Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadalpurathil Oru Kaadhal
Kadalpurathil Oru Kaadhal
Kadalpurathil Oru Kaadhal
Ebook57 pages23 minutes

Kadalpurathil Oru Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடலையே தங்கள் தெய்வமாக தாயாக தொழுது கொள்ளும் கடல் சார்ந்த சமூகம் ஒன்று உண்டு.  அவர்களின் சமூக பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பேச்சு வழக்கினையும் அவர்கள் வாழ்வியலையும் இங்கே பதிவு செய்திட முயற்சித்துள்ளேன். ஊடாக ஒரு சிறு காதலும் உண்டு. நிச்சயம் விரும்புவீர்கள் என நம்புகிறேன். விமர்சனத்தில் அதை நான் உணர்வேன் என்ற நம்பிக்கையுடன்

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580147209108
Kadalpurathil Oru Kaadhal

Read more from G. Shyamala Gopu

Related to Kadalpurathil Oru Kaadhal

Related ebooks

Reviews for Kadalpurathil Oru Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadalpurathil Oru Kaadhal - G. Shyamala Gopu

    http://www.pustaka.co.in

    கடல்புரத்தில் ஒரு காதல்

    Kadalpurathil Oru Kaadhal

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    ஒன்றன் பின் ஒன்றாக வந்து வந்து கால்களை தழுவி செல்லும் கடலலைகளால் கண்ணம்மாவின் அதாவது அவள் கணவனுக்கு மட்டும் கண்ணம்மா என்னும் ஸ்டெல்லா ராணியின் பரிதவித்துக் கொண்டிருந்த மனசை அமைதிப்படுத்த இயலவில்லை.

    தூரத்தில் தெரிந்த கடல் என்னும் காதலி மேலே ஏறி காதலனாம் வானத்தை தொட்டுப் பார்க்க முயன்றதா, அன்றி மேலே இருந்த வானம் தான் காதலியாம் கடலலையில் கால்கள் நனைக்க கீழே இறங்க முயன்றதோ தெரியாது. கடலின் மேற்பரப்பும், அடி வானமும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்ட தொடுவானத்தை நாணத்தால் சிவக்க

    வைத்தவாறு மெல்ல எழும்பிக் கொண்டிருந்தது சூரியன். அப்படி எழுந்து கொண்டிருந்த சூரியனுக்கு அன்று என்ன அவசரமோ எழும் போதே வேகமாக நகர்ந்து கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தொடுவானத்தின் நேர்கோட்டில் ரெண்டு மூணு கட்டுமரங்கள் ஓட்டப்பந்தயத்தில் விசில் அடித்ததும் ஓடக் கிளம்பிய போட்டியாளர்கள் போல ஒரே வேகத்தில் சீராக வந்து கொண்டிருந்தது. அருகில் அசைந்து அசைந்து ஒரு லாஞ்சும் வந்து கொண்டிருந்தது தெரிந்தது.

    கட்டுமரங்களில் முந்தி வந்த ஒன்றிலிருந்து இறங்கிய செபத்தியான் கரையில் நின்று கொண்டிருந்த ஸ்டெல்லா ராணியைப் பார்த்து அதிசயித்துத் தான் போனார். என்ன மக்கா, இங்கே நிக்கறே?

    அவர் வள்ளத்தில் வந்து இறங்கியதைக் கண்ட அவர் மனைவி ஆரோக்கியமும் ராணியைப் பார்த்து விட்டு அதானே புள்ளே, நீ கடக்கரைக்கு வர மாட்டியே. இன்னைக்கு என்ன வந்ததாம்? என்று அதிசயப்பட்டுக் கொண்டாள்.

    ம். இந்த மனுஷன் நேத்து ராத்திரி சீக்கிரமே கிளம்பி போச்சு. சீக்கிரமே வந்துடும்னு நெனச்சேன். இன்னும் ஆளைக் காங்கலியேன்னு..

    அப்படின்னா கூட உம் மாமியா தானே இங்கே வந்து நிப்பாள்? இன்னைக்கு நீ வந்திருக்கே என்றாள் ஆரோக்கியம்.

    ஏலே மரைக்காயர் வாராரு. பாத்து விலை சொல்லி போட்டுக் கொடுங்க. நான் வீட்டுக்கு போறேன் என்று தன்னுடன் வள்ளத்தில் வந்தவர்களிடம் சொல்லி விட்டு மனைவியின் புறம்

    திரும்பி தன் கையில் வைத்திருந்த தூக்கு சட்டியை அவளிடம் கொடுத்தார்.

    இந்த மரைக்காயரிடம் கொடுக்க வேணாம்னு சொன்னா கேக்கறியளா பெரியப்பா என்றான் சைமன்.

    இன்றைய இளைஞர்களுக்கு மரைக்காயர் போன்ற ஏஜெண்ட்டுகளுக்கு தாங்கள் கஷ்டப்பட்டுப் பிடித்துக் கொண்டு வந்த மீனை

    Enjoying the preview?
    Page 1 of 1