Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akhanda Kaviriyaai...
Akhanda Kaviriyaai...
Akhanda Kaviriyaai...
Ebook82 pages40 minutes

Akhanda Kaviriyaai...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பூமாவின் தம்பி ரமேஷ். தம்பியைப் போல உடன் வளர்ந்தவன் அடுத்த வீட்டு ராமன். அவனுடைய அக்கா ராஜாத்தி. இவர்களுக்குள் ஏற்படும் சண்டை கொரோனா காலத்தில் என்னவாகிறது? இந்த பகையின் முடிவு தான் என்ன? என்று விளக்கும் குறுநாவல்.

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580147209806
Akhanda Kaviriyaai...

Read more from G. Shyamala Gopu

Related to Akhanda Kaviriyaai...

Related ebooks

Reviews for Akhanda Kaviriyaai...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akhanda Kaviriyaai... - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அகண்ட காவிரியாய்...

    Akhanda Kaviriyaai...

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    என்னங்க, அப்போதிலிருந்து டிபன் எடுத்து வெச்சிக்கிட்டு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். வந்து சாப்பிட்டுவிட்டு போனீங்கன்னா எனக்கு ஒரு வேலை ஆகும் இல்லே டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் பூமா.

    ஹாட்பாக்ஸில் இட்லியும், கிண்ணத்தில் சட்னியும் சாம்பாரும்கூட சூடாக இருந்தது. ‘சாப்பிடக் கூப்பிட்டால், அப்போது தான் வேலை செய்யத் தோணும் இவருக்கு. என்னவோ இவருக்குத்தான் வேலையிருக்கு. நான் சும்மா வெட்டியாதான் உக்காந்திருக்கேன் என்பதைப்போல ஒரு பாவ்லா. உக்கும்’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாள் அவள்.

    இங்கே கவனிக்கவும். மனதிற்குள்தான் சலித்துக் கொண்டாள். முணுமுணுக்கக்கூட முடியாது. அப்புறம் எங்கே சத்தம் போட்டுப் பேசுவது? பூமா பெண் சிங்கம் என்றால் கோபாலன் கிழட்டு சிங்கம். அதுவும் பூமாவிடம் மட்டுமே சிவக்கும் கண்களும், குத்தும் பார்வையும், முறுக்கும் மீசையும் தினவெடுக்கும் தோள்களும், முறுக்கேறும் உடலும் என ஜிம்பிக்கொண்டு சண்டைக்கு போவது கோபாலனுக்கு நித்தியப்படி நடவடிக்கைகளில் பிரதானமான ஒன்று. வேறு யாரிடமும் அப்படிப்பட்ட உறுப்புகள் தன் உடலில் இருப்பதாகக்கூட நினைவு இருப்பதில்லை அவருக்கு.

    ஏங்க, பசிக்கிதுங்க. வாங்க ஒரு தடவைக்கு ரெண்டாவது தடவையா கூப்பிட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும் பூமாவின் கணவன் கோபாலனுக்கு.

    பசித்தால் நீ சாப்பிடுவதுதானே.

    இருப்பது நாம் ரெண்டு பேர்தான். ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாமில்லே.

    இத்தனை வருஷம் ஒன்னாத்தான் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோமா? இன்னைக்கு என்ன புதுசா? பதிலுக்கு அங்கே இருந்து குறைக்கும்... மன்னிக்கவும்... குரல் வந்தது.

    பூமா ஒரு மத்திய அரசு ஊழியை. தினம் காலையில் ஏழு மணிக்கு ஓடி பேருந்தைப் பிடித்தால் மாலை ஐந்து மணிக்குத்தான் வீடு வருவாள். இப்போதுதான் ஓய்வு பெற்றிருக்கிறாள். தனக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்ட கணவர் இத்தனை வருஷம் பாவம் தினம் ஆறியதை தின்று சலித்திருப்பாரே என்று கூடுமானவரை சுடச்சுட செய்து உடன் இருந்து பரிமாறி தானும் உண்ணும் பழக்கம் கொண்டாள்.

    திருமணம் முடிந்த இந்த முப்பத்தி ஏழு வருடங்களும் கோபாலன் கூடக்கூட ஒத்தாசை செய்பவர். சொல்லப்போனால் வீட்டில் அத்தனை வேலையிலும் ஒத்தாசைதான். ஆனால் தினப்படி இந்த காலை வேலை டிபனுக்கு ஒரு போராட்டம்தான்.

    இந்த உரையாடலைக் கொண்டு பூமாவை பாவம் மிகவும் பயந்தவள் என்றோ, மிகவும் நல்லவள் என்றோ, கோபாலன் தன் மனைவியை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார் என்றோ நினைத்துவிடக் கூடாது. ஏனென்றால் உண்மை அதுவல்லவே! கோபாலனால் பூமாவை அடக்கி ஆண்டு விடவும் முடியாது. பூமாவும் கோபாலனை சர்வசாதரணமாக் பேசிவிட்டு கடந்து போய்விடவும் முடியாது. இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.

    பூமா ஒன்றும் லேசுப்பட்டவள் இல்லை. எங்கேனும் அநியாயத்தைக் கண்டால் பொங்கல் வைத்துவிடுவாள். மன்னிக்கவும். பொங்கி எழுந்துவிடுவாள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணென்றாலும் சரி. ஒரு சண்டைன்னு வந்துவிட்டா சிலும்பி எழும் சிங்கம்தான். நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சண்டைக்குப் போவது, தொண்டைக் கிழிய சத்தம் போடுவது என்று ஒரு ரவுண்ட் கட்டி அடிப்பவள்தான் அவள். என்ன நாகரீகம் கருதி அடிதடி சண்டைக்குப் போவதில்லையே தவிர எதிரில் நின்று பேசி எவனும் அல்லது எவளும் தப்பிவிட முடியாது. அநியாயம் செய்தவன் அத்தோடு இந்த ஜென்மம் முழுவதும் பார்சியல் அம்னீசியா வந்து கெட்டதை எல்லாம் மறந்து போய்விடுவான். அப்படியில்லையா பார்த்துக்கிட்டே இரு. ஒருநாள் இல்லை ஒருநாள் இந்த பொம்பிளையை போட்டுத் தள்ளிட்டு போறேன்னா இல்லையான்னு

    Enjoying the preview?
    Page 1 of 1