Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Nee Thana?
Kaadhal Nee Thana?
Kaadhal Nee Thana?
Ebook92 pages45 minutes

Kaadhal Nee Thana?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுரா மருத்துவ கான்பரன்ஸ் நிமித்தமாக மூன்று நாள் கொச்சி செல்கிறாள். அதே கான்பரன்சிற்கு ராஜாராமனும் வருகிறான். அங்கே என்ன நடந்தது என்று இந்த நாவல் சொல்கிறது.

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580147209808
Kaadhal Nee Thana?

Read more from G. Shyamala Gopu

Related to Kaadhal Nee Thana?

Related ebooks

Reviews for Kaadhal Nee Thana?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Nee Thana? - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் நீ தானா?

    Kaadhal Nee Thana?

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    தலைநகர் தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு போவதற்கு நெடுஞ்சாலையின் சிக்னலிருந்து வாகன நெரிசல் அந்த அதிகாலை நேரத்தை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கியிருந்தது மதுராவிற்கு. இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. அதற்குள் உள்நாட்டுப் பயணத்திற்கான போர்டிங் பகுதிக்கு சென்றுவிட வேண்டும். சென்று விட முடியுமா? சுற்றும் முற்றும் பார்த்தாள். அரை இன்ச் கூட அந்த பக்கம் இந்த பக்கம் நகர முடியாது. அத்தனை நெரிசல். ஒரு அரை மணி நேரம் முன்னால் கிளம்பியிருந்தால் இந்த அவதியில்லை. ஆனால் முடிந்தால்தானே!

    வழக்கம் போல காலை நேர அவஸ்தைதான். இன்று பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த பதின்பருவ வயதில் இருக்கும் மகளை தேவையானதை எடுத்துக் கொடுத்து, அவள் எரிச்சலுக்கு ஈடு கொடுத்து அவளை நல்லபடியாக கிளப்பி விட வேண்டும். தான் ஊருக்கு போவதற்கு கணவனிடம் அனுமதி வாங்குவதைவிட இந்த சின்ன பெண்ணிடம் அல்லல்பட வேண்டியதுதான் அதிகம். எங்கே போறே? எப்போ வருவே? ஏன் நீதான் போகனுமா? இத்தனைக் கேள்விகளுக்கும் பொறுமையாக மிக மிக பொறுமையாக பதில் சொன்னாலும் நீ ரொம்பத்தான் அலட்டிக்கிறே. உன்னை விட்டால் வேறு ஆளே இல்லை என்ற நினைப்பு உனக்கு என்ற பதிலில் நொந்து போனாலும் தன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவதால் ஏற்படும் எரிச்சலில்தான் இத்தனை ஆங்காரமும் என்று புரிந்து அமைதியாகவே போவாள் மதுரா. பாவம் சிறு பெண் என்று பொறுத்துப் போனாலும் அவள் கிளம்புவதற்குள் மகள் செய்யும் வம்புகளினாலும் வீம்புகளினாலும் மிகவும் நொந்துதான் போவாள் அவள். அதிலும் இன்று பரீட்சை வேறு. ரொம்பவே படுத்திவிட்டாள் அவள்.

    நல்லவேளையாக கணவன் ஏற்கனவே கிளம்பி எங்கேயோ போய்விட்டான். எங்கே போகிறான்? எப்போது வருவான் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுக் கிளம்புவான். அதுவும் வெளியூர் போனால் மட்டுமே. இன்றும் எங்கோ வெளியூர்தான் போயிருக்கிறான் போலும். பெட்டி பெரியதாக இருந்தது. ரெண்டு நாளா? மூன்று நாளா? தெரியாது. தன்னை மிஸ் பண்ணுவானா மாட்டானா? தெரியாது. ஆனால் வெளியூரில் இருந்து திரும்பி, அவளை நாடி வரும் இரவில் அவனின் உணர்வுகள் புரியும் அவளுக்கு. ஆனால் ஒருநாளும் அதை வாய்வார்த்தையாய் ஒப்புக்கொள்ளத்தான் மாட்டான். கட்டிய மனைவியிடமே கௌரவம் பார்ப்பவனை என்னென்பது?

    அதைப் போலத்தான் அவளும். தன்னுடைய சொந்த ஊருக்கோ அல்லது வேலை விஷயமாக வெளியூர்களுக்கோ போகையில் மட்டும் சொல்லிவிட்டு செல்வாள். திருமணமான புதிதில் வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தால் அதை ஒரு வாரத்திற்கு முன்பே அவனிடம் சொல்லுவாள். ஆனால் அவனோ அவளுடைய தகவலை, தகவலாக எடுத்துக்கொள்ள மாட்டான். மாறாக அவள் தன்னிடம் பெருமையடித்துக் கொள்வதாக முகம் சுளிப்பான். எனவே காலப்போக்கில் அவனிடம் போகிற போக்கில் சொல்லுகின்ற ஒரு விஷயம் போலத்தான் எதையும் சொல்லிப் போக பழகியிருந்தாள் அவள். கிளம்புகையில் சுமூகமாக விடை கொடுத்தாலே போதும். இதில் அவனின் பாராட்டுக்களை வேறு எதிர்பார்ப்பதில்லை அவள். அது எவ்வளவு பெரிய சாதனையாக மற்றவர்களால் பாராட்டப்பட்டிருந்த போதும் அதை எல்லாம் வீட்டின் வாசலில் செருப்பைக் கழட்டிவிடும் இடத்தில் கழட்டி வைத்துவிட்டு, ஒரு சராசரி பெண்ணாகத்தான் உள்ளே வருபவள் அவள். எதிர்பார்ப்பானேன். ஏமாறுவானேன்?

    நேற்றே அவனிடம் தானும் வெளியூர் போக வேண்டிய விஷயத்தை சொன்னாள். ஆனால் அவனோ வழக்கம்போல காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவன் வேலையில் கருமமே கண்ணாயினாராக மூழ்கியிருந்தான். அவளும் அதற்குமேல் நின்று பொறுமையாக தன் பெருமையை விளக்கிக் கொண்டிருக்க விரும்பவில்லை. எவ்வளவு பெரிய புராஜெக்ட். எத்தனை டாலர் பன்ட். ம். ஒரு பெருமூச்சோடு தான் கிளம்ப வேண்டிய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    முதல் நாள் மாலையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயார் செய்து

    Enjoying the preview?
    Page 1 of 1