Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kondral Paavamillai
Kondral Paavamillai
Kondral Paavamillai
Ebook96 pages33 minutes

Kondral Paavamillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனநலக் காப்பகத்தில் இருந்து நிவாஸ் தப்பி விடுகிறான். முன்னாள் காவல் ஆய்வாளரான நிவாஸ் குடும்பத்தையும் வேலையையும் இழந்து, மனநலமின்றி வாழ்ந்ததற்குக் காரணமான காவல் துறை அமைச்சர் புதியவனைப் பழி வாங்கப் புறப்படுகிறான். கொடியவனைக் கொன்றாலும் பாவமில்லை என்பது அவன் எண்ணம். ஒட்டு மொத்தக் காவல்துறையும் அவனுக்கு எதிராக. அவன் எண்ணம் நிறைவேறியதா?

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580131008225
Kondral Paavamillai

Read more from S. Kumar

Related authors

Related to Kondral Paavamillai

Related ebooks

Related categories

Reviews for Kondral Paavamillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kondral Paavamillai - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொன்றால் பாவமில்லை

    Kondral Paavamillai

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    சீமா தனியாய் இருந்தாள்.

    மெரீனா நிறையக் கூட்டம் வாங்கி, வியர்த்துக் கொண்டிருந்தது. சென்னையின் நெரிசலும் கடற்கரையையும் விட்டு வைக்கவில்லை.

    ஆனால் சீமா கைக்குட்டை போட்டு இடம் பிடித்து வைக்காத தன் படகினருகே தனியாய் இருந்தாள்.

    சுண்டல்காரர்களும் கிண்டல் விற்பவர்களும் அவளை நெருங்கி வந்து நோட்டம் விட்டார்கள்.

    அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. சசே என்று மணலை உதறினாள். எழுந்தபோது,

    கார்த்திக் அவளை நோக்கி வந்தான்.

    அவள் இரண்டெட்டு எடுத்து வைத்தாள்.

    சாரி, என்று வழிமறித்தான்.

    அவன் போலீஸ் பூனிஃபார்மில் இருந்தான். யூனிஃபார்மின் தொளதொளப்பு அவன் உடல்வாகை மறைத்தது என்றாலும் சட்டைக்கு வெளியே கை திரட்சியாய்த் தெரிந்தது.

    கார்த்திக், எல்லாரும் நம்மைத்தான் பார்க்கிறாங்க.

    பார்க்கட்டும். அவங்க கையில் கொஞ்சம் அட்சதை கொடுத்துடுவோம்.

    இப்ப உங்க யூனிஃபார்ம் உங்களைக் காப்பாத்துது இல்லேன்னா தர்ம அடி விழும்.

    எனக்கா, ஏன்?

    இப்படி ஒரு வயசுப் பொன்னை வழிமறிச்சா உதைக்காம கொஞ்சுவாங்களா?

    உனக்கு ஒரு வயசா?

    நான் நிச்சயமாச் சிரிக்க மாட்டேன்.

    சிரிக்க வேணாம். கோபத்தைக் குறைக்க வேணாம், உட்காருமா.

    முடியாது.

    சீமா, நான் சரியாத் திட்டமிட்டபடியே வீட்டை விட்டுக் கிளம்பிட்டேன். அந்த நேரம் கமிஷனர் கிட்டேருந்து ஃபோன். ஒரு முக்கியமான கேஸ் விவரங்களைச் சொல்லி ஃபைலைக் கொடுத்துட்டுத்தான் டாட்டா சொன்னார். நான் என்ன பண்ண முடியும்?

    உங்க வேலைதான் உங்களுக்கு முக்கியம். இப்படி இருட்டற நேரத்தில் ஒரு பொண்ணு தனியாக் காத்திருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியுமா?

    என்ன ஆச்சி?

    கண்டவனும் கலாட்டா பண்றான். உங்க டிபார்ட்மெண்ட்டுக்கே கேவலம்.

    தப்பும்மா. அது சட்டம் ஒழுங்கு விவகாரம், நான் க்ரைம். நம்ம பிழைப்பு மதிப்பு வாய்ந்தது. அதில் கேவலத்துக்கு இடமே இல்லை.

    ஆமாம், இப்படியே ஜோக் அடிச்சிட்டிருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு பேரும் அழப் போறோம்.

    லட்சியத் தம்பதிகளெல்லாம் அப்படித்தான். இன்ப துன்பங்கள் இணை பிரியமாட்டாங்க, சிரிக்கிறதும் அழறதும் சேர்ந்தேதான்.

    நாம் பிரிஞ்சி அழப் போறோம்...

    பயமுறுத்தறியா?

    நிஜம்தான். நான் என் புருஷன் வீட்டில் அழுவேன், நீங்க உங்க வீட்டிலே.

    புருஷனா? யாரந்த வில்லன் அடிச்சி தலைகீழாத் தொங்க விட்டுடறேன்.

    தெரியாது.

    தெரியாதா?

    ஆமாம். அப்பா இப்பத்தான் தீவிரமா வரன் பார்க்கிறார். ஏதாவது ஒன்று அமைஞ்சிட்டதுன்னா அவ்வளவுதான்.

    இனிமே தாமதிக்க முடியாது. உங்க வீட்டில் நம்ம விஷயத்தை உடைச்சிச் சொல்லிட வேண்டியதுதான்.

    இப்படியே பேசிட்டிருங்க. நம்ம காதல் சோகத்தில் முடிஞ்சிடும்.

    புலம்பாதே, சீமாக் குட்டி உங்க வீட்டிலே சம்மதிச்சி ஆசீர்வாதம் பண்ணாலும் சபிச்சி வெளியே துரத்தினாலும் நாம் தம்பதிகளாகத்தான் போறோம். என் பக்கம்தான் யாரும் இல்லையே!

    அதுதான் தெரியுமே.

    ஆனா...?

    என்ன ஆனா? புதுசா யாராவது தூரத்துச் சொந்தத்தைக் கொண்டு வந்து முன்னால் நிறுத்தப் போறீங்களா?

    புதுசா ஒருத்தர்தான் ஆனா சொந்தமில்லே. அவரிடம் முதல்ல ஆசீர்வாதம் வாங்கறோம். அப்புறம் உங்க பேரண்ட்ஸ். உங்க பெற்றோர்கள் சம்மதிச்சாலும் சம்மதிக்கலைன்னாலும் நாம் கல்யாணம் பண்ணிக்கறோம். ஓகே?

    ஒரு வேளை உங்க... யார் அவர்? அவர் ஒப்புக் கொள்ளலேன்னா?

    அவர் என்னோட வெல்விஷர். குரு மறுக்கமாட்டார். மறுக்கக் கூடிய நிலையிலும் இல்லை.

    அவரை எப்ப பார்க்கப் போறோம்?

    அலையாதே!

    அலைவேன். இன்னும் எத்தனை நாள் இப்படி கடற்கரையில் காத்திட்டிருக்க முடியும்?

    ஓகே. நாளைக்கு நாம அவரைப் பார்க்கப் போறோம்.

    பீ ஸீரியஸ்.

    ஸீரியசாத்தான் சொல்றேன். நாளைக்கு என் குருவைப் பார்க்கிறோம். நாளை மறுநாள் உங்க அப்பாவை.

    இவ்வளவு வேகமாவா?

    புறப்படலாமா?

    ம்.

    நாளைக்கு காலையில் தாசப்பிரகாஷ்ல வெய்ட் பண்ணு. நான் உன்னை பைக்ல பிக் அப் பண்ணிக்கிறேன்.

    ***

    மறுநாள்.

    சீமா காத்திருந்தாள்.

    அடிக்கொரு தரம் கைக்கடிகாரத்தைப்

    Enjoying the preview?
    Page 1 of 1