Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sammanthi
Sammanthi
Sammanthi
Ebook103 pages37 minutes

Sammanthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாஜி எம்.பி சண்முகவடிவேலன், முந்திரிப் பருப்பு கடத்தல் விவகாரத்தில் அவருடைய மகளான நித்யா பிணை கைதியாக மாட்டிக்கொள்கிறாள். நித்யாவும், அவள் காதலன் சுரேஷும் வழக்கம்போல் சந்திக்கும் ஆற்றங்கரையில் நடக்கிறது அந்த பயங்கரம். எதிர்பாராத விதமாக நீர்மூழ்கிக் கப்பலில் மூழ்கிப் போகிறாள் நித்யா. அவளைக் காப்பாற்ற சண்முகவடிவேலன், சுரேஷ், சுரேஷின் தந்தையான சுப்ரமணியம் எடுக்கும் முயற்சிகள் என்ன? இவர்களின் முயற்சியில் நித்யா காப்பாற்றப்பட்டாளா? அப்படி என்ன இருக்கிறது அந்த முந்திரிப் பருப்பில் வியாபாரத்தில்? அதற்காக நடக்கும் திட்டங்கள் என்ன? இறுதியில் கடத்தல் கும்பலை கைது செய்தார்களா? வெள்ளந்தியான மனிதர்களின் வேடிக்கை தனமான உரையாடல்களை வாசித்து தெரிந்துக் கொள்ளலாம்...

Languageதமிழ்
Release dateMar 19, 2022
ISBN6580152608162
Sammanthi

Read more from Rajendrakumar

Related to Sammanthi

Related ebooks

Reviews for Sammanthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sammanthi - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    சம்மந்தி

    Sammanthi

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அடர்த்தியாக ஓடும் அந்த காட்டாறு கடலோடு காதலுடன் சங்கமிக்கும் இடத்தில் - அந்த படகு நின்றிருந்தது. வார்ப்பட இரும்பினால் ஆன கனமான படகு.

    கரையில் கன்னாபின்னாவென்று இறைந்துகிடக்கும் பாறைகளுக்கு நடுவே நெருங்கிப்போய் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய நிழலான இடத்தில் மறைவாக நின்றிருந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல். (இதுதான் சரியான வார்த்தை).

    உள்ளே இருந்தவர்கள் இரண்டுபேர் மட்டுமே. ஒருவன் முகத்தில் அபரிமிதமான பயம் இருந்தது.

    ஓட்டுநர், இயக்குநர் எல்லாம் அவனே.

    ‘போலீஸ்’ என்ற வார்த்தையைக் கேட்டால் உடனே ‘சொய்யா’ என்று படகை நீரில் அழுத்தி ஓடி மறையவைக்கத் தயாராக தெரிந்தான்.

    நாற்காலி நுணியில் எந்த நிமிஷமும் எழுந்து ஓட தயாராக இருந்தான் அந்த இன்னொரு ஆள். அவன் முகத்திலும் கவலையும் பீதியும் கணிசமாக இருந்தது.

    கையிலிருந்த வாக்கி-டாக்கியை எடுத்து இயக்கினான்.

    உறுமலுக்குப்பின் குரல் வந்தது. என்னாப்பா?

    வந்திடுச்சா?

    முந்திரி பருப்புதானே? வந்ததும் சொல்றேனே.

    ஊசி மிளகா வந்தாலும்...

    சொல்றேம்ப்பா. வந்த குரலில் சலிப்பும் அலுப்பும் தெரிந்தன. வந்துச்சின்னா உடனே நானே தகவல் சொல்றேனே. சும்மா சும்மா உன் வாக்கி-டாக்கியை கத்தவிடாதே. அது வேற வொய்...ய்...யீங்குது. ஏன் ஏழு வயசு பய சந்தேகமா நான் உட்கார்ற இடத்தை பார்க்கறான். உன் வாக்கி-டாக்கி சவுண்டு அப்பிடி. இங்கே வேற நிறைய ஆளுங்க கீளுங்க. பாதிக்குது.

    முந்திரி பருப்பு வருமா?

    வரும்ப்பா. ஆளை உடு என்றவனை தொடர்ந்து பேச்சு நின்றது.

    ஓசையும் அடங்கியது.

    காத்திருந்தார்கள்.

    முந்திரிப்பருப்புக்காக.

    (அதென்ன அது முந்திரிப்பருப்பு?)

    (உய் ரகசியம்.)

    காபி இருக்கா பாரு. என்றான் ஓட்டுநர். பசியோடு பார்த்தான்.

    2

    ஆடம்பரமான அந்த ஏழடுக்கு மாடி ஆபீஸின் அட்டகாசமான கான்ப்ரன்ஸ் ஹாலில் போர்டு மீட்டிங் நடந்துகொண்டிருந்தது.

    ஏ.ஸி. சாதனத்தின் ஓசையுடன் போட்டி இட்டது சுப்ரமணியத்தின் இதயத்தின் லப் டப் ஓசை! அவசரத்தினால் தவித்தார். நிம்மதியில்லாமல் சுற்றிலும் பார்த்தார்.

    எரிச்சலாக,

    பழனியே, என் அருமை யூனியன் தலைவனே! நீ கண்டுபிடித்த புள்ளிவிவரக் கணக்கை கொஞ்சம் சீக்கிரம் முடியேன். மனத்துக்குள் புலம்பினார். நான் அவசரமா வெளியே போயாக வேண்டும்."

    நிழலான காரியம் ஒன்று நடப்பதாக எனக்குத் தகவல் வந்து இருக்கிறது. நேரிலே போய்க் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். அவசரத்திலிருக்கிறேன். பெருமாளே. பேச்சை நிறுத்தேன்.

    "அன்புள்ளவரே. ஆடிட்டர் சி.ஆர். அவர்களே, நஷ்டக் கணக்கைக் காட்டப்போவதென்னவோ நிஜம். தீர்மானிக்கப்பட்ட விஷயம். அதற்கு மணிக்கணக்கில் பேச வேண்டுமா என்ன?

    பதினோரு லட்சம் ரூபாய் லாபத்தை மறைத்து மூன்று லட்சம் நஷ்டம் காட்டி ஆகையால் இந்த வருஷம் சட்டம் சொல்லும் போனஸ்தான். அதிகம் கிடைக்காது. சம்பள உயர்வு இல்லை. பாடுபட்டு உழையுங்கள். அடுத்த வருஷமாவது எதிர்பாருங்கள். என்று சொல்லி கதையை முடிக்காமல் இதென்ன வழவழா பேச்சு?"

    நான் அவசரமா ஓடணும் சாமி என்று சொல்ல நினைத்தும் சொல்லாமலிருந்தார்.

    மனசுக்குள் இவர் புலம்பியது அவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லாத காரணத்தால் பேச்சுகள் நீண்டுகொண்டே போயின கூச்சலாக.

    போகிற போக்கைப் பார்த்தால் போர்டு மீட்டிங் நாளை காலை ஆறு மணிக்குதான் முடியும் போலிருந்தது,

    அவர் பொறுமை உடைந்தது.

    ஆஹா நெஞ்சை பிடித்து தடுமாறி எழுந்து மேஜைமீது சரிந்து விழுந்து துடிக்க ஆரம்பித்தார்.

    சார்... சார்... அவரைப் பாருங்க...

    என்ன சார்? என்ன ஆச்சு சார்? என்று தலைக்கு தலை கூவ,

    அமளி. ஒரே அமளி.

    நெஞ்சு வலி, திடீர் நெஞ்சு வலி. பக்கத்தில் விழித்தவாறு நின்ற ஸ்வப்னாவை பார்த்து அலறினார். என் காரியதரிசி என்கிற பெண் யந்திரமே! சும்மா ‘ஙே’ என்று விழிக்காமல் ப்ரீஃப்கேஸில் இருக்கிற மாத்திரையை எடு எடு. சீக்கிரம்.

    அவரது காரணமில்லாத திடீர் கோபத்தால் பாதிக்கப்பட்ட அந்த ஸ்வப்னா அவசரமாக அவரது கறுப்புப் பெட்டியை திறந்து ஆராய்ந்தாள். தேடினாள்.

    சீக்கிரம். சீக்கிரம். இடதுபக்க ஓரமாக இருக்கும் நீல சீசா, எடு. எடு.

    அவசரமாக அவள் எடுத்த சீசாவை ஆட்டிப் பார்த்தாள். காலி!

    மை காட்! சார். ஒரு மாத்திரைகூட இல்லையே சார். என்றாள் அழுகையாக.

    ஓ மை குட்னஸ்! புது புட்டியை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன் போலிருக்கே. ஆண்டவனே! இப்ப என்ன பண்றது.

    மூச்சுத் திணறலாக எழுந்து நின்று மடிந்துகொண்டார்.

    மன்னிக்கணும். இப்ப என்ன பண்றது? மீட்டிங்கை தள்ளி வைப்போமா? இப்பவே நீங்க தொடர்றீங்களா?

    அதென்ன பேச்சு?

    Enjoying the preview?
    Page 1 of 1