Tamilvananin Sirukathaigal
By Tamilvanan
()
About this ebook
வாய்மையே வெல்லும் என்பதற்கேற்ப, இச்சிறுகதையில் உண்மைக்கே நீதி கிடைக்கும் என்ற வகையில் நல்லவர்கள் தண்டிக்கப்படுவது போல இருந்தாலும் இறுதியில் ஜெயிப்பது தர்மமே என்பதை உணர்த்தும் சிறுகதையின் தொகுப்பே இந்நூல்.
Read more from Tamilvanan
Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMaraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Puyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Sankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsGenevavil Sankarlal Rating: 5 out of 5 stars5/5Simla Beauty Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Thupparikirar Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsUnna Koduthittan Uyirgalai! Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsMaruthamalai Saaralile Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAandhai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsYogasanam Kattru Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsIrul Rating: 0 out of 5 stars0 ratings
Related to Tamilvananin Sirukathaigal
Related ebooks
Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsMayanizhal Rating: 0 out of 5 stars0 ratingsVanthana Avan Vanthana? Rating: 0 out of 5 stars0 ratingsNadu Nisi Neram Rating: 0 out of 5 stars0 ratings‘Mar’kizhi Maatham Rating: 0 out of 5 stars0 ratingsValar Sirai Maatram Rating: 0 out of 5 stars0 ratingsSaavu Moondru Angulam Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPani Vizhum Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Manathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsPadi Alakkiran! Rating: 0 out of 5 stars0 ratingsAabathu August 10! Rating: 0 out of 5 stars0 ratingsPannaiyar Magal Rating: 0 out of 5 stars0 ratingsNee Vendum Ennarukil! Rating: 0 out of 5 stars0 ratingsNithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Kanavodu Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Express Rating: 0 out of 5 stars0 ratingsNaamirukkum Naadu Rating: 0 out of 5 stars0 ratingsThavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Chinnajchiru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ்சிறு கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Tamilvananin Sirukathaigal
0 ratings0 reviews
Book preview
Tamilvananin Sirukathaigal - Tamilvanan
https://www.pustaka.co.in
தமிழ்வாணனின் சிறுகதைகள்
Tamilvananin Sirukathaigal
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
https://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
நம்பத்தான் முடியவில்லை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
பேயின் குரல்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
மலைகுகை மர்மம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
விதி
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
சாந்தா தூங்கிக்கொண்டே இருந்தாள்
பொல்லாத நாய்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
நழுவல் விழுந்த உயில்
பேய் நகரம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
நம்பத்தான் முடியவில்லை
1
வானமும் பூமியும் நீல வண்ணமும் காட்டிக் கிடந்த அந்தக் குறுகலான மலைச்சரிவுப் பாதையிலே,
அழகிய சிறு கார் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது, காரின் மேல் மூடி கழற்றப்பட்டிருந்தது. முன் இடத்தில் உட்கார்ந்திருந்த இருவரில் ஒருவன் ஆண், ஒருத்தி பெண்.
ஆணுக்கும் இருபத்திரண்டு வயதிருக்கும். அழகு தேவையான அளவுக்கு அவனுக்கு இருந்தது, சுருள் சுருளான தலைமயிரும், தங்கத்தினாலான சங்கிலி பிணைத்த கைக்கடிகாரமும் எடுப்பான தோற்றமும் அவனது இளமைக்கு ஏற்றம் மிகத் தந்தன.
காரின் ஸ்டியரிங்கைக் கருத்தோடு பற்றிக் குறுகலான அந்த மலைப் பாதையில் காரை ஓட்டிக்கொண்டு இருந்தான் அவன்.
அவனது பெயர் செல்வன். செல்வனுக்கு அருகே சிறிது கலவரத்தோடு காணப்பட்டவளது பெயர் இன்மொழி.
அவளுக்கு வயது பதினேழு இருக்கும். நல்ல சிவப்பு அத்துடன் செழிப்பு. முகத்திலே முறையாத குறுகுறுப்பு. ஆனால் அவள் முகம் மட்டும், அந்த இயற்கை குலுங்கிக்கிடந்த வனப்பைக்கண்டு மலராமல் ஒருவித நடுக்கத்தினால் நிறைந்திருந்ததே ஏன்? அவளுக்கு,
என்ன குறை? குறுகிய பாதையில் கார் சர்ரென்று திரும்பும்போதெல்லாம் அவள் அவனுக்கருகில் ஒருவித அச்சத்தோடு நடுங்கி ஒடுங்கி, செல்வா, இவ்வளவு விரைவாக நீ காரை ஓட்டுவாய் என்று தெரிந்திருந்தால் உன்னோடு இந்தப் பக்கம் நான் வந்தே இருக்கமாட்டேன்! இது பெங்களூர்ச் சாலை என்பது உன்னுடைய நினைப்பா செல்வா?
என்று ஒருவிதக் குரல் நடுக்கத்தோடு கேட்டுக்கொண்டே வந்தாள்.
செல்வன் அதைப் பொருட்படுத்தாமல் அவளது பக்கம் திரும்பி இன்மொழி, ஏன் நீ இப்படி அஞ்சுகிறாய்? எனக்குத் தெரியாதா? இந்தக் கைகள் இன்று நேற்று காரை ஓட்டவில்லை. எட்டு ஆண்டுகளாக ஒரு விபத்துக்கூட இல்லாமல் காரை ஓட்டி இருக்கிறது! அதுவும் சென்னைப்பட்டினத்து நெருக்கடி நிறைந்த தெருக்களிலே!
என்றான்.
கார் ஓடிக்கொண்டிருந்தது. இருள் வந்துகொண்டிருந்தது. கையெழுத்து மெல்ல மறைந்துகொண்டிருந்தது. அத்துடன்,
மேகம் திரண்டு உருண்டு நின்றது. எந்த நிமிடமும் மழை கொட்டும் என்ற அறிகுறிகளுடன் வானத்துக் கொண்டலிலே கருமை கனத்துப் போயிருந்தது.
இன்மொழி ஒரு தடவை இருண்டு கிடந்த வானத்தையும், சுற்றிப் படர்ந்து நின்ற இருளையும் பார்த்துவிட்டு, எப்படியாவது அந்தச் சாலையைவிட்டு விரைந்து திரும்பி மாளிகையை அடைந்துவிட்டால் போதும் என்ற துடிப்பைப் பெற்றிருந்தாள். எனவே, செல்வன் காரை விரைவாக ஓட்டியதைக் கண்டுவிட்டுச் சற்று முன்னால் மொழிகளினாலும் விழிகளினாலும் தடை விதித்துவந்த அவள்,
சிறிது ஓய்ந்திருந்ததாள்! கார்,
ஓடிக்கொண்டிருந்தது!
2
செல்வன் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தான். செல்வர் வீட்டு வித்து. வஞ்சனையின்றிப் பஞ்சத்தில் அடிபடாமல் குறை என்பதே இல்லாமல் வளர்ந்தவன். படித்து டாக்டராகி, பொருள் தேடிக் குவிக்க வேண்டும் என்ற நிலை எதுவுமில்லை. அந்தக் குடும்பத்தில் எவனாவது ஒருவன் டாக்டராக வேண்டும் என்ற ஓர் ஆசை. அதற்காகச் செல்வனை அவனது பெற்றோர்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்க வைத்தார்கள். அவனுக்குப் படிப்பு ஒன்றைத் தவிர, மற்றவையெல்லாம் நன்றாக வந்தன.
இன்மொழி அவனது பெரியப்பாவின் மகள். அவளும் அதே மருத்துவக் கல்லூரியில்தான் பயின்று வந்தாள். ஆனால், அவளுக்கும் அவனுக்கும் ஒரு வேறுபாடு! அவளுக்கு,
படிப்பு வந்தது!
செல்வன் படித்துத் தேறி டாக்டர் என்ற பெயர்ப்பலகை மாட்டிக்கொள்கிறனோ என்னவோ? இன்மொழி எப்படியும் லேடி டாக்டராகிவிடுகிற நம்பிக்கை நிறைய ஏற்பட்டது.
இருவரும் ஒரு வார விடுமுறையில் குன்னூருக்கு வந்திருந்தனர். குன்னூரில் செல்வனுக்குச் சொந்தமான மாளிகை ஒன்று இருந்தது. அதைச் செல்வனின் தந்தை, உதக மண்டலத்தில் குதிரைப் பந்தயம் நடைபெறும் நாள்களில் மட்டும் பயன்படுத்துவார். மற்ற நாள்களில் மாளிகை பூட்டிக் கிடக்கும். அந்த மாளிகையில் வந்து இருவரும் தங்கி, குன்னூர்ப் பகுதியைச் சுற்றிப் பார்த்து விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியோடு கழித்து வந்தார்கள்.
செல்வனின் தந்தையின் ‘ஹில் மன் டூரர்’ ஒன்று அந்த மாளிகையில் இருந்தது. அதை ஓட்டிக்கொண்டுதான் செல்வனும் இன்மொழியும் குன்னூர்ப் பகுதியைச் சற்றுச் சுற்றினார்கள்.
இருவரும் குன்னூருக்கு வந்து ஆறு நாள்கள் போனதே தெரியவில்லை. பகலில் பாதி நாள் ஊரைக் காரில் சுற்றிப் பார்ப்பது, மற்றப் பாதி நாளில் மருத்துவத் தொடர்புள்ள புத்தகங்களைப் படிப்பது என்பது சென்னையில் அவர்கள் போட்டு வந்த திட்டம். அந்தப் புத்தகங்கள் தோல் பெட்டிக்குள் அடங்கி ஒடுங்கிச் ‘சமர்த்தாக’க் கிடந்தன!
எப்பொழுதாவது இன்மொழி தோல் பெட்டியைத் திறந்து படிக்க வேண்டிய புத்தகங்களைக் கையில் எடுத்தால், ஒரு விரலை வாய்க்கு நடுவே வைத்து உள் ஒலியை எழும்புவான் செல்வன். அடடா! வந்த இடத்திலே மகிழ்ச்சியோடு இயற்கையின் செழிப்பில் இதய ஈடுபாடு கொள்ளாமல் புத்தகப் புழுவாக இருக்கிறாயே இன்மொழி! சே! சே! இனி இந்தப் புழுவை எந்த ஊருக்கும் இனி அழைத்துப் போகமாட்டேன்!
என்று சொல்லுவான். அவள்,
தோல் பெட்டியை இழுத்து மூடி விடுவாள்! இப்படி ஓடின ஆறு நாள்கள். அன்று மாலை இன்மொழி, ஓடிக்கொண்டிருந்த காரில் செல்வனிடம் சொன்னாள்: செல்வா! நாளை சென்னைக்குப் புறப்பட வேண்டும். விடுமுறை தீர்ந்து விட்டது நினைவு இருக்கிறதா?
ஊம்
என்றான் செல்வன்.
கார், மாளிகையை அடைய இன்னும் ஐந்து கல் தொலைவு இருக்கும் அப்போது,
வானம் பொத்துக்கொண்டதோ என்று நினைக்கும்படி மழை கொட்டியது. கன்னத்தில் அறைவதுபோல் சுளீரென்று பெய்த பெரு மழையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.
மழையோடு இடியும் சேர்ந்தது. அதன் ஓசை கேட்டு அதிர்ச்சி அடைந்து செல்வத்தின் அருகில் அண்டிக் கொண்டாள் இன்மொழி. இடி மட்டுந்தானா?
பளிச்சென்று மின்னல் வெட்டியது. பேய்க் காற்றும் வீறிட்டு உறுமியது.
மழை, இடி, மின்னல், காற்று இவைகளுக்கு நடுவே அந்தச் சிறு காரில் நன்றாக நனைந்துவிட்ட அந்த இருவர்,
செல்வன் - இன்மொழி.
இன்மொழி, குளிரினால் நடுங்கியபடி மெல்லப் பேசினாள்: செல்வா தெரியாமல் இங்கே மாட்டிக் கொண்டோமே! இப்போது என்ன செய்கிறது இந்தக் கடுமையேறிய காற்றிலே கார் அதள பாதாளத்திலே உருண்டு
செல்வன் அவளது வாயைக் கையினால் பொத்தினான்: இன்மொழி நான் மழைக்கு முன்னாலேயே மாளிகையை அடைந்திருப்பேன், உன் பேச்சைக் கேட்டுத்தான் காரை மெல்ல ஓட்டும்படி ஆயிற்று.
இன்மொழி சற்றுப் பேசாமல் இருந்துவிட்டுக் காருக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள். அப்பொழுது,
ஒரு மரம் சடசடவென்று ஓசையோடு முறிந்து விழுந்தது. நல்ல வேளை, கார் போகிற பாதையில் விழுந்திருந்தால் கார் அந்த இடத்தை விட்டு ஓரடிகூட நகர முடியாமல் போயிருக்கும்.
மரம் சாய்ந்த ஓசையினால் இன்னும் சற்று அச்சம் மிகுதியாக, துவண்டு தன்னுடலை ஒரு தடவை உலுக்கிக்கொண்டாள்.
செல்வன் கண்ணாடிக் கதவை இழுத்து மூடிவிட்டுக் காரை மெல்லக் கருத்தோடு ஓட்டிச் சென்றான். இன் மொழி,
அச்சத்தினால் தன் பால் விழிகளை இழுத்து முடிக்கொண்டாள்.
3
சிறிது தொலைவு சென்றதும் பளிச்சிட்ட மின்னல், அங்கு இருட்டில் மூழ்கிக் கிடந்த மாளிகை ஒன்றை அவனுக்கு அடையாளம் காட்டியது.
அதற்கு முன்னால் சென்று காரை நிறுத்தினான் செல்வன். அந்த மாளிகையைக் கண்டதும் வழி தவறி வேறு எங்கேயோ