Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iranthavan Pesukirean!
Iranthavan Pesukirean!
Iranthavan Pesukirean!
Ebook99 pages37 minutes

Iranthavan Pesukirean!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவில் இயற்கை காடுகளில் பயங்கர மிருகங்களை வேட்டையாடுவது மாக்மில்லருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். தன்னுடன் தன் மனைவியையும் அழைத்து செல்வார். இந்தியனும் துணைக்கு செல்கிறான். அவ்வாறு செல்லும்போது என்ன நடந்தது?

இச்சம்பவத்திற்கும் வித்யாவிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? திடீரென மாக்மில்லர் இந்தியனை சுட்டுக்கொல்ல காரணமென்ன? இந்தியன் யார் மூலமாக பழி தீர்க்கிறான்? இறந்தவன் பேசுவானா? சுவாரஸ்யமான இக்கதையில் நாமும் இறந்தவனின் பேச்சுக்குரலுடன்…

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580152608167
Iranthavan Pesukirean!

Read more from Rajendrakumar

Related authors

Related to Iranthavan Pesukirean!

Related ebooks

Reviews for Iranthavan Pesukirean!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iranthavan Pesukirean! - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    இறந்தவன் பேசுகிறேன்!

    Iranthavan Pesukirean!

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ராஜேந்திரகுமார் பேசுகிறேன்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    ராஜேந்திரகுமார் பேசுகிறேன்

    இந்தக் கதைக்கு ஆதாரமிருக்கிறது.

    பல வருடங்களுக்கு முன்பு உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவம்தான் இந்த கதைக்கு ஆதாரம்.

    தென் கன்னடத்தில்... மங்களூரில்... கலெக்டராக இருந்தார் என் மாமா. வீட்டு வேலை செய்ய ஆள் தேவை என்று தேடிய போது ஒரு பதினேழு வயது பையனை கூட்டி வந்தார்கள். அந்த ‘ஸ்வீட் செவண்டீன்’ அவனுக்கு ஸ்வீட்டாக இருந்ததாகத் தெரியவில்லை. சதா சோகத்தில் நீந்துவது போன்ற கண்கள். சிரித்தால் சிங்கப்பல் இரண்டிலும் தெற்று,

    வீட்டிலிருந்த பாட்டியம்மாள் அப்போதே எச்சரித்தாள். அந்த சிங்கப்பல் தொற்று பேய்த்தன்மைக்கு அடையாளம் அவனை வீட்டில் சேர்க்கக் கூடாது என்று அதை யாருமே லட்சியம் செய்யவில்லை ஆனால் அது உண்மை...

    அமாவாசை, பௌர்ணமி இரவுகளில் சலிக்காமல் வீட்டைச் சுற்றி ஓடிக் கொண்டே இருப்பான்... ஒரு விதமான உறுமலுடன், கன்னடத்தில் திட்டினால் சரளமாக உருதுவில் பதிலுக்கு பேசுவான். சாதாரண நாட்களில் உருது பேசத் தெரியாமல் விழிக்கிறவன் அவன். அந்த நிலையில் ஒரு நாள் பாட்டியம்மாள் குழந்தைகள் பயப்படுகின்றன. போகிறாயா அல்லது செருப்பால் அடிக்கவா? என்று கேட்டு விடவே அவரை பயங்கரமான கூச்சலோடு வீட்டுக்குள் துரத்தி இருக்கிறான். அந்தப் பாட்டி பூஜையறைக்குள் போய் விடவே வாசலிலேயே நின்று விடியும் வரை ‘வெளியே வா’ என்று கருதிக் கொண்டே இருந்தான்.

    அடுத்த நாள் காலை... பாட்டியம்மாளே அவனை உடுப்பிக்கு அழைத்துப்போய் ஒரு பூசாரியிடம்... (ஹம்பன் கட்டே என்கிற இடத்து காளிக்கோயில் பிரசித்தமானது)... கொண்டு போய் தாயித்தை கட்டிக் கொண்டு வந்தாள்.

    அதன் பிறகு ஒரு ஆறு மாதமோ ஒரு வருஷமோ எந்தத் தொல்லையுமே இல்லாமல் இருந்திருக்கிறான்.

    ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு அமாவாசையன்று குளியலறையில் அந்த தாயித்தை நான்தான் கண்டெடுத்தேன். அவன் குளிக்கும் போது தவறி விழுந்திருந்தது. அன்று இரவு அதை பாட்டியம்மாளிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நினைத்தாலும் நடுங்குகிறது பயங்கரமாக கத்தியவாறு அவர் மேல் பாய்ந்து விட்டான் அந்தப் பையன். கழுத்தைக் கடிக்க முயன்றவனை இழுத்துப் பிடித்து நான் கத்த ஆட்கள் ஓடி வந்தார்கள். கெச்சலான உடம்புடன் பலமே இல்லாத அந்த சிறுவனை வாட்ட சாட்டமான நான்கு ஆண் பிள்ளைகளாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை அந்த சந்தர்ப்பத்தில் தலையில் அடிபட்டுவிட்ட பாட்டியின் வேண்டுகோளின்படி அவரை தூக்கிக் கொண்டு பூஜை அறைக்குள் போய் விட்டேன்.

    இரவு பூராவும் வெறி பிடித்த ஓநாயைப் போல கூச்சலிட்டவாறு பூஜை அறை வாசலிலேயே நின்றிருந்தான். விடிந்ததும் மாமா அவன் கணக்கை தீர்த்து கிராமத்துக்கே அனுப்பி விட்டார். அழுதுகொண்டே போய் விட்டான்.

    பல வருடங்களுக்கு பிறகுதான் அவனைப் பற்றி விசாரித்தேன். தற்கொலை பண்ணிக் கொண்டு விட்டான் என்ற செய்தி கேட்டு நெகிழ்ந்தேன். அந்த அப்பாவியின் அழகு முகம் இப்போதும்கூட மனதில் தோன்றி சங்கடப்படுத்துகிறது.

    ராஜேந்திரகுமார்

    சமர்ப்பணம்

    இந்தக் கதையைப் பல ‘பேர்’களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டி இருக்கிறது. அபர்ணா நாயுடு, சகுந்த், கிருஷ்ண ஸ்ரீ நிவாஸ், கேயெஸ் இன்னும் பல ‘பேர்’களுக்கும் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

    அதைவிட சுலபமாக நண்பர் திரு. சி.ஆர். கண்ணனுக்கு நன்றி சொல்லி விடுகிறேன்.

    (இத்தனை பெயர்களிலும் ஒளிந்து கொண்டிருப்பவர் அவர்தான் என்பது எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர்.)

    ராஜேந்திரகுமார்

    1

    ஒரு சில பழைய நிகழ்ச்சிகள்

    அவன் கைகளும் கண்களும் கட்டப்பட்டு சுவரோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். அந்த சுவற்றில் சிகப்பு தெரித்து இருக்கிறது. ரத்தம்! உலர்ந்த ரத்தம்!

    ‘நான் நிரபராதி... என்னை விட்டு விடுங்கள்’ அவன் முனகல் குரல் யார் காதிலும் விழவில்லை.

    ‘மேன்மை தங்கிய அரசியாரின் ஆணையின்படி நீதியின் பேரால் உன்னை பலி ஆக்குகிறோம். ஆண்டவன் உன் ஆத்மாவுக்கு அமைதி அளிப்பாராக. ஆமேன்’

    பாதிரியாரின் பிரார்த்தனை முடிந்ததும்...

    எட்டு துப்பாக்கிகள் காக் செய்யப்படும் ஓசை...

    டிரம் ஓசை கேட்டது. அது நின்றதும்...

    சல்லடைக் கண்களாக உடம்பு துளைக்கப்பட சுவற்றில் எகிறி விழுந்தான். உலர்ந்த ரத்தத்தோடு இப்போது புதிய ரத்தமும் சேர்ந்து வழிந்தது.

    ‘மாந்தரீகத்தின் பேரால் ஊரை ஏமாற்றுகிறவர்கள் யாராயிருந்தாலும் சரி. அவர்களுக்கு இதுதான் கதி.’

    கவர்னர் சிரித்தார். அவர் உள்ளே போகப் போக சிரிப்புக் குரல் தேய்ந்து மறைந்தது.

    அந்த ஆளின் சடலம் மணலில் கிடந்தது. காற்று வீச வீச மணல் அவன் மேலே தெரித்து விழுந்து விளையாடிக் கொண்டிருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1