Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vera Level
Vera Level
Vera Level
Ebook83 pages28 minutes

Vera Level

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இறந்தவள் எழுந்து தன்னைக் கொன்றவர்களை கொல்கிறாள்.

இறந்தவன் எழுந்து தன்னைக் கொன்றவர்களை கொல்கிறான்.

கிராமத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்க வருகிறார் விஷால்.

காட்டலரிக்கு இக் கொலைகளில் என்ன பங்கு?

வேற லெவல் ஒரு வேற லெவல் ஹாரர்..

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580145507397
Vera Level

Read more from Gavudham Karunanidhi

Related to Vera Level

Related ebooks

Related categories

Reviews for Vera Level

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vera Level - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    வேற லெவல்

    Vera Level

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    என்ன முனியா ஆச்சு?

    அய்யா செத்துப் போயிட்டா

    சரி பின்னாடி தோட்டத்தில் கொண்டு போய் குழிதோண்டி புதைச்சிடு

    சரிங்கய்யா

    அவன் சொன்ன அந்த நொடியில் வெளியில் இருந்த ஒரு வெளிச்சப் புள்ளி எவருமறியாமல் ஜன்னல் வழியாக நுழைந்தது.

    இறந்து கிடந்தவளின் மேல் வெளிச்சம் பட்டது.

    குழிக்குக் கொண்டு போவதற்காக முனியன் அவளைத் தூக்க முயல அவள் சட்டென்று எழுந்தாள். தன் வெறித்த கண்களால் முனியனைப் பார்த்தாள்.

    அய்யா

    என்ன முனியா?

    இதுக்கு உயிர் இருக்குங்க.

    என்ன முனியா சொல்ற? எப்படி சாத்தியம்?

    உயிர் இருக்குங்கய்யா... ஆனா…

    ஆனா? என்ன?

    இது இதோட உயிர் இல்லங்கய்யா

    முனியன் பதறிப்போய் சொல்ல

    என்ன முனியா சொல்றே?

    ஆமாங்கய்யா இது... வேற... ஏதோ

    அவன் சொல்லும்போது அவள் எழுந்தாள் முனியன் நடுங்கினான்.

    அய்யா தப்பிச்சுக்குங்க ஆபத்து.

    அவள் சலனமின்றி இருவரையும் பார்த்தாள்.

    முனியன் பயந்து நடுங்க அய்யா மட்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டார்.

    யார் நீ?

    அவள் அய்யாவையே பார்த்தாள்.

    அது தெரியாமத்தானே நானே சுத்திட்டிருக்கேன்?

    நீ இந்த உடம்பில எதுக்கு வந்தே?

    நீ என்ன பண்றே இந்நேரத்தில? அது திரும்பக் கேட்க அவருக்கு வாய் உலர்ந்தது. சமாளித்தபடி சொன்னார்.

    எனக்கு ஒரு கண்டம் இருக்குன்னு ஜோசியர் சொன்னார். சாவு ரொம்பப் பக்கத்துல வந்துடுச்சி. அதில இருந்து தப்பிக்கணும்னா நான் ஒரு பலி கொடுக்கணும்னு சொன்னார்.

    என்ன பலி?

    இன்னிக்கு அமாவாசை. இன்னிக்கு ஒரு கன்னிப்பொண்னோட ரத்தத்தை மயான காளிக்குத் தெளிச்சு அந்தப் பொண்ண பலி கொடுத்தா…

    கொடுத்தா?

    எனக்கு வரவிருக்கும் கண்டம் என்னை விட்டுப் போயிடும்னு.

    அதான் இந்தப் பொண்ணக் கழுத்தறுத்துக் கொன்னுட்டியா? அவள் தன் கழுத்தில் கோடாய் உறைந்திருந்த ரத்தத்தைத் தொட்டுப் பார்த்தபடியே கேட்டாள்.

    அவர் தயங்கினார்.

    கேட்டதுக்கு இன்னும் பதில் வரலயே? அவள் அவரையே தீர்க்கமாகப் பார்க்க

    ஆமா தலையைக் குனிந்தபடி சொன்னார்.

    உன் வயசென்ன?

    கேட்டவளைக் குழப்பமாகப் பார்த்தார்.

    எதுக்கு அது?

    சும்மா சொல்லு.

    அறுபத்தேழு

    அவ்வளவு வருஷம் வாழ்ந்துட்டியா?

    அவருக்குத் திக்கென்றது.

    ஏண்டா பாடு? அதான் இத்தனை வருஷம் இருந்துட்டியே? இன்னும் நீ இங்க இருந்து என்ன மயிரப் புடுங்கப் போறியா?

    அவள் பார்வை அவர் மேல் விழுந்தது.

    இல்ல... நான்.. வந்து

    என்னடா உளர்றே?

    அவள் கேட்டபடி மெதுவாக அவர்கள் இருவரையும் நோக்கி நகர

    முனியன் கத்தினான்.

    அய்யா ஓடிடலாம் வாங்க

    முனியன் மேல் அவள் பார்வை பதிந்தது.

    ஏண்டா சும்மா நொய் நொய்னு கத்திட்டிருக்கே? யாராவது கத்தறாங்களா என்ன? உலகம் ரொம்ப அமைதியா இருக்குடா. நீயும் கத்தாம இரு.

    அவள் சொல்ல முனியன் பயமாய் தலையாட்டினான்.

    நீதான் இவ கழுத்தை அறுத்தியா?

    அது வந்து

    கேட்டதுக்குப் பதில் சொல்லுடா பாடு.

    அய்யா சொன்னதால

    அப்படியா?

    ஆமா நானா கொல்லல.

    உன் அய்யா எது சொன்னாலும் செய்வியா?

    வந்து

    சொல்லுடா

    ம்

    அவள் பார்வை நடுங்கிக்கொண்டிருந்தவரிடம் திரும்பியது.

    டேய் அய்யா

    ம்

    Enjoying the preview?
    Page 1 of 1