Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Straw- Oru Extra
Straw- Oru Extra
Straw- Oru Extra
Ebook155 pages55 minutes

Straw- Oru Extra

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அபிதா நல்ல குடும்பத்தில் பிறந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறாள். இவளின் வாழ்க்கை பயணம் என்னாது? மோசமான குடும்பத்தில் பிறந்தாலும் நல்ல கணவன், குழந்தை என அனைத்தும் இருந்தும், பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்ததால் வந்த விளைவு என்ன? ஸ்டார் ஒரு எக்ஸ்ட்ராவானது யாரால்?

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580152608163
Straw- Oru Extra

Read more from Rajendrakumar

Related to Straw- Oru Extra

Related ebooks

Reviews for Straw- Oru Extra

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Straw- Oru Extra - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    ஸ்ட்ரா- ஒரு எக்ஸ்ட்ரா

    Straw- Oru Extra

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒரு ஸ்ட்ரா ஒரு எக்ஸ்ட்ரா!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    ஒரு ஸ்ட்ரா ஒரு எக்ஸ்ட்ரா!

    ஜஸ்ட் ஏ மினிட் ப்ளீஸ்!

    கொஞ்சம் பொறுங்கள் சார்.

    இந்த நாவலை உண்மை சம்பவம் ஒன்றை வைத்து உருவாக்கும் ஆசை பிரதானமாக எழுகிறது.

    அதற்காக மற்றவர்களை ஆராய்வதில் எனக்கு விருப்பமில்லை.

    நடந்த சம்பவம், நான் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் முழு ஜூஸையும் பிழிந்துதர சௌகரியமாய் இருக்கும். அதில் ஒரு ஜீவனிருக்கும்.

    ஆனால் அந்த சம்பவம்?

    தீர்மானிக்க கொஞ்சம் அவகாசம் தேவை!

    ஆனால் தேவைப்படும் அளவு, நேரம் இல்லை. இன்றைக்கு முகூர்த்த நாள். எல்லா விஷயங்களையும் ஆரம்பிக்க இன்றைக்கு நல்ல நாளாம். சொன்னார்கள். (எல்லா விஷயங்களையுமே!)

    இப்போது மணி இரவு பதினொன்றடிக்கப் போகிறது. பன்னிரண்டு அடித்துவிட்டால் அடுத்த நாள் பிறந்து விடும். (அது எப்படிப்பட்ட நாளோ? ஆராய நேரமில்லை மிஸ் கீதா).

    என் டைரியை ஒருமுறை புரட்டிப் பார்த்தால் நிறைய சம்பவங்கள் கிடைக்கும்.

    ஆனால்

    அந்த டைரி எங்கே?

    நீங்கள் பார்த்தீர்களா பத்மனாபன்?

    தேடி அது கிடைக்கும் வரை ஒரு சிலர் கண்ணில் இந்த ஆரம்ப குறிப்பு படாமலிருக்கும்படி அருள வேண்டுமென்று ஆண்டவனுக்கு வேண்டுகோள் விடபோகிறேன்.

    நீங்கள் படியுங்கள் லஷிமியம்மா. நாவல் வெளிவருகிற நாள் முதல் ஒரு மாதம் ஷூட்டிங். பெங்களுருக்கு ஓடிவிடப் போகிறேன். நீங்கள் போனில் திட்ட முடியாது என்கிற தைரியம் கைவசமுண்டு. அதனால் சொல்கிறேன்.

    நீங்கள் படியுங்கள் லக்ஷிமியம்மா! நோ அப்ஜெக்‌ஷன்! நோ பயம்!

    பழனிசாமி (யார்), சீ கந்தசாமி, ஜானகி, ஆகியோர் (என் சிநேகித செல்லங்கள்) படிப்பதற்கு தடையுண்டு. அதற்கு மிக வலுவான காரணம் உண்டு.

    வாருவார்கள்!

    நடிகர் சிவகுமார், ஓவியர் ராமு இரண்டு பேர் பார்ப்பதும் தவிர்க்கப்பட வேண்டியது. காரணம் ரொம்ப நாளாகவே என்னை ‘நல்லப்பிள்ளை’ என்று நினைத்து மதிப்பு கொடுத்து வருகிறவர்கள் அவர்கள். (தப்பும்மா!)

    எங்கேதான் வைத்தேன் அந்த டைரியை!

    அவசரம் என்றால்தான் எதுவும் கிடைப்பதில்லை!

    தேவையில்லாத பகல் வேளையில் ‘தயவேயில்லியே’ என்று கெஞ்சுகிற களுதையை தேவைப்படும் இரவுகளில் தேடினால் ‘இல்லீங்களே! பூடுச்சே. இது பரவாயில்லியா பாருங்க’ என்பான். ‘அங்கிள்’ (அங்கிளுக்கு அர்த்தம்... நீங்கள் நினைப்பதுதான்).

    என் ஜாதகம் அப்படி,

    மேஜை டிராவில்!

    நோ,

    ஷெல்ஃபில்?

    ஊஹும்,

    எனக்கி நிச்சயம் தெரியும். அறையை (20’x15’) விட்டு டைரி வெளியே போக சந்தர்ப்பமில்லை.

    அப்படியே டைரியை திருடிப் போனவர்கள் முதல் பக்கத்தை பார்த்ததுமே அசடு வழிய திரும்ப கொண்டு வந்து எடுத்த இடத்திலேயே வைத்து விடுவார்கள்.

    காரணம்?

    முதல் பக்கத்திலேயே எழுதியிருக்கிறேன். அறிவு கெட்ட முண்டம். அடுத்தவன் டைரியை படிக்கிறது தப்பு. ரொம்ப தப்பு.

    பீரோ மேல் தட்டில் நடுத்தட்டில் கீழ்த்தட்...

    ஆங்! ஐ காட் இட்.

    நாவலை கொஞ்சம் தள்ளி வைத்து படிக்கவும். தூசு தட்டப் போகிறேன். ஆரம்பத்திலேயே தும்மி வைக்கப் போகிறீர்கள், வம்பு,

    அபசகுனமாகிவிடும் யூ நோ.

    டைரியா இது?

    படுக்கை மாதிரி எவ்...ளோவ் பெரிசு!

    ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு நாவலே எழுதலாம் அவ்ளோ...வ் பெரிசு!

    ‘நினைவிருக்கிறதா அனு’ என்று ஆரம்பிக்கிறது ஒரு எபிஸோட்.

    நீ உன் பம்பாய் மாமா வீட்டாரோடு என் வீட்டில் இரவு தங்கினாய். நீயும் நானும் பெருமூச்சுகளாக விட்டுக் கொண்டிருந்தோம், தூங்காமல்.

    நடுராத்திரி இரண்டு பேருக்கும் ஒரேசமயம் தாகமெடுத்தது.

    சமையலறை விளக்கை போடாமலே தண்ணீர் குடிக்கப் போனோமே! நான்கூட கேட்டேனே என்னடி இது? மெத் மெத்துன்னு

    ச்சீய் என்று சிணுங்கியபோது இருட்டில்கூட நீ அழகாக இருந்தாய்.

    … என்று ஆரம்பிக்கிறது.

    இந்த கதை வேண்டாம் மிஸஸ் சிவசங்கரி!

    அவள் ரொம்பவும் மோசம். போனிலும், நேரிலும், கணிசமாக காதலை வளர்த்து விட்டு அப்புறம் அண்ணா சொன்னான், ஆட்டுக்குட்டி சொன்னான் என்று வேறு ஆளை கல்யாணம் பண்ணிக் கொண்டு போனவள்.

    அவள் கதையை சொல்ல புகுந்தால் பெண்களை மிகவும் மட்டம்தட்டி எழுத வேண்டி வரும். அப்புறம்,

    லஷிமியம்மா கட்டையை எடுத்துக் கொண்டு என் தலையை தேடி வருவார்.

    ஆங்! இதோ என் ‘களுதை’யின் கதை-என் செல்ல ‘குட்டி களுதை’

    அவள் பாஷை உங்களுக்கு புரியாது மிஸ்டர் கண்ணன்!

    ‘கடை உள்ளே நீதான் காப்பி ஆத்தனும்’ என்றால் அர்த்தம் புரியுமா உங்களுக்கு? நோ. நீங்கள் நினைப்பதல்ல அவள் சொன்ன அர்த்தம்.

    கடவுளே! நீதான் காப்பாத்தனும் என்பதன் சிதைந்த (சிரிப்பு காரணமாக) மரூவூ சொல் அது.

    நோ. அவள் மலையாள வாய் பேசிய தமிழை இன்னமும்கூட ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். ஆராய்ச்சி முடியட்டும். அப்புறம் சொல்கிறேன் அவள் கதையை.

    ‘நான் தேடிப்போனபோது அவள் பூஜை நடத்திக்கொண்டு இருந்தாள். படுக்கையில் இருப்பாள் என்று எதிர்பார்த்து நான் வர அவள் படையலிட்டுக் கொண்டிருந்தாள்’.

    இது கொஞ்சம் சுவாரஸ்யமாயிருக்கும் போலிருக்கிறது.

    படிப்போமே!

    வாங்க என்றாள்.

    சுவற்றில் ஒரு சிறுபகுதியில் மஞ்சள் பூசி வெள்ளை சிகப்பில் கோடு நிமிர்த்தி இழுத்துவிட்டு குங்கும பொட்டிட்டு இருந்தாள்.

    தயங்கினேன்.

    பூஜை பண்ணுகிறாப்பல இருக்கு

    உதடு விரிய சிரித்தாள். ஆமா பூஜைதான். ஆனா அதுக்கு நீங்க நிற்கத்தான் வேணுமின்னில்லே. உட்காருங்களேன்.

    தரையில் அமரப்போனவனை கையமர்த்தி தடுத்தாள்.

    இதென்ன புதுப் பழக்கம்? கட்டில்லேயே உட்கார்றது.

    புறப்பட்டேன்.

    என்ன அதுக்குள்ளே புறப்பட்டாப்பலே?

    சமயம் சரியில்லேன்னு நினைக்கிறேன்; இன்னொரு நாள் ஆகட்டும்.

    ஏன்? இந்த சமயத்துக்கென்ன வந்தது? உட்காருங்க ஐயா என் தோளை தொட்டு அழுத்தி அமர்த்த முயன்றவள் தயங்கி விலகினாள். நான் தொட்டுக்கக் கூடாது, நீங்களே உட்கார்ந்துக்குங்க.

    தயக்கத்துடன் கட்டிலில் அமர்ந்து கொண்டேன்

    இருங்க வரேன். என்றவள் வெளியேறிப் போனாள்.

    சரியாக பத்தே நிமிடத்தில் ஒரு பெண்னோடு வந்து நின்றாள் இன்னைக்கு இவளோட அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.

    தயங்கினேன்.

    பரவாயில்லிங்க. என்னாலே இன்னைக்கு முடியலேங்கிறதுக்காக என் வீட்டு வாடிக்கைக்காரரை வேற வீடு போகவிடக்கூடாது. அது தொழிலுக்கு நல்லதில்லே.

    அந்த புதுபெண் மார்பு சேலையை நழுவவிட்டு உட்கார்ந்தாள். ஜாக்கெட் பித்தான்களை அவள் கழட்ட முயலும் போது தடுத்தேன். இரு

    படையல் இலையில் சாதத்தை அள்ளி அள்ளி வைத்துக் கொண்டிருந்தவள் கேட்டாள். ஏங்க?

    பூஜை நடக்கிற இடத்திலே இது தப்பு.

    இதிலென்ன தப்பு? இந்த வீட்டிலே நடக்கிற விஷயம் அந்த ஆண்டவனுக்கு தெரியாதா? இல்லே என் தொழிலைப் பத்திதான் தெரியாதா? நீ ஆகட்டும் சாமி.

    என்ன பூஜை இது? என்றேன் வியப்புடன் சங்கடமாக,

    என் புருஷனுக்கா.

    அதிர்ந்தேன் புருஷனுக்கா? எப்ப தவறி போயிட்டார்?

    முறைத்தாள். பிறகு கலங்கினாள். கன்னத்திலே போட்டுக்குங்க. அவர் இன்னும் உயிரோடதானிருக்காரு. இன்னொரு பொண்ணை கட்டிகிட்டு சொகமாயிருக்காரு. அவருக்கு நல்லது நடக்கணுங்கிறதுக்காக வருஷத்துக்கொரு தடவை நோம்பு கும்பிடுவேன்.

    அடிப்பாவி. புருஷன் உயிரோட இருக்கறச்சேயேவா, அடுக்குமா இது?

    அதிலே என்ன தப்பு? புருஷனை விட்டுட்டு வந்துட்டா அதுக்காக அவருக்கு நல்லது கேட்டு பிரார்த்தனை பண்றது கூட தப்பாயிடுமா?

    அதில்லே. இந்த தொழிலை சொன்னேன்.

    அதுக்கு கராணமிருக்கு.

    அவள் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அதை வைத்தே இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1