Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuthiraiyil Oru Rajakumaran
Kuthiraiyil Oru Rajakumaran
Kuthiraiyil Oru Rajakumaran
Ebook103 pages35 minutes

Kuthiraiyil Oru Rajakumaran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு குடும்பம் முன்னேற வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் ஆண் பொறுப்பேற்பது ஒரு விதம் என்றால், அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்... அது தான் ப்ரேமி. குடும்ப சுமையை தன் தோளில் சுமந்து தன் ஆசை, இளமை, ஒரு கட்டத்தில் பணம் என எல்லாவற்றையும் தியாகம் செய்கிறாள். ஆனால் அவளது பொறுப்பில் சிறு சதவிகிதம் கூட அவள் உடன்பிறப்புகளிடம் இல்லை. என்று தெரிய வரும்போது, அவள் வாழ்வில் அவள் எதிர்நோக்கிய வசந்தம் அவளிடம் வந்ததா… என்று தெரிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580131006294
Kuthiraiyil Oru Rajakumaran

Read more from S. Kumar

Related authors

Related to Kuthiraiyil Oru Rajakumaran

Related ebooks

Reviews for Kuthiraiyil Oru Rajakumaran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuthiraiyil Oru Rajakumaran - S. Kumar

    http://www.pustaka.co.in

    குதிரையில் ஒரு ராஜகுமாரன்

    Kuthiraiyil Oru Rajakumaran

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    பிரேமி டைப் செய்ய வேண்டிய கடிதத்தில் ஒரு கண்ணும், கடிகாரத்தில் ஒரு கண்ணுமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

    ஐந்து மணியான பிறகுதான் புறப்படவேண்டும்.

    புது மேனேஜர் வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. கெடுபிடியானவர்.

    பெர்மிஷன் எழுதிக் கொடுத்தால் கிடைக்கும். போலிக் காரணம் எழுதப் பிடிக்கவில்லை... உண்மைக் காரணத்தை எழுதி மற்றவர்களுக்கு அவல் கொடுக்கவும் விரும்பவில்லை.

    நேரமாகும் வரை வேலை செய்யாமலும் இருக்க முடியாது.

    அரை மனதுடனும், ஒரு கண்ணுடனும் வேலை செய்தாள். ரிசப்ஷனிலிருந்த மல்லிகா அதைக் கவனிக்கத் தவறவில்லை.

    என்ன பிரேமி, உடம்பு சரியில்லையா?

    இல்லே.

    என்னமோ மாதிரி இருக்கியே!

    அதெல்லாம் ஒண்ணுமில்லே... வெளியே போகும் போது சொல்றேன்.

    ஃபோன் மல்லிகாவின் கவனத்தைத் திருப்ப அவள் இவளைக் கவனிப்பதை விட்டுவிட்டாள்.

    காலையில் அவசரமாக சூடான பாக்சையும், பத்திரிகைகளையும், சில்லரையையும் திணித்துக்கொண்டு இரண்டே எட்டில் வாசலைத் தாண்டியபோது அம்மா ஞாபகப்படுத்துகிறேன் என்று நாலு வீடு கேட்கக் கத்தினாள்.

    சாயங்காலம் அவங்கள்ளாம் வர்றாங்க. ஆபீஸ்ல பெர்மிஷன் கேட்டுட்டு வா.

    பெர்மிஷன்... கேட்க முடியாது.

    பின்னே எப்படி? அவங்களைக் காக்க வைக்க முடியுமா?

    அஞ்சி மணிக்கு ஆபீஸ் முடிஞ்சதும் பஸ் பிடிச்சி ஹஃப் அன் அவர்ல வீட்டுக்கு வந்துடறேன்.

    அதெல்லாம் சரி வராதுடி. லீவாவது போடு. இல்லே, பெர்மிஷனாவது கேட்டுட்டு வா. ஆபீஸ் முடிஞ்சி எப்ப நீ வர்றது?

    அம்மா திருப்தியடையாமல் ஏதோ புலம்பினாள்.

    4.50

    ஃபைலையும், கடிதங்களையும் எடுத்து ட்ராவில் திணித்தாள். சிலிண்டரைச் சுழற்றி, பேப்பரை உருவி ட்ராவில் போட்டாள். பூட்டினாள்.

    ஹெட்கிளார்க்கிடம் வந்தாள்.

    தலைகுனிந்து ஃபைலில் இருந்தார்.

    சார்.

    நிமிரவில்லை.

    பாம்புக் காது சத்தத்தைக் கிரகித்திருக்கும். அதிர்வில் பாம்பு அடையாளம் காண்பதைப் போல் சத்தத்திலிருந்து அழைத்தவரைப் புரிந்திருக்கும். என்றாலும் நிமிரவில்லை. இது என் ஆசனம், இது என் பதவி, இது என் அதிகாரம், நீங்கள் என் ஏவலுக்கும், அனுமதிக்கும் காத்திருக்க வேண்டுமென்ற மமதை. பெரும்பாலும் பேச்சில் தென்படாது. நடவடிக்கைகளில் தலைகாட்டும்.

    சார்...

    நிமிர்ந்தார்.

    நான் கிளம்பறேன். என்று சாவியை மேஜையில் வைத்தாள். திரும்பிச் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக ஐந்து.

    பெர்ஃபெக்டா அஞ்சுக்கே போகணுமா?

    இன்னிக்கு ஒரு நாள் மட்டும்...

    ஓட்டமும், நடையுமாக பஸ் ஸ்டாப்புக்கு வந்தபோது கண்ணெதிரே பஸ் போய்க்கொண்டிருந்தது.

    அடுத்த பஸ் பிடித்துப் போக ஆறுமணிக்குக் குறையாது. அம்மா இப்பொழுதே புலம்பிக்கொண்டிருப்பாள். ஒருவேளை அவர்களெல்லாம் வந்துவிட்டிருந்தால் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளித்துக் கொண்டிருப்பாளா என்பதும் சந்தேகம்.

    கீதாவாவது ஆபீஸ் விட்டுச் சீக்கிரம் வந்தால் நிலைமையைச் சமாளிப்பாள்.

    அவளாவது ஆபீசுக்கு லீவ் போட்டிருக்கலாம்.

    உன்னைத்தான் பெண் பார்க்க வராங்க. நீயே புது மேனேஜர் வந்து ஒரு வாரம் கூட ஆகலே, இப்ப லீவ் கிடைக்காதுன்னுட்டே! சாயங்காலம்தானே, சீக்கிரம் வந்துடறேன்றே! நான் எதுக்கு லீவ் போட்டுட்டு இங்கேயே இருக்கிறது? என்று மறுத்துவிட்டாள்.

    மோகனை நம்ப முடியாது.

    அவன் வீட்டிலிருப்பதே அபூர்வம். தவறி இருந்தாலும் ஒரு துரும்பை அசைக்க மாட்டான்.

    இன்றுவரை அக்காக்களின் சம்பாத்தியத்திலேயே சாப்பிட நேர்ந்தாலும் குடும்பத்தின் ஒரே ஆண்மகன் இல்லையா? அந்தச் செருக்கும் உண்டு. செல்லமும் உண்டு.

    கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் 5.15.

    பிரேமி!

    மல்லிகாவும் பஸ் ஸ்டாப்புக்கு வந்து விட்டாள்.

    வா, மல்லிகா.

    என்ன பிரேமி, ஆபீஸ்லிருந்து விழுந்து அடிச்சிட்டு வந்துட்டே! சாயங்காலம் முழுக்க நீ சரியில்லை. என்னமோ விசேஷம் இருக்கு. சொல்ல வேணாம்னு நீ நினைச்சா சொல்ல வேணாம்.

    சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் ஒருத்தர்கிட்டேயாவது சொல்லித்தான் ஆகணும். எனக்கு அந்த ஒருத்தர் நீதான் மல்லி.

    அப்பா, என்ன அழகாப் பேசறே! என் மேல் அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறதாலதான் நான் கேட்கக் கேட்க மழுப்பினியா?

    அப்படி இல்லே. ஆபீஸ்ல வச்சிப் பேச வேணாம்னுதான் தவிர்த்தேன். இப்ப சொல்றேன், கேட்டுக்க. இன்னிக்கு என்னைப் பெண் பார்க்க வராங்க.

    "ஆல் தி

    Enjoying the preview?
    Page 1 of 1