Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalamarathil Oru Jodi Kiligal
Aalamarathil Oru Jodi Kiligal
Aalamarathil Oru Jodi Kiligal
Ebook90 pages44 minutes

Aalamarathil Oru Jodi Kiligal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கிராமத்தில் வேலைக்கு வரும் உமா. அவள் சந்திக்கும் மனிதர்கள். அவர்களின் நரித்தனத்தில் இருந்து அவள் தப்பும் நேர்த்தி. அங்கே அவளுக்குக் கிடைக்கும் மெல்லிய காதல். கிராமத்தின் சமூக ஏற்றத்தாழ்வுகள். அவள் வாழ்வின் சரியான பருவத்தில் இந்த கிராமத்தில் வேலைக்கு வரும் அவளுக்கு காதல் கை கூடியதா? சமூகத்தின் தாக்கத்திற்கு தாக்குப் பிடித்தாளா?

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580147209809
Aalamarathil Oru Jodi Kiligal

Read more from G. Shyamala Gopu

Related to Aalamarathil Oru Jodi Kiligal

Related ebooks

Reviews for Aalamarathil Oru Jodi Kiligal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalamarathil Oru Jodi Kiligal - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆலமரத்தில் ஒரு ஜோடி கிளிகள்

    Aalamarathil Oru Jodi Kiligal

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஆலமரத்தில் ஒரு ஜோடி கிளிகள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    2. கண்ணகியின் பயணம்

    1. ஆலமரத்தில் ஒரு ஜோடி கிளிகள்

    1

    ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளின் ஒரே பொழுதுபோக்கு இலங்கை வானொலி மட்டுமே. அதனால் எந்த டீக்கடையிலும் காலை ஆரம்பிக்கும் திரை இசைப்பாடல்கள் இரவு ஏழு மணி வரைக்கும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். ஒலிநாடாக்கள் பேருந்துகளை அலறவிடும்.

    திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேதாரண்யம் பேருந்தில் வேர்க்க விறுவிறுக்க ஏறிய உமா உட்காருவதற்கு இடம் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். பெரிய சைசில் நெற்றியில் ஒரு ரூபாய் அளவிற்கு குங்கும பொட்டும் கொண்டையிட்டிருந்த தலையில் மணக்கும் கதம்பமுமாக சொம்பு போன்ற கழுத்து மொத்தமும் நகைகளை பூட்டிக்கொண்டு அமர்ந்திருந்த குண்டான பெண்மணி கொஞ்சமும் அசையாமல் இருக்கவே கொஞ்சம் தள்ளி உட்காருங்க என்றாள்.

    அவளுடைய வெள்ளை ஆடையைப் பார்த்துவிட்டு மனதிற்குள் பொருமிக் கொள்வதாக நினைத்து நன்றாகவே வாய்விட்டு சொன்னாள் அந்த அம்மாள். நல்ல காரியத்திற்கு போகும் போது இது போல அபசகுனத்தை பார்க்க வேண்டியதாக இருக்கிறது என்று. மேற்கொண்டு அங்கே அமர பிடிக்காமல் எழுந்து போய் முன்னே தன் கூட்டத்தினரோடு முண்டி அடித்துக்கொண்டு அமர்ந்தாள். ஏதோ கல்யாணத்திற்கு போகிறார்கள் போலும். பேருந்து முழுவதும் கதம்பமும் மல்லியும் பன்னீர் புகையலை வாசமும் ஒருசேர நிறைந்திருந்தது. ஊடாக தன்னருகில் அமர்ந்திருந்தவளின் தலையை மொழுகியிருந்த வேப்ப எண்ணை வாசமும். தன்னைப் பார்த்து வெள்ளந்தியாக சிரித்த அந்த கிராமத்து பெண்மணியைப் பார்த்து இவளும் புன்னகைத்தாள்.

    ஏன்மா புருஷன் இல்லையா?

    புன்னகைத்துக் கொண்டவள், பரவாயில்லை. நீங்கள் நேரிடையாகவே கேட்டீர்கள். மற்றவர்களைப் போல எதையாவது தானாக நினைத்துக் கொண்டு எழுந்து போகாமல்.

    பாவம் சிறுவயசா இருக்கியே.

    அப்படி இல்லைம்மா. நான் இங்கே பொன்னிரையிலே ஆஸ்பத்திரியிலே வேலை செய்ற நர்சம்மா. இது என் யூனிஃபாம்.

    இரு புருவங்களுக்கிடையே வைத்திருந்த சாந்து பொட்டும் காதில் பட்டன் சைசில் அணிந்திருந்த வைரக்கம்மலும் இடது கை மணிக்கட்டில் லேடீஸ் வாட்சையும் தவிர வேறு அலங்காரம் ஏதும் இல்லாமல் துடைத்து வைத்த குத்துவிளக்கைப் போல பளபளவென்று இருந்தாள் உமா. தலைமுடியை கொண்டையிட்டிருந்தாள். வெள்ளையாடையையும் வெறுங்கழுத்தையும் காணும் எவரும் அவள் நிலை கண்டு குழப்பமுற்றாலும் அவளுடைய அறிவு ததும்பும் விழிகளையும் நிமிர்ந்த நடையையும் நேர்க்கொண்ட பார்வையையும் கண்டு சற்று விலகியேதான் நிற்பார்கள். எனவே அவளுக்குமே சீருடை என்பது கவசமாகவே இருந்தது.

    பெரிய பெல்பாட்டம், இடுப்பில் பட்டையான பெல்ட், தொங்கு மீசை கண்களில் சதுர கண்ணாடி சகிதமாக ரஜினிகாந்த் ஸ்டைலில் அருகில் வந்த கண்டக்டர் இவளிடம் டிக்கெட் வாங்காமல் நகரவே கண்டக்டர் டிக்கெட் என்று அழைத்தாள். அவளிடம் சைகையால் வேண்டாம் என்றவனை சுட்டு விரலை நீட்டி பத்திரம் என்றாள் பதிலுக்கு சைகையால். தலையை குனிந்து கொண்டவன் கண்களை மட்டும் உயர்த்தி பணத்தைப் பெற்றுக்கொண்டு டிக்கெட்டை கொடுத்தான். ச்சை. தினமும் இவனுடன் இம்சை.

    ஒரு நகரத்தில் பிறந்து வளர்ந்து மேல்படிப்பை மெட்ராஸில் படித்து இங்கே அரசு வேலைக்கு வந்த உமாவுக்கு இந்த ஊரும் மக்களும் அவர்கள் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் ரொம்பவே புதிதாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட தெருவும் சமூகமுமே இந்த உலகம் என்று வாழ்ந்தவள்.

    மண்சாலையில் புழுதியை கிளப்பிவிட்டு சென்றது உமா வந்து இறங்கிய பேருந்து. கால்களில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வயல் வரப்பினூடே ஜாக்கிரதையாக நடந்து அந்த குடிசையின் முன் வந்து நின்றாள். நெல்விளையும் வயக்காடு நமக்கு அன்னமிடும் அன்னபூரணி. அதை செருப்புக்காலால் மிதிக்கக் கூடாது என்பது அவளுக்கு இங்கே கிடைத்த முதல் பாடம்.

    பட்டம்மா... பட்டம்மா... பட்டு இல்லையாங்க மாட்டைப் பிடித்துக்கொண்டு தலையில் முண்டாசுடன் வந்த வாலிபனிடம் கேட்டாள்.

    பேங்க்கார செட்டியார் வீட்டுக்கு போயிருக்கு.

    அவங்க வீட்டு பொண்ணுக்கு இது மாசம் இல்லையே.

    "தெரியாதுங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1