நீயென்பது நானல்லவோ...?
By R.Sumathi
()
About this ebook
கண்ணீருடன் நின்ற மருமகளைப் பார்த்துக் கொஞ்சமும் மனதில் இரக்கம் இன்றிப் பேசினாள் செல்வநாயகி.
"என்னடி... முறைச்சுக்கிட்டு நிக்கறே. கண்ணீர் பொத்துக்கிட்டு கொட்டுது. போடி... போய் வேலையைப் பாரு. நல்ல மாட்டுக்குத்தான் ரோஷம் வரணும். உனக்கெல்லாம் எதுக்கு ரோஷம் வரப்போகுது. கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் ஆகப்போகுது. இருபது வயசுல கல்யாணம். வயசு முப்பது ஆகுது. மாடு மாதிரி நிக்கறே. புண்ணியம் இல்லை."
குபீரென நெஞ்சம் குலுங்கக் கதறினாள் வள்ளி. சமையலறையை விட்டு வெளியே வந்தாள். முந்தானையை வாயில் பொத்திக் கொண்டு குலுங்கினாள்.
கருணாகரன் தன்னுடைய அறையிலிருந்து வெளிப்பட்டான். அவனுக்கு அம்மா பேசியது எல்லாம் கேட்டது. அவனுடைய முகம் நிறமிழந்து போய்விட்டிருந்தது.
சமையலறை அருகே வந்தான். கண்ணீருடன் விசும்பிக் கொண்டிருந்த மனைவியை ஒரு கணம் பார்த்தவன் உள்நோக்கிக் குரல் கொடுத்தான்.
"அம்மா..."
மகனுடைய அதிகாரமான குரலுக்கு வெளியே வந்தாள் செல்வநாயகி.
"அம்மா... என்னம்மா நீ ஏன் இந்த மாதிரி பேசறே? உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அவளை இந்த மாதிரிப் பேசாதேன்னு. எப்பப் பார்த்தாலும் எதையாவது சொல்லிக் குத்திக் காட்டிக்கிட்டே இருக்கறதுதான் வேலையா? அவளை வாய் கூசாம மலடி மலடின்னு ஏம்மா பேசறே? ரெண்டு பேரும் டாக்டர்கிட்ட போய் எல்லா டெஸ்டும் செய்தாச்சு. ரெண்டு பேருக்கும் எந்தக் குறையும் இல்லை. எதுக்குஅவளை மலடி மலடின்னு சொல்லணும்?" ஆத்திரமாகப் பேசிய மகனை எரிச்சலாகப் பார்த்தாள்.
"பேசாம இருக்க எப்படிடா முடியும்? எல்லா வீட்லேயும் குழந்தையும் குட்டியுமா கொஞ்சி விளையாடுதுங்க. என் மனசு எவ்வளவு வேதனைப்படும்?"
"உன் மனசு வேதனைப்படுதுங்கறதுக்காக அவ மனசை ஏன் நோக அடிச்சு வேதனைப் படுத்தறே?"
"ஆமாண்டா! வேதனைப்படுத்துவேன்தான். உனக்குத்தான் எந்தக் குறையும் இல்லையே! நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடா?"
"அம்மா!"
"ஏன்டா கத்தறே? நான் சொல்றதுல என்ன தப்பு? ஒரு வருஷமா ரெண்டு வருஷமா? பத்து வருஷம். நானும் எவ்வளவோ பொறுமையா இருந்து பார்த்தாச்சு. பொறக்கும் பொறக்கும்னு ஒவ்வொரு வருஷத்தையும் ஓட்டியாச்சு. இனிமே என்னால் பொறுமையா இருக்க முடியாது. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க!" செல்வநாயகி வெறுப்பைச் சுமந்து பேசினாள்.
"அம்மா! இந்த மாதிரிப் பேச்சை இனிமே பேசாதே. பத்து வருஷம் என்ன? நூறு வருஷம் ஆனாலும் அவதான் என் மனைவி. பொறக்குதோ பொறக்கலையோ... இன்னொரு கல்யாணம்ங்கற பேச்சுக்கே இடம் இல்லை."
"ஏன்டா... அப்படின்னா இந்த வீட்ல துள்ளி விளையாட ஒரு பிள்ளை கடைசி வரை இருக்காதா? என் ஆசை நிறைவேறாமலேயே நான் சாகணுமா? டேய்... நீ நூறு வருஷம் ஆனாலும் இவளையே கட்டிக்கிட்டு அழு. ஆனா... என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, இந்த வீட்ல விளையாட ஒரு பிள்ளை வேணும்."
கருணாகரன் குழப்பமாக அம்மாவைப் பார்த்தான்.
"என்னம்மா பேசறே? குழந்தை வேணும்னா நான் எங்க போவேன்? தத்து எடுத்தாத்தான் உண்டு."
"எந்த இழவையாவது எடு. நீ தத்துதான் எடுப்பியோ இல்லை ரோட்ல கிடக்கற புள்ளையை இழுத்துக்கிட்டு வருவியோ! அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை. எனக்கு இந்த வீட்ல விளையாட ஒரு புள்ளை வேணும்இவளால ஒரு புள்ளையைப் பெத்தெடுக்க முடியாது. இந்தக் குடும்ப வாரிசைப் பார்க்க இந்த ஜென்மத்துல முடியாதுங்கறது தெரிஞ்சுட்டுது. அதனால ஏதோ ஒரு குழந்தையைப் பேரப் புள்ளையா நினைச்சு வாழ்ந்துட்டு செத்துப் போறேன்!"
செல்வநாயகி பெரிதாக அழத் தொடங்கினாள். கருணாகரனுக்கு எரிச்சலாக இருந்தது. எதுவும் பேசாமல் தன், அறைக்குத் திரும்பினான்.
இரவு அவனுடைய நெஞ்சில் படுத்துக் கொண்டு மெளனமாகக் கண்ணீர் வடித்தாள் வள்ளி.
அவளுடைய கூந்தலை மெல்ல வருடினான் கருணாகரன். மென்மையாகச் சிந்தும் அவளுடைய கண்ணீர் சூடாக நெஞ்சில் இறங்கி வேதனையின் ஆழத்தை உணர்த்தியது. ஏதாவது பேசி அவளை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நினைத்தான். ஆனால், பேச முடியவில்லை. நெஞ்சை வேதனை கனமாக அழுத்தியது
Read more from R.Sumathi
கையருகில் பூமாலை Rating: 0 out of 5 stars0 ratingsபொன் நிலாவில் என் கனாவே! Rating: 0 out of 5 stars0 ratingsமாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... Rating: 0 out of 5 stars0 ratingsஉறவில்லை... பிரிவில்லை..! Rating: 0 out of 5 stars0 ratingsஎனது மலர் மடியிலே... Rating: 0 out of 5 stars0 ratingsதேடினேன் வந்தது! Rating: 0 out of 5 stars0 ratingsதாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsஅச்சம் விடு பச்சைக் கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsஉன் அருகில்... உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த நெஞ்சம் என்னிடம்... Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பே... ஆருயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லைக் கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சுக்கு நீ அழகு..! Rating: 0 out of 5 stars0 ratingsகூடு மறந்த குயில்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கெங்கும் உன் வண்ணம் Rating: 0 out of 5 stars0 ratingsகானலைத் தேடும் காவிரி Rating: 0 out of 5 stars0 ratingsகுங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஎப்படி சொல்வேனடி! Rating: 0 out of 5 stars0 ratingsநிலவே முகம் காட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா... நதியலையே..! Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் வருவாளா? Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாளனே... Rating: 0 out of 5 stars0 ratingsதேன் சிந்தும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபேசும் உள்ளம் பேசாத கண்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஇணையான இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருப்பேன் கண்ணா Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் காலமடி கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsதொடுவானைத் தொட்டுவிடு! Rating: 0 out of 5 stars0 ratingsநீயிருந்த மனசு Rating: 0 out of 5 stars0 ratings
Related to நீயென்பது நானல்லவோ...?
Related ebooks
Neeyenbathu Naanallavo Rating: 5 out of 5 stars5/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsKaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsஎன் வசம் நான் இல்லை... Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhali Kaadhalikavillai Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைத் தேடும் நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5உன்னைக் கரம் பிடித்தே... Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsமாறியது நெஞ்சம்..! Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Thottil Ingirukka Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5பூவே... உன்னை நேசிப்பேன்...! Rating: 0 out of 5 stars0 ratingsPoove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsMarma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsஇதயங்களின் சங்கமம்... Rating: 0 out of 5 stars0 ratingsNathiyilla Odam Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsமேகமாய் வந்து போகிறேன் Rating: 0 out of 5 stars0 ratingsMegamaai Vanthu Pogiren Rating: 5 out of 5 stars5/5Ganga Rating: 5 out of 5 stars5/5Enthiran Manthiran Thanthiran Rating: 5 out of 5 stars5/5Marakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5
Reviews for நீயென்பது நானல்லவோ...?
0 ratings0 reviews