Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaithen Kondren!
Ninaithen Kondren!
Ninaithen Kondren!
Ebook156 pages47 minutes

Ninaithen Kondren!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ninaithen Kondren!

Read more from Rajeshkumar

Related to Ninaithen Kondren!

Related ebooks

Related categories

Reviews for Ninaithen Kondren!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaithen Kondren! - Rajeshkumar

    1

    பாக்யா ஆபீஸுக்கு புறப்பட்டுப் போகிற அவசர நிமிஷங்களில் இருந்தாள்.

    ஜன்னல் கொக்கியில் மாட்டியிருந்த கையகலக் கண்ணாடியில் முகம் பார்த்து நெற்றிப் பொட்டின் விளிம்புகளை ஒழுங்கான வட்டத்திற்குள் கொண்டு வந்தாள். கண்ணிமைகளை கீழே தாழ்த்தி ஐப்ரோ பென்சிலால் - மெலிதான கருமையை ஏற்றிக் கொண்டாள். பிளாஸ்டிக் தொப்பியைக் கழற்றி உள்ளேயிருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து - சதைபிடிப்பான உதடுகளோடு உறவாட விட்டாள்.

    பாக்யாவுக்கு க்ரீம் நிற உடம்பு. ஆரம்ப கால ஒய். விஜயாவை ஞாபகப்படுத்தும் உடம்புவாகு. எந்த நிறச் சேலையைக் கட்டினாலும் அதனோடு ஒன்றிப் போய் விடுகிற ஸ்பெஷாலிடி பாக்யாவின் உடம்புக்கு.

    சில்பா பிக்மெண்ட்ஸ் கம்பெனியில் - ஆயிரத்து எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் பாக்யாவுக்கு அப்பா இல்லை. ஐம்பது வயசான அம்மா மட்டும். அம்மா கோகிலாம்பாள் ஒரு ஹார்ட் பேஷண்ட். தெரு முனையில் இருக்கும் செளடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு போய்விட்டு வருவதற்குள் ஏராளமாய் வியர்த்து பெருமூச்செறிபவள். ‘பாக்யாவை ஒருத்தன் கையிலே புடிச்சு குடுத்துட்டேன்னா... நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்...’ என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நாளொன்றுக்கு நாலுதரம் சொல்லிக் கொண்டிருப்பவள்.

    பாக்யா தன் மணிக்கட்டிலிருந்த ஹெச்.எம்.டி. வாட்ச்சப் பார்த்துக் கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தாள். சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.

    அம்மா..

    என்னடி...?

    என்னோட டிபன் பாக்ஸ் ரெடியா...?

    ஸ்டூல் மேலே வெச்சிருக்கேன்... எடுத்து பைல வெச்சுக்கோ பாக்யா!

    இன்னிக்கு என்ன சாதம்...?

    தக்காளி...

    நேத்தும் தக்காளி சாதம்... இன்னிக்கும் தக்காளி சாதம்... பாக்யா சிணுங்கிக் கொண்டே தரையைக் காலால் உதைத்தாள்.

    ஏண்டி... சாப்பிட்டா என்ன...? நேத்து வாங்கின தக்காளி இன்னிக்கும் மீந்து போச்சு. அதை உபயோகப்படுத்தலைன்னா... சாக்கடையிலதான் கொண்டு போய் கொட்டணும்...! உங்கப்பா உயிரோடு இருந்த காலத்துல.. அவர் தினமும் காலையில பழையதைத் தான் சாப்பிட்டு வேலைக்குப் போவார். நீ என்னடான்னா தக்காளி சாதத்தை வக்கணையா பண்ணிக் கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்றே...?

    பாக்யா குறுக்கிட்டாள்.

    அம்மா... அம்மா.. நான் சாப்பிட சங்கடப்பட்டுகிட்டு இதைச் சொல்லலை...!

    பின்னே...?

    தினசரி ‘லஞ்ச் அவர்’ல என்கூட உட்கார்ந்து சாப்பிடற டைப்பிஸ்ட் வைஜெயந்தி இன்னிக்கும் தக்காளி சாதத்தோடு போனா கேலி பண்ணுவா.

    நீ அவகூட சேர்ந்து சாப்பிடாதே.

    அவ விடமாட்டாளே... சொல்லிக் கொண்டே டைம்பீஸ் அளவில் இருந்த டிபன் பாக்ஸை எடுத்து தன் டம்பப் பைக்குள் அமுக்கிக் கொண்டு நகர்ந்தாள். மறுபடியும் ஒரு தடவை கண்ணாடியில் முகம் பார்த்து வாசல் கதவோரமாய் விட்டிருந்த ஸ்லிப்பர்களுக்குள் கால்களை நுழைத்துக்கொண்டாள். அம்மா... நான் வர்றேன்.

    இன்னிக்கு வெள்ளிக்கிழமை. சாயந்தரம் தண்டு மாரியம்மன் கோயிலுக்குப் போகணும். ஆபீஸிலிருந்து வர லேட் பண்ணிடாதே.

    டாண்ணு.. அஞ்சு மணிக்கு... உம்.. முன்னாடி நிப்பேன். போதுமா? சொல்லிக் கொண்டே வாசற்படிகளில் இறங்கி... தெருமுனையிலிருந்த பஸ்ஸ்டாப்பை நோக்கி வேகமாய் போனாள். மறுபடியும் மணிக்கட்டில் இருந்த வாட்சைப் பார்த்தாள்.

    அது டிஜிடல் 9.30 என்று ஒளிர்ந்தது.

    சரியாய் ஒன்பதரை மணிக்கு வரவேண்டிய பஸ் இந்நேரம் வந்து கிளம்பியிருக்குமோ...? அடுத்த பஸ்ஸில் ஏறினால் நார்த் கோயமுத்தூர் ரயில்வே கேட்டில் அநியாயமாய் பதினைந்து நிமிஷத்துக்கு மாட்டிக் கொள்வோம்... ஆபீஸிற்கு ஐந்து நிமிஷம் லேட்டாகப் போனாலும் போதும். அந்த மானேஜர் கிழம் உக்கிரமாய் பார்க்கும்.

    பஸ் ஸ்டாப்பை நெருங்கினாள்.

    சொற்ப கும்பல் பஸ்ஸுக்காக தவமிருந்தது. பொடி டப்பியை எடுத்து தன் ஆட்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் மத்தியில் கணிசமாய் காரப்பொடியை அள்ளிக் கொண்டு தன் பீரங்கி நாசிக்குள் நுழைக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர். பெரியாஸ்பத்திரிக்குப் போகக் காத்திருக்கும் ஒரு ஜுரக்கிழவி. மராட்டியில் தன் நான்கு குழந்தைகளை அதட்டிக் கொண்டிருக்கும் ஒரு மார்வாடிப் பெண். ஸ்கூல் யூனிபார்மில் மூன்று தாவணிகள், முகத்தில் நிறைய பருக்களோடு ஒரு கல்லூரிப் பெண்.

    அவர்களோடு போய் இணைந்து கொண்டாள் பாக்யா. அந்த காலேஜ் பெண்ணின் பக்கமாய் திரும்பி கேட்டாள்: நெம்பர் ஸெவன் போயிடுச்சா...?

    இன்னும் இல்லே...

    அம்மாடி.. தப்பிச்சேன். ஆசுவாச பெருமூச்சு விட்டபடி ஷெல்டர்க்குள் நுழைந்தாள். அடுத்த இரண்டாவது நிமிஷம்...

    பஸ் ஒரு பெரிய ஜனக் கும்பலை - தன் உடம்பு பூராவும் அப்பவைத்துக் கொண்டு சிரமமாய் வந்து நின்றது. பாக்யா கும்பலை அறுத்துக்கொண்டு உள்ளே ஊடுருவி - டிரைவர்க்கு பின்பக்கமாய் காற்று சுலபமாய் முகத்தில் வந்து படும் இடத்தில் நின்று கொண்டாள்.

    பஸ் நகர்ந்தது.

    நரகமாய் பதினைந்து நிமிஷ பயணம்.

    சரியாய் 9.45க்கு ஆபீஸ் இருந்த தெரு முனையில் இறங்கிக் கொண்டாள். கக்கத்திலும், பின்னங்கழுத்திலும் சில்லென்று வியர்த்துப் போயிருக்க - வேகவேகமாய் ஆபீஸை நோக்கி நடந்தாள்.

    சில்பா பிக்மெண்ட்ஸ் கம்பெனி நான்கு மாடிக்கட்டடங்களோடு ஆரோக்யமாய் வந்தது. வாசலில் காக்கி யூனிஃபார்ம் தரித்து விசுவாசமாய் குட்மார்னிங் போட்ட செக்யூரிடி கார்டுக்கு ஒரு புன்முறுவலைக் கொடுத்துவிட்டு உள்ளே போனாள். ரிசப்ஷன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய சீட்டை ஆக்ரமித்த விநாடி -

    மேஜையின் மேலிருந்த இண்ட்டர்காம் தன் தொண்டையைக் கமறியது. டம்பப் பையைக் கழற்றி சரித்துவிட்டு ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    "குட்மார்னிங் மிஸ் பாக்யா.

    Enjoying the preview?
    Page 1 of 1