Kadaisi Thotta
5/5
()
About this ebook
பிரபல தொழிலதிபர் ராஜகணபதி என்பவரின் ஒரே மகன் கொலை வழக்கில் மாட்டிக்கொண்டு சிறை செல்கிறான். இதில் ராஜகணபதி என்பவர் தன் மகனை காப்பாற்ற ஜீவரத்தினம் என்ற நீதிபதியை மிரட்டுகிறார். ஜீவரத்தினம் நீதி தவறாதவர், உண்மையாக இருப்பவர்.
ராஜகணபதியிடம் இருந்து, தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்றுவாரா? அல்லது ராஜகணபதியின் மகனை விடுதலையாக்குவாரா? ராஜகணபதி சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது மாட்டாரா என்பதை வாசிக்கலாம் பட்டுக்கோட்டையின் எழுத்துச்சாரலில்!
Read more from Pattukottai Prabakar
Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsThottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kadaisi Thotta
Related ebooks
Sithainthavan Varugai Rating: 5 out of 5 stars5/5Mannikkavum Veru Vazhi Illai Rating: 5 out of 5 stars5/5Thaa! Rating: 5 out of 5 stars5/5Nila Satchi Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Sei! Rating: 5 out of 5 stars5/5Ithu Bharath Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Vanjanai! Rating: 4 out of 5 stars4/5Un Kathai Muttrum Rating: 0 out of 5 stars0 ratingsBombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Droham Rating: 5 out of 5 stars5/5Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsApril Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsNaalaya Aagayam Rating: 5 out of 5 stars5/5Ithu Raathiri Neram Rating: 0 out of 5 stars0 ratingsBathilukku Bathil Rating: 5 out of 5 stars5/5En Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Aayutham! Rating: 3 out of 5 stars3/5Ilamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Ramyamanathu Rating: 5 out of 5 stars5/5Jarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Vendam! Ithu Vibareetham!! Rating: 5 out of 5 stars5/5Kuttram, Puthiya Kuttram! Rating: 0 out of 5 stars0 ratingsMaranathil Mannippom Rating: 0 out of 5 stars0 ratingsBharath, Bharath, Bharath Rating: 5 out of 5 stars5/5Savi1, Savi2, Savithri Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kadaisi Thotta
1 rating1 review
- Rating: 5 out of 5 stars5/5The story was good but again the ending could have been little more thought full possibilties are there Rajaganapathy can escape again it would have been better if he would have been survived to see the punishment given to Rajaganapathy
Book preview
Kadaisi Thotta - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
கடைசி தோட்டா
Kadaisi Thotta
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
நகரம் முழுவதும் பஞ்சமல்லாத இருட்டின் அரவணைப்பில் இருந்தது. அதை எதிர்த்து வெளிச்சப் புரட்சி செய்து கொண்டிருந்தன சில விளக்குகள். நிலா தன் முகத்தில் குத்து வாங்கி நசுங்கியிருக்க... அதைக் கேலி செய்து கை தட்டிக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள்.
கடலுக்கு அருகாமையில் இருந்தது அந்த வீடு. காற்றின் ஈரம் அதனை லேசாக நனைத்து வைத்திருந்தது. குழந்தையின் பசிக் குரலாய், அலைகளின் ஓயாத இரைச்சல் சன்னமாகப் பின்னணி அமைத்துக் கொண்டிருக்க, அதில் சில வண்டுகளின் குரல்கள் தொலைந்து போயிருந்தன.
வீட்டின் மாடியறையில் இரவு விளக்கு எரிய...
அவனும், அவளும் அணைத்துக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டுக்குப் பக்கத்தில் மற்றொரு வீடு. அது கிரவுண்ட் ஃப்ளோருடன் சமாதானமாகியிருக்க... அதன் மொட்டை மாடியில் காற்றுக்காகப் படுத்திருந்தவன் தூக்கம் வராமல் புரண்டான். பல வகையாய் படுத்துப் பார்த்து உறக்கம் வராமல் எழுந்து அமர்ந்தான். ஜமுக்காளத்தின் தலைமாட்டில் வைத்திருந்த ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்தான். கழற்றி வைத்திருந்த சட்டையின் பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, எழுந்து உலாத்தினான்.
பக்கத்து வீட்டின் அறையின் ஜன்னல் கதவுகள் திறந்திருக்க… மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் அணைத்துக் கொண்டு உறங்குவது யூகமாய்த் தெரிந்தது. ச்சீ! பார்க்காதே! தப்பு!
முன்புறம் நகர்ந்து, கைப்பிடிச் சுவரில் கைகளை ஊன்றிக்கொண்டு அனாதையான தெருவையும், டெலிபோன் கம்பத்திலிருந்து வீடுகளை நோக்கிச் செல்லும் கம்பிகளையும், இலை அசைக்காமல் நின்ற மரங்களையும், தூரத்தில் கறுப்பான அலை மினுக்கல்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
முடிந்த சிகரெட்டை வீசிவிட்டு, இப்போது படுத்து உறங்கிப் பார்க்கலாம் என்று அவன் தீர்மானித்த போது… தெருவின் முனையில் ஒரு ஃபியட் கார் உதயமானதைப் பார்த்தான். அது தெருவைக் கடந்து போனதும் படுக்கலாம் என்று நின்றான்.
காரின் எஞ்சின் தூரத்திலேயே அணைக்கப்பட்டு, ஹெட் லைட்ஸ் அணைக்கப்பட்டு ஓசையே இல்லாமல் பொம்மை கார் போல அது தவழ்ந்து வந்து பக்கத்து வீட்டு வாசலில் நின்றது இவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. உறங்குபவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாதென்பதற்காக என்ஜினை தூரத்திலேயே அணைத்திருக்கிறானே… என்ன ஒரு நாகரிகம்!
காரிலிருந்து அவன் இறங்கினான்.
மொட்டை மாடியிலிருந்து இவன், அவனை சுவாரசியமாகக் கவனித்தான்.
அவன் காரின் கதவை ஓசையின்றிச் சாத்தினான். இளைஞன். கார்ட்டூன் சித்திரம் போல உடம்பை விட தலை கொஞ்சம் பெரிது. டார்க் கலரில் உடுத்தியிருந்தான். கைகளில் கிளவுஸ் அணிந்திருந்தான்.
வீட்டின் வாசல் கேட்டின் கொக்கியை ஓசையின்றி நீக்கித் திறந்து கொண்டு உள்ளே நடந்து கதவை சமீபித்தான், மெதுவாக.
மாடி இளைஞன் குழம்பினான். யார் இவன்? வீட்டுக்கு வரும் விருந்தாளியைப் போலத் தெரியவில்லையே... சத்தமே செய்யாமல் ஒரு திருடனைப் போலல்லவா நடக்கிறான்? திருடன் தானா? திருடன் காரில் வருவானா?
இவன் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, அவன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த… உள்ளே ஒலித்த பஸ்ஸரின் சப்தம் லேசாக இவனுக்கும் கேட்டது.
சேச்சே. விருந்தாளிதான். திருடன் வாசலில் நின்று பெல் அடித்து விட்டுக் காத்திருப்பானா?
பஸ்ஸர் ஒலியில் மாடியறை விழித்துக் கொண்டு வெளிச்சமானது.
அவள் நைட்டி அணிந்திருந்தாள். அவள்தான் எழுந்தாள். குப்புறப்படுத்து உறக்கம் கலையாத வெற்று மார்பு இளைஞனைத் தோளில் தொட்டு அசைத்தாள்.
யாரோ வந்திருக்காங்க தாஸ்.
ம்
என்று முனகினானேயொழிய அசையவில்லை.
பஸ்ஸர் ஒலி மீண்டும் அழைத்தது.
தாஸ், தாஸ்,
என்று உலுக்கிப் பார்த்துவிட்டு, கண்ட்ரோல் இல்லாமக் குடிச்சிட்டு, ச்சே!
என்று முனகிக் கொண்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.
வீட்டின் வாசலில் காத்திருந்தவன் மீண்டும் பித்தானை அழுத்தினான். இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டுகளுக்குள் நுழைத்துக் கொண்டு காத்திருந்தான்.
கதவு ஒரு இன்ச் மட்டும் திறந்து, யாரு?
என்றாள் அவள்.
நான்தான் மரியா.
குரல் புரியவில்லை. ஆனால், தன் பெயர் சொல்லப்பட்டதில் ஏற்பட்ட நம்பிக்கையில் கதவை முழுவதும் திறந்த வினாடி
அவன் உடனே உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு, அவள் முகத்துக்கு நேரே தன் துப்பாக்கி சுமந்த கையை நீட்டினான்.
நீ… நீ... நீங்களா?
என்றாள்.
கதவு திறக்கப்பட்டு, உள்ளே போய் விட்டானே, ஆக விருந்தாளிதான் என்று தீர்மானித்துக் கொண்ட உறக்கம் தொலைந்த இளைஞன், தன் ஜமுக்காளத்தில் படுத்துக் கொண்டு,