Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nadu Nisi Neram
Nadu Nisi Neram
Nadu Nisi Neram
Ebook103 pages40 minutes

Nadu Nisi Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொருப்பான அண்ணன் துரை வைரத் தொழிலை தொடர்கிறான். தம்பி மோகன் ஊதாரியாக ஊர் சுற்றுபவன். மீனா தன் அப்பாவுடன் தோட்ட வீட்டில் குடியேறுகிறாள். அண்ணன் தம்பி இருவரும் காதலில் விழுகிறார்காள்.

மீனாவின் நடவடிக்கை பிடித்துப் போக அம்மாவும் அப்பாவும் மீனாவை மருமகளாக்க ஆசைப் படுகிறார்கள். அவர்களின் எண்ணம் ஒன்றுதான் யாருக்கு என்பதில் வேறுபாடு இருந்தது. இதற்கிடையில் மீனாவின் காதல் கணவனை அடைய என்ன செய்வாளோ? இதில் யாரின் காதல் எண்ணம் நிறைவேறும்?

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580136606414
Nadu Nisi Neram

Read more from Tamilvanan

Related to Nadu Nisi Neram

Related ebooks

Related categories

Reviews for Nadu Nisi Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nadu Nisi Neram - Tamilvanan

    http://www.pustaka.co.in

    நடு நிசி நேரம்

    Nadu Nisi Neram

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    கடிகாரம் கட்டிக்கொண்டிருந்த தன் கையைக் கன்னத்தில் ஆழப் புதைத்துக்கொண்டு அவர் எவ்வளவு நேரமாக அப்படி உட்கார்ந்திருந்தாரோ!

    ஆடவில்லை. அசையவில்லை. திரும்பவில்லை.

    நெற்றியிலே நரம்புகள் புடைக்க, நீண்ட நேரமாகக் கீழே குனிந்து கவனித்துக்கொண்டிருந்தார். பொசுக்காத மாலை வெயில் அவர் முகத்தில் பொன்னொளி பரப்பியது.

    அவருக்கு எதிரே இன்னொருவன் இருந்தான். அவன் ஒருக்களித்துத் தன் கையை முழங்கை வரையில் மடித்துத் தலையணையில் மெல்ல ஊன்றிக்கொண்டிருந்தான். அவனுடைய குறும்பும் குறுகுறுப்பும் நிறைந்த விழிகள் எதிரே இருந்தவரைக் கவனித்தன.

    நான்கு விழிகளையும், இரு இதயங்களையும், இரு மூளைகளையும் சதுரங்க விளையாட்டு அன்று நன்றாக வேலை வாங்கிக்கொண்டிருந்தது.

    மாலை வந்தது. இருவரும் இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை அந்த விளையாட்டுக்கு எப்போது முடிவு? மகுடிபோல அவர்களைச் சதுரங்க விளையாட்டு மிகச்சொக்க வைத்துவிட்டது!

    தலையணை மீது கையை ஊன்றிக்கொண்டிருந்தவன் திடீரென்று ஏதோ ஒரு காயை நகர்த்திவிட்டு எழுந்து குதித்தான். இரு கைகளையும் கொட்டிக் கும்மி ஆடினான்.

    அண்ணா, இனிமேல் என்ன செய்வீர்கள்? என்று கேட்டுவிட்டுச் சிரித்தான். திறமை, அவன் நெஞ்சை மிக உயரச் செய்தது.

    அமைதியின் உருவாக இருந்த அவன் அண்ணா, மோகன், பதறாதே! ஏன் இப்படிக் குதிகுதி என்று குதிக்கிறாய்? கொஞ்சம் பொறு, மோகன். துள்ளுகிற மாடு பொதி சுமக்காது என்றார்.

    அவர், மோகனின் அருமை அண்ணா. வீடும் வெளியும் அவரைத் துரை என்று பெயர் சொல்லி அழைக்கும். ஒரு பெரும் பணக்காரக் குடும்பத்துக்குரிய பெருந்தன்மையும், குரலிலே கண்ணியமும், தம்பியிடம் தனிப்பட்ட பாசமும், வாழ்க்கையிலே வெற்றி நோக்கமும் கொண்டவர் துரை. அவர் வயது இருபத்தெட்டு.

    மோகன்? பயமறியாத காளைக்கன்று. எதையும் பேசுவான். எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுவான். கோடை மழை போன்றவன். அழகிலே அண்ணனை மிகுந்தவன். அந்த வீட்டிலே, சிரிப்பொலி எங்காவது கேட்டால், ஆடி ஓடிடும் ஓசை எங்காவது கேட்டால், கத்திப் பேசிடும் ஒலி எங்காவது கேட்டால், அங்கே மோகன் இருக்கிறான் என்று பொருள். எங்கு அமைதி இருக்கிறதோ அங்கே மோகன் இருக்கமாட்டான்! அவன் வயது இருபத்தைந்து.

    சுருக்கென்று ஏதாவது சொல்லிவிட்டால் தம்பியின் சுந்தர முகம் குன்றிவிடுமோ? என்று பயந்து, துரை மோகனிடம் அளந்துதான் பேசுவார். 'துள்ளுகிற மாடு’ என்று சொன்ன பிறகு, எங்கே தன் தம்பி சதுரங்கக் காய்களைக் கலைத்து விட்டெறிந்துவிட்டு எழுந்தோடிப் போய்விடுவானோ? என்று உள்ளூரப் பயந்தார் துரை.

    ஆனால் மோகன் –

    சதுரங்கப் பலகை பிரித்துவைக்கப்பட்டிருந்த பளிங்கு மேடையையும் துரையையும் சுற்றிச்சுற்றி வந்து அண்ணா ஞாயிற்றுக்கிழமையாக இல்லாவிட்டால் அலுவலகத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கில் வரவு செலவு செய்து கொண்டிருப்பீர்கள். போனால் போகிறது. வழிந்துவரும் வியர்வையைத் துடைத்துக்கொள்ளுங்கள். அதற்குள் தங்களுடைய காலாட்படையை என்னுடைய யானைப் படை எதுவும் செய்துவிடாது என்று கும்மியடித்துக் கொண்டு குதித்தான். அவன் போக்கு அது. அவன் பண்பு அது.

    அப்போது ஐயா என்று ஒரு குரல் அவர்களுக்கு அண்மையில் கேட்டது.

    நிமிர்ந்து பார்த்தார் அண்ணன். திரும்பிப் பார்த்தான் தம்பி. அங்கே -

    ஒரு கிழவர். அவருக்குப் பின்னால் ஒரு பெண். கிழவர் கிழிந்த சூட் போட்டிருந்தார்.

    அந்தப் பெண் –

    அழகி. 15 வயது தான் இருக்கும். அவள் உடலில் நகை நட்டு எதுவும் இல்லாததனால் அவள் உடல் அழகு ஒளி தந்தது. எழிலைக் கொட்டியது. அவள் அழகின் இலக்கணம்!

    அவள் -

    அவள், எவரையும் நிமிர்ந்து பார்க்காமல், கீழே குனிந்து கட்டைவிரலினால் தரையை மெல்லக் கீறிக் கொண்டிருந்தாள். இரு இளைஞர்களுக்கு நடுவே தன் அப்பா, தன்னையும் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு, எவ்வளவு நேரம் பேசப் போகிறாரோ, அவருடைய முதுகுக்குப் பின்னால், தான் எவ்வளவு நேரம் ஒளிந்து கொண்டு இருக்கவேண்டுமோ! என்று துன்பம் கொண்டாள்.

    அந்த மூன்றடுக்கு மாளிகையையும், குறுக்கும் நெடுக்குமாக ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்காரர்களையும், அந்த இரு பணக்கார அண்ணன் தம்பிகளையும் தன் கரிய விழிகளால் கண்ட அவளுக்கு, 'அப்பா ஏன் இங்கே வந்தார்? ஏழைகளின் கதையைக் கேட்டுப் பணக்காரர்களுக்குப் பழக்கமில்லையே’ என்று தோன்றியது.

    தன் அப்பாவின் முதுகை மெல்ல வருடி, அவரைத் திரும்பிப் பார்க்கவைத்துச் சாடை காட்டி, இங்கிருந்து அவரை! அழைத்துக் கொண்டு போய்விடலாமா? என்ற நினைவு அவள் நெகிழ்ந்த நெஞ்சைத் தொட்டது.

    துரை, அந்தக் கிழவரைப் பார்த்தார்! அப்புறம் அந்தப் பெண்ணைப் பார்த்தார்.

    மோகன், முதலில் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அப்புறம் அந்தக் கிழவரைப் பார்த்தான்.

    பிறகு -

    இரு சகோதரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சதுரங்க விளையாட்டுச் சிக்கலிலிருந்து விடுபட நல்ல வேளையாக இந்தக் கிழவரும் பெண்ணும் வந்து சேர்ந்தார்களே என்று துரைக்கு நிம்மதி!

    மோகனுக்கு -

    அந்தப் பெண், நிலா போலத் தோன்றி, வானத்தில் நிலா இல்லாத குறையைத் தீர்த்தாளே! என்று மகிழ்ச்சி.

    துரை, சென்னையிலே பிரபல வைர வியாபாரி. அவரது வைராலயம்

    Enjoying the preview?
    Page 1 of 1