Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indre Kadaisi!
Indre Kadaisi!
Indre Kadaisi!
Ebook137 pages47 minutes

Indre Kadaisi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Indre Kadaisi!

Read more from Rajeshkumar

Related to Indre Kadaisi!

Related ebooks

Related categories

Reviews for Indre Kadaisi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indre Kadaisi! - Rajeshkumar

    11

    புலி இரையைத் தாக்கும்போது தன் முன்னங்கால்களை ஒரே சமயத்தில் உயர்த்தித் தாக்கும்.

    கூண்டில் பிறந்த புலியைவிட காட்டில் பிறந்த புலியை எளிதாக பழக்க முடியும்.

    தண்ணீரில் விரைந்து அழகாக நீந்தக்கூடிய விலங்கு புலி.

    1

    ஃப்ளைட் ஜிவ்வென்று கீழே இறங்குவதை உணர்ந்தாள் ராகினி. எலிப்ஸ் வடிவ ஜன்னலில் ரன்வே ப்ரவுன் கார்ப்பெட்டாய்த் தெரிந்தது. திரும்பி - சரியாய் ஐந்து மணி நேரத்துக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பழக்கமான மந்தாகினியின் தோளைத் தொட்டு உசுப்பினாள்.

    மந்தாகினி கண்ணைத் தேய்த்தாள்.

    இன்னும் தூக்கமா? மெட்ராஸ் வந்தாச்சு.

    அவள் முகத்தைக் கையால் வழித்துவிட்டு மணிக்கட்டைப் பார்த்தாள். சீக்கோவின் வண்ண டயலின் மேல் ஓடிப்பிடித்துக் கொண்டிருந்த முட்கள் 5.55ஐக் காட்டின.

    இப்பதான் ஃப்ளைட் ஏறின மாதிரி இருக்கு. நேரம் போனதே தெரியலை.

    இப்படி இமாலயத் தூக்கம் போட்டுட்டு வந்தா நேரம் போறது எப்படித் தெரியும்? எனக்கு தூக்கமே வரலை. செமத்தியான போர்.

    சொன்ன ராகினி அந்த நிமிஷம் கிழக்கு வான விளிம்பில் உதயமாகிக் கொண்டிருந்த புதுச் சூரியனின் இளம் மஞ்சள் நிறத்தை அப்படியே பெற்றிருந்தாள். பளபளவென்றிருந்த தலைப்பிரதேசத்திலிருந்து ஒரு கொத்து முடிக்கற்றை அவள் கன்னப்பரப்பில் வந்து விழுந்து, முகத்துக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

    ப்ரீஃப்கேஸை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மந்தாகினியைப் பார்த்துக் கேட்டாள்.

    உன்னை ரிசீவ் பண்றதுக்கு யாராவது வருவாங்களா?

    ம். என்னுடைய ஹப்பி வருவார். இந்த ஆறு மாசத்துல ரொம்பவும் தவிச்சுப் போயிருப்பார்! உன்னை ரிசீவ் பண்ண யார் வருவாங்க?

    அப்பா வருவார். அப்புறம்...

    சில விநாடி நிதானித்துவிட்டு ராகினி மறுபடியும் சொன்னாள்.

    இன்னொருத்தரும் வரலாம்.

    இன்னொருத்தர்?

    கேட்டபடி நிமிர்ந்து அவளை ஏறிட்ட மந்தாகினி, அவளின் செர்ரிப்பழமாய் சிவந்து போயிருந்த முகத்தைப் படித்துவிட்டுப் புன்னகைத்தாள்.

    என்ன காதலா?

    ம்.

    உங்க ஃபாதருக்கு இந்தக் காதல் விவகாரம் தெரியுமா?

    இது வீட்டுக்குத் தெரியாத காதல்!

    இன்ட்ரெஸ்டிங். அவர் பேரென்ன?

    சுதாகர்.

    என்ன பண்ணிட்டிருக்கார்?

    சொந்தமா பிஸினெஸ்.

    அவரோட பேரன்ட்ஸுக்கு தெரியுமா!

    அவருக்கு அம்மா மட்டும் இருக்காங்க. கிராமத்தில் இருக்கிற அவங்களுக்கும் இந்த விஷயம் தெரியாது. இந்தத் தடவை எல்லாருக்கும் தெரியப்படுத்தி மேரேஜுக்குத் தலையாட்ட வைக்கணும்.

    புன்னகையோடு ராகினி சொன்னபோது, விமானம் நின்று மற்ற பயணிகள் இறங்க ஆரம்பித்ததை உணர்ந்தார்கள். எழுந்தார்கள். இணைக்கப்பட்ட ஸ்டேர்ஸில் சரிந்தார்கள்.

    லவுஞ்சுக்கு வந்தபோது அந்தக் குரல் கேட்டது.

    மந்தாகினி...

    மந்தாகினி திரும்பிப்பார்த்து, குப்பென்று சந்தோஷத்துக்குப் போனாள்.

    ராகினி...! என் ஹப்பி வந்துட்டார்.

    ராகினி திரும்பிப் பார்த்த பக்கம், ஜெர்கின் அணிந்திருந்த - கையில் ஹெல்மெட்டை அதக்கியிருந்த - மந்தாகினியின் கணவன் தெரிந்தான். ரிசீவ் பண்ண லவுஞ்சில் காத்திருந்த ஏராளமான ஜனங்களிடையே அவன் பளிச்சென்று தெரிந்தான்.

    மந்தாகினி சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு அவன் கையைப் பற்றினாள். ஆறுமாதமாய்ப் பிரிந்துவிட்ட ஏக்கம் - இரண்டுபேரும் அழுத்தமாய்க் கையைப் பற்றியிருந்த விதத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. சுற்றுச் சூழ்நிலையில் யாருமே இல்லாமலிருந்திருந்தால் ஒரு டூயட் பாடுகிற வேகம் இருந்தது.

    ஜர்னி எப்படி இருந்தது?

    நல்லா தூங்கிட்டேன்.

    நீ வரப்போற சந்தோஷத்துல நாலுநாளா எனக்குத் தூக்கமே சுத்தமா இல்லை தெரியுமா?

    ‘க்கும்’ என்று தொண்டையைச் செருமினாள் ராகினி.

    சுதாரிப்புக்கு வந்தாள் மந்தாகினி.

    உங்களைப் பார்த்த சந்தோஷத்துல மறந்துட்டேன். இது மிஸ் ராகினி. சிங்கப்பூர் ஏர்போர்ட்ல பழக்கம். ஜர்னில ராகினிதான் எனக்கு கம்பெனி.

    தூங்கறதுக்கா?

    மூன்று பேரும் சிரித்தார்கள்.

    அவர்களோடு பேசிக்கொண்டே ராகினி லவுஞ்ச் முழுக்க பார்வையைச் சுழலவிட்டாள். அப்பா ஜகதீஸ்வரனைத் தேடினாள்.

    மந்தாகினியின் கணவன் விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான்.

    மிஸ் ராகினி. எங்க ரெஸிடென்ஸ் அட்ரஸ் கார்ட்ல இருக்கு. அவசியம் ஒரு நாள் வீட்டுக்கு வரணும்.

    ராகினி தலையசைத்தாள்.

    கண்டிப்பா.

    உங்க அப்பா இன்னும் வரலை போலிருக்கு?

    வந்திடுவார். நீங்க புறப்படுங்க.

    அவர்கள் இரண்டு பேரும் நகர்ந்தார்கள். ராகினி கும்பலில் பார்வையைத் துரத்தினாள். நீளமாய் ஒரு நடை நடந்துவிட்டு மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே வந்தாள். லக்கேஜ் மேலேயே சோர்வாய் உட்கார்ந்து கொள்ள - யாரோ அவள் தோளைத் தொட்டார்கள்.

    திரும்பினாள்.

    கண்களில் எக்கச்சக்க கலோரி சந்தோஷம்.

    ஹாய், சுதாகர்.

    ராகினி!

    ராகினி பயமாய்க் கண்களைச் சுழற்றினாள்.

    சுதாகர், நாம சாயந்தரம் மீட் பண்ணலாம். அப்பா பார்த்தார்னா தொலைஞ்சோம்.

    பயப்படாதே, உங்கப்பா இன்னும் வரலை.

    எப்படி சொல்றீங்க? இவ்வளவு கூட்டத்தில் எங்கேயாவது இருந்து பார்த்திட்டிருந்தார்னா... பெரிய ப்ராப்ளம் ஆயிடும்.

    "நான் அஞ்சரை மணியிலிருந்து இங்கே இருக்கேன் ராகினி. உங்க அப்பா வரலை. கார் பார்க்கிங்கில் கூட

    Enjoying the preview?
    Page 1 of 1