இதயங்களின் சங்கமம்...
()
About this ebook
வானின் நட்சத்திரங்களை மிஞ்சும் வண்ணம் சாலையில் வெளிச்சத்தைப் பீச்சியடித்தபடி பல வாகனங்கள் விருட், விருட்டென பாய்ந்து சென்று கொண்டிருந்தன. அந்த சாலையோரமாய் அழுது கொண்டு நின்றிருந்த குழந்தையொன்று திடீரென்று சாலையின் குறுக்காக பாய "ஐயோ... அம்மா... ஆ... ஆ..." என்று வீறிட்டு அலறினாள் ராகா.
அருகில் படுத்திருந்த அம்பிகா தடபுடல் கூட்டி எழுந்தமர்ந்து "ஏய்... ராக்காயி... என்னடி இது? இப்படி அலர்றே" என்றவாறு அவளைப் பிடித்து உசுப்ப...
திடுக்கிட்டு கண் விழித்த ராகா... சுற்றும் முற்றும் பார்த்தவாறு "குழந்தை... குழந்தைக்கு ஒன்றும் இல்லையே" என்றாள் பதறியபடி... "என்னடி இது குழந்தை அது, இதுன்னு... உளறிகிட்டிருக்கே ஏதாவது கனவு... கினவு... கண்டியா...?"
நெஞ்சில் கை வைத்தவள் "அப்பாடி கனவா...! ஒரு நிமிஷம் என் மூச்சே நின்னு போன மாதிரி இருந்திச்சி" என்றாள். நிம்மதியடைந்தவளாக!
"சரிதான்!" என்று மணியை பார்த்த அம்பிகா "அடடே... மணி ஆயிடுச்சே!..." என்றவாறு படுக்கையை விட்டு எழுந்தாள்.
"என்னம்மா இப்பவே எழுந்திட்டே?" என்று கேட்ட ராகாவிடம்... "ம்... இப்ப எழுந்திருச்சா தான் வேலைக்குப் போகிற உங்க மூணுபேருக்கும்... மதிய சாப்பாடு... காலை டிபன்னு பண்ண நேரம் சரியாயிருக்கும்!" என்று முணு, முணுத்த அம்பிகா... அவிழ்ந்து கிடந்த தலை முடியை கொண்டையிட்டுக் கொண்டே வெளியேறி குளியலறைக்குள் நுழைந்தாள்.
ராகாவும் 'இனி தூக்கம் வந்தாப்புலதான்' என்று நினைத்தவாறு படுக்கையில் எழுந்தமர்ந்தாள்... 'முருகா... இன்றைய பொழுது நல்ல பொழுதாக ஆகட்டும்" என்று மனதில் வேண்டிக் கொண்டு... போர்வையை மடித்து, தலையணையுடன் அதனிடத்தில் அழகாக வைத்து விட்டு திரும்ப... இன்னொரு கட்டிலில் சிரித்தபடியே தூங்கும் தன் தங்கை மகமாயி என்ற மகாவை பார்த்தவள்... அவள் முகத்தில் சிரிப்பைப் பார்த்து "பயபுள்ள கனவு கண்டு சிரிக்குது போல!" என்று நினைத்தாள் முகம் அலம்பப் போனவள் பத்து நிமிடத்தில் வெளியே வந்தாள். அழகான கோலங்களை தன் கோல நோட்புக்கில் ஏராளமாக வரைந்து வைத்திருந்தாள். அதனை எடுத்து பார்த்தவள்... வெளியே வந்து முற்றத்தில் பெருக்கி, தண்ணீர் தெளித்து, தான் பார்த்து மனதில் நினைத்த கோலத்தை அழகாக போட்டுவிட்டு வெளி கேட்டை மூடிய பிறகும் தான் போட்ட கோலத்தில் தவறேதும் உள்ளதா? என்று உற்று பார்த்து அப்படியெதுவும் இல்லை என ஊர்ஜிதப் படுத்திவிட்டு திருப்தியுடன் வீட்டிற்குள் வந்தாள்.
அம்மா சமையலறையில் காய் நறுக்குவது தெரியவும் அருகில் வந்தவள் "என்னம்மா ஏதாவது ஒத்தாசை செய்யட்டுமா?" என்க...
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ போய் தலைக்கு குளிச்சி உன் தலைமுடியை காயவிடு இன்றைக்கு வெள்ளிக்கிழமை அதுவும் மாதாந்திர வெள்ளி...!"
"என்னம்மா... நான் கொஞ்சம் கழிச்சே குளிக்கிறேன்" என்றவள்... அம்மா எடுத்து வைத்திருந்த சின்ன வெங்காயத்தை எடுத்து தோலை உரிக்கத் தொடங்கினாள்.
"கேட்க மாட்டியா..." என்ற அம்பிகா...
"இப்ப சமைச்ச பிறகு ராத்திரிதான் திரும்ப சமைக்கணும். அதுவரை எனக்கு வேலை கிடையாது. நீங்க மூன்று பேரும் வேலைக்குப் போனதுக்கப்புறம் தேமேன்னு ஒத்தையா உட்கார்ந்திருக்கணும் எவ்வளவு நேரம் தான் டி.வி. பொட்டி முன்னே உட்கார்றது?"
"ஏம்மா... பக்கத்து வீட்டு பஞ்சவர்ணம் மாமிகிட்டே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கிறது?"
"ம்க்கும் இப்ப யாரு பக்கத்து வீட்ல பேசுறதுக்குன்னு வர்றாங்க... எப்போதும் சீரியல்களை ஒண்ணு விடாம பார்த்துக்கிட்டு அக்கம் பக்கத்துல யார் இருக்கிறாங்கன்னே தெரியாம பொழுதை போக்குறாங்க. நகரத்திலே மட்டுமில்லே நம்ம கிராமத்திலும் இப்ப இதே மாதிரி ஆயிடுச்சு..."
"அம்மா பால்..."
"சரி... ராக்காயி பால்காரர் வந்துட்டார் போய் வாங்கிட்டு வா... காபி போடலாம்..."
"போம்மா...! என்னை ராக்காயின்னு... கூப்பிடாதே! நாகரீகமா 'ராகா'ன்னு கூப்பிடுன்னு உன்கிட்டே எத்தனை வாட்டி சொல்றது?"
"ஏண்டி... பேர் வைக்கறதே... கூப்பிடத்தானே அதைப்போய் சுருக்கி ராகா... ஊறுகான்னு... சொல்லிகிட்டு சுருக்குறதும், விரிக்கிறதும் எனக்கு வாய்ல வராது! போடி பாலை வாங்கிட்டு வா... அவர் திட்டப் போறார்" என்று தன் பெண்ணிடம் பாத்திரத்தை எடுத்து நீட்டினாள். அம்பிகா...
Read more from Sundari Murugan
தாலாட்டும் உறவுகள்... Rating: 0 out of 5 stars0 ratingsமாறியது நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsநீ எங்கே... நான் அங்கே..! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயமே விட்டு விலகாதே...! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயவீணை தூங்கும்போது…! Rating: 0 out of 5 stars0 ratingsவசந்தம் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னை காணாத கண்ணும்... Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் போகுதே..! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் தேடும் என்னுயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsயாருக்கு மாப்பிள்ளை யாரோ..? Rating: 0 out of 5 stars0 ratingsஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்... Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் துடிக்க மறந்ததேன்..? Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் என்னும் கோவில்… Rating: 0 out of 5 stars0 ratingsஇதயத்தில் ஏதோ ஒன்று..! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் எடுத்த முடிவு! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் என்றொரு ஏடெடுத்தேன்! Rating: 0 out of 5 stars0 ratings
Related to இதயங்களின் சங்கமம்...
Related ebooks
புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsPoove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5பூவே... உன்னை நேசிப்பேன்...! Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கரம் பிடித்தே... Rating: 0 out of 5 stars0 ratingsமலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Nesa Veli Rating: 4 out of 5 stars4/5Unakkena Iruppen Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5மயக்கத்திற்குரிய மந்திரமே! Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநட்சத்திரம் இல்லாத இரவு! Rating: 0 out of 5 stars0 ratingsNatchathiram Illaatha Iravu Rating: 5 out of 5 stars5/5Kaiyil Sikkiya Minnal Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakave Rating: 0 out of 5 stars0 ratingsமறக்குமோ... நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5சொர்ணப் புறா! Rating: 0 out of 5 stars0 ratingsSorna Pura Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Kanavu Kaanum Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsகனவு காணும் வாழ்க்கை Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5கலங்காதே கண்மணியே! Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsதேடி வந்த தென்றல் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for இதயங்களின் சங்கமம்...
0 ratings0 reviews