Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயத்தில் ஏதோ ஒன்று..!
இதயத்தில் ஏதோ ஒன்று..!
இதயத்தில் ஏதோ ஒன்று..!
Ebook130 pages47 minutes

இதயத்தில் ஏதோ ஒன்று..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இனிய தென்றல் வீசும் இரவு நேரம். "வணக்கம்" என்று செய்திகளை வாசிக்கும் பெண் தன் இனிய குரலால் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார் வண்ண தொலைக்காட்சியில். கையில் ரிமோட்டுடன் சோபாவில் ஒயிலாக தூங்கும் மனைவியை பார்த்த சரவணன் "என்னடா தம்பி! மணி இன்னும் எட்டு கூட ஆகலை, அதற்குள் இப்படி ஆள் வருவதுகூடத் தெரியாம கும்பகர்ண தூக்கம் தூங்கறே!" என்று கூறியவன் ஒருகணம் அவளை உற்று பார்த்துவிட்டு தோள்களை குலுக்கிக் கொண்டான். அவள் கையில் வைத்திருந்த ரிமோட் கீழே நழுவ அதனை தன் கையில் ஏந்தியவன் தொலைக்காட்சியை அணைத்தான். 

திடீரென ஏதோ உள்ளுணர்வில் விருட்டென சோபாவை விட்டு எழுந்த சத்யா எதிரே குறும்பு சிரிப்புடன் நிற்கும் கணவனைப் பார்த்ததும் எந்திரம் போல சமையலறைக்குச் சென்று சமைத்ததை எடுத்து வந்து மேஜையில் கொண்டு வைத்தாள். 

அவன் சாப்பிட அமர்ந்ததும் ஹால் சுவரில் சாய்ந்து நின்றவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. பிறந்த வீட்டில் புள்ளிமானாக துள்ளித்திரிந்தவளை கழுத்தில் விலங்கு போல விழுந்த தாலி இப்படி பொம்மையாக மாற்றி விட்டதே. படித்த படிப்பும் கனவுகளும் சிதைந்து நடைபிணமாக்கிவிட்டதே? 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223075660
இதயத்தில் ஏதோ ஒன்று..!

Read more from Sundari Murugan

Related to இதயத்தில் ஏதோ ஒன்று..!

Related ebooks

Reviews for இதயத்தில் ஏதோ ஒன்று..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயத்தில் ஏதோ ஒன்று..! - Sundari Murugan

    1

    இனிய தென்றல் வீசும் இரவு நேரம். வணக்கம் என்று செய்திகளை வாசிக்கும் பெண் தன் இனிய குரலால் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார் வண்ண தொலைக்காட்சியில். கையில் ரிமோட்டுடன் சோபாவில் ஒயிலாக தூங்கும் மனைவியை பார்த்த சரவணன் என்னடா தம்பி! மணி இன்னும் எட்டு கூட ஆகலை, அதற்குள் இப்படி ஆள் வருவதுகூடத் தெரியாம கும்பகர்ண தூக்கம் தூங்கறே! என்று கூறியவன் ஒருகணம் அவளை உற்று பார்த்துவிட்டு தோள்களை குலுக்கிக் கொண்டான். அவள் கையில் வைத்திருந்த ரிமோட் கீழே நழுவ அதனை தன் கையில் ஏந்தியவன் தொலைக்காட்சியை அணைத்தான்.

    திடீரென ஏதோ உள்ளுணர்வில் விருட்டென சோபாவை விட்டு எழுந்த சத்யா எதிரே குறும்பு சிரிப்புடன் நிற்கும் கணவனைப் பார்த்ததும் எந்திரம் போல சமையலறைக்குச் சென்று சமைத்ததை எடுத்து வந்து மேஜையில் கொண்டு வைத்தாள்.

    அவன் சாப்பிட அமர்ந்ததும் ஹால் சுவரில் சாய்ந்து நின்றவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. பிறந்த வீட்டில் புள்ளிமானாக துள்ளித்திரிந்தவளை கழுத்தில் விலங்கு போல விழுந்த தாலி இப்படி பொம்மையாக மாற்றி விட்டதே. படித்த படிப்பும் கனவுகளும் சிதைந்து நடைபிணமாக்கிவிட்டதே?

    2

    நேரம் காலை ஐந்து ஐம்பது. அப்போதுதான் தலைக்கு குளித்துவிட்டு தலையில் கட்டிய மிருதுவான டவலோடு சத்யா தனது பூப்போன்ற கையினால் புள்ளிகளை இணைத்து ஒரு பூக்கோலம் போட்டுவிட்டு புள்ளிமானாய் வீட்டுக்குள் துள்ளிக் கொண்டு ஓடினாள்.

    காலை மணி எட்டு முப்பது. சத்யா கல்லூரி கிளம்பி விட்டாள். எம்.எஸ்.சி. இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி அவள்... ஏற்கனவே பி.எஸ்.சி. படிப்புடன் பி.எட். படிப்பையும் முடித்திருந்தாள். இப்போது அவள் எம்.எஸ்.சி. படிப்பும் முடியும் தருவாயில்... தேர்வுகள் முடிய இன்னும் பத்து நாட்களே இருந்தன. அதற்கு பிறகு வேலை பார்த்துக் கொண்டு வீட்டில் ஜாலியாக இருக்கப் போகிறாள்.

    இப்போது காலை எட்டரைக்கு கல்லூரிக்கு கிளம்பினால் போய் சேர ஒன்பதரை ஆகிவிடும். அதே போல் மாலை மூன்றரைக்கு கல்லூரி விட்டு பஸ் பிடித்து வர ஐந்தரை, ஆறு ஆகிவிடும்.

    அவளது ஊர் ஒரு கிராமம் என்பதோடு சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்தால் தான் ‘பாரதி நகர்’ என்னும் நான்கு ரோடு வரும். அங்கே போனால்தான் எந்த ஊருக்கு போக வேண்டுமென்றாலும் பேருந்து கிடைக்கும்.

    இந்த நான்குரோடு வரைதான் அவளது கல்லூரிப் பேருந்து வந்து செல்லும். ஆனால், அது 7.30-க்கே சென்று விடுவதால் இவள் வேறு பேருந்தில் தான் கல்லூரி போய் வர முடிந்தது.

    இவர்களது கிராமத்திற்கு ஒரு மினி பஸ் மட்டும் வந்து செல்லும். அது காலை 7 மணிக்கு பின்பு ஒன்பது மணிக்குத்தான் வரும். எனவே, சத்யா அவளது சைக்கிளில் பாரதி நகருக்கு வந்து அங்கே அவளது ஊரை சேர்ந்தவர் மளிகை கடை வைத்துள்ளார் அவரது கடையின் ஓரமாக சைக்கிளை நிறுத்தி விட்டு பஸ் ஏறி கல்லூரிக்கு போய் திரும்ப வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது வழக்கமாயிற்று.

    சத்யாவின் தங்கை சௌமியா வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அருகில் இருக்கும் கல்லூரியாதலால் அவள் ஊருக்குள் வரும் மினி பஸ்ஸில் போய் விட்டு அதிலேயே திரும்பி விடுவாள்.

    இவர்கள் இருவரது அண்ணன் சத்யமூர்த்தி அவன் கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவன்.

    மின் வாரியத்தில் வேலை பார்க்கிறான். அம்மா இல்லத்தரசி, அப்பா பால் நாடார் இரண்டு, மூன்று தோட்டங்களை நிர்வாகம் செய்கிறார். ஊரில் செல்வாக்கான மனிதர், ஊர் பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார்.

    3

    சத்யா தன் தோழி, ராகவியுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். தேர்வு நன்றாக எழுதியாகிவிட்டது, இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் மட்டுமே. அதுவும் ஒரு வாரம் கழித்து எனவே, இன்று தன் வீட்டிற்கு வருமாறு ராகவியை அழைத்திருந்தாள் சத்யா. சரி வருகிறேன். ஆனால் நாளையே ஊருக்கு திரும்பி விடுவேன் என்று கூறிய சத்யாவுடன் ஊருக்கு வர ராகவி சம்மதித்திருந்தாள்.

    பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அவர்களை இரு இளைஞர்களின் கண்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.

    அவர்களை கவனித்த ராகவி ஹேய் எங்க அண்ணன்டி! என்று சத்யாவை உலுக்க...

    எங்கே? என்று சத்யா திரும்பிப்பார்க்க ராகவி கை காட்டிய இடத்தில் நின்ற அந்த இரு இளைஞர்கள் இவர்கள் பக்கம் வர...

    ஏய், ராகவி இரண்டு பேர் வர்றாங்க. இதில் உங்கண்ணன் யாருடி? என்று சத்யா வினவ!

    சத்யா! இரண்டு பேருமே எங்கண்ணன் தான். ரவி என் உடன் பிறந்தவன், சம்பத் அண்ணா என் கூடப் பொறக்காத அண்ணன் என்றாள்.

    இருவரும் அருகே வர சத்யா எங்கோ பார்த்தவாறு நின்று கொண்டாள். ரவிண்ணா நீ எப்படி இங்கே...?

    ஹேய்... ராகவி நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கறே! என்றான் ரவி தன் தங்கையைப் பார்த்து.

    நான் அப்பாம்மாகிட்டே கேட்டுட்டுதான் என் தோழியின் ஊருக்கு போக இங்கே நிற்கிறேன். நாளை காலையே திரும்பிவிடுவேன் என்றாள்.

    ஆமா, நீ எதற்காக இங்கே வந்தே பதில் சொல்லுண்ணா!

    நானும், சம்பத்தும் ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தோம்மா! அதான் உன்னைப் பார்த்ததும் வந்திட்டேன்

    பரவாயில்லேண்ணே, வேலைக்கு போறேன்னு நல்லாவே ஊர் சுத்துறே சம்பத் அண்ணாவுடன்! இது என்னோட தோழி சத்யா!

    "ம்ம்...

    சத்யா இது அண்ணன் ரவி. இவர் அண்ணனோட பிரண்ட் சம்பத்

    வணக்கம் என்று இருவரையும் பார்த்து கரம் குவிக்க அருகில் நின்ற சம்பத் சத்யாவின் அழகு முகத்தை குறுகுறுவென்று பார்க்க அவன் பார்வை வீச்சை தாங்காது சத்யா தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். சரியான ‘ஜொள்ளு பார்ட்டி’ என்று முணுமுணுத்தாள்.

    அப்போது சத்யா போகும் பேருந்து வர இரு பெண்களும் அந்தப் பேருந்தில் ஏறிக் கொள்ள ரவி மட்டும் கையசைத்தான்!

    டேய், சம்பத்! வண்டி எப்பவோ போயிடுச்சி, கை சுளுக்கிக்கப் போகுது கையை கீழே போடுடா என்ற ரவி அவனை பிடித்து உலுக்க சம்பத் தன்னை சுதாரித்துக் கொண்டான்.

    ஏய் சம்பத் அந்த சத்யா என் தங்கையின் பிரண்ட்! உனக்கு புடிச்சிருக்கா? ஓ.கே.வா? என்னடா பதில் சொல்லு!

    பெண்ணை காமிக்கிறேன் என்று சொல்லி கூட்டிட்டு வந்து இப்படி மாட்டி விட்டுட்டியேடா!

    என்னடா உனக்குப் பிடிக்கலையா?

    தேவதையை காமிச்சிருக்கே! யாருக்காவது பிடிக்காம போகுமா டபுள் ஓகே!!

    யப்பா... ஒரு நிமிடத்திலே என்னை பதற வைச்சிட்டியேடா! என்ற ரவி சம்பத்தை அடிக்க கையை ஓங்க... லாவகமாக அவனது செல்ல அடிக்குப் பயந்தவாறு நகர்ந்து கொண்டான். "அம்மா காத்திருப்பாங்க வாடா ரவி போகலாம்.

    என்னடா தம்பி! என்ற சரவணனின் குரல் அவளது சிந்தனையை கலைத்தது. சாப்பாட்டு மேஜை முன்சுவற்றில் சாய்ந்து நின்றபடி பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தாள்.

    "என்னடா இன்னும் தூக்கம் கலையலையா!

    Enjoying the preview?
    Page 1 of 1