Kathavukku Irupuramum Sorgam
()
About this ebook
பெஞ்சமின் - எஸ்தர் இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் லீசா மற்றும் ஜான். பெஞ்சமின் - டோதரியின் உறவு என்ன? சாத்தான் குழந்தை, பெஞ்சமின் குடும்பத்தையும், உலகத்தையும் அழிக்கக் காரணம் என்ன? சாத்தானை அழிக்கக் கூடிய மூன்று சிலுவைகள் கிடைத்ததா? யார் இந்த ஜூலி? ஜூலியால் நிகழ்ந்த திருப்பம் என்ன? இதனால் பெஞ்சமின் வாழ்க்கையில் கதவுக்கு இருபுறமும் சொர்க்கமாக இருந்ததா? அல்லது நரகமாக இருந்ததா? வாங்க சொர்க்கத்தைத் தேடி...
Read more from Rajendrakumar
Innamum Brammachari Rating: 5 out of 5 stars5/5Nee? Neeya? Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsOre Naal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsKollathey Yaarum Paarthal! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Oru A Rating: 0 out of 5 stars0 ratingsIraval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsStraw- Oru Extra Rating: 0 out of 5 stars0 ratingsThanimara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Ore Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKonal Nizhalai Thurathi! Rating: 0 out of 5 stars0 ratingsJulie Kodutha Vilai Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Ingey! Iravil Engey? Rating: 0 out of 5 stars0 ratingsSammanthi Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsEthuvarai Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsVaalgal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsBairavan Azhaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhalala Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsRayilil Vantha Mayil Rating: 0 out of 5 stars0 ratingsIraval Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Theriyum Suganthi Rating: 0 out of 5 stars0 ratingsOomai Karu Rating: 0 out of 5 stars0 ratingsIranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kathavukku Irupuramum Sorgam
Related ebooks
Nambuvatharkkalla Rating: 4 out of 5 stars4/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Athu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Theerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsKadalpurathil Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Ini Illai Rating: 4 out of 5 stars4/5இந்து இனி இல்லை Rating: 0 out of 5 stars0 ratingsEn Swasa Kaattre... Rating: 0 out of 5 stars0 ratingsPaarkathe, Paarkathe, Padukolaiyai Paarkathe! Rating: 0 out of 5 stars0 ratingsSigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Ratha Kaatteri Rating: 0 out of 5 stars0 ratings23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Aranmanai Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsTheerkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsUyir Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Avan Than...! Rating: 0 out of 5 stars0 ratingsTerror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsSuda Muhurtha Naal Rating: 5 out of 5 stars5/5No.1 Rating: 5 out of 5 stars5/5Adimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Niththam Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Ore Iravu Rating: 0 out of 5 stars0 ratingsVelichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsKaividuveno Kanmaniye! Rating: 0 out of 5 stars0 ratingsEttavathu Echarikkai Rating: 4 out of 5 stars4/5Sarasa Kattalai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kathavukku Irupuramum Sorgam
0 ratings0 reviews
Book preview
Kathavukku Irupuramum Sorgam - Rajendrakumar
https://www.pustaka.co.in
கதவுக்கு இருபுறமும் சொர்க்கம்
Kathavukku Irupuramum Sorgam
Author:
ராஜேந்திரகுமார்
Rajendrakumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajendrakumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
1
அந்த தேம்ஸ் நதியில் - அந்த விசைப்படகில் அந்த ஜோடி உற்சாக கும்மாளமிட்டது.
நீரைக் கிழித்து வேகமாக அநேகமாக பறப்பது போலவே ஓடிக் கொண்டிருந்தது படகு.
ஊர் எல்லையைத் தாண்டியதும்,
இஞ்சினை அமர்த்தினான். எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
கரையில் - டெலிபோன் கம்பத்தின் மீது அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்த அந்த இரண்டு தடிமனான காக்கி சட்டைக்காரர்களும் விசிலடித்தார்கள்.
சிரித்தார்கள்.
சே. வெட்கங்கெட்ட ஜன்மங்கள்
என்று திட்ட,
அவர்களைச் சொல்கிறாயா நம்மையே சொல்லிக்கிறாயா?
அவன் கோபமாக விசையை இழுத்து முடுக்கவே சீறிப் பாய்ந்தது படகு.
அந்த தடியன்களின் விசில் சத்தம் மீண்டும் கேட்டது சிரிப்புடன்.
அதோ சுட்டிக் காட்டினாள். இடது ஓரத்தில் ஒரு சின்னக் குன்றின் மீது கல்லால் ஆன கோட்டை ஒன்று தெரிந்தது.
இதுவா? நிச்சயமாக தெரியுமா?
இங்கே ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறேன். நாலு வருஷத்துக்கு முன்னால், என்னவோ தெரியல்லே. இன்னும் ஒரு ஷெட்யூல் இருக்கிறதாக புரடியூசர் சொன்னார் ஜானி இதுவரைக்கும் தகவல் இல்லை.
இந்நேரம் படமே ரிலீஸாகி இருக்கும். நீ இல்லாமலே.
ஓரமாக படகை நிறுத்த அது மணலில் செருகி நின்றது. யந்திரத்தை அமர்த்தினான்.
இறங்கினார்கள்.
கரையில் நடந்து போன அவள் நின்றாள்.
என்ன காதரீனா?
வழி மறந்து போச்சா?
இல்லை. கேள். உற்றுக் கேள். ஏதாவது ஓசை கேட்கிறதா?
கூர்ந்து கவனித்தாள்.
ஏதோ ஒரு நாயின் குரைப்பு சத்தம் கேட்பது போலிருந்தது. தொலைவில் - எங்கோ தொலைவில் கேட்பது போலிருந்தது.
நமக்கு முன்னால் யாரோ வந்து தங்கி இருக்கிறார்கள் நாயோடு
நாய்
அவளுக்கு சிலிர்த்தது. பேசாமல் திரும்பிடலாமா?
ஏன்
சிரித்தான். நாய் என்றால் அவ்வளவு பயமா?
நாயைவிட ரேபிஸ் நோய் பயம் தான் அதிகம். போகலாமா?
அந்த இடத்தை விட்டுப் போவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
ஊர் சந்தடியற்ற அமைதியான இடம். காதலர்களுக்கு இதுதான் சொர்க்கம். கமான் டார்லிங். நாம் என்ன நிரந்தரமாகவா தங்கிவிடப் போகிறோம். இரண்டு அல்லது மூன்று நாள். பயப்படாமல் வா.
இப்போது அவன் பாதையில் முன்னேறி நடக்க அவள் பின் தொடர்ந்தாள். காரணமின்றி சிலிர்த்தது.
கொஞ்சம் மேலே அண்ணாந்து அந்தக்கோட்டையைப் பார்த்தவன் ஏதோ ஒரு விபரீதத்தை உணர்ந்தான்.
அனுமதி சீட்டைக் கொண்டு வந்திருக்கிறாய் அல்லவா?
அவள் ஜீன்ஸின் பின் பகுதியிலிருந்து கவரை எடுத்து நீட்டினாள்.
பிரித்தபோது ரசீதும், அனுமதி பத்திரமும் இருந்தன.
சரி வா
கோட்டையை நெருங்க நெருங்க நாயின் குரைப்பு ஓசை பலமாக கேட்டு - சட்டென்று நின்று போயிற்று.
கோட்டையின் பிரமாண்டமான கதவுகள் திறந்ததும் கண்ணில்பட்ட காவல் கிழவனிடம் அவள் முதல் கேள்வியாக கேட்டாள்.
இங்கே நாய் ஏதாவது இருந்ததா என்ன? குறைப்பு கேட்டதே?
நாயா? அப்படி ஒன்றுமில்லையே. கோட்டையை வாங்கியவரின் பிள்ளை தான் இருக்கிறது. ஆனா அதற்கும் நாய் என்றால் பிடிக்காதே அவ்வளவாக.
டோண்ட் பீ சில்லி டியர். அப்படியே நாய் இருந்தாலும் அதென்ன அவ்வளவு பெரிய விஷயம்? லீவ் இட்.
அறிமுக கடிதத்தை நீட்டினான். நான் ஜான். இவள் காதரீனா. இரண்டு பேரும் வீக் எண்ட் இரண்டு நாள் தங்குவதாக உத்தேசம்.
தாராளாமாக என் இனிய விருந்தாளிகளே வாருங்கள்
உள்ளே அழைத்துப்போன போது,
அறை ஜன்னல் முன்னால் சாய்ந்தவாறு நின்றிருந்தான் பீட்டர். சின்ன உடம்பு. செதுக்கினார்ப் போன்ற உருவம். பதினெட்டு வயதிற்கேற்ப அழகான முகம். புதிதாக முளைக்க ஆரம்பித்த பூனை மீசையின் மென்மை!
கண்களை மட்டும் பிடிவாதமாக மூடிக் கொண்டிருந்தான். இவர்கள் பேச்சுக்குரல் கேட்டும் கண்களை திறக்காமல் இருந்தான்.
காதரீனாவும் பொறுத்து பார்த்துவிட்டு என்ன இந்தப் பையன் காது செவிடா? எங்களை உணர்ந்தும் கண் திறந்து பார்க்க மாட்டானா?
சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தான் அவன். அடுத்த வினாடி -
காரணமின்றி ஒருபயம் வந்தது காதரீனாவுக்கும் அவள் காதலனுக்கும். ஒருவித வெலவெலப்பு ஏற்படுத்தியது.
அந்த அளவு தீர்க்கமான கண்களை அவர்கள் பார்த்ததே இல்லை.
அவன் திரும்பி ஜன்னல் வழியாக எங்கேயோ பார்க்கக் துவங்கியதும் தான் நிம்மதி வந்தது இவர்களுக்கு.
போகலாமா?
என்று கிழவன் கூப்பிட்டதும்.
சட்டென்று திரும்பி நடந்தார்கள்.
***
இது உங்கள் அறை. குளியலறை எல்லாம் உள்ளேயே இருக்கிறது. கணப்பு இருக்கிறது
அழுத்தமாகச் சொன்னான் கட்டில் இருக்கிறது. சீக்கிரம் குளித்து தயாராகுங்கள். இரவு சரியாக எட்டேகால் மணிக்கு டின்னர். நான் வந்து கூட்டிப்போறேன்.
சரி
அவன் போனதும் -
அவளை அள்ளிக் கொண்டு அறைக்குள் தூக்கிப் போனான்.
அவனை ஒதுக்கிவிட்டு ஜன்னலை அடைந்து கதவைத் திறந்தாள்.
ஏய் இங்கே வாயேன். இயற்கை எவ்வளவு அழகாக இருக்கிறது பாரேன். தூரத்தில் நதி. படி ஏறி வரும் அழகு. வெள்ளையாக பூத்துக்குலுங்கும் செர்ரீ மரங்கள்! வாயேன்
கொஞ்சம் தொலைவில் -
அடர்த்தியான குரோட்டன்ஸ் செடிகளுக்கு பின்னால் நெருப்புத் துண்டங்கள் போல இரண்டு கண்கள் இவர்களையே உற்று பார்த்துக் கொண்டிருந்தது, அந்தக் கறுப்பு நாய். கன்றுகுட்டி அளவு பெரிசாக இருந்தது. வெறித்துப் பார்த்தது அது.
கீழே ஹாலில் இருந்த ஜன்னல் வழியாக அந்தப்பையன் அந்த நாயை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அது,
அவர்களுக்குத் தெரியாது.
அந்தக் கிழவன் அந்தப் பையனுக்குப் பின்னால் வந்து கேட்டான்.
இன்னும் இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்யவா? என் எஜமானே?
என்றான்.
வேண்டாம். சாப்பாட்டு நேரம் வரை அவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள். அங்கே பார்
அவன் சுட்டிக் காட்டிய திசையில்,
அந்த நாய் கோபமாக முன்னங்கால்களால் மணலில் பள்ளம் பறித்துக் கொண்டிருந்தது.
அவளால் குளிர் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதும், ஜன்னலை அறைந்து சாத்தி கொக்கியைப் போட்டாள்.
அவனுக்கு துணிச்சல் வந்தது. அவசரமாக அவளை நெருங்கினான்.
அவனது காதருகே கிசு கிசுப்பாக கேட்டாள். சரியாக சத்தியமாகச் சொல்லு. என்னை கல்யாணம் செய்து கொள்வாய் இல்லையா?
கல்யாணம் மட்டுமில்லே. வேறு பெண்ணை மனசில் கூட நினைக்க மாட்டேன். என் தேவைகளை உன்னிடம் சுலபமாக தீர்த்துக் கொள்ள முடிகிறதே. அப்புறம் என் பார்வை ஏன் வேறு பக்கம் போகப் போகிறது?
திடீரென உணர்ந்தார்கள் குளிர்கிறது.
நிமிடத்திற்கு நிமிடம் ஏறிக்கொண்டே