Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilamai Ennum Poongatru
Ilamai Ennum Poongatru
Ilamai Ennum Poongatru
Ebook88 pages27 minutes

Ilamai Ennum Poongatru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு குடும்பக் கதை. சிலருக்கு பாடமாகவும் பலருக்கு படிப்பினையாகவும் இருக்கக்கூடும்.

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580147209807
Ilamai Ennum Poongatru

Read more from G. Shyamala Gopu

Related to Ilamai Ennum Poongatru

Related ebooks

Reviews for Ilamai Ennum Poongatru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilamai Ennum Poongatru - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இளமை என்னும் பூங்காற்று

    Ilamai Ennum Poongatru

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இளமை என்னும் பூங்காற்று

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    பூம்புனல்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    இளமை என்னும் பூங்காற்று

    1

    மழை விட்டிருந்தது. வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு நாள் முழுவதும் அடித்து ஊற்றிக் கொண்டிருந்த மழை. அதுவும் பருவம் தப்பிய மழை. யாருக்கும் பிரயோஜனம் இல்லாத மழை. ஆனால் அதற்காக மழையைத் திட்ட முடியுமா? இன்றைக்கு பிரயோசனம் இல்லையென்றாலும் நாளைக்கு தேவைப்படுமே. இதைத் தான் ‘கெட்டாலும் மென் மக்கள் மேன்மக்களே’ என்பார்கள் போலும். சடசடவென்று ஓட்டின் மீது விழுந்த மழைநீர் தபதபவென்று கிணற்றுக்குள் விழும் சத்தம் கேட்டது.

    மாட்டுக் கொட்டைகளில் மூன்று நாட்களாக அடைந்து கிடந்த மாடுகளை அவிழ்த்து விட்டாள் ராதிகா. போங்க. கொஞ்சம் காலாற நடந்துட்டு வாங்க என்று முதுகில் தட்டி வழியனுப்பி வைத்தாள். அவளை யாரும் இதைப்போல முதுகில் தட்டி வழியனுப்ப மாட்டாரகள் இந்த வீட்டில். முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டாம். ‘போய் வா’ என்று சொன்னாலே போதும். பறந்துவிட மாட்டாளா! வானமே எல்லையாக!

    தாயி, நானும் வயலுக்குப் போய் ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வரேன் மாமனார் சதாசிவம் கிளம்பினார்.

    காலையிலேயே சொந்தக்கார பெண்ணிற்கு பிரசவம் என்று அவர்களுடன் டவுன் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டிருந்தாள் மாமியார் பச்சையம்மாள். ராசிக்காரி என்று பிரசித்தமானதால் இந்த சிறு கிராமத்தில் யாருக்கு பிரசவம் என்றாலும் உடன் செல்லும் பெரும் பேறு பெற்றவள் அவள். அந்த சுதந்திரமாவது அவளுக்கு இருக்கிறதே. பாவம் போகட்டும் என்று ஒரு பெண்ணுக்கு பெண்ணாக அவளுக்கு ஆதரவு செய்தாள் ராதிகா.

    இன்னும் கணவன் மகேஷ் கிளம்பவில்லை. ராது குரல் கொடுத்தான்.

    சுடச்சுட இட்லியும் சட்டினியும் எடுத்து மேஜை மேல் வைக்கவும் அவன் வந்து அமரவும் சரியாக இருந்தது.

    மூணு நாளா எங்கேயும் போகாமல் வீட்லயே அடைஞ்சி கிடந்தது வெறுப்பா இருக்கு. அப்பாடா. வெளிச்சம் வர ஆரம்பிச்சிருச்சு. நானும் டவுன் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.

    வீட்ல மூ...ணு நாள் இருந்தது வெறுப்படிக்கிதாமே! அப்ப வீட்லயே காலம் முச்சூட்டும் கிடக்கிரவளுக்கு எப்படி இருக்கும்? கேள்வியை மனதிற்குள் மட்டும்தான் கேட்டுக்கொள்ள முடியும். கண்ணின் அசைவில் கூட வெளிப்பட்டு விடக் கூடாது. பார்க்கவே பிடிக்காத முகம் என்று ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சொன்னாலும் இந்த முகத்தில் மின்னலென தோன்றி மறையும் உணர்வுக்கோடுகளை மிகத் துல்லியமாக மொழிப்பெயர்த்துவிடும் சமர்த்தன் மகேஷ். அதை மிக சரியாகவும் உண்மையாகவும் மொழிப்பெயர்ப்பது தான் மிகக் கொடுமையான விஷயம்.

    என்ன தான் சமைப்பியோ? வீட்ல தானே இருக்கே. கொஞ்சம் பாத்து சமைக்கிறது? எப்போ பாரு இட்லி சட்னி.

    மூணு நாளும் வீட்டிலே இருந்ததற்கு நேரா நேரத்திற்கு விதவிதமான பலகாரங்கள், சாப்பாடுகள், ஜூசுகள் என்று பார்த்து பார்த்துப் பணிவிடை செய்தது எப்படித்தான் மறந்து போகுமோ? அவனை முறைத்துப் பார்க்க முடியுமா? முகத்தைத் தான் திருப்பிக்கொள்ள முடியுமா? ஏன் என் முகத்தைப் பார்க்க முடியலையா? வேறு யார் முகரக்கட்டையைப் பார்க்கணும் உனக்கு? கேட்பானே. நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கேட்பானே.

    இந்த கேள்விக்கு பதில் சொன்னால் எப்படி இருக்கும்? தாங்குவானா?

    தினமும் என்னை சொல்றியே. என் முகத்தைப் பார்க்க பிடிக்கலைன்னு? நான் கேட்கட்டுமா உன்னை? என் முகத்தை இல்லாமல் வேறு யாரு முகரக்கட்டையைப் பார்க்க இப்படி அடிச்சிப் பிடிச்சி போறேன்னு? ஒரு வார்த்தைக் கேட்டால் என்ன ஆவே?

    மனசுக்குள் சில சமயம் அந்த எண்ணம் உண்டாகும். கேட்கணும். ஒரு வார்த்தைக் கேட்கணும். கேட்டால் என்ன செய்வான்? அடிப்பானா? அடிக்கட்டும். ஆனாலும் நான் கேட்டேன் என்ற திருப்தி எனக்கு கிடைக்குமல்லவா!

    ஆனால் ஒருவேளை... ஒருவேளை... ஆமாடி, அவளைத் தான் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டால்...?

    சொல்லிவிட்டால் அப்படியே நாண்டுக்கிட்டுத் தான் சாகணும். அவனுக்கு லஜ்ஜை என்பது லவசேசமும் கிடையாது. அவனைப் போல நம்மளும் வெட்கம் கெட்டு இருக்க முடியுமா?

    ஆண்கள் அசிங்கமாகப் பேசுகிறார்களே என்பதனால் பெண்கள் பயந்து அடங்கிப் போவதாக நினைக்கக் கூடாது. இப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1