Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruvizha
Thiruvizha
Thiruvizha
Ebook96 pages31 minutes

Thiruvizha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதிர் கண்மணி இருவரும் காதலர்கள். அவர்களின் நண்பன் ஆறுமுகம். மாரியம்மன் கோவில் திருவிழா அன்று காதலர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு அவர்களை எவ்வாறு பாதிக்கிறது? பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்தனரா? கண்மணியை ஒருதலையாக காதலிக்கும் வரதனுக்கு என்ன நிகழ்கிறது?

திருவிழாப் பின்னணியில் ஒரு உணர்வுபூர்வமான காதல் கதை எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் இயல்பான நடையில்...

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507204
Thiruvizha

Read more from Gavudham Karunanidhi

Related to Thiruvizha

Related ebooks

Reviews for Thiruvizha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruvizha - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    திருவிழா

    Thiruvizha

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    தரை பசுஞ்சாணம் போட்டு மெழுகப்பட்டிருந்தது. குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கற்பகம் மகளை அழைத்தாள்.

    கண்மணி

    பாத்ரூமில் இருந்த கண்மணியின் குரல் மட்டும் கேட்டது.

    என்னம்மா?

    சீக்கிரம் குளிச்சிட்டு வா. கோயில்ல போடற தண்டோரா சத்தம் கேட்குது.

    ஆச்சும்மா. சொன்னபடி கதவைத் திறந்து வெளிப்பட்ட கண்மணி துடைத்து வைத்த முழுநிலா போலிருந்தாள்.

    எலுமிச்சை நிற மேனி. குண்டாகவும் இல்லை. ஒல்லியாகவும் இல்லை.

    ஈரமான கூந்தலை முன்னாடி போட்டபடி வந்தவளை எவரும் பார்க்க நேர்ந்தால் ஒரு குயர் நோட்டுபுக் முழுக்க கவிதைகள் எழுதவைக்கும் அழகுடன் இருந்தாள்.

    மணி பார்த்தாள்.

    மாலை நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

    கற்பகம் மஞ்சள் போட்டுக் கட்டியிருந்த அந்த சின்ன சில்வர் குடத்தை கண்மணியிடம் கொடுத்தாள்.

    அதை வாங்கி வைத்துக் கொண்ட கண்மணி தலையின் ஈரத்தை துண்டால் ஒற்றினாள்.

    தண்ணி ஜடை போட்டுக் கொண்டு நெற்றியில் சந்தனப்பொட்டை இட்டுக்கொண்டவளுக்காகவே பாடியது போல் கோவிலில் பாடிய

    ‘அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே’ பாட்டு கேட்டது.

    கண்மணி ஈரோட்டில் உள்ள கலைமகள் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் படித்துக் கொண்டிருக்கிறாள். ஈ.சி.ஈ என்று தமிழில் எளிதில் சொன்னால் அனைவருக்கும் புரியும்.

    வீடு கொல்லம்பாளையம்.

    கொல்லம்பாளையம் என்றால் இது ஏதோ கிராமம் அல்ல. ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து வெகு அருகில் உள்ளது. லோட்டஸ் மருத்துவமனை நிறையவே பிரசித்தம். ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளி கொல்லம்பாளையத்தின் அடையாளம்.

    அங்கிருந்து இறங்கி நடந்து வந்தால் ஒரு சிறிய செக்போஸ்ட் வரும். அதை கடந்தால் பால முருகன் செல்வ விநாயகர் திருக்கோவில் வரும்.

    அதன் அருகிலேயே எல்லை மாரியம்மன் கோவில் இருக்கும். இன்னும் கொஞ்சம் நடந்து வந்தால் ஒரு பெரிய வேப்ப மரமும் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஊர்க் கிணறும் இருக்கும்.

    கோவிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மறுநாள் புதன்கிழமை மாரியம்மன் கோவில் திருவிழா. செவ்வாய்க்கிழமை மாலை அனைவரும் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வரவேண்டும்.

    அதற்குத்தான் பெரும்பாலோர் கைகளில் குடங்களுடன் காத்திருந்தனர். இன்னும் கொஞ்சம் பேர் வரவேண்டியிருக்கிறது.

    கதிர் கையில் குடத்துடன் புன்னகை முகமாய் நின்று கொண்டிருந்தான். படித்து முடித்துவிட்டு கோவையில் பணி செய்கிறான்.

    இதுவரை ஒரு மாரியம்மன் திருவிழாவிற்கு கூட கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.

    யார் யார் எங்கெங்கு இருந்தாலும் திருவிழாவிற்கு அனைவரும் வந்து விடுவார்கள்.

    அதே போல் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. அனைவரும் சமம். அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்ற மனோபாவமே எல்லா இடத்திலும் வெளிப்படும். யாரை வேண்டுமானாலும் மாமா என்பார்கள் யாரை வேண்டுமானாலும் மச்சான் என்பார்கள். அன்பு பாசம் நட்பு மூன்றுமே மேலோங்கி காணப்படும் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டால் அவர்களின் இயல்பான வாழ்க்கையில் இருக்கும் மன அழுத்தம் எல்லாம் பறந்திருக்கும்.

    கதிரின் விழிகள் மட்டும் யாரையோ தேடிக் கொண்டே இருந்தன. அதை அருகில் இருந்த அவன் நண்பன் ஆறுமுகம் உணர்ந்திருந்தான்.

    என்ன கதிர் யாரையோ தேடிட்ருக்கே போல?

    இல்லையே யாரையும் தேடலையே

    இதை சொல்லும்போதே உன்னோட மூஞ்சி பளபளக்குது.

    ஆறுமுகம் புன்னகைத்தான்.

    கதிர் அசடு வழிய,

    வேண்டாம் கதிர் கர்ச்சீப் ஒண்ணும் கொண்டு வரல

    சொன்ன ஆறுமுகத்தை முறைத்தான் கதிர்.

    என்ன உன்னோட தேவதை இன்னும் வரல. அதான் உனக்கு படபடப்பா இருக்கு. வருவாளா மாட்டாளான்னு. சரியா?

    ஆறுமுகம் சிரித்தபடி சொல்ல,

    கதிர் சரணடைந்தான்.

    உண்மையாவே தவிப்பா இருக்கு உள்ளுக்குள்ள. எப்படி சொல்றதுன்னு தெரியல.

    Enjoying the preview?
    Page 1 of 1