Tokyovil Tamilvanan
By Tamilvanan
()
About this ebook
டோக்கியோவில் உள்ள அழகிய கடற்கரையில் ஒரு கொலை நடைபெறுகிறது. அதனால் தமிழ்வாணன் டோக்கியோ வரவழைக்கப்படுகிறார். யார் அவரை அழைத்தது? இறந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்னும் பல மர்மங்கள் நிறைந்த முடிச்சை தமிழ்வாணன் தனக்கே உரித்தாகும் பாணியில் எப்படி அவிழ்க்கிறார் என்பதை கதைக்குள் சென்று படிப்போம்.
Read more from Tamilvanan
Maraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsKarunaagam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsKeekkee Rating: 0 out of 5 stars0 ratingsIrul Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Bayangara Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsKaidhi Number 811 Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratingsTokyo Roja Rating: 0 out of 5 stars0 ratingsYogasanam Kattru Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsS.S.66 Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Thupparikirar Rating: 0 out of 5 stars0 ratingsFrankfurtil Tamilvanan Rating: 1 out of 5 stars1/5Genevavil Sankarlal Rating: 5 out of 5 stars5/5
Related to Tokyovil Tamilvanan
Related ebooks
Kadaisi Thotta Rating: 5 out of 5 stars5/5California Kathali Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsParisil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanney, Yen Kanney? Rating: 5 out of 5 stars5/5Glucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsVadam Pidikka Vaanga Jappanukku Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த 3 விரல்கள்..! Rating: 0 out of 5 stars0 ratingsAntha 3 Viralgal Rating: 0 out of 5 stars0 ratingsNadu Nisi Neram Rating: 0 out of 5 stars0 ratingsAdimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Cabaret Girl Rating: 5 out of 5 stars5/5Police Vesham Rating: 0 out of 5 stars0 ratingsSirai! Rating: 0 out of 5 stars0 ratingsPanthayam Oru Viral Rating: 0 out of 5 stars0 ratingsVivek Srinivasan!!! Rating: 5 out of 5 stars5/5Nee Rating: 5 out of 5 stars5/5Engey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Oru Vaanam Pala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsTholainthu Ponavargal Rating: 4 out of 5 stars4/5Newyorkil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsIni Aval Urangattum Rating: 0 out of 5 stars0 ratingsKizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Aranmanai Kiliyum Hollywood Directorum!! Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsGenevavil Sankarlal Rating: 5 out of 5 stars5/5Konjam Vaa! Kolla Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Tokyovil Tamilvanan
0 ratings0 reviews
Book preview
Tokyovil Tamilvanan - Tamilvanan
http://www.pustaka.co.in
டோக்கியோவில் தமிழ்வாணன்
Tokyovil Tamilvanan
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
இருட்டு.
உலகத்திலேயே மிகப்பெரிய நகரம் டோக்கியோ. டோக்கியோவின் ஆற்றல் மிகுந்த விளக்குகள் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. இருந்தாலும் இருளை முழுக்க முழுக்க விரட்ட முடியுமா? முடியவில்லை. விளக்குகளின் ஒளி பாய முடியாத இடங்களிலெல்லாம் இருட்டு, பேயைப் போல் திட்டுத் திட்டாகக் காணப்பட்டது. சாலையின் திருப்பங்களில் இருட்டு. உயர்ந்த கட்டடங்களின் பின்னால் இருட்டு. கார்களின் நிழல்களால் இருட்டு. விளக்குக் கம்ப நிழல்களால் இருட்டு.
மனிதன் செயற்கை விளக்குகளால் இருள் முழுவதையும் போக்க நினைக்கிறான். முடியுமா? முடியவில்லை!
டோக்கியோ நகரின் கடற்கரையில், கடல் ஓரமாக ஒரு மனிதன் தன்னந்தனியனாக நடந்து போய்க் கொண்டிருந்தான். கடற்கரையில் நூற்றுக்கணக்கான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. என்றாலும், அங்கங்கே கடற்கரையிலே சில இடங்கள் இருட்டாகவே இருந்தன. காதலர்கள் இணை இணையாகச் சேர்ந்து உட்கார்ந்திருந்தார்கள். தாங்கள் விரும்பியபடியெல்லாம் நடந்து கொண்டார்கள். அதற்கு ஒரு சில இருட்டான இடங்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தன. டோக்கியோவில் திரிந்த ஒரு சில திருடர்களுக்கு அந்த இருட்டான இடங்கள் உதவியாக இருந்தன!
நேரம் சென்றது. சென்று கொண்டே இருந்தது.
கடற்கரையிலிருந்த எல்லாரும் போய்விட்டார்கள். அந்த ஒரே ஒரு மனிதனைத் தவிர, அவன் கடற்கரை ஓரத்திலே கடல் நீர், கரையில், வந்து மோதும் இடத்தில் நடந்து கொண்டிருந்தான். இருண்ட பகுதியில் நடந்தான். மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் ஒரு ஜப்பானியன். அவன் பெயர், டொமோடோ. கொஞ்சம் வயதானவன். நாற்பத்தைந்து வயது இருக்கும். அவன் முழுக்கைச் சட்டையும், கால்சட்டையும் அணிந்திருந்தான். சட்டையின் கைகளைக் கொஞ்சம் மடித்து விட்டுக் கொண்டிருந்தான். அவன் நடந்தபோது அவன் ஷூக்கள் தண்ணீரில் நனைந்தன. அவன் கிராப்பு காற்றில் அலைந்தது.
அவன், தன் இரண்டு கால்சட்டைப் பைகளிலும் கைகளை விட்டப்படி நடந்தான். அவன் கண்கள் கடற்கரையின் பக்கம் பார்த்தன. நடுஇரவு நேரமாகிவிட்டதால் கடற்கரையில் எவரும் இலர், அவனைத் தவிர!
அவன் கண்களுக்கு எவரும் தென்படவில்லை. அவன் மெல்ல நடந்து கொண்டிருந்தான். கடல் அலைகளின் ஓசை மிக மிகுதி ஆயிற்று. அவன் வீட்டிற்குத் திரும்ப விரும்பவில்லை. மெல்ல நடந்தான். நடந்து கொண்டிருந்தபோது எங்கேயோ தொலைவிலிருந்து மணியடிக்கும் ஓசை கேட்டது. ஒரே ஒரு தடவை கேட்டது.
மணி ஒன்று.
அவன் நின்றான். தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அவன் கடிகாரத்திலும் மணி ஒன்று. அவன் அப்படியே நின்றான். நின்றபடி கடலின் பக்கம் பார்த்தான்.
கடலில் அங்கங்கே கப்பல்கள் நின்று கொண்டிருந்தன. பெரும் கப்பல்கள். அந்தக் கப்பல்களிலெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. டோக்கியோவின் துறைமுகத்தை அடைய முடியாத பல கப்பல்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தன. துறைமுகத்தில் நிற்கும் கப்பல்கள் போனதும் தொலைவில் நிற்கும் மற்ற கப்பல்கள் வரவேண்டும். அதற்குள் மற்ற நாடுகளிலிருந்தும் வரும் வேறு பல கப்பல்கள் வந்து விடும். சாலைகளில் கார்களின் நெரிசல் மிகுதியாகி வருவதைப் போல், துறைமுகங்களிலும் கப்பல்களின் நெரிசல் மிகுதியாகி வந்தது!
டொமோடோ, கடலைப் பார்த்தான். பார்த்தபடி கொஞ்சம் நேரம் நின்றான். பிறகு தன் கால் சட்டைப் பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்தான். அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். வைத்துக் கொண்டு, தீப்பெட்டியைச் சட்டைப் பைகளில் தேடினான். தீப்பெட்டி இல்லை. தேடினான்.
அவன், தீப்பெட்டியைத் தேடிக் கொண்டிருந்தபோது அவன் பக்கத்திலிருந்து ஒரு கை நீண்டது. பக்கத்தில் வந்து நின்ற அந்த மனிதன், சிகரெட் லைட்டரைப் பற்ற வைத்தான். லைட்டர் எரிந்தது. அந்த லைட்டரில் டொமோடோ சிகரெட்டைப் பற்ற வைத்தான். டொமோடோ சிகரெட்டை ஊதினான். முகத்தைத் திருப்பவில்லை. தன் கண்களை மட்டும் ஒரு பக்கம் திருப்பினான். தனக்குச் சிகரெட்டை பற்றவைக்க லைட்டரை ஏற்றியவன் யார் என்று பார்த்தான்.
அவன் முகம் தெரியவில்லை. இருட்டில் நிழல் போல் அவன் உருவம் தெரிந்தது. முகம் தெரியவில்லை!
சிகரெட்டை இழுத்தபடி, நன்றி
என்று சொல்லிக் கொண்டே டொமோடோ திரும்பி அவனைப் பார்க்க நகர்ந்தபோது, சிகரெட் லைட்டர் அணைந்தது. அதே நேரத்தில் சிகரெட் லைட்டரை நீட்டிய அந்த மனிதன் மற்றொரு கையால் டொமோடோவை அவன் வயிற்றில் சுட்டான். சின்னஞ்சிறிய துப்பாக்கி. பெண்கள் தற்பாதுகாப்புக்காகத் தங்கள் கைப்பையில் கொண்டு செல்லும் சிறிய துப்பாக்கி. அழகிய துப்பாக்கி. மூன்று தடவைகள் அவன் சுட்டான். டொமோடோ வயிற்றிலே வைத்து மூன்று தடவைகள் சுட்டதால், மூன்று தடவைகள் பட்பட்பட்டென்று கொஞ்சம் மெல்ல ஓசை வந்தது. டொமோடோ விழுந்தான். அப்படியே முன்னால் சுருண்டு கடல் நீரின் ஓரத்தில் விழுந்தான். இறந்தான். அவன் பற்ற வைத்த சிகரெட் மணலில் கிடந்து புகைந்து கொண்டிருந்தது!
பொமோடோவைச் சுட்டவன், துப்பாக்கியைத் தன் கால் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். கீழே விழுந்து கிடந்தது டொமோடோவைப் பார்த்தான். இப்போது வீசிக் கொண்டிருக்கும் கடல் அலை, கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்ததால் அவன் பிணத்தைக் கடல் இழுத்துச் சென்றுவிடும். ஆனால் மீண்டும் விடிவதற்குள் அதே கடல் அலைகள் அவன் பிணத்தைக் கடற்கரையில் கொண்டு வந்து தள்ளிவிடும்.
இப்படி,
டொமோடோவைச் சுட்டவன் மனம் எண்ணியது. இதனால் அவன் சிந்தித்தான்.
அவன் சுட்டதையோ, டொமோடோ சுருண்டு விழுந்ததையோ கடற்கரையில் எவரும் பார்க்கவில்லை. அங்கே வேறு எவரும் இலர்.
அவன் நடந்தான். மெல்ல நடந்தான். கொஞ்சத் தொலைவு நடந்ததும் சாலையை அடைந்தான். அவனுடைய கார் அங்கே நின்று கொண்டிருந்தது. தன்னந்தனியாக அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. அவன் அந்தக் காருக்குள்ளே இருந்த நீண்ட மண்வெட்டியை எடுத்தான். காரின் கதவைச் சாத்தினான். சாத்திவிட்டு மீண்டும் கடற்கரைக்கு வந்தான்.
டொமோடோ இறந்து கிடந்த இடத்திற்கு வந்தான். வந்ததும் நின்றான். உடனே மணலில் பக்கத்தில் மண்வெட்டியால் ஒரு பள்ளம் தோண்டினான். ஒருசில நிமிடங்களில் ஆழமான ஒரு பள்ளத்தை வெட்டினான். உடனே டொமோடோ பிணத்தைப் பள்ளத்தில் தள்ளினான். தள்ளி மண்ணைப் போட்டான். போட்டு மூடினான். வேலை முடிந்தது.
திரும்பினான். திரும்பிச் சாலையை நோக்கி நடந்தான். அவன் காரை அடைந்தான். அடைந்ததும் மண் வெட்டியைக் காருக்குள்ளே போட்டான். காரில் ஏறினான். உட்கார்ந்தான். சிகரெட் ஒன்றை எடுத்தான். பற்ற வைத்தான். காரை விரைவாகச் செலுத்தினான். ஸாப்ரே கார் அது. காற்றாய்ப் பறந்தது அது!
டொமோடோ சுடப்பட்டு மண்ணுக்குள் மறைந்து கிடப்பது எவருக்கும் தெரியாது.
டோக்கியோவின் கடற்கரையில் பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். படுத்துக் கொண்டிருந்தார்கள். குளித்துக் கொண்டிருந்தார்கள். விளையாடிக் கொண்டிருந்தார்கள். பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள்.
கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜப்பானியக் குடும்பங்களில் ஒன்று, ஒரு பக்கமாக மணலில் உட்கார்ந்திருந்தது. கணவன், மனைவி, ஒரு மகன். கணவனும் மனைவியும் ஜப்பானிய மொழியில் பல பிரச்சனைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். மகனுக்குப் பத்து வயது. பெற்றோர்கள் பேசுவது அவனுக்குப் புரியவில்லை. புரியாத பொருள்கள். அவன் மணலில் விளையாட எண்ணினான். நான் ஒரு விளையாட்டு விளையாடப் போகிறேன்
என்றான்.
என்ன விளையாட்டு விளையாடப் போகிறாய்?
மணலில் கோட்டை கட்டி விளையாடும் விளையாட்டு.
விளையாடு
என்றார் தந்தை.
மணலிலேயே விளையாடிக் கொண்டிரு. தண்ணீரில் இறங்காதே
என்று கத்தினாள் தாய்.
ஆகட்டும்
என்றான் பையன்.
பையன் ஓடினான். ஓடிப்போய் மணலில் ஒரு பக்கமாக உட்கார்ந்தான். உட்கார்ந்து கொண்டு மணலைத் தோண்டினான். தோண்டத் தொடங்கினான். மணலை இரு கைகளாலும் வாரிப் போட்டு பக்கத்தில் மேடாகச் செய்து