Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandavathu Nila
Irandavathu Nila
Irandavathu Nila
Ebook103 pages39 minutes

Irandavathu Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்றோர்களை இழந்து தவிக்கும் அம்மு, காலத்தின் கட்டாயத்தால் குன்னப்பிறாக் குஞ்சுவை கைப் பிடிக்கிறாள். அம்முவின் வாழ்க்கையை சிதைக்க நினைக்கும் குன்னப்பிறாக் குஞ்சுவின் முதலாளி பப்புண்ணிமேனனின் காமப் பார்வை ஒரு புறம். குஞ்சுவின் அலட்சியம் மற்றும் பாசமின்மை மறுபுறம்.

எதிர்பாராத திருப்பங்களுடன் ஏற்படும் குஞ்சுவின் மரணத்திற்குப் பின் மாதவனின் கருணையால் சென்னை வரும் அம்மு, மாதவனின் சகோதரி மகள் சிறுதாவால் வாழ்க்கை சந்தோசமாக அமைகிறது. திடீரென ஏற்படும் சிறுதாவின் பெற்றோரின் மரணத்தினால் அம்முவின் வாழ்க்கை பப்புண்ணி மேனனால் மீண்டும் கேள்விக்குறியாகிறது. மாதவனுக்கும் அம்முவுக்கும் இடையிலான உறவு கருணையா காதலா? சிறுதாவின் பெற்றோருக்கும் பப்புண்ணி மேனனுக்கும் என்ன தொடர்பு? காதலும் மர்மமும் நிறைந்த திக் திக் வரிகளோடு…

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580136606413
Irandavathu Nila

Read more from Tamilvanan

Related to Irandavathu Nila

Related ebooks

Related categories

Reviews for Irandavathu Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandavathu Nila - Tamilvanan

    http://www.pustaka.co.in

    இரண்டாவது நிலா

    Irandavathu Nila

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அஞ்சாதே அஞ்சுகமே!

    2. போதுமே புதுவாழ்வு!

    3. சப் இன்ஸ்பெக்டர் சொன்னார்

    4. அப்படியே இரு அம்மு!

    5. இவள் இங்கே ஏன் வந்தாள்?

    6. என்ன சொல்லுகிறாள் அம்மு?

    7. அலை பாய்ந்தது அவள் உள்ளம்

    8. விழுந்தது ஒரு வெட்டு

    9. எல்லாம் தெரியும் எனக்கு!

    10. இரண்டாவது நிலா!

    1. அஞ்சாதே அஞ்சுகமே!

    அம்முக்குட்டிக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. கலங்கிய கண்களோடு, உடலும் உள்ளமும் உதற, எதிரே நின்றவனைத் தன் அன்புக் கண்ணால் உற்றுப் பார்த்தாள். அதில் நன்றி நின்றது.

    ஒட்டிக்கொண்டு கிடந்த பஞ்சு உதடுகளைப் பிரித்து, அவனிடம் ஏதோ சொல்லவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஊறாமல் இல்லை ஆனால், உதடுகள் எங்கே பிரிந்தன? பிரிந்த பிறகு அல்லவா பேச்சுப் பிறக்கும்? அவைகள் தாம் இன்னும் நடுக்கத்தினால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கின்றனவே!

    அவளுக்கு எதிரே நின்றவனுக்கு முப்பது வயது இருக்கும். கட்டுடலுடன் கறுகறுவென்று காணப்பட்டான். அவன் முன் தலையில் சுருட்டிக்கொண்டு கிடந்த கறுப்பு முடி உலுப்பிக்கொண்டு நின்றது. இடுப்பிலே சுற்றிக்கிடந்த பட்டையான தோல் பெல்டில் கத்தி ஒன்று குலுங்கியது அவனுடைய கருவண்டு மீசை - சிவந்த விழிகள் அடிக்கடி தொண்டையைக் கனைத்துக் கொண்ட வீதம் - இவைகளிலிருந்து குன்னப்பிறா கிராமத்திலே அவன் பெரிய போக்கிரி என்பது தெரிந்தது!

    'குன்னப்பிறாக் குஞ்சு' என்று சொன்னால் போதும். 'ஓ' அவனா, அவன் பெரிய சட்டம்பி (சட்டம் - போக்கிரி) ஆயின்னே!' என்று மலையாளப் பகுதியிலிருப்பவர்கள் சொல்லிவிடுவார்கள்! அப்படிப்பட்டவன் -

    அம்முக்குட்டிக்கு முன்னால் ஆட்டுக்குட்டி போல நின்றான்! அடக்கமும் பெருந்தன்மையும் அன்பும் அவனுக்கு எப்படி வந்தன?

    அம்முக்குட்டி தன்னைத் தேற்றிக்கொண்டு பேசினாள்:

    தாங்கள் மட்டும் இன்று வரவில்லை என்றால் என்னென்னவோ நடந்திருக்கும். சற்றுமுன் நடந்ததை நினைத்தால் என் உடல் நடுங்குகிறது. நான் அனாதை. என்னிடம் என்ன வம்பு செய்தாலும் கேட்க எவரும் இலர் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நயவஞ்சவர்களிடமிருந்து எனக்கு என்று கிடைக்குமோ விடுதலை! அதற்குப் பிறகுதான் எனக்கு அமைதியான மூச்சு வரும்!

    அம்முக்குட்டி இப்படிச் சொல்லிவிட்டு நீர் முட்டிய விழிகளைத் தன் முண்டினால் துடைத்துக் கொண்டாள்.

    அம்மு உனக்கு இனி அந்தக் கவலையை வைக்கமாட்டேன் என்றான் குஞ்சு.

    எதிரே சலசலவென்று ஓடிய சிற்றோடையை அவள் பார்த்தாள். அதிலிருந்த தெளிவு -

    அவளுடைய உள்ளமும் அப்படித்தானா?

    உங்களை நீண்ட நேரமாக நிற்க வைத்துவிட்டேன். எனக்கு இருந்த படபடப்பில் 'உள்ளே வந்து உட்காருங்கள் என்று சொல்லக்கூட முடியவில்லை என்று குரல் குழையக் கூறிவிட்டு, பூட்டுக்குப் பதிலாகச் சுற்றி மாட்டியிருந்த கயிற்றைச் சற்று இழுத்துத் தளர்த்தி, கீற்றுக் கதவைத் தள்ளிச் சிறு குடிசைக்குள் நுழைந்தாள் அம்முக் குட்டி அந்தத் துள்ளு நடையை இமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றான் குஞ்சு. எதிரே சிற்றோடையில் துள்ளும் மீன் இவளிடம் என்ன செய்யும் என்று அவனுக்குத் தோன்றியது!

    உள்ளே சென்ற அம்முக்குட்டி, சிறு தடுக்கு ஒன்றை எடுத்துப் போட்டு, 'உள்ளே வந்து அமருங்கள்' என்றாள். குஞ்சு, நேரமாகிவிட்டது, போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டே, உள்ளே வந்து மெல்ல உட்கார்ந்தான்

    அம்மு, இளநீர்க்காய் ஒன்றைச் சீவி, கண்ணாடிக் கோப்பையில் நிரப்பி அவனிடம் நீட்டினாள். குஞ்சு, 'இதெல்லாம் எதற்கு?" என்று சொல்லிக்கொண்டே கையை நீட்டி வாங்கினான். குடித்தான்.

    அம்முக்குட்டி ஒதுங்கி ஓரமாக நின்றபடியே என்னால் இயன்றது இவ்வளவு தான். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நேரில் பார்த்தது இல்லை. என்னைப்போன்ற ஏழைமக்களுக்கு உங்களுடைய கருணையுள்ளம் உதவியதை இன்று கண்டேன். மிக்க நன்றி என்றாள், குனிந்த தலைக்கு அடியில் இருந்த குவிந்த கொவ்வைச் செவ்வாயால்.

    குஞ்சு, இரு கால்களையும் மடக்கி அதில் தன் கைகளைச் சேர்த்தபடி, என் உதவி அப்படி ஒன்றும் பெரிதல்ல. ஏதோ நேர்ந்தது அவ்வளவுதான். அது சரி, இந்த வீட்டில் நீ மட்டும்தானா இருக்கிறாய்? என்றான்.

    ஆமாம் என்றாள் அம்முக்குட்டி பிறகு, அவளே சொன்னாள்: அப்பா சென்ற ஆண்டு தேங்காய் உறிக்கும் போது உள்ளங்கையில் கடப்பாரைக் கூர் பாய்ந்து, அப்புண் இரணமாகி இறந்து போனார். அம்மாவுக்கு மலேரியாக் காய்ச்சல் வந்து இரண்டு மாதங்களுக்கு முன்னால் இறந்து போனாள். என்னை, எனக்குக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிகிறதா? என்ற சோதனையுள் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் உலகிலிருந்து மறைந்து போனார்கள் நான் இருக்கிறேன். என் கைகளை நம்பிக்கொண்டு, ஏக்க மூச்சுகளை விட்டுக் கொண்டு!

    குஞ்சு, எழுந்து நின்று கொண்டு சொன்னான்: "அம்மு, உன் நிலை இரக்கத்திற்குரியது. இந்த வயதில் தனியே இருப்பது உனக்கு ஆபத்துத்தான். நான் சொல்லுவதைக் கேள் என்னோடு வந்துவிடு. என்னை மணந்து கொண்டு நல்வாழ்வு வாழலாம். உனக்கு ஒருகுறையும் வராமல் பார்த்துக்கொள்கிறேன். ஏதோ எனது திறமையால் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். உன்னை என் மனம் நாடுகிறது.

    அம்மு, இந்த ஏற்பாடுதான் உனக்கு ஏற்றது. இல்லாவிடில் உன் அழகைச் சூறையாட எப்போதும் பருந்துக்கூட்டம்

    Enjoying the preview?
    Page 1 of 1