Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marupadiyum Maranam
Marupadiyum Maranam
Marupadiyum Maranam
Ebook95 pages33 minutes

Marupadiyum Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டாக்டர் ராம்நாத் தன் மனைவி விஜயாவை விட்டு விட்டு வேறு பெண்ணை நேசிக்கிறான். அவனைப் பற்றி விஜயா தந்தைக்குத் தெரிவிக்க – அவர் வந்து பார்க்கும் பொழுது அவள் கொலையுண்டுக் கிடக்கிறான். எதிரே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஓர் அடையாளம் தெரியாத ஆடவனின் பிணம். குழப்பமான இந்தக் குற்றக் காட்சியின் புதிரை விடுவிக்கும் புதினம் இது.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580131008223
Marupadiyum Maranam

Read more from S. Kumar

Related authors

Related to Marupadiyum Maranam

Related ebooks

Related categories

Reviews for Marupadiyum Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marupadiyum Maranam - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மறுபடியும் மரணம்

    Marupadiyum Maranam

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஜி.ஹெச்.

    ராம்நாத் காண்டீனில் உட்கார்ந்து குளிர்பானம் உறிஞ்சிவிட்டுச் சிகரெட் பற்ற வைத்தான்.

    ராம்!

    குட்மார்னிங், சந்தியா!

    மார்னிங். என்று எதிரே உட்கார்ந்தாள்.

    ட்ரிங்க்ஸ்?

    நோ, தாங்க்ஸ். இப்பதான் ஒரு காப்பி சாப்பிட்டேன்.

    ரவுண்ட்ஸ் போயாச்சா?

    இல்லை. எங்க சீஃப் ரொம்பக் கண்டிப்பு. அவர் வந்த பிறகுதான் போகணும். அதனால வேலையும் சுலபம். நாங்களா எதுவுமே பண்ண வேண்டியதில்லே. ஹிஸ்டரி ஷீட் பார்த்து அடுத்து என்ன செய்யலாங்கிறதை யூகிக்கிறதோட சரி. சொல்லக்கூட வேண்டியதில்லை. அவர்தான் சொல்வார். சரி, தப்புன்னு மனசுக்குள்ளே ஒரு டிக், தட்ஸ் ஆல். தப்பாயிடுச்சின்னா சந்தேகம் கேட்பேன். விளக்கம் சொல்வார். நாம இன்னும் ஹவுஸ் சர்ஜனா இருக்கோமோன்னு அடிக்கடி எனக்கே சந்தேகம் வரும்.

    சிரித்தான். உன்பாடு நிம்மதி.

    இக்கரைக்கு அக்கரை பச்சை. எனக்கென்னவோ இப்படி இருக்கப் பிடிக்கவேயில்லை... நீங்க ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்துட்டிங்களா?

    முடிச்சிட்டு இப்பத்தான் வர்ரேன். இப்ப பெய்த மழை ஊரையே கலக்கிடுச்சி. வார்டு முழுக்க ஏ.ஜி.ஈ. கேசஸ். ஆரோக்கியத்தை இழந்துட்டு இழுத்துக்கிட்டு கிடக்கிற ஜனங்கள்... செம போர் ஐ சே. சில நேரம் இதுக்கா நாம நிறைய மார்க் வாங்கி, சிரமப்பட்டு மேலும் படிச்சோம்னு ஒரு வெறுப்பு வருது.

    அப்போ உங்களுக்கு இந்த வேலை பிடிக்கலையா?

    அப்படிச் சொல்ல முடியாது. திறமைக்குச் சவால் வர்றபொழுது நாம உடம்பையும் மனசையும் ஈடுபடுத்திப் போராடி ஜெயிக்கிறபோது நிச்சயமா ஒரு சந்தோஷம் கிடைக்குது. ஆனா, அதெல்லாம் பாலைவனச் சோலைகள் தான்!

    ஆஃப்டர் ஆல் ஒரு ஆறு மணி நேரம்தானே நீங்க இந்த நோயாளிகளோட இருப்பிங்க?

    ஆமாம், ஆனா அதுக்கப்புறம் முற்றிலும் வேறான வாழ்க்கையையும் பொழுதுபோக்கையும் நிர்ணயிக்க முடிஞ்சா பிரச்சினை இல்லே.

    அதில் என்ன தடை?

    விஜயா

    எனக்குத் தெரிஞ்சவரை உங்க மனைவி நல்லவங்க.

    நல்லவ... ஆமாம், நல்லவதான்! பட், மனமுதிர்ச்சி இல்லே. பாரதிராஜா படத்தில் சந்தையைச் சுத்தி வந்து, இன்ஸ்டன்ட் போட்டோ எடுத்துகிட்டு, சிரிப்பாளே... அந்தக் கதாநாயகி மாதிரி. அவளுக்குத் தேவை ஸில்லி ரொமாண்டிசம். எல்லா நேரங்களிலும். ரசனை இல்லை, பரிமாற்றம் இல்லே. பரஸ்பரம் புரிஞ்சிக்க முடியலே...

    போகப் போகச் சரியாயிடும். நகரமும் வாழ்க்கையும் பழகாத, புரிஞ்சிக்காத மனசு.

    இதெல்லாம் சப்பைக்கட்டு, சந்தியா. கல்யாணத்துக்குப் பத்துப் பொருத்தம் தேவையில்லே. ரெண்டு போதும். ஒண்ணு மனசு. இன்னொன்று உடம்பு.

    ஒரு டாக்டர் இப்படி உணர்ச்சிவசப்படக் கூடாது.

    நானும் மனுஷன்தான்! அவளை ஏறிட்டு நோக்கினான்.

    சந்தியா. மனம் திறந்து சொல்றேன்.

    சுற்றிலும் பார்த்தான்.

    அவரவர்களும் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள்.

    என் கல்யாணத்துக்கு முன்னால நான் உன்னைச் சந்திச்சிருக்கக் கூடாதான்னு இப்போ ஃபீல் பண்றேன்.

    நோ, ராம். இது சரியில்லே.

    நான் ஹிபாக்ரேட் இல்லை. என்னால மனசைத் திரை போட்டு மறைக்க முடியாது. நாம தினமும் சந்திக்கிறோம். பேசறோம். ஒரு நாள் பார்க்க முடியலேன்னா வருத்தப்படறோம். அப்படி என்ன, தொழில் முறையாப் பேசவா நாம இப்படித் தவிக்கிறோம்?

    இதுதான் எல்லை. என்று சந்தியா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    அப்பொழுது, ஹலோ. என்றபடி ஸ்ரீகாந்த் அவர்கள் மேஜைக்கு வந்தான்.

    ட்ரிங்க்ஸ்.

    இப்பத்தான் சாப்பிட்டோம்.

    அவன் தனக்கு மட்டும் குளிர்பானம் வரவழைத்து உறிஞ்சினான். பின்பு சிகரெட் பற்றவைத்தான்.

    என்ன ஆச்சு? ரெண்டு பேரும் எதிரெதிரா உட்கார்ந்து பேசாம இருக்கிங்க?

    இவ்வளவு நேரம் பேசிட்டுத்தான் இருந்தோம்.

    இப்ப என்ன ஆச்சு?

    ஒண்ணுமில்லே.

    என்ன சந்தியா, ரொம்ப சீரியசா இருக்கிங்க? ராம்நாத் ஏதாவது ஜோக் அடிச்சாரா?

    சிரித்தாள்.

    இருவருமே ஸ்ரீகாந்துக்கு எதிரே தங்கள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க ஏதாவது பேசலாமா என்று யோசித்துப் பேசாதிருந்தார்கள்.

    பிறகு ராம்நாத் எழுந்து கொண்டான். சி யூ தென். வரேன், சந்தியா என்று நகர்ந்தான்.

    இரண்டு நிமிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1