Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivam Nindru Kollum
Deivam Nindru Kollum
Deivam Nindru Kollum
Ebook93 pages29 minutes

Deivam Nindru Kollum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராம் பகதூர் ஊர்க்காவல் புரியும் கூர்க்கா. ஆனால் அவன் மகளை அவனால் காப்பாற்ற முடியவில்லை. அநீதி இழைத்தவர்களைத் தண்டிக்க முயலும் இன்ஸ்பெக்டர் வென்றாரா? தோற்றாரா? நல்லவன் வாழ்வான், தருமம் வெல்லும் என்பதெல்லாம் வெற்று வாசகங்களா? கதையின் முடிவு சொல்லும்.

Languageதமிழ்
Release dateAug 9, 2022
ISBN6580131008705
Deivam Nindru Kollum

Read more from S. Kumar

Related authors

Related to Deivam Nindru Kollum

Related ebooks

Related categories

Reviews for Deivam Nindru Kollum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deivam Nindru Kollum - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தெய்வம் நின்று கொல்லும்

    Deivam Nindru Kollum

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. என்றாலும் அவைகளின் எல்லைக்கு அப்பால் இருள் பதுங்கியிருந்தது.

    சாலையில் அபூர்வமாக நாயர் டீக்கடையும் ராத்திரி பரோட்டாக்கடையும் திறந்திருந்தன. ஏதோ ஒரு தூக்கம் பிடிக்காத நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

    நாயர் லோட்டா நிறைய சுடுவெள்ளம் பிடித்துக்கொண்டு, நாய் கண்ணுக்குத் தென்படுகிறதா என்று தேடினார்.

    சனியன், யாரைக் கொண்டு போக அழுது தொலைக்குதோ!

    இருட்டு நிறத்து தாய் என்பதால் இருளோடு சமன் செய்து கொண்டிருந்தது.

    வரட்டும். உயிரோட வேக வச்சிடறேன்.

    லோட்டாவைக் கீழே வைத்து விட்டு, பீடி பற்ற வைத்தான்.

    தொண்டை கமறியது.

    சுண்டக் காய்ந்துவிட்டிருந்த பால் ஆடை கட்டியிருந்தது.

    ஏதாவது ஒரு மண்பாடி லாரி வந்தால் போதும். புரைவர், கிளீனர், கூலிகள் என்று பத்து, பன்னிரண்டு பேர் சாயா குடித்தால் பால் தீர்ந்து விடும். கடையைக் கட்டி விடலாம்.

    ஆளரவமற்ற இரவில் பரோட்டாக்கடைப் பாண்டி கைக்கரண்டியால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். கொத்து பரோட்டா போடும் பொழுதும் கூட்டம் சேரும் பொழுதும்தான் இப்படித் தட்டுவது வழக்கம். இப்பொழுதும் ஏதோ பழக்க தோஷத்தில் அதைச் செய்து கொண்டிருந்தான்.

    இரண்டு கடைகளுக்குமிடையே கொஞ்சம் இடைவெளி பேச முடியாமல் இருப்பதற்கு இது ஓர் ஆறுதல்.

    கரண்டிச் சத்தம் கேட்டபோது நாயருக்கு ராம் பகதூரின் நினைவு வந்தது.

    அவனும் இப்படித்தான். லாட்டியால் தட்டிக் கொண்டே வருவான்.

    நாயர் எப்பொழுதோ ‘தோஸ்த்’ படம் பார்த்திருக்கிறான். அதில் வரும் குருடன் மாதிரி இந்தப் பகதூர் தரையைத் தட்டிக் கொண்டே வருவான்.

    என்ன பொல்லாத வருமானத்துக்கு இந்த கூர்க்கா இங்கே வந்து இப்படிக் காய்கிறான் என்று அடிக்கடி ஒரு யோசனை வரும்.

    பிறகு நினைத்துக் கொள்வான்.

    தன்னைப் போல்தான் ராம் பகதூரும் என்று. பிழைப்புக்கு எங்கெல்லாம் ஓட வேண்டியிருக்கிறது.

    அதோ…

    தூரத்தே லாத்தியால் தட்டப்படும் ஓசை. ஏதோ ஒரு கடையின் ஷட்டர் மீது ராம் பகதூர் டார்ச் அடித்துக் கொண்டிருந்தான்.

    பால் மிகவும் சுண்டியிருந்தது.

    சற்று எடை சுட்டி விடலாமா என்று யோசித்த நாயர் பகதூருக்காக அதைத் தள்ளி வைத்தான்.

    ஸ்ட்ராங் டீயின் மீது மலாய் மிதந்தால் ராம் பகதூர் சப்புக் கொட்டிக் குடிப்பான்.

    இப்பொழுது பகதூர் நெருங்கி வந்து விட்டான். மஃப்ளர் சுற்றப்பட்ட நீள்சதுரத் தலை, நெற்றிச் சுருக்கங்கள், காக்கி உடைகள், கைகளில் லாட்டியும், டார்ச்சும் சத்யராஜ் உயரம்.

    நாயர் சாப், சலாம்.

    வா, பகதூர்.

    பகதூர் பெஞ்சில் உட்கார்ந்து, விஸ்வாசமாகச் சிரித்தான்.

    நாயருக்குப் பரிதாபமாக இருந்தது.

    நாய்ப் பிழைப்பு. நிமிஷத்துக்கு நூறு ரூபாய் சம்பாதிக்கும் வழி தெரிந்தவர்கள் வாழும் இந்த நகரத்தில் இப்படி ஒரு மனிதன். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து சேவகம் செய்கிறான்.

    என்னமோ ஒரு வாழ்க்கை!

    நன்றாகச் சாயம் இறக்கி ஒரு டீ போட்டான். கரண்டியால் துழாவி மலாயை அதில் மிதக்க விட்டான்.

    இந்தா, பகதூர்.

    பகதூர் குடிக்கத் துவங்கினான்.

    நாயர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    இந்த கூர்க்கா டீ குடிப்பதே ஓர் அழகு! நன்றாகச் சுவைத்து. ஏதோ உணவு உண்ணுவது போல்…

    அவன் டீ கிளாசைக் கட்டை

    Enjoying the preview?
    Page 1 of 1