள் புகுந்து தன்னை நன்றாகச் சுருட்டிக் கொண்டான்.

    கிளிமொழி, அவன் அவசரத்தையும், அவதியையும் கண்டுவிட்டு அப்படியே நின்றாள்.

    அந்த நிலையில் அவளுக்கிருந்த வலுவின்மைகூட மறந்துபோயிற்று. 'தம்பியைப் போலீசார் விரட்டிக்கொண்டு வருகிறார்களா? ஏன்? அவன் அப்படி என்ன குற்றம் செய்தான்?' அவள் சிந்தனை -

    அப்பொழுது இரவு மணி ஒன்று இருக்கும். இரவின் அமைதி குலையச் சர்க்கஸ் கூடாரத்தைச் சுற்றியிருந்த வனவிலங்குகள் உறுமிக்கொண்டிருந்தன. அந்த உறுமலுக்கும் எவரோ விடும் குறட்டைக்கும் நடுவே -

    போலீசாரின் ஊதலொலியும் கிளிமொழிக்கு நன்கு கேட்டது! அத்துடன் தடதடவென்று அவர்கள் ஓடிவரும் ஓசையும் கேட்டது!

    சில நிமிடங்களுக்குப் பிறகு, கதவு தட்டப்படும் ஓசை கேட்டபொழுது கிளிமொழி சற்றுகூடக் கலங்காமல் இருந்தாள். முப்பதடி உயரத்தில் ஊஞ்சலாடிவிட்டு, தரையில் அலட்சியமாகக் குதித்து எழுந்தோடிவரும் அவளுக்கு அச்சமென்பது இருக்க முடியுமா?

    கிளிமொழி எதிர்பார்த்தபடி அங்கே போலீசார் நின்றுகொண்டிருந்தார்கள். தன்னைச் சுற்றி நான்கு கான்ஸ்டபிள்களுடன் வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர், கிளிமொழியை நிமிர்ந்து பார்த்தார். கையிலிருந்த குறுந்தடியை மெல்ல உள்ளங்கையில் தட்டிக்கொண்டே, "இந்த நேரத்தில் தங்களுக்குத் தொல்லை தருவதற்காக வருந்துகிறோம். இந்தப் பக்கமாக ஒருவன் ஓடி வந்தானா? ஓடி வந்ததை நாங்கள் பார்த்தோம். துரத்திக்கொண்டே வந்தோம். அதற்குள் எங்கேயோ மாயமாக மறைந்துவிட்டான். ஒருவேளை உங்களுடைய அறைக்குள் புகுந்து கொண்டிருக்கிறானோ? என்று எனக்கு ஐயமேற்பட்டிருக்கிறது என்று சப்இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டுச் சிறு கண்ணோட்டம் செலுத்தினார்.

    கிளிமொழி சொன்னாள்:

    உங்களுடைய செய்தியும் கேள்வியும் எனக்கு வியப்பை அளிக்கின்றன. வீட்டுக் கதவைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு இருக்கும் என் வீட்டிற்குள் எப்படி ஒருவன் உள்ளே புகுந்திருக்க முடியும்? உங்களுடைய கடமை உணர்வும், எப்படியோ தப்பிவிட்டானே! என்ற உளக் கொதிப்பும் சேர்ந்து என்னை எப்படியெல்லாமோ கேட்கச் சொல்லுகின்றன. உங்களுக்கு எதற்கு ஐயம், உள்ளே வந்து நன்றாகத் தேடிப்பாருங்கள் என்று சொல்லிவிட்டுக் கொட்டாவி விட்டாள்.

    சப்-இன்ஸ்பெக்டர், மற்ற கான்ஸ்டபிள்களைப் பார்த்தார். மற்ற கான்ஸ்டபிள்கள் சப்இன்ஸ்பெக்டரைப் பார்த்தார்கள். அவர்களிடமிருந்த தயக்கத்தைக் கிளிமொழி பார்த்தாள். பிறகு ஏன் நிற்கிறீர்கள்? மின்சார விளக்குகளைப் போடட்டுமா? உள்ளே வருகிறீர்களா? என்று கேட்டாள்.

    சப்-இன்ஸ்பெக்டர், இந்த அறையில் உங்களைத் தவிர இன்னும் யார் யார் இருக்கிறார்கள்? நீங்கள் சர்க்கஸ் இரவுக் காட்சி முடிந்து எப்பொழுது இங்கே வந்தீர்கள்? என்று கிளிமொழியைக் கேட்டார்.

    நான் வந்து ஒரு மணி நேரமிருக்கும். இந்த அறையில் என்னைத் தவிர வேறொருவர் இருக்கிறார். அவரை எழுப்பட்டுமா? அவரிடம் ஏதாவது கேட்க வேண்டுமா? பாவம், என்னைவிட அவருக்கு மிகவும் அலுப்பு என்று கிளிமொழி சிரித்துக் குலுங்கிக்கொண்டே கூறிவிட்டு, சீசர்... சீசர் என்று இருமுறை கூப்பிட்டாள். அங்கே -

    உடலைச் சிலுப்பிக்கொண்டு இருமுன்னங்கால்களையும் நீட்டிச் சோம்பல் முறித்துக்கொண்டே இரும்புச் சங்கிலியினால் பிணைக்கப்பட்டிருந்த நாய் ஒன்று எழுந்து உறுமியபடி நின்றது!

    அதை அவர்கள் உற்றுப்பார்த்துவிட்டு, உதடுகள் அசையாமல் மௌனச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்கள். வந்தவர்களுள் வயதான ஒரு கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டரிடம், வாருங்கள் ஐயா!, திரும்பிப் போவோம். இந்த வீட்டிற்குள் அவன் புகுந்திருக்க முடியாது. புகுந்திருந்தால் இந்த நாய் குலைத்திருக்குமே! என்றான்.

    வயதான காரணத்தினால் மற்றவர்களுக்குச் சமமாக ஓட அவனால் இயலவில்லை. எனவே, திரும்பிவிட்டால் நலம் என்ற துடிப்பு அவனுக்கு ஏற்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர், விழிகளைச் சுழற்றி ஒரு நோட்டம் பார்த்துவிட்டு, நாங்கள் போகிறோம். உங்களுடைய குரலில் உள்ள உறுதியே எங்களுக்குப் போதும். எங்களுடைய கடமைக்காகத் தங்களுக்குத் தொல்லை தரும்படி நேர்ந்துவிட்டது என்று கிளிமொழியிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். அவருடைய பேச்சிலே அவருக்குக் கிடைத்த தோல்வியின் ஏக்கம் தெரிந்தது.

    போலீசார் மறைந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, வாயிற் கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்த கிளிமொழி சுற்றும் முற்றும் பார்த்தாள். தம்பி எங்கே பதுங்கியிருக்கிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை. போலீசாருடன் தான் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டுப் பின் பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு வெளியே தப்பி ஓடிவிட்டானோ? என்ற ஐயம் அவளுக்கு ஏற்பட்டது.

    எழுந்து மெல்ல நடந்து, பின்புறத்துக் கதவருகே சென்றாள். அதை உற்றுப்

    Enjoying the preview?
    Page 1 of 1