கனவுத் தேவதை
By R.Sumathi
()
About this ebook
"என்னப்பா... இன்னைக்கு இத்தனை தாமதம்? ஆபீசில் ஏதாவது முக்கியமான வேலையா?"
சூரியா வீட்டுக்குள் நுழைந்ததுமே, அம்மா தனம் காத்திருந்ததைப் போல் கேட்டாள்.
"வேலையெல்லாம் வழக்கம்போல முடிஞ்சது. வழியில என் கூட கல்லூரியில் ஒண்ணா படிச்ச ஒரு பொண்ணை எதேச்சையா பார்த்தேன். பேசிக்கிட்டிருந்ததுல நேரமாயிடுச்சு," என்றவாறே காலணிகளைக் கழற்றினான்.
"நீ படிச்சது மயிலாடுதுறையில். அங்கே உன் கூட படிச்சவ இங்க எப்படி?"
"இங்கே வேலை பார்க்கிறா..."
'ம்...' என அதுக்கு மேல் அதைப் பற்றிப் பேச விரும்பாதவளைப் போல், அம்மா சலிப்போடு உள்ளே சென்றாள்.
காப்பி எடுத்து வந்தாள். அவனிடம் கொடுத்துவிட்டு, "காய்கறி வாங்கிட்டு வர்றேன்," என துணிப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
மணக்கும் காப்பியை இடக் கையிலும், காலையில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வைத்திருந்த பத்திரிகையை வலக்கையிலும் வைத்தபடி செய்திகளை மேய்ந்தான்.
மனமோ அதில் ஒட்டாமல் நந்திதாவை நினைத்து மத்தளம் அடித்தது.
நந்திதாவைத் திடீரெனச் சந்தித்த நிமிடத்தில் உண்டான திகைப்பும், தித்திப்பும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
அந்த மிச்ச நினைப்பு மனசுக்கு இதமாக இருந்தது. சூடான காப்பியை உறிஞ்சினான். நிமிடத்தில் மனதிலும், உடலிலும் புத்துணர்வு கிளர்ந்தெழுந்தது. நந்திதா! மயிலாடுதுறையில் அவன் படித்த கல்லூரியில் படித்தவள். அழகைவிட அவளுடைய அடக்கமே அனைவரையும் கவரும்.லட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சும், பழகும் பண்பும் அத்தனை பேர் மனதிலும் அவளுக்கு அதிக மரியாதையை உண்டாக்கும்.
கருமமே கண்ணாகப் படிப்பிலேயே மூழ்கிக் கிடப்பாள். அவளைப் 'புத்தகப் புழு' எனக் கிண்டல் செய்வார்கள்.
நட்பு என்று பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் வட்டத்துக்குள் அவள் இல்லை. அதிகமாகத் தனித்தே இருப்பாள்.
யாரிடமும் நெருங்கவும் மாட்டாள். ரொம்ப தூரம் விலகியும் விடமாட்டாள்.
சூரியா நேர் மாறானவன். பெண்களைக் கிண்டல் செய்வதும், கேலி செய்வதுமாகக் கலகலக்க வைப்பான்.
கண்ணியம் மாறாத, நாகரீகம் குறையாத அவனது கிண்டலும் கேலியும் மாணவிகளைக் கோபப்படுத்துவதற்குப் பதிலாகச் சிரிக்க வைத்துவிடும். இதே நந்திதாவை எத்தனை முறை கிண்டலடித்து இருப்பான்! அவளுடைய வசீகரிக்கும் அழகு அவனைத் தூண்டிவிட்டாலும் எல்லை தாண்ட விட்டதில்லை.
கல்லூரி நாட்கள் எவ்வளவு இனிமையானவை! எவ்வளவு கலக்கலானவை! இளமைத்துள்ளலுக்குள் வளைய வரும் அந்த நேரங்கள் எவ்வளவு தித்திப்பானவை!
அதிலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து படிப்பதென்றால்...? இன்னும் உற்சாகம்.
கல்லூரிக் காலப் பசுமை நினைவுகள், மனதில் தேக்கி வைக்கப்படும்போது... அந்த நினைவுகளின் தேவதை ஒருத்தி எதிரே வந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது நந்திதாவைப் பார்த்ததும் அவள் ஒருத்தியைப் பார்த்ததே, பிரிந்துவிட்ட அத்தனை நட்புகளையும் சந்தித்ததைப் போல்... கல்லூரிக்குள் மறுபடியும் நுழைந்து விட்டதைப் போல் தெரிந்தது.
என்றைக்கும் இல்லாத புது உற்சாகம் இன்றைக்கு உருவானதைப் போலிருந்தது.
மறுநாள் - நந்திதாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. நிறையப் பேச வேண்டும், பழைய நிகழ்வுகளைப் புதுப்பித்துப் பார்க்க வேண்டும் என்று மனம் சொல்லியது.
அதை நினைத்த மாத்திரத்திலேயே கல்லூரிக் கால விடலைத் தனமும், குதூகலமும் நெஞ்சில் உண்டானது.
அலுவலகத்திலிருந்து நேரே நந்திதாவின் வீட்டுக்குத் தன் வாகனத்தில் பயணித்தான்.
Read more from R.Sumathi
காதல் மின்னல் Rating: 0 out of 5 stars0 ratingsதாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsவாழ்ந்தால் உந்தன் மடியில்! Rating: 0 out of 5 stars0 ratingsதேடினேன் வந்தது! Rating: 0 out of 5 stars0 ratingsதிரும்பி வா, தென்றலே! Rating: 0 out of 5 stars0 ratingsஎப்படி சொல்வேனடி! Rating: 0 out of 5 stars0 ratingsநீயிருந்த மனசு Rating: 0 out of 5 stars0 ratingsபார்த்தால்... காதல் வரும்! Rating: 0 out of 5 stars0 ratingsஊஞ்சலாடும் நெஞ்சம் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணோரம் மின்சாரம் Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் சுவடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsமனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பு மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநீயென்பது நானல்லவோ...? Rating: 0 out of 5 stars0 ratingsமுல்லைப்பூ பல்லக்கு Rating: 0 out of 5 stars0 ratingsமங்கல இசை Rating: 0 out of 5 stars0 ratingsகாதலாய் வந்து போகிறாய் Rating: 0 out of 5 stars0 ratingsகுங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாளனே... Rating: 0 out of 5 stars0 ratingsஇணையான இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsஒரு வானம் இரு நிலவு..! Rating: 0 out of 5 stars0 ratingsஎனது மலர் மடியிலே... Rating: 0 out of 5 stars0 ratingsஉன் அருகில்... உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பே... ஆருயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பில் வந்த காவியம் Rating: 0 out of 5 stars0 ratingsமாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... Rating: 0 out of 5 stars0 ratingsஉறவில்லை... பிரிவில்லை..! Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsநீங்காத எண்ணம் ஒன்று Rating: 0 out of 5 stars0 ratings
Related to கனவுத் தேவதை
Related ebooks
Kanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5En Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5ஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5மலர்ந்த விழிகள் Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsUyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsசெவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsSevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Yerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Manasai Thaadi Mani Kuiyile...! Rating: 3 out of 5 stars3/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Eppodhumalla, Eppodhavathu Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Poothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsThulluvatho Ilamai Rating: 0 out of 5 stars0 ratingsKiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratingsSooda Oru Cup Tea Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsPon Malar Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for கனவுத் தேவதை
0 ratings0 reviews
Book preview
கனவுத் தேவதை - R.Sumathi
1
"ஏய் நந்திதா..."
கம்பீரமான ஆண் குரல், உற்சாகமாக ஒலித்தது தன் பெயர் நடுவீதியில் இவ்வளவு சத்தத்துடன் ஒலித்ததைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போனாள், நந்திதா.
இந்த ஊரில் சொந்த பந்தம் என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை. அதனால், இதயத்துக்கு நெருக்கமானதை போல உணர்வை ஏற்படுத்திய அந்தக் குரல், அவளை யோசிக் வைத்தது. விழிகளை நாலாபக்கமும் சுழல வைத்தது. பட்டாம்பூச்சியாய்ப் படபடக்கும் அவளது கண்களுக்கு அதிகப் பளு கொடுக்காமல் பக்கத்தில் வந்தான், அவன்.
ஏய் நந்திதா...
மீண்டும் அதே உற்சாகம், கம்பீரத்துடன் வந்தது. குரல். ஆனால், சத்தத்தைக் குறைத்து அழைத்தான்.
எங்கேயோ கேட்ட அந்தக் குரல், இப்போது எங்கிருந்து ஒலிக்கிறது எனத் தேடியவள், திரும்பினாள். பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் சட்டென்று பரவசமானாள்.
ஹலோ சூரியா!
அவளும், திகைப்பு மாறி, உற்சாகத்துக்கு வந்துவிட்டாள். இருவர் முகத்திலும் ஆனந்தம் அலை பாய்ந்தது.
சூரியா... நீ எப்படி இங்கே?
அதையேதான் நானும் கேட்கிறேன். நீ எப்படி இங்கே? கல்யாணமாகி இந்த ஊருக்கு மருமகளா வந்திருக்கியா? உன் வீட்டுக்காரர் எங்கே வேலை பார்க்கிறார்?
அவன் சடசடவெனக் கேட்க, அவள் பற்கள் ‘பளிச்’சிடச் சிரித்தாள்.
ஒரு பொண்ணு ஊர் விட்டு ஊர் வந்தால், உடனே கல்யாணமாகி வந்திருக்கிறதாதான் அர்த்தமா? என்னைப் பார்த்தா கல்யாணமான மாதிரியா தெரியுது?
அவள் சிரிப்போடு, கேள்விக் கணை தொடுத்தாள்.
இல்லை!
என அவளுடைய கழுத்தைப் பார்த்துவிட்டுப் பலமாகச் சிரித்தான், சூரியா.
எனக்கு இங்கே வேலை கிடைச்சிருக்கு. அதான் இங்கே வந்துட்டேன்.
அப்படியா? என்ன வேலை? எங்கே இருக்கிறாய்?
பெருமையா சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் பெரிய வேலை இல்லை. தனியார் நிறுவனத்தில் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துல இருக்கிறேன்.
சூரியாவின் முகம் மாறியது.
சென்னையில் இந்த சம்பளத்தை வச்சுக்கிட்டு என்ன செய்ய முடியும்?
அக்கறையாக வினவினான்.
என்ன பண்ணுறது? செய்யும் தொழிலே தெய்வம் வாங்குகிற சம்பளமே வாழ்க்கை. இப்போதைக்கு இது போதும்.
எங்கே தங்கி இருக்கே? பெண்கள் விடுதியிலா?
இல்லை! வாடகைக்கு வீடெடுத்துத் தங்கி இருக்கேன்.
தனியாவா?
அம்மாவும் நானும்.
அப்பா...?
போன ஆண்டே போய்ச் சேர்ந்துட்டார்.
அவளுக்குச் குதூகலம் கலைந்து, நொடியில் குரல் உடைந்தது.
அவளது முகத்தில் வேதனை ரேகை படர்வதைக் கவனித்த அவன் சட்டென்று பேச்சை மாற்றினான்.
சரி வா... ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். நடுத் தெருவில் நின்னு பேசிக்கிட்டிருக்கோம்.
கண்களில் துளிர்த்துவிட்ட கண்ணீரை வழிய விடாமல் மறைத்துக் கொண்ட நந்திதா, மவுனமாக அவன் பின்னால் நடந்தாள்.
இருவரும் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர். அமைதியான இடம் பார்த்து அமர்ந்தனர்.
காப்பி மட்டும் போதும், சூரியா.
ஏன்? ஏதாவது சாப்பிடேன். சாயந்தர நேரம்தானே?
பழக்கமில்லை.
அதனாலென்ன? இன்னைக்கு என்கூடச் சாப்பிடு,
என்றவன். அவளின் பதிலுக்குக் காத்திராமல் இரண்டு மசாலா தோசைக்குச் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.
சொல்லு... சீர்காழியில் உங்க வீட்டுல இப்ப யார் இருக்கா?
அதுவும் வாடகை வீடுதானே... யாராவது குடியிருப்பாங்க.
அப்பாவோட சேமிப்புன்னு...
அதை ரெண்டு அக்காளுக்கும் கரைச்சுட்டாங்க. மண வாழ்க்கை அமைச்சுக் கொடுத்து, அதுக்கு வட்டி கட்டின மாதிரி வரிசையா சீர் செனத்தி செய்து அப்பா ஓடாகத் தேஞ்சுட்டார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்தது. அதுக்கு வருமானம் வேணுமே... ஊரில் ஏதாவது வேலைக்குப் போனா ஐந்நூறு, ஆயிரத்துக்கு மேல் என்ன கிடைக்கும்? அதான் பத்திரிகைகள் பார்த்து விண்ணப்பம் போட்டேன். ஆண் பிள்ளை இல்லாத அம்மாவுக்கு இப்ப எல்லாமே நான்தான்.
மசால் தோசை மேசையில் சுடச்சுட வந்து உட்கார்ந்தது. நந்திதா சாப்பிடத் தொடங்கியவாறே கேட்டாள்.
நீ மாயவரத்திலேருந்து எப்ப இங்கே வந்தே?
நானும் உன்னை மாதிரிதான், வேலை கிடைச்சு இங்கே வந்தேன். நல்ல வேலை. கை நிறையச் சம்பளம்.
அம்மா எப்படி இருக்காங்க?
நல்லா இருக்காங்க. இங்கே என் கூடத்தான் இருக்காங்க. தங்கையைக் கும்பகோணத்துலதான் கொடுத்திருக்கு.
அப்படியா?
பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர்.
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சூரியா. பரிச்சயமான முகம் எதுவுமே இல்லாத சென்னையில் உன்னைப் பார்த்ததும் எப்படியோ இருக்கு. ஆனந்தம் மட்டுமல்ல. அதுக்கும் மேலே ஏதோ ஒரு தெம்பு வந்த மாதிரி இருக்கு. வேளச்சேரியில்தான் எங்க வீடு. வாயேன், என்கூட. உன்னைப் பார்த்தா அம்மா சந்தோஷப்படுவாங்க.
முகவரி கொடு, நந்திதா. நான் இன்னொரு நாள் வர்றேன்.
அவள் தன் கைப்பையைத் திறந்து, காகிதம் எடுத்து, முகவரி எழுதிக் கொடுத்தாள்.
அவளுக்குத் தன் முகவரியை எழுதிக் கொடுத்தான், சூரியா.
அவளைப் பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு, பூரிப்பாய்க் கையசைத்தபடி நின்றான்.
2
"என்னப்பா... இன்னைக்கு இத்தனை தாமதம்? ஆபீசில் ஏதாவது முக்கியமான வேலையா?"
சூரியா வீட்டுக்குள் நுழைந்ததுமே, அம்மா தனம் காத்திருந்ததைப் போல் கேட்டாள்.
வேலையெல்லாம் வழக்கம்போல முடிஞ்சது. வழியில என் கூட கல்லூரியில் ஒண்ணா படிச்ச ஒரு பொண்ணை எதேச்சையா பார்த்தேன். பேசிக்கிட்டிருந்ததுல நேரமாயிடுச்சு,
என்றவாறே காலணிகளைக் கழற்றினான்.
நீ படிச்சது மயிலாடுதுறையில். அங்கே உன் கூட படிச்சவ இங்க எப்படி?
இங்கே வேலை பார்க்கிறா...
‘ம்...’ என அதுக்கு மேல் அதைப் பற்றிப் பேச விரும்பாதவளைப் போல், அம்மா சலிப்போடு உள்ளே சென்றாள்.
காப்பி எடுத்து வந்தாள். அவனிடம் கொடுத்துவிட்டு, காய்கறி வாங்கிட்டு வர்றேன்,
என துணிப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
மணக்கும் காப்பியை இடக் கையிலும், காலையில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வைத்திருந்த பத்திரிகையை வலக்கையிலும் வைத்தபடி செய்திகளை மேய்ந்தான்.
மனமோ அதில் ஒட்டாமல் நந்திதாவை நினைத்து மத்தளம் அடித்தது.
நந்திதாவைத் திடீரெனச் சந்தித்த நிமிடத்தில் உண்டான திகைப்பும், தித்திப்பும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
அந்த மிச்ச நினைப்பு மனசுக்கு இதமாக இருந்தது. சூடான காப்பியை உறிஞ்சினான். நிமிடத்தில் மனதிலும், உடலிலும் புத்துணர்வு கிளர்ந்தெழுந்தது. நந்திதா! மயிலாடுதுறையில் அவன் படித்த கல்லூரியில் படித்தவள். அழகைவிட அவளுடைய அடக்கமே அனைவரையும் கவரும்.
அலட்டல், ஆர்ப்பாட்டம்