Marupadiyum Maranam
()
About this ebook
சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு கோவா வருகிறாள் மரியா டிசெளசா. வந்தவள் வீட்டுக்கு போகாமல் மங்கேஷ் டெம்பிள் செல்கிறாள். அசைவ விரும்பியானா அவள் எதிர் வீட்டு பாகீரதி அம்மாளில் சைவ சமையலை விரும்பி உண்கிறாள். அந்த நேரத்தில் பாகீரதியின் மகள் காயத்ரி பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட தகவல் வருகிறது. அதன் பின் பல மர்மமான கொலைகள் நடக்கின்றன. கொலைக்கான காரணம் என்ன? அக்கொலைகளை செய்தது யார்? இந்த திகில் நிறைந்த அமானுஷ்ய கதையை வாருங்கள் வாசித்து தெரிந்து கொள்வோம்...!
Read more from Rajendrakumar
Innamum Brammachari Rating: 5 out of 5 stars5/5Naan Oru A Rating: 0 out of 5 stars0 ratingsKollathey Yaarum Paarthal! Rating: 0 out of 5 stars0 ratingsOre Naal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsNee? Neeya? Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Ore Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsJulie Kodutha Vilai Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsThanimara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsStraw- Oru Extra Rating: 0 out of 5 stars0 ratingsSammanthi Rating: 0 out of 5 stars0 ratingsEthuvarai Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Ingey! Iravil Engey? Rating: 0 out of 5 stars0 ratingsVaalgal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhalala Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Theriyum Suganthi Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsOomai Karu Rating: 0 out of 5 stars0 ratingsRayilil Vantha Mayil Rating: 0 out of 5 stars0 ratingsKathavukku Irupuramum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsBairavan Azhaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsKonal Nizhalai Thurathi! Rating: 0 out of 5 stars0 ratingsIranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Uravugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marupadiyum Maranam
Related ebooks
Marupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsIranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsNiram Marum Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Abaayam Rating: 3 out of 5 stars3/5தட்டுங்கள் இறக்கபடும்...! Rating: 0 out of 5 stars0 ratingsThattungal Irakkapadum Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsVasudeva Kudumbagam Rating: 0 out of 5 stars0 ratingsIndre Kadaisi! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaadugale..! Rating: 4 out of 5 stars4/5Meendu(m) Varuven Rating: 0 out of 5 stars0 ratingsInbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Layam Thedum Thaalangal Rating: 5 out of 5 stars5/5கோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Purattasi, Aippasi, Kaarthiga Rating: 0 out of 5 stars0 ratingsOozhikkaala Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Thisaigal Rating: 0 out of 5 stars0 ratingsThodathoda Malarnthathenna...! Rating: 0 out of 5 stars0 ratingsIniya Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kann Theduthey Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Devathai... Rating: 4 out of 5 stars4/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Avalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsPathaiyorathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsRamar Paatham Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsThevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsKangal Irandum Unnai Kaanumo? Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Marupadiyum Maranam
0 ratings0 reviews
Book preview
Marupadiyum Maranam - Rajendrakumar
https://www.pustaka.co.in
மறுபடியும் மரணம்
Marupadiyum Maranam
Author:
ராஜேந்திரகுமார்
Rajendrakumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajendrakumar
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
படீரென்று வெடித்து வரும் சூரியக் கதிர்களைப் போல அந்தப் பயங்கரம் கோவாவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அது தெரியாமல் ஆண்டினோ சர்ச்சின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார் மிஸஸ் டிசௌசா.
சற்றே பருத்த சரீரம். கோவானியர்களுக்கேயுரித்தான தொளதொளா கவுன். இடுப்பில் கட்டியவாரினால் அவர் உருவம் ஒன்றும் ஒல்லியாகவில்லை.
இடுப்பிலிருந்த அபரிமிதமான வளைவு எப்போதோ மறைந்து போயிருந்தது.
நாற்பதைக் கடந்துவிட்ட உடம்பு மோவாயில் டபுள்சின் சதை தொங்கி, முகத்தில் லேசான சுருக்கம் படரத் துவங்கிவிட்டிருந்தது.
அவசரத்திலிருந்தார்.
மரீயா வருகிறாள்... சென்னையிலிருந்து பம்பாய் பிளைட்டுக்குப் போய் கோவா வருகிறாள்.
லஞ்சுக்கு இல்லையானாலும் டின்னருக்கு வந்து விடுவாள்.
அவளுக்காக விசேஷச் சமையல் செய்ய வேண்டும்.
மார்க்கெட்டுக்குப் போய் புதியதான வஞ்சிரம் மீனும், இறாலும் வாங்க வேண்டும் அவளுக்குப் பிடிக்கும்.
‘ஸீஃபூட் சாப்பிடணும்னா, மம்மீ உடனே உன்னைத் தேடி கோவா வந்துடுவேன்!’ என்பாள் அடிக்கடி.
கடைசிப் படியிறங்கும்போது எதிரே தார்ப்பாய்ச்சு கட்டிய புடைவையும், தலையில் கூடையுமாகப் போன பெண்ணைக் கூப்பிட்டாள். அகோ...
நின்று திரும்பினாள் அம்மாள். காய்கே? ஸாங்?
என்றாள் கொங்கணியில்.
கொங்கணி பாஷை எனக்கு வரும். மாட்டர் ஆஃப் பாக்ட் இந்தத் தமிழ் எழுத்தாளனின் தாய்மொழியே கொங்கணிதான்.
இந்தத் தொடர்கதையில் வரும் சிலரைத் தவிர மற்றவர்கள் கொங்கணியில்தான் பேசுகிறார்கள்.
அவர்கள் பேசுவதை அப்படியே எழுத நான் தயார். ஆனால் தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் படிக்க நீங்கள் தயாரா?
எதற்கு அந்த வம்பெல்லாம்? பேசாமல் தமிழிலேயே எழுதி விடுகிறேன். இடையிடையே வரும் புரியாத கொங்கணியைக் கொண்டு அவர்கள் பேசுவது அந்த பாஷை என்று உணர்க!
அவர் பதிலுக்காகக் காத்திருந்து சலித்துப் போன அந்த மீன்காரி சலிப்புடன், கசலா?
என்று கேட்டதும் தான், கேட்டார்:
மார்க்கெட்டில் என்ன மீன் வந்திருக்கிறது?
பாங்கடே அஸா...
என்றாள். (அயிலை மீன் மட்டும் இருக்கிறதாம்)
ஜாய்கே...
என்று அவளை அனுப்பிவிட்டு, பொடிநடையாக மார்க்கெட் நோக்கி அவரே போனார்.
போகும் வழியில் துணிக்கடையிலிருந்து வெளிப்பட்ட பாகீரதியைப் பார்த்ததும் தமிழில் பேச ஆசைப்பட்டார்.
என்ன காயத்ரீ…?
பாகீரதி... என் பொண்ணு பெயர்தான் காயத்ரீ.
ஓ! ஆமா... ஆமா. வீட்லே என்ன டிபன் ஹுக்குமா?
‘ஹுக்குமா அல்ல உப்புமா’ என்று சொல்ல ஆசைப்பட்ட பாகீரதியம்மா, ‘அது வீண்வேலை’ என்று தெரிந்ததும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே போனாள்.
மிஸஸ் டிசெளசா விதவை, இனிய பதினேழு வயது மரீயாவுக்கு அம்மா.
கணவனில்லாததற்காகப் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர். காரணம், அவர் கணவனான பெஞ்சமின் டிசௌசா மீன் வியாபாரத்தில் சேர்த்து வைத்த வெள்ளையும் கறுப்புமான நிறைய பணம்.
கடற்கரையைப் பார்த்தவாறு இருக்கும் பங்களா. அந்த நாளிலேயே பதினேழாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
இப்போது நட்சத்திர ஓட்டல் கட்டும் ஆசையுள்ள பம்பாய்க்காரர். இரண்டு லட்சத்தில் ஆரம்பித்து இப்போது பன்னிரண்டு லட்சம் வரை வந்துவிட்டார்.
"சல்ரே பாக்...’’ என்று துரத்திவிட்டார்.
‘எதற்குப் பணம்’ என்கிறார். இருப்பதோ ஒரே பெண். அதையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
விடுமுறை அல்லது ஸ்டிரைக் வந்தால் உடனே புறப்பட்டு கோவா வருவாள்... அட்டகாசமாகப் பத்து நாளிருந்து பதினோராவது நாள் குதித்துக் கொண்டே போவாள்.
இப்போதும் வருகிறாள்.
அம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இரவு சந்திக்கப்போகும் பயங்கர அதிர்ச்சியை உணராமலே மார்க்கெட்டுக்குப் போய் நிறைய சண்டை போட்டு பிளாஸ்டிக் பக்கெட்டில் பாதிவரை மீன் வாங்கி வந்தாள்.
***
டபோலீன் விமானதளம் நோக்கிப் போகும் சாலையில் காற்றைக் கிழித்துப் பறந்து கொண்டிருந்தது அந்த மோட்டார் பைக்.
ஓட்டியவன் ஜோசப் மாக்னீஃபிக். அவன் சரிதம் சுருக்கமாக...
கோவா பிரெஞ்சுக்காரர்களிடமிருந்த போது இவன் மூதாதையர் பாரிஸிலிருந்து இங்கே வந்து பழைய கோவாவில் தங்கி இவன் பாட்டனார் காலத்தில் ப்ளேக் நோய்க்குப் பயந்து பஞ்சீமுக்கு மாறியவர்கள்.
இவன் பிறக்கும்போது பஞ்சீம் பொனாஜியாகி வளர்ச்சி பெற்ற நகரமாகிவிட்டிருந்தது.
இவன் அப்பா கோவா விடுதலைப் போரில் கலந்து போர்ச்சுக்கீசிய அரசுக்குப் பயந்து பெல்காம் காடுகளில் ஒளிந்திருந்ததாகக் கேள்வி.
இப்போது தனது அடுத்த தலை முறையை உருவாக்கத் தயாராகியிருக்கிறான்.
காதலிக்கிறான்.
டிஜிடல் வாட்சைப் பார்த்துப் பதறி வண்டியின் ஓட்டத்தை மேலும் துரிதப்படுத்தினான்.
சுற்றிக் கண்ணுக்கெட்டுமளவுக்குத் தெரிந்த பசுமை அழகை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை.
அவனது இனிய இதயத்தை ஏந்திய ஏரோப்பிளேன் இந்நேரம் பஞ்சுப் பொதி போன்ற மேகக் குவியலைக் கிழித்து தரை நோக்கி இறங்க ஆரம்பித்து இருக்கும்... அது தரையைத் தொடுமுன்,
இவன் டபோலீன் ஏர்போர்ட்டிலிருக்க வேண்டும். இருந்தேயாக வேண்டும்! இல்லாவிட்டால் காதலி மரீயா டிசெளசா கத்துவாள். பேசவோ, தொடவோ அனுமதிக்காமல் அடம்பிடிப்பாள்.
வம்பு!
***
நான்கு மணி சுமாருக்கு யாரோ கதவைத் தட்டியது போலிருக்க,
கதவைத் திறந்த பாகீரதி மாமிக்கு வியப்பு வந்தது. அவள் மகள் காயத்ரீ அவசரமாகப் பக்கத்து வீட்டில் நுழைவது தெரிந்ததும் வியந்தாள்.
அடீ காயத்ரீ! அங்கே எங்கேடீ போறே? மகள் வருகிற சந்தோஷத்துல கண்டதை சமைச்சுக்கிட்டிருப்பா, வாடி!
பதிலே இல்லாமல் போகவே, இவளே பச்சை மீன் வாசனைக்கு மூக்கைப் பொத்திக் கொண்டு போனாள். மிஸஸ் டிசௌசா! காயத்ரீ வந்தாளா?
இல்லையே!
நான் பார்த்தேனே... இங்கேதானே நுழைஞ்சா...
என்றவளுக்கு நினைப்பு சுரீரென்றது.
காயத்ரீ எப்படி இங்கு வரமுடியும்?
‘நேற்று பிளேனில்தானே பெங்களூர் புறப்பட்டுப் போனாள்! அதெப்படி இன்றைக்கு இவ்வளவு சாதாரணமாகப் பக்கத்து வீட்டுக்குள் போகமுடியும்?’
நான் கனவிலிருக்கிறேன்.
மிஸஸ் டிசௌசாவிடம் சொல்லாமலே திரும்பினாள்.
***
பெட்ரோலை நிரப்பிவிட வண்டியை ஒப்படைத்து விட்ட ‘ஜோ’ அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கலைந்தும் சேர்ந்தும் மின்னலைப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. இடிகள் உருண்டு புரண்டு மறைந்து அட்டகாசமாக்கிக் கொண்டிருந்தன.
‘நான் அண்ணாந்து பார்க்கும் இதே மேகங்களை அவள் விமான முட்டை ஜன்னல் வழியாகக் குனிந்து பார்க்கிறாள்!’
நினைத்துக் கொண்டவனுக்குச் சிரிப்பு வந்தது. மழை வரும் போலிருக்கிறது. எனக்கு மட்டும்தான். ஹெல்மட்டும், ஜெர்கின்ஸும் இருக்கிறது. அவள்?
நனையப் போகிறாள். சிரித்துக் கொண்டவன் வண்டியைப் பிடுங்கிக் கொண்டு ஏர்போர்ட் வாசலில் நின்றான். உள்ளே போய்க் காத்திருந்தான்.
இந்தியா டூரிஸம் மேஜை பெண் சோம்பலாக சூயிங்கத்தை மென்றாள்.
விமானத்திலிருந்து இறங்கி வரும் கும்பலில் அவள் தனியாகத் தெரிந்தாள்.
நடந்து வரும் பெண்ணா? பறந்து வரும் தேவதையா? என்பதே தெரியாத அளவு கவர்ச்சியாக வந்து கொண்டிருந்தாள்.
கையசைத்துக் கத்தினான்: மரீயா!
அவள் பார்த்த பார்வையில் குபீர் உற்சாகம் வந்தது.
ஓடிவந்து பெட்டியை வைத்து அவன் கழுத்தில் தொங்கினாள். அவனும் இறுக அணைத்து உயர்த்த அவள் கால்கள் அந்தரத்தில் தொங்கின.
அவள் உதட்டைக் கவ்விக் கொண்டு பின் அவளை நழுவ விட்டுக் கேட்டான்: லக்கேஜ்?
"இந்த சின்னப் பெட்டிதான். எனக்குத் தெரியும்